[highlight_content]

Periya Thiruvandadi

நம்மாழ்வார் அருளிச்செய்த

அதர்வணவேதஸாரமான

பெரிய திருவந்தாதி

னியன்

(எம்பெருமானார் அருளிச்செய்தது)

முந்துற்றநெஞ்சே! முயற்றிதரித்துரைத்து

வந்தித்து வாயாரவாழ்த்தியே* – சந்த

முருகூருஞ்சோலைசூழ் மொய்பூம்பொருநல்

குருகூரன்மாறன்பேர் கூறு.

முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே !*

இயற்றுவாய் எம்மொடு நீ கூடி *- நயப்புடைய

நாவீன் தொடைக் கிளவி யுள் பொதிவோம் * நற்பூவைப்

பூ வீன்ற வண்ணன் புகழ். 1

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் *

இகழ்வோம் மதிப்போம் மதியோம் – இகழோம் * மற்று

எங்கள்மால் ! செங்கண்மால் ! சீறல் நீ * தீவினையோம்

எங்கள் மால் கண்டாய் இவை. 2

இவை யன்றே நல்ல இவை யன்றே தீய *

இவை யென்றிவை அறிவனேலும் *- இவை யெல்லாம்

என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே !*

என்னால் செயற் பாலது என் ? 3

எண்ணின் மிகுபுகழார் யாவரே ? * பின்னையும் மற்று

எண்ணில் மிகுபுகழேன் யானல்லால் *- என்ன

கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்

பெருஞ் சோதிக்கு * என் நெஞ்சு ஆள் பெற்று. 4

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ *

மற்றையா ராவாரும் நீ பேசில் *- எற்றேயோ !

மாய ! மா மாயவளை மாய முலைவாய் வைத்த *

நீ யம்மா ! காட்டும் நெறி. 5

நெறி காட்டி நீக்குதியோ ? நின்பால் * கருமா

முறிமேனி காட்டுதியோ ? * மேல்நாள் – அறியோமை

என்செய்வான் எண்ணினாய் ? கண்ணனே ஈதுரையாய் *

என் செய்தால் என் படோம் யாம் ? 6

யாமே அருவினையோம் சேயோம் * என்நெஞ்சினார்

தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார் *- பூமேய

செம்மாதை நின் மார்வில் சேர்வித்து * பாரிடந்த

அம்மா ! நின் பாதத் தருகு. 7

அருகும் சுவடும் தெரிவுணரோம் * அன்பே

பெருகும் மிக இதுவென்? பேசீர் *- பருகலாம்

பண்புடையீர் ! பாரளந்தீர் ! பாவியேம் கண் காண்பரிய *

நுண்புடையீர் ! நும்மை நுமக்கு. 8

நுமக்கடியோ மென்றென்று நொந்துரைத்தென் ? * மாலார்

தமக்கு அவர் தாம் சார்வரியரானால் *- எமக்கு இனி

யாதானும் ஆகிடு காண் நெஞ்சே ! * அவர் திறத்தே

யாதானும் சிந்தித்திரு. 9

இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர் * எட்டோடு

ஒரு நால்வர் ஓரிருவ ரல்லால் *- திருமாற்கு

யாமார் ? வணக்கமார் ? ஏபாவம் நன்னெஞ்சே ! *

நாமா மிகவுடையோம் நாழ். 10

நாழாலமர் முயன்ற வல்லரக்க னின்னுயிரை *

வாழா வகை வலிதல் நின் வலியே *- ஆழாத

பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ *

நீரும் நீயாய் நின்ற நீ. 11

நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய் *

போயொன்று சொல்லியென் ? போ நெஞ்சே! *- நீயென்றும்

காழ்த்து உபதேசந் தரினும் கைக்கொள்ளாய் * கண்ணன் தாள்

வாழ்த்துவதே கண்டாய் வழக்கு. 12

வழக்கொடு மாறு கொளன்று * அடியார் வேண்ட

இழக்கவும் காண்டும் இறைவ ! – இழப்புண்டே ? *

எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட * என் கண்கள்

தம்மால் காட்டுன் மேனிச்சாய். 13

சாயால் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே!

