[highlight_content]

Thiruvoymozhi 2-5

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

ஐந்தாம் திருவாய்மொழி

அந்தாமத் தன்பு செய்து, என்னாவி சேர் அம்மானுக்கு *

அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள *

செந்தாமரைத் தடங்கண், செங்கனி வாய் செங்கமலம் *

செந்தாமரை யடிக்கள், செம்பொன் திருவுடம்பே.            2.5.1

திருவுடம்பு வான் சுடர், செந்தாமரை கண் கை கமலம் *

திருவிடமே மார்வம், அயனிடமே கொப்பூழ் *

ஒருவிடமும் எந்தை பெருமாற்கு, அரனே ஓ ! *

ஒருவிட மொன்றின்றி, என்னுள் கலந்தானுக்கே.          2.5.2

என்னுள் கலந்தவன், செங்கனி வாய் செங்கமலம் *

மின்னும் சுடர்மலைக்குக், கண் பாதம் கை கமலம் *

மன்னு முழுவேழுலகும், வயிற்றினுள *

தன்னுள் கலவாதது, எப்பொருளும் தானில்லையே.                2.5.3

எப்பொருளும் தானாய், மரதகக் குன்றமொக்கும் *

அப்பொழுதைத் தாமரைப்பூ, கண் பாதம் கை கமலம் *

எப்பொழுதும் நாள் திங்கள், ஆண்டு ஊழியூழி தொறும் *

அப்பொழுதைக் கப்பொழுது, என்னாராவமுதமே.         2.5.4

ஆராவமுதமாய், அல்லாவியுள் கலந்த *

காரார் கருமுகில்போல், என்னம்மான் கண்ணனுக்கு *

நேராவாய் செம்பவளம், கண் பாதம் கை கமலம் *

பேராரம் நீண் முடி நாண், பின்னும் இழை பலவே.    2.5.5

பலபலவே ஆபரணம், பேரும் பலபலவே *

பலபலவே சோதி வடிவு, பண்பு எண்ணில் *

பலபல கண்டுண்டு, கேட்டுற்று மோந்தின்பம் *

பலபலவே ஞானமும், பாம்பணை மேலாற்கேயோ ?      2.5.6

பாம்பணை மேல் பாற்கடலுள், பள்ளி யமர்ந்ததுவும் *

காம்பணை தோள் பின்னைக்காய், ஏறுடனேழ் செற்றதுவும் *

தேம்பணைய சோலை, மராமர மேழெய்ததுவும் *

பூம்பிணைய தண்துழாய்ப், பொன்முடி யம் போரேறே.         2.5.7      திருப்பாற்கடல்

பொன் முடியம் போரேற்றை எம்மானை, நால் தடந்தோள் *

தன் முடிவொன்றில்லாத, தண் துழாய் மாலையனை *

என் முடிவு காணாதே, என்னுள் கலந்தானைச் *

சொல் முடிவு காணேன் நான், சொல்லுவது என் ? சொல்லீரே.     2.5.8

சொல்லீர், என்னம்மானை என்னாவி யாவிதனை *

எல்லையில் சீர், என் கருமாணிக்கச் சுடரை *

நல்ல அமுதம், பெறற்கரிய வீடுமாய் *

அல்லி மலர் விரை யொத்து, ஆணல்லன் பெண்ணல்லனே.           2.5.9

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன் *

காணலுமாகான், உளனல்லன் இல்லையல்லன் *

பேணுங்கால் பேணும், உருவாகும் அல்லனுமாம் *

கோணை பெரிதுடைத்து, எம்பெம்மானைக் கூறுதலே.          2.5.10

கூறுதலொன்றாராக், குடக் கூத்த அம்மானைக் *

கூறுதலே மேவிக், குருகூர்ச் சடகோபன் *

கூறின அந்தாதி, ஓராயிரத்துள் இப்பத்தும் *

கூறுதல் வல்லாருளரேல், கூடுவர் வைகுந்தமே.       2.5.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.