Moonraam Thiruvandadi Moolam
பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாந்திருவந்தாதி தனியன் (குருகை காவலப்பன் அருளிச்செய்தது) சீராரும்மாடத்திருக்கோவலூர் அதனுள்* காரார்கருமுகிலைக்காணப்புக்கு* – ஓராத் திருக்கண்டேனென்றுரைத்த சீரான்கழலே* உரைக்கண்டாய்நெஞ்சே! உகந்து. திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழும் அருக்கனணி நிறமும் கண்டேன் *- செருக் கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன் * என்னாழி வண்ணன் பால் இன்று. 1 இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன் * பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் *- அன்று திருக்கண்டு கொண்ட திருமாலே […]