ஸம்ஸாரஸாம்ராஜ்யம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த ஸம்ஸாரஸாம்ராஜ்யம் ( ஸாரார்த்த சதுஷ்டயமென்கிற ரஹஸ்யத்தை (18) ரஹஸ்யத்தில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார்கள் சிலர். அது பொருந்தாது. எங்களாழ்வான் அருளிச்செய்ததாக வார்த்தாமாலையில் அது உள்ளது. ) (நாச் திரு 13.10) “துன்பக்கடலாய்” (திருவாய் 10.6.1) “இருள்தருமா” ஞாலமான ஸம்ஸாரத்துக்கு உள்வாயிலே பஞ்சபூதங்களாலே சமைந்து, 1.”நவத்வாரபுரே” என்கிறபடியே–(பெரிய திரு 1.6.9) ஒன்பது வாசலான படைவீட்டுக்கு உள்வாயிலே (திருவாய் 3.2.9) “கொடு வினைத்தூறு” என்பதொரு தூறாய், புக வழிதெரியுமித்தனை யொழியப் புறப்பட வழி தெரியாதிருப்பதொரு காட்டினுள்ளே, அநந்தக்லேஶபாஜநமான மரத்தையிட்டு, அவித்யையென்கிற […]