Perumal Thirumozhi
குலசேகரப் பெருமாள் அருளிச்செய்த ஸ்ரீராமாயணஸாரமாகிய பெருமாள் திருமொழி தனியன்கள் (உடையவர் அருளிச்செய்தது) – இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே!* தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் * பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன்* எங்கள் குலசேகரன்ன்றேகூறு. (மணக்கால்நம்பி அருளிச் செய்தது) ஆரம்கெடப்பரனன்பர்கொள்ளாரென்று* அவர்களுக்கே வாரங்கொடுகுடப்பாம்பிற்கையிட்டவன்* மாற்றலரை வீரங்கெடுத்தசெங்கோல்கொல்லிகாவலன் வில்லவர்கோன்* சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே. முதல் திருமொழி இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த * அரவரசப் பெருஞ்சோதி அனந்த னென்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவித் * திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி […]