[highlight_content]

Thirumozhi 3-4

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

நான்காம் திருமொழி

ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி

உலகனைத்தும் ஈரடியாலொடுக்கி * ஒன்றும்

தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த

தாடாளன் தாளணைவீர் ! * தக்ககீர்த்தி

அருமறையின் திரள் நான்கும் வேள்வி யைந்தும்

அங்கங்களவை யாறும் இசைகளேழும் *

தெருவில் மலிவிழா வளமும் சிறக்கும், காழிச்

சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.    3.4.1      காழிச்சீராம விண்ணகரம்

நான்முகன் நாள்மிகைத் தருக்கை, இருக்கு வாய்மை

நலமிகுசீர் உரோமசனால் நவிற்று * நக்கன்

ஊன்முகமார் தலையோட்டு ஊண் ஒழித்த எந்தை

ஒளிமலர்ச் சேவடி அணைவீர் ! * உழுசேயோடச்

சூன்முகமார் வளையளைவாய் உகுத்த முத்தைத்

தொல்குருகு சினையென்னச் சூழ்ந்தியங்க * எங்கும்

தேன்முகமார் கமலவயல் சேல் பாய், காழிச்

சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.    3.4.2      காழிச்சீராம விண்ணகரம்

வையணைந்த நுதிக்கோட்டு வராகமொன்றாய்

மண்ணெல்லாம் இடந்தெடுத்து மதங்கள் செய்து *

நெய்யணைந்த திகிரியினால், வாணன் திண்தோள்

நேர்ந்தவன் தாளணைகிற்பீர் ! * நெய்தலோடு

மையணைந்த குவளைகள் தம் கண்களென்றும்

மலர்க்குமுதம் வாயென்றும் கடைசிமார்கள் *

செய்யணைந்து களைகளையாது ஏறும், காழிச்

சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.    3.4.3      காழிச்சீராம விண்ணகரம்

பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து, முன்னாள்

பாய்விடைகள் ஏழடர்த்துப் * பொன்னன் பைம்பூண்

நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட

நின்மலன் தாளணைகிற்பீர் ! * நீலமாலைத்

தஞ்சுடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே

தண்மதியின் நிலாக் காட்டப் பவளந் தன்னால் *

செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார், காழிச்

சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.    3.4.4      காழிச்சீராம விண்ணகரம்

தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு

திருக்குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து *

வெவ்வாய மாகீண்டு வேழம் அட்ட

விண்ணவர் கோன் தாளணவீர் ! * விகிர்தமாதர்

அவ்வாய வாள் நெடுங்கண் குவளை காட்ட

அரவிந்தம் முகம் காட்ட * அருகே ஆம்பல்

செவ்வாயின் திரள் காட்டும் வயல் சூழ், காழிச்

சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.    3.4.5      காழிச்சீராம விண்ணகரம்

பைங்கண் விறல் செம்முகத்து வாலி மாளப்

படர் வனத்துக் கவந்தனொடும் * படையார் திண்கை

வெங்கண் விறல் விராதனுக விற்குனித்த

விண்ணவர் கோன் தாளணைவீர் ! * வெற்புப் போலும்

துங்கமுக மாளிகை மேல் ஆயங்கூறும்

துடியிடையார் முகக்கமலச் சோதி தன்னால் *

திங்கள் முகம் பனிபடைக்கும் அழகார், காழிச்

சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.    3.4.6      காழிச்சீராம விண்ணகரம்

பொருவில் வலம்புரி அரக்கன் முடிகள் பத்தும்

புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த *

செருவில் வலம்புரி சிலைக்கை மலைத்தோள் வேந்தன்

திருவடி சேர்ந்து உய்கிற்பீர் ! * திரை நீர்த்து எள்கி

மருவி வலம்புரி கைதைக் கழியூடாடி

வயல் நண்ணி மழைதரு நீர் தவழ் கால்மன்னித் *

தெருவில் வலம்புரி தரளம் ஈனும், காழிச்

சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.    3.4.7      காழிச்சீராம விண்ணகரம்

பட்டர வேரகலல்குல் பவளச் செவ்வாய்

பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாம் இன்சொல் *

மட்டவிழும் குழலிக்கா, வானோர் காவில்

மரம் கொணர்ந்தான் அடியணைவீர் ! * அணில்கள் தாவ

நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ

நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு * பீனத்

தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும், காழிச்

சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.    3.4.8      காழிச்சீராம விண்ணகரம்

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப்

பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்துக் *

கறை தங்குவேல் தடங்கண் திருவை, மார்பில்

கலந்தவன் தாள் அணைகிற்பீர் ! * கழுநீர்கூடித்

துறை தங்கு கமலத்துத் துயின்று, கைதைத்

தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச் *

சிறை வண்டு களிபாடும் வயல் சூழ், காழிச்

சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.   3.4.9      காழிச்சீராம விண்ணகரம்

செங்கமலத்து அயனனைய மறையோர், காழிச்

சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை *

அங்கமலத் தடவயல் சூழ் ஆலிநாடன்

அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் *

கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்

கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன *

சங்கமுகத் தமிழ் மாலை பத்தும் வல்லார்

தடங்கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே.         3.4.10    காழிச்சீராம விண்ணகரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.