Thirumaalai Moolam
தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை தனியன்கள் (திருவரங்கப்பெருமாள் அரையர் அருளிச்செய்தது) மற்றொன்றும்வேண்டாமனமே!* மதிளரங்கர் கற்றினம்மேய்த்தகழலிணைக்கீழ்* – உற்ற திருமாலைபாடும்சீர்த் தொண்டரடிப்பொடிஎம் பெருமானை* எப்பொழுதும்பேசு. காவலில் புலனை வைத்துக், கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து * நாவலிட்டு உழிதருகின்றோம், நமன்தமர் தலைகள் மீதே * மூவுல குண்டுமிழ்ந்த முதல்வ ! நின் நாமம் கற்ற * ஆவலிப் புடைமை கண்டாய், அரங்கமா நகருளானே ! 1 திருவரங்கம் பச்சை மாமலை போல்மேனி, பவளவாய் கமலச்செங்கண் * அச்சுதா அமரரேறே ! […]