[highlight_content]

Thiruvoymozhi 3-5

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

ஐந்தாம் திருவாய்மொழி

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற *

கைம்மாவுக்கு அருள்செய்த கார்முகில்போல் வண்ணன் கண்ணன் *

எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்

தம்மால் * கருமமென்? சொல்லீர் தண்கடல் வட்டத்துள்ளீரே!      3.5.1

தண்கடல் வட்டத்துள்ளாரைத் தமக்கிரையாத் தடிந்துண்ணும் *

திண்கழற் காலசுரர்க்குத் தீங்கிழைக்கும் திருமாலைப் *

பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்துழலாதார் *

மண்கொளுலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே.         3.5.2

மலையை யெடுத்துக் கல்மாரி காத்துப், பசு நிரை தன்னைத் *

தொலைவு தவிர்த்த பிரானைச், சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் *

தலையினோ டாதனம் தட்டத், தடுகுட்டமாய்ப் பறவாதார் *

அலைகொள் நரகத் தழுந்திக் கிடந்து உழைக்கின்ற, வம்பரே.       3.5.3

வம்பவிழ் கோதை பொருட்டா, மால்விடை யேழும் அடர்த்த *

செம்பவளத் திரள் வாயன், சிரீதரன் தொல் புகழ் பாடிக் *

கும்பிடு நட்டமிட்டாடிக், கோகு உகட்டு உண்டுழலாதார் *

தம் பிறப்பால் பயனென்னே? சாது சனங்களிடையே.          3.5.4

சாது சனத்தை நலியும், கஞ்சனைச் சாதிப்பதற்கு *

ஆதியஞ் சோதியுருவை, அங்கு வைத்து இங்குப் பிறந்த *

வேத முதல்வனைப் பாடி, வீதிகள் தோறும் துள்ளாதார் *

ஓதி யுணர்ந்தவர் முன்னா, என் சவிப்பார் மனிசரே?   3.5.5

மனிசரும் மற்றும் முற்றுமாய், மாயப் பிறவி பிறந்த *

தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக் *

கனியைக் கரும்பினின் சாற்றைக், கட்டியைத் தேனை அமுதை *

முனிவின்றி யேத்திக் குனிப்பார், முழுதுணர் நீர்மையினாரே.        3.5.6

நீர்மையில் நூற்றுவர் வீய, ஐவர்க்கு அருள் செய்து நின்று *

பார் மல்கு சேனை யவித்த, பரஞ்சுடரை நினைந்தாடி *

நீர்மல்கு கண்ணினராகி, நெஞ்சம் குழைந்து நையாதே *

ஊன் மல்கி மோடு பருப்பார், உத்தமர்கட்கு என் செய்வாரே?            3.5.7

வார் புனலந் தண்ணருவி, வடதிரு வேங்கடத்தெந்தை *

பேர்பல சொல்லிப் பிதற்றிப், பித்தரென்றே பிறர் கூற *

ஊர்பல புக்கும் புகாதும், உலோகர் சிரிக்க நின்றாடி *

ஆர்வம் பெருகிக் குனிப்பார், அமரர் தொழப் படுவாரே.         3.5.8      திருவேங்கடம் திருப்பதி

அமரர் தொழப் படுவானை, அனைத்துலகுக்கும் பிரானை *

அமர மனத்தினுள் யோகு புணர்ந்து, அவன் தன்னோடு ஒன்றாக *

அமரத் துணிய வல்லார்களொழிய, அல்லாதவரெல்லாம் *

அமர நினைந்தெழுந்தாடி, அலற்றுவதே கருமமே.      3.5.9

கருமமும் கரும பலனுமாகிய, காரணன் தன்னைத் *

திருமணி வண்ணனைச் செங்கண் மாலினைத், தேவ பிரானை *

ஒருமை மனத்தினுள் வைத்து, உள்ளம் குழைந்தெழுந்தாடிப் *

பெருமையும் நாணும் தவிர்ந்து, பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.        3.5.10

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல *

ஆர்ந்த புகழச்சுதனை, அமரர் பிரானை எம்மானை *

வாய்ந்த வளவயல் சூழ், தண் வளங் குருகூர்ச் சடகோபன் *

நேர்ந்த ஓராயிரத்து இப்பத்து, அருவினை நீறு செய்யுமே.            3.5.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.