[highlight_content]

Thiruvoymozhi 8-2

திருவாய்மொழி

எட்டாம் பத்து

இரண்டாம் திருவாய்மொழி

நங்கள் வரிவளை யாயங்காளோ !

நம்முடை யேதலர் முன்பு நாணி *

நுங்கட்கு யானொன்றுரைக்கும் மாற்றம்

நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன் *

சங்கம் சரிந்தன சாயிழந்தேன்

தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன் *

வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்

வேங்கட வாணனை வேண்டிச் சென்றே.        8.2.1      திருவேங்கடம் திருப்பதி

வேண்டிச் சென்றொன்று பெறுகிற்பாரில்

என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும் *

ஈண்டிதுரைக்கும் படியை அந்தோ !

காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் *

காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன்

விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால் *

ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்

எத்தனை காலம் இளைக்கின்றேனே?        8.2.2

காலம் இளைக்கிலல்லால் வினையேன் நான்

இளைக்கின்றிலன் கண்டு கொண்மின் *

ஞாலமறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !

இனி நாணித் தானென் ? *

நீலமலர் நெடுஞ் சோதி சூழ்ந்த

நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட *

கோல வளையொடு மாமை கொள்வான்

எத்தனை காலமும் கூடச் சென்றே.         8.2.3

கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன் ?

கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் *

பாடற்றொழிய இழந்து, வைகல்

பல்வளையார் முன் பரிசழிந்தேன் *

மாடக்கொடி மதிள் தென்குளந்தை

வண்குடபால் நின்ற மாயக் கூத்தன் *

ஆடற் பறவை யுயர்த்த வெல்போர்

ஆழி வலவனை ஆதரித்தே.        8.2.4      திருக்குளந்தை (பெருகுளம்)

ஆழிவலவனை ஆதரிப்பும் ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம் *

தோழியர்காள் ! நம்முடையமே தான் ?

சொல்லுவதோ இங்கு அரியது தான் *

ஊழிதோறூழி ஒருவனாக நன்குணர்வார்க்கும் உணரலாகா *

சூழலுடைய சுடர்கொளாதித் தொல்லையஞ்சோதி நினைக்குங்காலே.        8.2.5

தொல்லை யஞ்சோதி நினைக்குங் கால்

என் சொல்லளவன்று, இமையோர் தமக்கும் *

எல்லை யிலாதன கூழ்ப்புச் செய்யும்

அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான் *

அல்லி மலர்த் தண்துழாயும் தாரான்

ஆர்க்கு இடுகோ இனிப்பூசல் ? சொல்லீர் *

வல்லி வளவயல் சூழ் குடந்தை

மாமலர்க் கண் வளர்கின்ற மாலே.         8.2.6      திருக்குடந்தை (கும்பகோணம்)

மாலரி கேசவன் நாரணன்

சீமாதவன் கோவிந்தன் வைகுந்தனென்றென்று *

ஓலமிட என்னைப் பண்ணி விட்டிட்டு

ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் *

ஏலமலர்க் குழலன்னை மீர்காள் !

என்னுடைத் தோழியர்காள் ! என் செய்கேன் ? *

காலம் பல சென்றும் காண்பது ஆணை

உங்களோடு எங்களிடை யில்லையே.    8.2.7

இடை யில்லை யான் வளர்த்த கிளிகாள் !

பூவைகள்காள் ! குயில்காள் ! மயில்காள் ! *

உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்

ஒன்று மொழிய வொட்டாது கொண்டான் *

அடையும் வைகுந்தமும் பாற்கடலும்

அஞ்சன வெற்பு மவை நணிய *

கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி

அவன் அவை காண் கொடானே.   8.2.8      திருப்பாற்கடல்,

பரமபதம்

காண் கொடுப்பா னல்லன் ஆர்க்கும் தன்னைக்

கைசெயப் பாலதோர் மாயந் தன்னால் *

மாண்குறள் கோல வடிவு காட்டி

மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த *

சேண்சுடர்த் தோள்கள்பல தழைத்த

தேவபிராற்கு என் நிறைவினோடு *

நாண் கொடுத்தேன், இனியென் கொடுக்கேன் ?

என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள் !   8.2.9

என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள் !

யான் இனிச் செய்வதென் ? * என்னெஞ்சு என்னை

நின்னிடையே னல்லே னென்று நீங்கி

நேமியும் சங்கும் இருகைக் கொண்டு *

பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற்றோடு

பால்மதி யேந்தி * ஓர் கோலநீல

நன்னெடுங் குன்றம் வருவதொப்பான்

நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே.             8.2.10

பாதமடைவதன் பாசத்தாலே

மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு *

கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்

வண் குருகூர்ச் சடகோபன் சொன்ன *

தீதிலந்தாதி யோராயிரத்துள்

இவையுமோர் பத்து, இசையொடும் வல்லார் *

ஆதுமோர் தீதிலராகி, அங்குமிங்கும்

எல்லாம் அமைவார்கள் தாமே.      8.2.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.