[highlight_content]

Thiruvoymozhi 2-8

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

எட்டாம் திருவாய்மொழி

அணைவது அரவணை மேல், பூம்பாவை யாகம்

புணர்வது * இருவரவர் முதலும், தானே *

இணைவனாம் எப்பொருட்கும், வீடு முதலாம் *

புணைவன், பிறவிக் கடல் நீந்துவார்க்கே.          2.8.1

நீந்தும், துயர்ப் பிறவி உட்பட மற்றெவ்வெவையும் *

நீந்தும், துயரில்லா வீடு முதலாம் *

பூந்தண் புனல் பொய்கை, யானை யிடர் கடிந்த *

பூந்தண் துழாய், என் தனிநாயகன் புணர்ப்பே.    2.8.2

புணர்க்கும் அயனாம், அழிக்கும் அரனாம் *

புணர்த்த தன்னுந்தியோடு ஆகத்து மன்னிப் *

புணர்த்த திருவாகித், தன்மார்வில் தான் சேர் *

புணர்ப்பன் பெரும் புணர்ப்பு, எங்கும் புலனே.     2.8.3

புலனைந்து மேயும், பொறி யைந்தும் நீங்கி *

நல மந்த மில்லதோர் நாடு புகுவீர் !*

அலமந்து வீய, அசுரரைச் செற்றான் *

பல முந்து சீரில், படிமின் ஓவாதே.         2.8.4

ஓவாத் துயர்ப் பிறவி உட்பட, மற்றெவ்வெவையும் *

மூவாத் தனிமுதலாய், மூவுலகும் காவலோன் *

மாவாகி ஆமையாய், மீனாகி மானிடமாம் *

தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே.      2.8.5

தீர்த்தன், உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்

சேர்த்தி * அவையே, சிவன் முடி மேல் தான் கண்டு *

பார்த்தன் தெளிந்தொழிந்த, பைந்துழாயான் பெருமை *

பேர்த்தும் ஒருவரால், பேசக் கிடந்ததே ?       2.8.6

கிடந்து இருந்து நின்று, அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு

இடந்திடும் * தன்னுள் கரக்கும், உமிழும் *

தடம் பெருந் தோளாரத் தழுவும், பாரென்னும்

மடந்தையை * மால் செய்கின்ற மால், ஆர் காண்பாரே ?      2.8.7

காண்பாரார்? எம்மீசன் கண்ணனை, என் காணுமாறு ? *

ஊண் பேசில், எல்லா உலகும் ஓர் துற்றாற்றா *

சேண் பால வீடோ உயிரோ, மற்றெப்பொருட்கும்*

ஏண்பாலும் சோரான், பரந்துளனாம் எங்குமே.    2.8.8

எங்குமுளன் கண்ணனென்ற மகனைக், காய்ந்து *

இங்கில்லையா லென்று, இரணியன் தூண் புடைப்ப *

அங்கு அப்பொழுதே, அவன் வீயத் தோன்றிய * என்

சிங்கப் பிரான் பெருமை, ஆராயும் சீர்மைத்தே ?           2.8.9

சீர்மைகொள் வீடு, சுவர்க்கம் நரகீறா *

ஈர்மைகொள் தேவர் நடுவா, மற்றெப்பொருட்கும் *

வேர்முதலாய் வித்தாய்ப், பரந்து தனிநின்ற *

கார்முகில்போல்வண்ணன், என்கண்ணனை நான் கண்டேனே.    2.8.10

கண்தலங்கள் செய்ய, கருமேனி யம்மானை *

வண்டலம்பும் சோலை, வழுதிவளநாடன் *

பண்தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் *

விண்தலையில் வீற்றிருந்து, ஆள்வர் எம்மா வீடே.            2.8.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.