Periya Thiruvandadi Moolam
நம்மாழ்வார் அருளிச்செய்த அதர்வணவேதஸாரமான பெரிய திருவந்தாதி தனியன் (எம்பெருமானார் அருளிச்செய்தது) முந்துற்றநெஞ்சே! முயற்றிதரித்துரைத்து வந்தித்து வாயாரவாழ்த்தியே* – சந்த முருகூருஞ்சோலைசூழ் மொய்பூம்பொருநல் குருகூரன்மாறன்பேர் கூறு. முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே !* இயற்றுவாய் எம்மொடு நீ கூடி *- நயப்புடைய நாவீன் தொடைக் கிளவி யுள் பொதிவோம் * நற்பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ். 1 புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் * இகழ்வோம் மதிப்போம் மதியோம் – இகழோம் * மற்று எங்கள்மால் ! […]