[highlight_content]

Thirumozhi 11-2

பெரிய திருமொழி

பதினோராம் பத்து

இரண்டாம் திருமொழி

குன்றமெடுத்து மழை தடுத்து, இளையாரொடும் *

மன்றில் குரவை பிணைந்த மால், என்னை மால் செய்தான் *

முன்றில் தனிநின்ற பெண்ணை மேல், கிடந்தீர்கின்ற *

அன்றிலின் கூட்டைப், பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ ? !       11.2.1

பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து, அரிமாச் செகுத்து *

ஆங்கு வேழத்தின், கொம்பு கொண்டு * வன்பேய்முலை

வாங்கியுண்ட, அவ்வாயன் நிற்க * இவ்வாயன் வாய்

ஏங்கு வேய்ங்குழல், என்னோடாடும் இளமையே.       11.2.2

மல்லொடு கஞ்சனும் துஞ்ச, வென்ற மணிவண்ணன் *

அல்லிமலர்த் தண்துழாய், நினைந்திருந்தேனையே *

எல்லியில் மாருதம், வந்து அடும், அதுவன்றியும் *

கொல்லை வல்லேற்றின் மணியும், கோயின்மை செய்யுமே.        11.2.3

பொருந்து மாமரம், ஏழும் எய்த புனிதனார் *

திரு உந்து சேவடி, என் மனத்து நினைதொறும் *

கருந்தண் மாகடல், கங்குலார்க்கும், அதுவன்றியும் *

வருந்த வாடை வரும், இதற்கு இனி என்செய்கேன் ?              11.2.4

அன்னை முனிவதும், அன்றிலின் குரல் ஈர்வதும் *

மன்னு மறிகட லார்ப்பதும், வளை சோர்வதும் *

பொன்னங் கலையல்குல், அன்ன மென்னடைப் * பூங்குழல்

பின்னை மணாளர், திறத்தமாயின பின்னையே.             11.2.5

ஆழியும் சங்கு முடைய, நங்களடிகள் தாம் *

பாழிமையான கனவில், நம்மைப் பகர்வித்தார் *

தோழியும் நானும் ஒழிய, வையம் துயின்றது *

கோழியும் கூகின்றதில்லை, கூரிருளாயிற்றே !             11.2.6

காமன் தனக்கு முறையல்லேன், கடல் வண்ணனார் *

மாமணவாளர், எனக்குத் தானும் மகன் சொல்லில் *

யாமங்கள் தோறு எரி வீசும், என்னிளங் கொங்கைகள் *

மாமணி வண்ணர் திறத்தவாய், வளர்கின்றவே.            11.2.7

மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற, மணாளனார் *

நெஞ்சம் நிறை கொண்டு போயினார், நினைக்கின்றிலர் *

வெஞ்சுடர் போய் விடியாமல், எவ்விடம் புக்கதோ ! *

நஞ்சு உடலம் துயின்றால், நமக்கு இனி நல்லதே.    11.2.8    திருமாலிருஞ்சோலை

காமன் கணைக்கு ஓரிலக்கமாய், நலத்தின் மிகு *

பூமரு கோல, நம் பெண்மை சிந்தித்திராது போய் *

தூமலர் நீர் கொடு, தோழி ! நாம் தொழுதேத்தினால் *

கார்முகில் வண்ணரைக், கண்களால் காணலாங் கொலோ ?             11.2.9

வென்றி விடையுடன், ஏழடர்த்த அடிகளை *

மன்றில் மலிபுகழ், மங்கை மன் கலிகன்றி சொல்*

ஒன்று நின்ற ஒன்பதும், உரைப்பவர் தங்கள் மேல் *

என்றும் நில்லா வினை, ஒன்றும் சொல்லில் உலகிலே.   11.2.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.