[highlight_content]

Thiruvoymozhi 7-1

திருவாய்மொழி

ஏழாம் பத்து

முதல் திருவாய்மொழி

உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் *

நண்ணிலா வகையே நலிவான் இன்னு மெண்ணுகின்றாய் *

எண்ணிலாப் பெருமாயனே! இமையோர்களேத்தும் உலகம்மூன்றுடை *

அண்ணலே ! அமுதே ! அப்பனே ! என்னை யாள்வானே !             7.1.1

என்னை யாளும் வன் கோ

ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோதுவித்திட்டு *

உன்னை நான் அணுகா வகை செய்து, போதி கண்டாய் *

கன்னலே அமுதே ! கார்முகில் வண்ணனே ! கடல்ஞாலம் காக்கின்ற *

மின்னு நேமியினாய் ! வினையேனுடை வேதியனே !         7.1.2

வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து * உன்திருவடிச்

சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி ? அந்தோ ! *

ஆதியாகி அகலிடம் படைத்து உண்டுமிழ்ந்து கடந்திடந்திட்ட *

சோதி நீள் முடியாய் ! தொண்டனேன் மதுசூதனனே !          7.1.3

சூது நான் அறியாவகை சுழற்றி ஓரைவரைக் காட்டி * உன்னடிப்

போது நான் அணுகா வகை செய்து, போதி கண்டாய் *

யாதும் யாவருமின்றி நின்னகம் பாலொடுக்கி * ஓராலின் நீளிலை

மீது சேர் குழவி ! வினையேன் வினை தீர் மருந்தே !        7.1.4

தீர்மருந்தின்றி ஐந்துநோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை *

நேர் மருங்கு டைத்தா வடைத்து நெகிழ்ப்பா னொக்கின்றாய் *

ஆர்மருந்து இனியாகுவார்? அடலாழி யேந்தி அசுரர் வன் குலம் *

வேர் மருங் கறுத்தாய் ! விண்ணுளார் பெருமானேயோ !  7.1.5

விண்ணுளார் பெருமாற்கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை *

மண்ணுளென்னைப் பெற்றால் என் செய்யா, மற்று நீயும் விட்டால் ? *

பண்ணுளாய்! கவிதன்னுளாய்! பத்தியினுள்ளாய்! பரமீசனே! *வந்தென்

கண்ணுளாய் ! நெஞ்சுளாய் ! சொல்லுளாய் ! ஒன்று சொல்லாயே.         7.1.6

ஒன்று சொல்லி ஒருத்தனில் நிற்கிலாத ஓரைவர் வன் கயவரை *

என்று யான் வெல்கிற்பன், உன் திருவரு ளில்லையேல் ? *

அன்று தேவர் அசுரர் வாங்க, அலை கடலரவ மளாவி * ஓர்

குன்றம் வைத்த எந்தாய் ! கொடியேன் பருகு இன்னமுதே.            7.1.7

இன்னமுதெனத் தோன்றி ஓரைவர் யாவரையும் மயக்க * நீ வைத்த

முன்ன மாயமெல்லாம் முழுவே ரரிந்து * என்னை உன்

சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்தேத்திக் கைதொழவே அருளெனக்கு*

என்னம்மா ! என் கண்ணா ! இமையோர் தம் குலமுதலே !           7.1.8

குலமுதலடும் தீவினைக் கொடுவன் குழியினில் வீழ்க்கு மைவரை *

வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய் *

நிலமுதலினி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வனவெனப் * பொருள்

பல முதல் படைத்தாய் ! என் கண்ணா ! என் பரஞ்சுடரே !        7.1.9

என்பரஞ்சுடரே! என்று உன்னை யலற்றி உன் இணைத்தாமரைகட்கு *

அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய் *

வன்பரங்களெடுத்து ஐவர் திசை திசை வலித்தெற்றுகின்றனர் *

முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ !      7.1.10

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்

குணங்கள் படைத்தளித்துக் கெடுக்கும் * அப்

புண்டரீகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி யப்பனுக்கே *

தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்

சடகோபன் சொல்லாயிரத்துள் இப்பத்தும் *

கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.     7.1.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.