[highlight_content]

Thiruvoymozhi 5-5

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

ஐந்தாம் திருவாய்மொழி

எங்ஙனேயோ அன்னைமீர்காள் ! என்னை முனிவது நீர் ? *

நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *

சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் *

செங்கனி வாயொன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.    5.5.1      திருக்குறுங்குடி

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே *

தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் *

மின்னு நூலும் குண்டலமும் மார்வில் திரு மறுவும் *

மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே.       5.5.2      திருக்குறுங்குடி

நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னையரும் முனிதிர் *

குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *

வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் *

நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே.      5.5.3      திருக்குறுங்குடி

நீங்க நில்லா கண்ணநீர்களென்று அன்னையரும் முனிதிர் *

தேங்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *

பூந்தண் மாலைத் தண்துழாயும் பொன் முடியும் வடிவும் *

பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.        5.5.4      திருக்குறுங்குடி

பக்கம் நோக்கி நிற்கும் நையுமென்று அன்னையரும் முனிதிர் *

தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *

தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் *

தக்க தாமரைக் கண்ணும் பாவியேனாவியின் மேலனவே.        5.5.5      திருக்குறுங்குடி

மேலும்வன்பழி நங்குடிக்குஇவளென்று அன்னைகாணக்கொடாள்*

சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *

கோலநீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும் *

நீலமேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.    5.5.6      திருக்குறுங்குடி

நிறைந்தவன்பழிநங்குடிக்குஇவளென்று அன்னைகாணக்கொடாள்*

சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *

நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி யொடும் *

நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கை யுளதே.    5.5.7      திருக்குறுங்குடி

கையுள்நன்முகம்வைக்கும் நையுமென்று அன்னையரும்முனிதிர் *

மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *

செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் *

மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே.    5.5.8                திருக்குறுங்குடி

முன் நின்றாயென்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் *

மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *

சென்னி நீள்முடி ஆதியாய உலப்பி லணிகலத்தன் *

கன்னல் பாலமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.     5.5.9      திருக்குறுங்குடி

கழியமிக்கதோர் காதலளிவளென்று அன்னை காணக்கொடாள் *

வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *

குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச், சோதி வெள்ளத்தினுள்ளே *

எழுவதோருரு என்னெஞ்சுள்ளெழும் ஆர்க்கும் அறிவரிதே.      5.5.10    திருக்குறுங்குடி

அறிவரிய பிரானை ஆழியங் கையனையே அலற்றி *

நறிய நல் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன *

குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடியதன் மேல்

அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.       5.5.11                திருக்குறுங்குடி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.