[highlight_content]

Thirumozhi 8-3

பெரிய திருமொழி

எட்டாம் பத்து

மூன்றாம் திருமொழி

கரை யெடுத்த சுரி சங்கும் கன பவளத் தெழு கொடியும் *

திரை யெடுத்து வருபுனல் சூழ் திருக்கண்ணபுரத்துறையும் *

விரை யெடுத்த துழாயலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர *

வரை யெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரிவளையே.      8.3.1                திருக்கண்ணபுரம்

அரிவிரவு முகிற் கணத்தால் அகிற் புகையால் வரையோடும் *

தெரிவரிய மணி மாடத் திருக்கண்ணபுரத்துறையும் *

வரியரவி னணைத் துயின்று மழை மதத்த சிறு தறுகண் *

கரி வெருவ மருப்பொசித்தாற்கு இழந்தேன் என் கனவளையே.                 8.3.2                திருக்கண்ணபுரம்

துங்க மாமணி மாட நெடு முகட்டின் சூலிகை * போம்

திங்கள் மாமுகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்துறையும் *

பைங்கண் மால் விடை யடர்த்துப் பனிமதி கோள் விடுத்துகந்த *

செங்கண் மாலம்மானுக்கு இழந்தேன் என் செறிவளையே.         8.3.3                திருக்கண்ணபுரம்

கண மருவு மயிலகவு கடி பொழில் சூழ் நெடு மறுகில் *

திண மருவு கனமதிள் சூழ் திருக்கண்ணபுரத்துறையும் *

மண மருவு தோளாய்ச்சி ஆர்க்கப் போய் * உரலோடும்

புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே.            8.3.4                திருக்கண்ணபுரம்

வாயெடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள் *

தீயெடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்துறையும் *

தாயெடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடித் * தயிருண்ட

வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரிவளையே.    8.3.5                திருக்கண்ணபுரம்

மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர் பவளம் *

திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ணபுரத்துறையும் *

அடலடர்த் தன்றிரணியனை முரணழிய * அணியுகிரால்

உடலெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என்னொளி வளையே.   8.3.6                திருக்கண்ணபுரம்

வண்டமரும் மலர்ப் புன்னை வரிநீழல் அணிமுத்தம் *

தெண்திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்துறையும் *

எண்திசையும் எழுகடலும் இருநிலனும் பெருவிசும்பும் *

உண்டுமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என்னொளி வளையே.                8.3.7                திருக்கண்ணபுரம்

கொங்குமலி கருங்குவளை கண்ணாகத் * தெண்கயங்கள்

செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ணபுரத்துறையும் *

வங்கமலி தடங்கடலுள் வரியரவினணைத் துயின்ற *

செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறிவளையே.        8.3.8      திருக்கண்ணபுரம்

வாராளும் இளங்கொங்கை நெடும்பணைத் தோள் மடப்பாவை *

சீராளும் வரை மார்பன் திருக்கண்ணபுரத்துறையும் *

பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாயரவணை மேல் *

பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய்வளையே.      8.3.9      திருக்கண்ணபுரம்

தேமருவு பொழில் புடைசூழ் திருக்கண்ணபுரத்துறையும்

வாமனனை * மறிகடல்சூழ் வயலாலி வளநாடன் *

காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை *

நாமருவி இவை பாட வினையாய நண்ணாவே.      8.3.10    திருக்கண்ணபுரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.