[highlight_content]

Thirumozhi 11-4

பெரிய திருமொழி

பதினோராம் பத்து

நான்காம் திருமொழி

நிலையிட மெங்கு மின்றி நெடு வெள்ளம், உம்பர்

வள நாடு மூட * இமையோர்

தலையிட மற்று எமக்கு ஓர் சரணில்லை யென்ன

அரணாவனென்னும் அருளால் *

அலை கடல் நீர் குழம்ப அகடாட வோடி

அகல் வானுரிஞ்ச * முதுகில்

மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை

மறவாது இறைஞ்சு என் மனனே !              11.4.1

செருமிகு வாளெயிற்ற அரவொன்று சுற்றித்

திசை மண்ணும் விண்ணும் * உடனே

வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப

இமையோர்கள் நின்று கடையப் *

பருவரை யொன்று நின்று முதுகில் பரந்து

சுழலக் கிடந்து துயிலும் *

அருவரை யன்ன தன்மை அடலாமையான

திருமால், நமக்கு ஓரரணே.    11.4.2

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பரும்பர்

உலகேழினொடும் உடனே *

மாதிர மண் சுமந்த வட குன்றும் நின்ற

மலை யாறும் ஏழு கடலும் *

பாதமர் சூழ் குளம்பின் அகமண்டலத்தின்

ஒரு பாலொடுங்க வளர் சேர் *

ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தி

யது, நம்மை யாளுமரசே.         11.4.3

தளையவிழ் கோதை மாலை இருபால் தயங்க

எரிகான்று இரண்டு தறுகண் *

அளவெழ வெம்மை மிக்க அரியாகி

அன்று, பரியோன் சினங்களவிழ *

வளையுகிராளி மொய்ம்பின் மறவோனதாகம்

மதியாது சென்று ஒருகிரால் *

பிளவெழ விட்ட குட்டமது, வையமூடு

பெருநீரில் மும்மை பெரிதே.              11.4.4

வெந்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி

அங்கு ஓர் குறளாகி மெய்ம்மை யுணரச் *

செந்தொழில் வேத நாவின் முனியாகி

வையம் அடி மூன்றிரந்து பெறினும் *

மந்தர மீது போகி மதி நின்றிறைஞ்ச

மலரோன் வணங்க * வளர் சேர்

அந்தர மேழினுாடு செல வுய்த்த பாத

மது, நம்மை யாளுமரசே.       11.4.5

இருநில மன்னர் தம்மை, இருநாலு மெட்டும்

ஒருநாலு மொன்றும் உடனே *

செருநுதலூடு போகி அவராவி மங்க

மழுவாளில் வென்ற திறலோன் *

பெருநில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர்

புலமங்கை கேள்வர் * புகழ் சேர்

பெருநில முண்டுமிழ்ந்த பெருவாயராகி

யவர், நம்மை ஆள்வர் பெரிதே.        11.4.6

இலைமலி பள்ளி யெய்தி இது மாயமென்ன

இனமாய மான் பின், எழில்சேர் *

அலைமலி வேற்கணாளை அகல்விப்பதற்கு

ஒரு உருவாய மானை யமையா *

கொலைமலி யெய்துவித்த கொடியோ னிலங்கை

பொடியாக, வென்றி யமருள் *

சிலைமலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள்

திருமால், நமக்கு ஓரரணே.    11.4.7

முன்னுலகங்களேழும் இருள் மண்டியுண்ண

முதலோடு வீடுமறியாது *

என்னிது ? வந்ததென்ன இமையோர் திசைப்ப

எழில் வேதமின்றி மறையப் *

பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி

இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ *

அன்னமதா யிருந்து அங்கற நூலுரைத்த

அது நம்மை யாளுமரசே.       11.4.8

துணை நிலை மற்றெமக்கோருள தென்றிராது

தொழுமின்கள் தொண்டர் தொலைய *

உணமுலை முன் கொடுத்த உரவோளதாவி

உகவுண்டு வெண்ணெய் மருவி *

பணைமுலை யாயர் மாதர் உரலோடு கட்ட

அதனோடுமோடி * அடல் சேர்

இணை மருதிற்று வீழ நடை கற்ற தெற்றல்

வினை பற்றறுக்கும் விதியே.           11.4.9

கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று

கொடியோ னிலங்கை பொடியா *

சிலை கெழு செஞ்சரங்கள் செலவுய்த்த நங்கள்

திருமாலை, வேலை புடை சூழ் *

கலிகெழு மாடவீதி வயல் மங்கை மன்னு

கலிகன்றி, சொன்ன பனுவல் *

ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற தொண்டரவர்

ஆள்வர் உம்பருலகே.        11.4.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.