Thiruviruttam Moolam
நம்மாழ்வார் அருளிச்செய்த ருக்வேதஸாரமான திருவிருத்தம் தனியன் (கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது) கருவிருத்தக்குழிநீத்தபின் காமக்கடுங்குழிவீழ்ந்து* ஒருவிருத்தம்புக்குழலுறுவீர்! உயிரின்பொருள்கட்கு* ஒருவிருத்தம்புகுதாமல் குருகையர்கோனுரைத்த* திருவிருத்தத்தோரடிகற்றீரீர் திருநாட்டகத்தே. பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும்* இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை * உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் ! இமையோர் தலைவா! மெய்ந் நின்று கேட்டருளாய் * அடியேன் செய்யும் விண்ணப்பமே. 1 செழுநீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தா லொப்ப * சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன * வாழியரோ முழுநீர் முகில் வண்ணன் […]