[highlight_content]

Thiruvoymozhi 10-9

திருவாய்மொழி

பத்தாம் பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

சூழ் விசும்பணி முகில், தூரியம் முழக்கின *

ஆழ் கடலலை திரை, கையெடுத் தாடின *

ஏழ் பொழிலும், வளமேந்திய என்னப்பன் *

வாழ் புகழ், நாரணன் தமரைக் கண்டுகந்தே.       10.9.1

நாரணன் தமரைக் கண்டுகந்து, நல் நீர்முகில் *

பூரண பொற்குடம், பூரித்தது உயர் விண்ணில் *

நீரணி கடல்கள், நின்றார்த்தன * நெடு வரைத்

தோரணம் நிரைத்து, எங்கும் தொழுதனருலகே.       10.9.2

தொழுதனர் உலகர்கள், தூப நல் மலர் மழை

பொழிவனர் * பூமியன்றளந்தவன், தமர் முன்னே *

எழுமினென்று இருமருங் கிசைத்தனர், முனிவர்கள் *

வழியிது வைகுந்தற்கு என்று, வந்து எதிரே.     10.9.3

எதிரெதிர் இமையவர், இருப்பிடம் வகுத்தனர் *

கதிரவரவரவர் கைந்நிரை காட்டினர் *

அதிர் குரல் முரசங்கள், அலைகடல் முழக்கொத்த *

மதுவிரி துழாய்முடி, மாதவன் தமர்க்கே.        10.9.4

மாதவன் தமரென்று, வாசலில் வானவர் *

போதுமின் எமதிடம், புகுதுக வென்றலும் *

கீதங்கள் பாடினர், கின்னரர் கெருடர்கள் *

வேத நல்வாயவர், வேள்வியுள் மடுத்தே.           10.9.5

வேள்வியுள் மடுத்தலும், விரை கமழ் நறும்புகை *

காளங்கள் வலம்புரி, கலந்தெங்கும் இசைத்தனர் *

ஆண்மின்கள் வானகம், ஆழியான் தமரென்று *

வாளொண் கண் மடந்தையர், வாழ்த்தினர் மகிழ்ந்தே.            10.9.6

மடந்தையர் வாழ்த்தலும், மருதரும் வசுக்களும் *

தொடர்ந்து எங்கும், தோத்திரம் சொல்லினர் *

தொடு கடல் கிடந்த எங்கேசவன், கிளரொளி மணிமுடி *

குடந்தை எங்கோவலன், குடியடியார்க்கே.         10.9.7    திருக்குடந்தை (கும்பகோணம்),

திருப்பாற்கடல்

குடியடியார் இவர், கோவிந்தன் தனக்கென்று *

முடியுடை வானவர், முறை முறை எதிர் கொள்ளக் *

கொடியணி நெடுமதிள், கோபுரம் குறுகினர் *

வடிவுடை மாதவன் வைகுந்தம், புகவே.               10.9.8

வைகுந்தம் புகுதலும், வாசலில் வானவர் *

வைகுந்தன் தமர் எமர், எமதிடம் புகுதென்று *

வைகுந்தத்து, அமரரும் முனிவரும் வியந்தனர் *

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே.            10.9.9

விதிவகை புகுந்தனரென்று, நல் வேதியர் *

பதியினில் பாங்கினில், பாதங்கள் கழுவினர் *

நிதியும் நற்சுண்ணமும், நிறைகுட விளக்கமும் *

மதிமுக மடந்தையர், ஏந்தினர் வந்தே.   10.9.10

வந்து அவர் எதிர் கொள்ள, மாமணி மண்டபத்து *

அந்தமில் பேரின்பத்து, அடியரோ டிருந்தமை *

கொந்தலர் பொழில், குருகூர்ச் சடகோபன் * சொல்

சந்தங்கள் ஆயிரத்து, இவை வல்லார் முனிவரே.    10.9.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.