[highlight_content]

Thiruvoymozhi 10-8

திருவாய்மொழி

பத்தாம் பத்து

எட்டாம் திருவாய்மொழி

திருமாலிருஞ்சோலை மலை என்றேன், என்னத் *

திருமால் வந்து, என்னெஞ்சு நிறையப் புகுந்தான் *

குருமாமணி யுந்து புனல், பொன்னித் தென்பால் *

திருமால் சென்று சேர்விடம், தென் திருப்பேரே.    10.8.1    திருப்பேர்நகர்,

திருமாலிருஞ்சோலை

பேரே யுறைகின்ற பிரான், இன்று வந்து *

பேரேனென்று, என்னெஞ்சு நிறையப் புகுந்தான் *

காரேழ் கடலேழ், மலையே ழுலகுண்டும் *

ஆரா வயிற்றானை, அடங்கப் பிடித்தேனே.      10.8.2    திருப்பேர்நகர்

பிடித்தேன், பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் *

மடித்தேன், மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையைக் *

கொடிக் கோபுர மாடங்கள் சூழ், திருப்பேரான் *

அடிச் சேர்வது எனக்கு, எளிதாயினவாறே.      10.8.3    திருப்பேர்நகர்

எளிதாயின வாறென்று, என் கண்கள் களிப்பக் *

களிதாகிய சிந்தையனாய்க், களிக்கின்றேன் *

கிளி தாவிய சோலைகள் சூழ், திருப்பேரான் *

தெளிதாகிய, சேண் விசும்பு தருவானே.  10.8.4    திருப்பேர்நகர்

வானே தருவான், எனக்கா என்னோடொட்டி *

ஊனேய் குரம்பை, இதனுள் புகுந்து * இன்று

தானே தடுமாற்ற, வினைகள் தவிர்த்தான் *

தேனேய் பொழில், தென் திருப்பேர் நகரானே.  10.8.5    திருப்பேர்நகர்

திருப்பேர் நகரான், திருமாலிருஞ்சோலைப் *

பொருப்பே யுறைகின்ற பிரான், இன்று வந்து *

இருப்பேனென்று, என்னெஞ்சு நிறையப் புகுந்தான் *

விருப்பே பெற்று, அமுதமுண்டு களித்தேனே.         10.8.6    திருப்பேர்நகர்,

திருமாலிருஞ்சோலை

உண்டு களித்தேற்கு, உம்பர் என் குறை? *

மேலைத் தொண்டு உகளித்து, அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் *

வண்டு களிக்கும் பொழில் சூழ், திருப்பேரான் *

கண்டு களிப்பக், கண்ணுள் நின்று அகலானே.  10.8.7    திருப்பேர்நகர்

கண்ணுள் நின்று அகலான், கருத்தின் கண் பெரியன் *

எண்ணில் நுண்பொருள், ஏழிசையின் சுவை தானே *

வண்ண நன்மணி மாடங்கள் சூழ், திருப்பேரான் *

திண்ணம் என் மனத்துப் புகுந்தான், செறிந்து இன்றே.       10.8.8    திருப்பேர்நகர்

இன்று என்னைப் பொருளாக்கித், தன்னை யென்னுள் வைத்தான் *

அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது, என் செய்வான் ? *

குன்றென்னத் திகழ் மாடங்கள் சூழ், திருப்பேரான் *

ஒன்றெனக் கருள் செய்ய, உணர்த்த லுற்றேனே.      10.8.9    திருப்பேர்நகர்

உற்றேன் உகந்து பணி செய்து, உன பாதம்

பெற்றேன் * ஈதே இன்னம் வேண்டுவது, எந்தாய் ! *

கற்றார் மறை வாணர்கள் வாழ், திருப்பேராற்கு *

அற்றார் அடியார் தமக்கு, அல்லல் நில்லாவே.      10.8.10  திருப்பேர்நகர்

நில்லா அல்லல் நீள் வயல் சூழ், திருப்பேர் மேல் *

நல்லார் பலர் வாழ், குருகூர்ச் சடகோபன் *

சொல்லார் தமிழ் ஆயிரத்துள், இவை பத்தும்

வல்லார் * தொண்டர் ஆள்வது, சூழ் பொன் விசும்பே.         10.8.11  திருப்பேர்நகர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.