[highlight_content]

Thiruvoymozhi 5-9

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

மானேய் நோக்கு நல்லீர் ! வைகலும் வினையேன் மெலிய *

வானார் வண்கமுகும், மது மல்லிகை கமழும் *

தேனார் சோலைகள் சூழ், திருவல்லவாழ் உறையும்

கோனாரை * அடியேன் அடி கூடுவது, என்று கொலோ ?      5.9.1      திருவல்லவாழ்

என்று கொல்? தோழிமீர்காள்!, எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ ?*

பொன் திகழ் புன்னை மகிழ், புது மாதவி மீதணவி *

தென்றல் மணங்கமழும், திருவல்லவாழ் நகருள்

நின்ற பிரான் * அடிநீறு, அடியோம் கொண்டு சூடுவதே?      5.9.2      திருவல்லவாழ்

சூடுமலர்க்குழலீர் ! துயராட்டியேனை மெலிய *

பாடு நல் வேதவொலி, பரவைத் திரை போல் முழங்க *

மாடுயர்ந் தோமப் புகை கமழும், தண் திருவல்லவாழ் *

நீடுறைகின்ற பிரான் கழல், காண்டுங் கொல் நிச்சலுமே.    5.9.3      திருவல்லவாழ்

நிச்சலும் தோழிமீர்காள் ! எம்மை நீர் நலிந்து என்செய்தீரோ? *

பச்சிலை நீள் கமுகும், பலவும் தெங்கும் வாழைகளும் *

மச்சணி மாடங்கள் மீதணவும், தண் திருவல்லவாழ் *

நச்சரவினணை மேல், நம்பிரானது நன்னலமே.        5.9.4      திருவல்லவாழ்

நன்னலத் தோழிமீர்காள் ! நல்ல அந்தணர் வேள்விப் புகை *

மைந்நலங் கொண்டு, உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ் *

கன்னலங் கட்டி தன்னைக், கனியை இன்னமுதந் தன்னை *

என்னலங் கொள் சுடரை, என்று கொல் கண்கள் காண்பதுவே.     5.9.5      திருவல்லவாழ்

காண்பது எஞ்ஞான்றுகொலோ? வினையேன் கனிவாய்மடவீர் !*

பாண் குரல் வண்டினொடு, பசுந் தென்றலுமாகி எங்கும் *

சேண் சினை யோங்குமரச், செழுங் கானல் திருவல்லவாழ் *

மாண் குறள் கோலப் பிரான், மலர்த் தாமரைப் பாதங்களே.       5.9.6      திருவல்லவாழ்

பாதங்கள் மேலணி பூம்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர் ! *

ஓத நெடுந் தடத்துள், உயர் தாமரை செங்கழுநீர் *

மாதர்கள் வாண் முகமும், கண்ணு மேந்தும் திருவல்லவாழ்

நாதன் இஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை, நாடொறுமே.       5.9.7      திருவல்லவாழ்

நாடொறும் வீடின்றியே, தொழக் கூடுங்கொல்? நல்நுதலீர் ! *

ஆடுறு தீங்கரும்பும், விளை செந்நெலுமாகி எங்கும் *

மாடுறு பூந்தடம் சேர் வயல்சூழ், தண் திருவல்லவாழ் *

நீடுறைகின்ற பிரான், நிலம் தாவிய நீள் கழலே.       5.9.8      திருவல்லவாழ்

கழல்வளை பூரிப்ப யாம் கண்டு, கைதொழக் கூடுங்கொலோ? *

குழலென்ன யாழுமென்னக், குளிர் சோலையுள் தேனருந்தி *

மழலை வரிவண்டுகள், இசை பாடும் திருவல்லவாழ் *

சுழலின் மலி சக்கரப் பெருமானது, தொல்லருளே.     5.9.9      திருவல்லவாழ்

தொல்லருள் நல்வினையால், சொலக்கூடுங்கொல் ? தோழிமீர்காள் ! *

தொல்லருள் மண்ணும் விண்ணும், தொழ நின்ற திருநகரம் *

நல்லருளாயிரவர் நலனேந்தும், திருவல்லவாழ் *

நல்லருள் நம்பெருமான், நாராயணன் நாமங்களே.    5.9.10    திருவல்லவாழ்

நாமங்களாயிரமுடைய, நம்பெருமானடி மேல் *

சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன், தெரிந்துரைத்த

நாமங்களாயிரத்துள் இவை பத்தும், திருவல்லவாழ் *

சேமங்கொள் தென்னகர் மேல், செப்புவார் சிறந்தார் பிறந்தே.    5.9.11    திருவல்லவாழ்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.