[highlight_content]

Thirumozhi 4-1

திருமொழி

நான்பெரிய காம் பத்து

முதல் திருமொழி

போதலர்ந்த பொழிற்சோலைப், புறமெங்கும் பொருதிரைகள் *

தாதுதிர வந்தலைக்கும், தடமண்ணித் தென்கரைமேல் *

மாதவன் தானுறையுமிடம், வயல் நாங்கை * வரிவண்டு

தேதெனவென்றிசை பாடும், திருத்தேவனார் தொகையே.   4.1.1      திருத்தேவனார் தொகை

யாவருமாய் யாவையுமாய், எழில்வேதப் பொருள்களுமாய் *

மூவருமாய் முதலாய, மூர்த்தியமர்ந்து உறையுமிடம் *

மாவரும் திண்படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை *

தேவரும் சென்றிறைஞ்சு பொழில் திருத்தேவனார் தொகையே.           4.1.2                திருத்தேவனார் தொகை

வானாடும் மண்நாடும், மற்றுள்ள பல்லுயிரும் *

தானாய எம்பெருமான், தலைவன் அமர்ந்து உறையுமிடம் *

ஆனாத பெருஞ் செல்வத் தருமறையோர், நாங்கை தன்னுள் *

தேனாரும் மலர்ப் பொழில்சூழ், திருத்தேவனார் தொகையே.        4.1.3      திருத்தேவனார் தொகை

இந்திரனு மிமையவரும், முனிவர்களும் * எழிலமைந்த

சந்தமலர்ச் சதுமுகனும், கதிரவனும் சந்திரனும் *

எந்தை ! எமக்கருளென, நின்றருளுமிடம் * எழில் நாங்கை

சுந்தரநற் பொழில் புடைசூழ், திருத்தேவனார் தொகையே.  4.1.4      திருத்தேவனார் தொகை

10.4.1.5 அண்டமுமிவ் வலைகடலும், அவனிகளும் குலவரையும் *

உண்ட பிரானுறையுமிடம், ஒளிமணி சந்தகில் கனகம் *

தெண்திரைகள் வரத் திரட்டும், திகழ்மண்ணித் தென்கரை மேல் *

திண்திறலார் பயில் நாங்கைத் திருத்தேவனார் தொகையே.      4.1.5      திருத்தேவனார் தொகை

ஞால மெல்லா மமுது செய்து, நான்மறையும் தொடராத

பாலகனாய் * ஆலிலையில் பள்ளிகொள்ளும், பரமனிடம் *

சாலிவளம் பெருகி வரும், தடமண்ணித் தென்கரைமேல் *

சேலுகளும் வயல் நாங்கைத் திருத்தேவனார் தொகையே.         4.1.6      திருத்தேவனார் தொகை

ஓடாத ஆளரியின் உருவாகி, இரணியனை *

வாடாத வள்ளுகிரால், பிளந்தளைந்த மாலதிடம் *

ஏடேறு பெருஞ் செல்வத்து, எழில்மறையோர் நாங்கை தன்னுள் *

சேடேறு பொழில் தழுவு, திருத்தேவனார் தொகையே.       4.1.7      திருத்தேவனார் தொகை

வாராரு மிளங்கொங்கை, மைதிலியை மணம் புணர்வான் *

காரார் திண் சிலையிறுத்த, தனிக்காளை கருதுமிடம் *

ஏராரும் பெருஞ் செல்வத்து, எழில்மறையோர் நாங்கை தன்னுள் *

சீராரும் மலர்ப் பொழில்சூழ், திருத்தேவனார் தொகையே.  4.1.8      திருத்தேவனார் தொகை

கும்பமிகு மதயானை, பாகனொடும் குலைந்து வீழக் *

கொம்பதனைப் பறித்தெறிந்த, கூத்தனமர்ந் துறையுமிடம் *

வம்பவிழும் செண்பகத்தின், மணங்கமழும் நாங்கை தன்னுள் *

செம்பொன்மதிள் பொழில் புடைசூழ் திருத்தேவனார் தொகையே.       4.1.9                திருத்தேவனார் தொகை

காரார்ந்த திருமேனிக், கண்ணன் அமர்ந்துறையுமிடம் *

சீரார்ந்த பொழில் நாங்கைத், திருத்தேவனார் தொகைமேல் *

கூரார்ந்த வேல் கலியன், கூறு தமிழ் பத்தும் வல்லார் *

ஏரார்ந்த வைகுந்தத்து, இமையவரோடு இருப்பாரே.  4.1.10    திருத்தேவனார் தொகை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.