[highlight_content]

Thirumozhi 9-5

பெரிய திருமொழி

ஒன்பதாம் பத்து

ஐந்தாம் திருமொழி

தவள விளம்பிறை துள்ளு முந்நீர்த்

தண்மலர்த் தென்றலோடு அன்றிலொன்றித்

துவள * என் நெஞ்சகம் சோர ஈரும்

சூழ்பனி நாள் துயிலா திருப்பேன் *

இவளும் ஓர் பெண்கொடி யென்றிரங்கார்

என்னலம் ஐந்துமுன் கொண்டு போன *

குவளை மலர் நிற வண்ணர் மன்னு

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்,     9.5.1      திருக்குறுங்குடி

தாதவிழ் மல்லிகை புல்லி வந்த

தண்மதியினிள வாடை இன்னே *

ஊதை திரி தந்துழறி யுண்ண

ஓரிரவும் உறங்கேன் * உறங்கும்

பேதையர் பேதைமையால் இருந்து

பேசிலும் பேசுக பெய்வளையார் *

கோதை நறுமலர் மங்கை மார்வன்

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   9.5.2      திருக்குறுங்குடி

காலையும் மாலை யொத்துண்டு

கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுலாவும் *

போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும்

பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில் *

மாலவன் மாமணி வண்ணன்

மாயம் மற்றுமுள, அவை வந்திடாமுன் *

கோல மயில் பயிலும் புறவின்

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   9.5.3      திருக்குறுங்குடி

கருமணி பூண்டு வெண்நாகு அணைந்து

கார் இமிலேற்று அணர், தாழ்ந்துலாவும்

ஒருமணி யோசை * என்னுள்ளம் தள்ள

ஓரிரவும் உறங்கா திருப்பேன் *

பெருமணி வானவ ருச்சி வைத்த

பேரருளாளன் பெருமை பேசிக் *

குருமணி நீர் கொழிக்கும் புறவின்

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   9.5.4      திருக்குறுங்குடி

திண் திமிலேற்றின் மணியும்

ஆயன் தீங்குழலோசையும் * தென்றலோடு

கொண்டதோர் மாலையும், அந்தியீன்ற

கோல விளம்பிறையோடு கூடிப் *

பண்டைய வல்ல இவை நமக்குப்

பாவியே னாவியை வாட்டம் செய்யும் *

கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   9.5.5      திருக்குறுங்குடி

எல்லியும் நன்பகலும் இருந்தே

ஏசிலும் ஏசுக, ஏந்திழையார்

நல்லர் ? * அவர் திறம் நாமறியோம்

நாண் மடமச்சம் நமக்கிங்கில்லை *

வல்லன சொல்லி மகிழ்வரேலும்

மாமணி வண்ணரை நாம் மறவோம் *

கொல்லை வளரிள முல்லை புல்கு

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   9.5.6      திருக்குறுங்குடி

செங்கண் நெடிய கரிய மேனித்

தேவரொருவர் இங்கே புகுந்து * என்

அங்கம் மெலிய வளை கழல

ஆது கொலோ ? என்று சொன்ன பின்னை *

ஐங்கணை வில்லி தன்னாண்மை

என்னொடாடு மதனை அறிய மாட்டேன் *

கொங்கலர் தண்பணை சூழ் புறவில்

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   9.5.7      திருக்குறுங்குடி

கேவலமன்று கடலினோசை

கேண்மின்கள் * ஆயன் கை ஆம்பல் வந்து என்

ஆவியளவும் அணைந்து நிற்கும்

அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு *

ஏவலம் காட்டி இவனொருவன்

இப்படியே புகுந்து எய்திடா முன் *

கோவலர் கூத்தன் குறிப்பறிந்து

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   9.5.8      திருக்குறுங்குடி

சோத்தென நின்று தொழ இரங்கான்

தொன்னலங் கொண்டெனக்கு இன்று காறும் *

போர்ப்பதோர் பொற்படம் தந்து போனான்

போயின வூரறியேன் * என் கொங்கை

மூத்திடுகின்றன

மற்றவன் தன் மொய் அகல மணையாது வாளா *

கூத்தனிமையவர் கோன் விரும்பும்

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   9.5.9      திருக்குறுங்குடி

செற்றவன் தென்னிலங்கை மலங்கத்

தேவ பிரான் * திருமாமகளைப்

பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட

பேரருளாளன், பெருமை பேசக்

கற்றவன் * காமருசீர்க் கலியன்

கண்ணகத்தும், மனத்தும் அகலாக்

கொற்றவன் * முற்றுலகாளி நின்ற

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.          9.5.10    திருக்குறுங்குடி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.