பேயார் முலை கொடுத்தார் பேயராய் *– நீயார்? போய்த்

தேம்பூண் சுவைத்து ஊனறிந்தறிந்தும் * தீவினையாம்

பாம்பார் வாய்க் கைநீட்டல் பார்த்தி. 14

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே ! * படுதுயரம்

பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை * ஆர்த்து ஓதம்

தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து * தம்முடைய

செம்மேனிக் கண் வளர்வார் சீர். 15

சீரால் பிறந்து சிறப்பால் வளராது. *

பேர் வாமனாகாக்கால் பேராளா !-* மார்பாரப்

புல்கி நீ யுண்டுமிழ்ந்த பூமி நீரேற்பரிதே ? *

சொல்லு நீ யாமறியச் சூழ்ந்து. 16

சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்

வாழ்ந்திடுவர் * பின்னும் தம் வாய் திறவார் *- சூழ்ந்தெங்கும்

வாள்வரைகள் போலரக்கன் வன்தலைகள் தாம் இடியத் *

தாள்வரை வில்லேந்தினார் தாம். 17

தாம்பாலாப்புண்டாலும் அத்தழும்பு தானிளகப் *

பாம்பாலாப்புண்டு பாடுற்றாலும் *- சோம்பாது இப்

பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா ! * உன்

தொல்லுருவை யாரறிவார்? சொல்லு. 18

சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே ! *

எல்லிப் பகலென்னாது எப்போதும் *- தொல்லைக் கண்

மாத்தானைக் கெல்லாம் ஓரைவரையே மாறாகக் *

காத்தானைக் காண்டும் நீ காண். 19

காணப் புகில் அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம்

நாணப் படுமன்றே ? நாம் பேசில் *- மாணி

உருவாகிக் கொண்டு உலகம் நீரேற்ற சீரான்

திருவாகம் தீண்டிற்றுச் சென்று. 20.

சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு *

இன்றிங் கென் னெஞ்சால் இடுக்குண்ட *- அன்றங்குப்

பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண்புதையக் *

காருருவன் தான் நிமிர்த்த கால். 21

காலே பொதத் திரிந்து கத்துவராம் இந்நாள் *

மாலார் குடி புகுந்தார் என் மனத்தே *- மேலால்

தருக்கும் இடம் பாட்டினொடும் வல்வினையார் தாம் * வீற்-

றிருக்கு மிடம் காணா திளைத்து. 22

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே ! சொன்னேன் *

இளைக்க நமன் தமர்கள் பற்றி *- இளைப்பெய்த

நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான் *

தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான். 23

தானே தனித்தோன்றல் தன்னளப் பொன்றில்லாதான் *

தானே பிறர்கட்கும் தற்றோன்றல் *- தானே

இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டமைப்பா னானால் *

அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்? 24

ஆரானும் ஆதானும் செய்ய * அகலிடத்தை

ஆராய்ந்து அது திருத்தலாவதே ? *- சீரார்

மனத் தலைவன் துன்பத்தை மாற்றினேன் * வானோர்

இனத் தலைவன் கண்ணனால் யான். 25

யானும் என்நெஞ்சு மிசைந் தொழிந்தோம் * வல்வினையைக்

கானும் மலையும் புகக் கடிவான் *- தானோர்

இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த *

அருளென்னுந் தண்டால் அடித்து. 26

அடியால் படி கடந்த முத்தோ ? * அதன்றேல்

முடியால் விசும்பளந்த முத்தோ? *- நெடியாய் !

செறிகழல்கள் தாள் நிமிர்த்துச் சென்று உலகமெல்லாம் *

அறிகிலமால் நீயளந்த அன்று. 27

அன்றே நம் கண்காணும் ஆழியான் காருருவம் *

இன்றே நாம் காணாதிருப்பதுவும் *- என்றேனும்

கட்கண்ணால் காணாத அவ்வுருவை * நெஞ்சென்னும்

உட்கண்ணால் காணும் உணர்ந்து. 28

உணர ஒருவர்க்கு எளியனே? செவ்வே *

இணரும் துழாயலங்க லெந்தை *- உணரத்

தனக்கெளியர் எவ்வளவர் அவ்வளவன் ஆனால் *

எனக்கெளியன் எம்பெருமான் இங்கு. 29

இங்கில்லை பண்டு போல் வீற்றிருத்தல் * என்னுடைய

செங்கண் மால் சீர்க்கும் சிறிதுள்ளம் *- அங்கே

மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் * மீண்டு

அடியெடுப்ப தன்றே அழகு? 30

அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான் *

நிழலும் அடிதாறு மானோம் *- சுழலக்

குடங்கள் தலை மீதெடுத்துக் கொண்டாடி * அன்று அத்

தடங்கடலை மேயார் தமக்கு. 31

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார் *

தமக்கு * அடிமை செய்யென்றால் செய்யாது *- எமக்கென்றும்

தாம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார் *

யாம் செய்வது இவ்விடத்திங்கு யாது? 32

யாதானு மொன்றறியில் தன்னுகக்கில் * என் கொலோ?

