[highlight_content]

Thiruvoymozhi 5-4

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

நான்காம் திருவாய்மொழி

ஊரெல்லாம் துஞ்சி, உலகெல்லாம் நள்ளிருளாய் *

நீரெல்லாம் தேறி, ஓர் நீளிரவாய் நீண்டதால் *

பாரெல்லாம் உண்ட, நம் பாம்பணையான் வாரானால் *

ஆர்? எல்லே !, வல்வினையேன் ஆவி காப்பார் இனியே.     5.4.1

ஆவி காப்பார் இனியார் ? ஆழ் கடல் மண் விண் மூடி *

மாவிகாரமாய், ஓர் வல்லிரவாய் நீண்டதால் *

காவி சேர் வண்ணன், என் கண்ணனும் வாரானால் *

பாவியேன் நெஞ்சமே ! நீயும் பாங்கல்லையே.        5.4.2

நீயும் பாங்கல்லை காண், நெஞ்சமே ! நீளிரவும்

ஓயும் பொழுதின்றி, ஊழியாய் நீண்டதால் *

காயும் கடுஞ்சிலை, என் காகுத்தன் வாரானால் *

மாயும் வகை யறியேன், வல்வினையேன் பெண் பிறந்தே.          5.4.3

பெண் பிறந்தா ரெய்தும், பெருந் துயர் காண்கிலேனென்று *

ஒண்சுடரோன், வாரா தொளித்தான் * இம் மண்ணளந்த

கண் பெரிய செவ்வாய், எங்காரேறு வாரானால் *

எண் பெரிய சிந்தை நோய், தீர்ப்பார் ஆர் என்னையே?        5.4.4

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும் *

நீரென்னே ? என்னாதே, நீளிரவும் துஞ்சுவரால் *

காரன்ன மேனி, நம் கண்ணனும் வாரானால் *

பேர் என்னை மாயாதால், வல்வினையேன் பின்னின்றே.      5.4.5

பின் நின்ற காதல் நோய், நெஞ்சம் பெரிது அடுமால் *

முன்னின்று இரா வூழி, கண் புதைய மூடிற்றால் *

மன்னின்ற சக்கரத்து, எம் மாயவனும் வாரானால் *

இந்நின்ற நீளாவி, காப்பார் ஆர் இவ்விடத்தே ?         5.4.6

காப்பார் ஆர் இவ்விடத்துக்? கங்கிருளும் நுண்துளியாய்ச் *

சேட்பால தூழியாய்ச், செல்கின்ற கங்குல் வாய்த் *

தூப்பால வெண்சங்கு, சக்கரத்தன் தோன்றானால் *

தீப்பால வல்வினையேன், தெய்வங்காள் ! என் செய்கேனோ?      5.4.7

தெய்வங்காள் ! என் செய்கேன் ? ஓரிரவு ஏழுழியாய் *

மெய் வந்து நின்று எனது, ஆவி மெலிவிக்கும் *

கைவந்த சக்கரத்து, என் கண்ணனும் வாரானால் *

தைவந்த தண்தென்றல், வெஞ்சுடரில் தானடுமே.     5.4.8

வெஞ்சுடரில் தானடுமால், வீங்கிருளின் நுண்துளியாய் *

அஞ்சுடர வெய்யோன், அணிநெடுந்தேர் தோன்றாதால் *

செஞ்சுடர்த் தாமரைக் கண், செல்வனும் வாரானால் *

நெஞ்சிடர் தீர்ப்பார் இனியார்? நின்றுருகுகின்றேனே.     5.4.9

நின்றுருகுகின்றேனே போல, நெடுவானம்*

சென்றுருகி நுண்துளியாய்ச், செல்கின்ற கங்குல் வாய் *

அன்று ஒருகால், வையம் அளந்த பிரான் வாரானென்று *

ஒன்றொரு கால் சொல்லாது, உலகோ உறங்குமே.     5.4.10

உறங்குவான் போல், யோகு செய்த பெருமானைச் *

சிறந்த பொழில் சூழ், குருகூர்ச் சடகோபன் * சொல்

நிறம் கிளர்ந்த அந்தாதி, ஆயிரத்து இப்பத்தால் *

இறந்து போய் வைகுந்தம், சேராவாறு எங்ஙனேயோ?          5.4.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.