Paasurappadi Ramayanam – Moolam
ஶ்ரீ: ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தொகுத்தருளிய திவ்யப் ப்ரபந்த பாசுர ராமாயணம் பால காண்டம் திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ நலமந்தமில்லதோர் நாட்டில் அந்தமில் பேரின்பத்தடிய ரோடு ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும் அயர்வறும் அமரர்கள் அதிபதியான அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பன் அலைநீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் ஆவாரார் துணையென்று துளங்கும் நல்ல அமரர் துயர் தீர வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி மண்ணுலகத்தோ ருய்ய அயோத்தி என்னும் அணி நகரத்து வெங்கதிரோன் குலத்துக்கோர் […]