[highlight_content]

Thirumozhi 3-10

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

பத்தாம் திருமொழி

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத்

தீவினைகள் போயகல * அடியவர்கட்கு என்றும்

அருள் நடந்து இவ்வேழுலகத்தவர் பணிய, வானோர்

அமர்ந்தேத்த இருந்த இடம் * பெரும்புகழ் வேதியர் வாழ்

தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்

தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ *

அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்

அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !              3.10.1    அரிமேயவிண்ணகரம்

வென்றிமிகு நரகனுரமது அழிய விசிறும்

விறலாழித் தடக்கையன், விண்ணவர்கட்கு * அன்று

குன்றுகொடு குரைகடலைக் கடைந்து அமுதமளிக்கும்

குருமணி என்னாரமுதம் குலவியுறை கோயில் *

என்றும் மிகு பெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையோர்

ஏழிசையும் கேள்விகளும் இயன்ற பெருங்குணத்தோர் *

அன்றுலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர்

அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !              3.10.2    அரிமேயவிண்ணகரம்

உம்பருமிவ் வேழுலகும் ஏழ்கடலுமெல்லாம்

உண்ட பிரான், அண்டர்கள் முன் கண்டு மகிழ்வெய்த *

கும்பமிகு மதயானை மருப்பொசித்துக், கஞ்சன்

குஞ்சி பிடித்தடித்த பிரான் கோயில் * மருங்கெங்கும்

பைம்பொனொடு வெண்முத்தம் பல புன்னை காட்டப்

பலங்கனிகள் தேன் காட்டப் * படவரவேரல்குல்

அம்பனைய கண் மடவார் மகிழ்வெய்து நாங்கூர்

அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !              3.10.3    அரிமேயவிண்ணகரம்

ஓடாத ஆளரியின் உருவமது கொண்டு, அன்று

உலப்பில் மிகு பெருவரத்த இரணியனைப் பற்றி *

வாடாத வள்ளுகிரால் பிளந்து, அவன் தன் மகனுக்கு

அருள் செய்தான் வாழுமிடம் * மல்லிகை செங்கழுநீர்

சேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை

செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலினூடே *

ஆடேறு வயலாலைப் புகை கமழும் நாங்கூர்

அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !              3.10.4    அரிமேயவிண்ணகரம்

கண்டவர்தம் மனம் மகிழ மாவலிதன் வேள்விக்கு

அளவில் மிகு சிறுகுறளாய் மூவடி யென்றிரந்திட்டு *

அண்டமும் இவ்வலைகடலும் அவனிகளுமெல்லாம்

அளந்த பிரான் அமருமிடம் * வளங்கொள் பொழிலயலே

அண்டமுறு முழவொலியும் வண்டினங்களொலியும்

அருமறையினொலியும் மடவார் சிலம்பினொலியும் *

அண்டமுறும் அலைகடலினொலி திகழும் நாங்கூர்

அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !              3.10.5    அரிமேயவிண்ணகரம்

வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா, இலங்கை

மன்னன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர *

தாள்நெடுந்திண் சிலைவளைத்த தயரதன் சேய், என்தன்

தனிச்சரண் வானவர்க்கரசு கருதுமிடம் * தடமார்

சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை

செந்நெலொடு மடுத்தரிய உதிர்ந்த செழுமுத்தம் *

வாள்நெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர்

அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !             3.10.6    அரிமேயவிண்ணகரம்

தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்

தேனுகனும் பூதனை தனாருயிரும் செகுத்தான் *

காமனைத் தான் பயந்த கருமேனி யுடையம்மான்

கருதுமிடம், பொருது புனல் துறைதுறை முத்து உந்தி *

நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதம், ஐந்து

வேள்வியோடு ஆறங்கம் நவின்று கலை பயின்று * அங்கு

ஆமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர்

அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !              3.10.7    அரிமேயவிண்ணகரம்

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை

காமருசீர் முகில்வண்ணன் காலிகள் முன் காப்பான் *

குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன்

குலவுமிடம் * கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள் *

துன்றுமணி மண்டபங்கள் சாலைகள், தூமறையோர்

தொக்கீண்டித் தொழுதியொடு மிகப்பயிலும் சோலை *

அன்றலர்வாய் மதுவுண்டு அங்கு அளிமுரலும் நாங்கூர்

அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !             3.10.8    அரிமேயவிண்ணகரம்

வஞ்சனையால் வந்தவள் தன் உயிருண்டு, வாய்த்த

தயிருண்டு வெண்ணெயமுதுண்டு * வலிமிக்க

கஞ்சனுயிரதுவுண்டு இவ்வுலகுண்ட காளை

கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி *

மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து

வளம்கொடுப்ப, மாமறையோர் மாமலர்கள் தூவி *

அஞ்சலித்து அங்கு அரி சரணென்று இறைஞ்சு மணி நாங்கூர்

அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !          3.10.9    அரிமேயவிண்ணகரம்

சென்று சினவிடையேழும் பட அடர்த்துப், பின்னை

செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில் *

அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்

அரிமேய விண்ணகரம் அமர்ந்த செழுங்குன்றைக் *

கன்றிநெடு வேல்வலவன் மங்கையர் தம் கோமான்

கலிகன்றி ஒலிமாலை ஐந்தினொடு மூன்றும் *

ஒன்றினொடு மொன்றும் இவை கற்று வல்லார், உலகத்து

உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே.       3.10.10  அரிமேயவிண்ணகரம்

*************

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.