[highlight_content]

Thirumozhi 8-2

பெரிய திருமொழி

எட்டாம் பத்து

இரண்டாம் திருமொழி

தெள்ளியீர்! தேவர்க்கும் தேவர், திருத்தக்கீர் *

வெள்ளியீர் ! வெய்ய விழுநிதி வண்ணர் * ஓ !

துள்ளுநீர்க் கண்ணபுரம், தொழுதாளிவள்

கள்வியோ ! * கைவளை கொள்வது, தக்கதே !               8.2.1      திருக்கண்ணபுரம்

நீணிலா முற்றத்து நின்று, இவள் நோக்கினாள் *

காணுமோ ! கண்ணபுர மென்று காட்டினாள் *

பாணனார் திண்ண மிருக்க, இனி இவள்

நாணுமோ ? * நன்று நன்று, நறையூரர்க்கே.       8.2.2      திருக்கண்ணபுரம்,

திருநறையூர்

அருவி சோர் வேங்கடம் நீர்மலை யென்று, வாய்

வெருவினாள் * மெய்யம் வினவி யிருக்கின்றாள் *

பெருகு சீர்க், கண்ணபுர மென்று பேசினாள் *

உருகினாள் உள் மெலிந்தாள், இது என் கொலோ?     8.2.3      திருக்கண்ணபுரம்,

திருமெய்யம்,

திருநீர்மலை,

திருவேங்கடம் திருப்பதி

உண்ணும் நாளில்லை, உறக்கமும் தானில்லை *

பெண்மையும் சால நிறைந்திலள், பேதை தான் *

கண்ணனூர் கண்ணபுரம் தொழும், கார்க்கடல்

வண்ணர் மேல் * எண்ணம் இவட்கு, இது என் கொலோ?     8.2.4      திருக்கண்ணபுரம்

கண்ணனூர் கண்ணபுரம், தொழும் காரிகை *

பெண்மையும், தன்னுடை உண்மை உரைக்கின்றாள் *

வெண்ணெயுண்டு ஆப்புண்ட, வண்ணம் விளம்பினால் *

வண்ணமும் பொன்னிறமாவது, ஒழியுமே.     8.2.5      திருக்கண்ணபுரம்

வடவரை நின்றும் வந்து, இன்று கணபுரம் *

இடவகை கொள்வது, யாமென்று பேசினாள் *

மடவரல் மாதர் என்பேதை, இவர்க்கு இவள்

கடவதென் ? * கண்துயில் இன்று, இவர் கொள்ளவே.               8.2.6      திருக்கண்ணபுரம்

தரங்க நீர் பேசினும், தண்மதி காயினும் *

இரங்குமோ? எத்தனை நாளிருந்து எள்கினாள் ? *

துரங்கம் வாய் கீண்டுகந்தானது, தொன்மையூர் *

அரங்கமே யென்பது, இவள் தனக்கு ஆசையே.             8.2.7      திருவரங்கம்,

திருக்கண்ணபுரம்

தொண்டெல்லாம் நின்னடியே, தொழுதுய்யுமா

கண்டு * தான் கணபுரம், தொழப் போயினாள் *

வண்டுலாம் கோதை என்பேதை, மணிநிறம்

கொண்டுதான் * கோயின்மை செய்வது, தக்கதே.    8.2.8      திருக்கண்ணபுரம்

முள்ளெயிறேய்ந்தில, கூழை முடி கொடா *

தெள்ளிய ளென்பதோர் தேசிலள், என் செய்கேன் ? *

கள்ளவிழ் சோலைக், கணபுரம் கை தொழும்

பிள்ளையைப் * பிள்ளை யென்று எண்ணப் பெறுவரே ?        8.2.9      திருக்கண்ணபுரம்

கார்மலி, கண்ணபுரத் தெம்மடிகளைப் *

பார்மலி மங்கையர் கோன், பரகாலன் சொல் *

சீர்மலி பாடல், இவை பத்தும் வல்லவர் *

நீர்மலி வையத்து, நீடு நிற்பார்களே.    8.2.10    திருக்கண்ணபுரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.