யாதானும் நேர்ந்தணுகா வாறு தான் *- யாதானும்

தேறுமா செய்யா அசுரர்களை * நேமியால்

பாறு பாறாக்கினான் பால். 33

பாலாழி நீ கிடக்கும் பண்பை * யாம் கேட்டேயும்

காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் *- நீலாழிச்

சோதியாய் ! ஆதியாய் ! தொல்வினை யெம்பால் கடியும் *

நீதியாய் ! நின் சார்ந்து நின்று. 34             திருப்பாற்கடல்

நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும் *

ஒன்று மோவாற்றான் என்நெஞ்சகலான் *- அன்றங்கை

வன்புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான் *

அன்புடைய னன்றே அவன் ? 35

அவனாம் இவனாம் உவனாம் * மற்று உம்பர்

அவனாம் அவனென் றிராதே *- அவனாம்

அவனே யெனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் *

அவனே எவனேலுமாம். 36

ஆமாறு அறிவுடையா ராவது அரிதன்றே ?*

நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே! *– பூமேய்

மதுகரமே தண்துழாய் மாலாரை * வாழ்த்தாம்

அதுகரமே அன்பாலமை. 37

அமைக்கும் பொழுதுண்டே? ஆராயில் நெஞ்சே! *

இமைக்கும் பொழுதும் இடைச்சி – குமைத்திறங்கள் *

ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே *

பேசியே போக்காய் பிழை. 38

பிழைக்க முயன்றோமோ? நெஞ்சமே பேசாய் *

தழைக்கும் துழாய் மார்வன் தன்னை – அழைத்து * ஒருகால்

போயுபகாரம் பொலியக் கொள்ளாது * அவன் புகழே

வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு. 39

வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வா நெஞ்சே !*

போய்ப்போ ஓய் வெந்நரகில் பூவியேல் *- தீப்பால

பேய்த்தாய் உயிர் கலாய்ப் பாலுண்டு * அவளுயிரை

மாய்த்தானை வாழ்த்தே வலி. 40

வலியமென நினைந்து வந்தெதிர்ந்த மல்லர் *

வலிய முடி யிடிய வாங்கி *- வலிய நின்

பொன்னாழிக் கையால் புடைத்திடுதி * கீளாதே

பல் நாளும் நிற்கும் இப்பார். 41

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் *

பாரிடமுன் படைத்தா னென்பரால் *- பாரிட

மாவானும் தானானால் ஆரிடமே? * மற்றொருவர்க்கு

ஆவான் புகாவாலவை. 42

அவயமென நினைந்து வந்த சுரர் பாலே *

நவையை நளிர்விப்பான் தன்னை *- கவையில்

மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ ?*

மனத்துயரை மாய்க்கும் வகை. 43

வகை சேர்ந்த நல் நெஞ்சும் நாவுடைய வாயும் *

மிக வாய்ந்து வீழா வெனிலும் *- மிக வாய்ந்து

மாலைத் தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே ? *

மேலைத் தாம் செய்யும் வினை. 44

வினையார் தரமுயலும் வெம்மையே அஞ்சி *

தினையாம் சிறிதளவும் செல்ல – நினையாது *

வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும் *

நாயகத்தான் பொன்னடிக்கள் நான். 45

நான் கூறும் கூற்றாவது இத்தனையே * நாள்நாளும்

தேங்கோத நீருருவன் செங்கண்மால் *- நீங்காத

மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு *

நீ கதியாம் நெஞ்சே! நினை. 46

நினைத் திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே *

நினைத்திடவும் வேண்டா நீ நேரே *- நினைத்திறைஞ்ச

எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே * அது தானும்

எவ்வளவும் உண்டோ ? எமக்கு. 47

எமக்கு யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை *

அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு ? *- அமைப்பொலிந்த

மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே *

கொன்றானையே மனத்துக் கொண்டு. 48

கொண்டல் தான் மால்வரை தான் மாகடல் தான் கூரிருள்தான் *

வண்டறாப் பூவை தான் மற்றுத் தான் *- கண்ட நாள்

காருருவம் காண் தோறும் நெஞ்சு ஓடும் * கண்ணனார்

பேருரு வென்றெம்மைப் பிரிந்து. 49

பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே *

திரிந்துழலும் சிந்தனையார் தம்மை *- புரிந்தொரு கால்

ஆவா ! என இரங்கார் அந்தோ! வலிதே கொல் ? *

மாவாய் பிளந்தார் மனம். 50

மனமாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை *

சினமாள்வித்து ஓரிடத்தே சேர்த்து *- புனமேய

தண் துழாயா னடியைத் தான் காணுமஃதன்றே ? *

வண்துழாஞ் சீரார்க்கு மாண்பு. * 51

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் * மாயவள் நஞ்சு

ஊண் பாவித்துண்டானது ஓருருவம் *- காண்பான் நங்

கண் அவா மற்றொன்று காணுறா * சீர் பரவாது

உண்ண வாய் தானுறுமோ ஒன்று ? 52

ஒன்றுண்டு செங்கண் மால் யானுரைப்பது * உன்னடியார்க்கு

என் செய்வ னென்றே இருத்தி நீ *- நின்புகழில்

வைகும் தம் சிந்தையிலும் மற்றினிதோ ? * நீ அவர்க்கு

வைகுந்த மென்றருளும் வான். 53

வானோ ? மறிகடலோ ? மாருதமோ ? தீயகமோ ? *

கானோ ? ஒருங்கிற்றும் கண்டிலமால் *- ஆனீன்ற

கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம்*

வன்துயரை யாவா ! மருங்கு. 54

மருங்கோதம் மோதும் மணி நாகணையார் *

மருங்கே வரவரியரேலும் *- ஒருங்கே

எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால் *

மனக் கவலை தீர்ப்பார் வரவு. 55

வரவா றொன்றில்லையால் வாழ்வினிதால் * எல்லே !

ஒருவாறு ஒருவன் புகாவாறு *- உருமாறும்

ஆயவர் தாம் சேயவர் தாம் அன்றுலகம் தாயவர் தாம் *

மாயவர் தாம் காட்டும் வழி. 56

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ? நெஞ்சே ! *

தழி இக்கொண்டு போரவுணன் தன்னைச் *- சுழித்தெங்கும்

தாழ்விடங்கள் பற்றிப் புலால் வெள்ளந் தானுகள *

வாழ்வடங்க மார்விடந்த மால். 57

மாலே ! படிச்சோதி மாற்றேல் இனி * உனது

பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் *- மேலால்

பிறப்பின்மை பெற்று அடிக்கீழ்க் குற்றேவலன்று *

மறப்பின்மை யான் வேண்டும் மாடு. 58

மாடே வரப் பெறுவரா மென்றே * வல்வினையார்

காடானு மாதானும் கைக் கொள்ளார் *- ஊடே போய்ப்

பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் * பேராளன்

பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து. 59

பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய் *

ஈன்துழாய் மாயனையே என் நெஞ்சே ! *- பேர்ந்தெங்கும்

தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு *

இல்லை காண் மற்றோரிறை. 60

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த அந்நாள் *

மறை முறையால் வானாடர் கூடி *- முறை முறையின்

தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே ? * தாழ்விசும்பின்

மீதிலகித் தான் கிடக்கும் மீன். 61

மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய் *

வானென்னும் கேடிலா வான் குடைக்குத் *- தானோர்

மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் * நங்கள்

பிணிக்கு ஆம் பெரு மருந்து பின். 62

பின்துரக்கும் காற்றிழந்த சூற்கொண்டல் பேர்ந்தும் போய் *

வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே *- அன்று

திருச் செய்ய நேமியான் * தீயரக்கி மூக்கும்

பருச் செவியும் ஈர்ந்த பரன். 63

பரனாம் அவனாதல் பாவிப்பராகில் *

உரனால் ஒரு மூன்று போதும் *- மரமேழன்று

எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே * அமரர்

கைதான் தொழாவே கலந்து ? 64

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே ! *

மலங்க வடித்து மடிப்பான் *- விலங்கல் போல்

தொல்மாலைக் கேசவனை நாரணனை மாதவனைச் *

சொல் மாலை எப்பொழுதும் சூட்டு. 65

சூட்டாய நேமியான் தொல்லரக்க னின்னுயிரை *

மாட்டே துயரிழைத்த மாயவனை *- ஈட்ட

வெறி கொண்ட தண்துழாய் வேதியனை * நெஞ்சே !

