Naanmukan Thiruvandadi Moolam
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி தனியன் (சீராமப்பிள்ளை அருளிச்செய்தது) நாராயணன்படைத்தான்நான்முகனை* நான்முகனுக்கு ஏரார்சிவன்பிறந்தானென்னுஞ்சொல்* – சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே!* மொய்பூ மழிசைப்பரனடியேவாழ்த்து. நான்முகனை நாராயணன் படைத்தான் * நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் *- யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளைச் * சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து. 1 தேருங்கால் தேவன் ஒருவனே யென்று உரைப்பர் * ஆருமறியார் அவன் பெருமை *- ஓரும் பொருள் முடிவும் இத்தனையே […]