அறி கண்டாய் சொன்னேன் அது. 66

அதுவோ நன்றென்று அங்கம ருலகோ வேண்டில் *

அதுவோ பொருளில்லை யன்றே ? *- அதுவொழிந்து

மண் இன்று ஆள்வேன் எனிலும் கூடும் மடநெஞ்சே ! *

கண்ணன் தாள் வாழ்த்துவதே கல். 67

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் *

புல்லென் றொழிந்தன கொல் ? ஏ பாவம் ! *– வெல்ல

நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் *

அடியேனது உள்ளத்தகம். 68           திருவேங்கடம் திருப்பதி,

பரமபதம்

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார் *

முகம் சிதைவரா மன்றே ? முக்கி *- மிகுந் திருமால்

சீர்க்கடலை உள் பொதிந்த சிந்தனையேன் தன்னை *

ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து ? 69

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானைச்*

சுடர் கொள் சுடராழியானை *- இடர் கடியும்

மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே *

யாதாகில் யாதே இனி ? 70

இனி நின்று நின் பெருமை யானுரைப்பது என்னே ? *

தனி நின்ற சார்விலா மூர்த்தி ! * பனி நீர்

அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் * நான்கு

முகத்தான் நின்னுந்தி முதல். 71

முதலாம் திருவுருவம் மூன்றென்பர் * ஒன்றே

முதலாகும் மூன்றுக்கு மென்பர் *- முதல்வா !

நிகரிலகு காருருவா ! நின்னகத்ததன்றே ? *

புகரிலகு தாமரையின் பூ. 72

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற *

காவி மலரென்றும் காண் தோறும் *- பாவியேன்

மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் * அவ்வவை

யெல்லாம் பிரானுருவே யென்று. 73

என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால் *

ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் * குன்று

குடையாக ஆ காத்த கோவலனார் * நெஞ்சே !

புடைதான் பெரிதே புவி. – 74

புவியும் இரு விசும்பும் நின்னகத்த * நீ யென்

செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் *- அவிவின்றி

யான் பெரியன் நீ பெரியை என்பதனை யாரறிவார்? *

ஊன்பருகு நேமியாய் ! உள்ளு. 75

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் * வினைப் படலம்

விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் *- உள்ள

உலகளவும் யானும் உளனாவனென் கொலோ ? *

உலகளந்த மூர்த்தி உரை. 76

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென்று ஆரே? *

இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் !*- உரைப்பெல்லாம்

நின்னன்றி மற்றிலேன் கண்டாய் * எனதுயிர்க்கு ஓர்

சொல் நன்றியாகும் துணை. 77                    திருப்பாற்கடல்

துணைநாள் பெருங் கிளையும் தொல்குலமும் * சுற்றத்

திணை நாளும் இன்புடைத்தாமேலும் *- கணை நாணில்

ஓவாத் தொழிற் சார்ங்கன் தொல் சீரை நல்நெஞ்சே! *

ஓவாத ஊணாக உண். 78

உள்நாட்டுத் தேசன்றே ? ஊழ்வினையை அஞ்சுமே ? *

விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே? * மண்ணாட்டில்

ஆராகி எவ்விழி விற்றானாலும் * ஆழியங்கைப்

பேராயற்கு ஆளாம் பிறப்பு. 79

பிறப்பிறப்பு மூப்புப் பிணி துறந்து * பின்னும்

இறக்கவும் இன்புடைத்தாமேலும் * மறப்பெல்லாம்

ஏதமே என்றல்லால் எண்ணுவனே ? * மண்ணளந்தான்

பாதமே யேத்தாப் பகல். 80

பகலிரா வென்பதுவும் பாவியாது * எம்மை

இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் *- தகவாத்

தொழும்பர் இவர் சீர்க்கும் துணையிலர் என்றோரார் *

செழும் பரவை மேயார் தெரிந்து. 81

தெரிந்துணர் வொன்றின்மையால் தீவினையேன் * வாளா

இருந்தொழிந்தேன் கீழ்நாள்களெல்லாம் *- கரந்துருவின்

அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த * ஆழியங்கை

அம்மானை யேத்தாது அயர்த்து. 82

அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே ! சொன்னேன் *

உயப்போம் நெறி இதுவே கண்டாய் *- செயற்பால

வல்லவே செய்கிறுதி நெஞ்சமே ! அஞ்சினேன் *

மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து. 83

வாழ்த்தி அவனடியைப் பூப்புனைந்து * நின் தலையைத்

தாழ்த்தி இரு கை கூப்பென்றால் கூப்பாத – பாழ்த்த விதி *

எங்குற்றா யென்றவனை ஏத்தாது என் நெஞ்சமே ! *

தங்கத் தானாமேலும் தங்கு. 84

தங்கா முயற்றியவாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து *

எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல் ? – பொங்கோதத்

தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் * என்னுடைய

கண்ணன் பால் நல் நிறம் கொள் கார். 85

கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் *

பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் *- சீர் கலந்த

சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையி னாழ்துயரை *

என் நினைந்து போக்குவர் இப்போது ? 86

இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும் *

எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே ! *- எப்போதும்

கைகழலா நேமியான் நம்மேல் வினை கடிவான் *

மொய்கழலே ஏத்த முயல். 87

பெரிய திருவந்தாதி முற்றும்.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.