[highlight_content]

Acharya Hrudayam Prk 01

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பரமகாருணிகரான  

அழகியமணவாளப்பெருமாள்நாயனார்ருளிச் செய்த

ஆசார்ய ஹ்ருதயத்தின் தனியன்கள்

ஆசார்யஸ்வாந்தவக்தாரம் அபிராமவராபிம் |

ஸ்ரீக்ருஷ்ணதநயம் வந்தே ஜகத்குருவராநுஜம் ||

பணவாளரவணைப் பள்ளிபயில்பவர்க்கெவ்வுயிரும்

குணபோகமென்று குருகைக்கதிபன் உரைத்ததுய்ய

உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய

மணவாளன்மாறன் மனமுரைத்தான் வண்முடும்பை வந்தே.

மாதவத்தோன்மாறன் மனங்கூறும் மணவாளன்

தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் நீதியினா

லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி

பூங்கமலத்தாள்கள் நெஞ்சே போற்று.

*******

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த

ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம்

ஆசார்யஹ்ருதயஸ்யார்த்தாஸ்ஸகலா யேந ர்ஶிதா: |

ஸ்ரீஸாநுதாஸமமலம் தேவராஜம் தமாஶ்ரயே ||

*******

ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரன் ‘‘அசித₃விஶேஷிதாந் ப்ரளயஸீமநி’’ (ஸ்ரீர. ஸ்தவே.2-41) என்று சொல்லுகிறபடியே கரணகளேப₃ரங்களை இழந்து அசித₃விஶேஷிதமாய், அத ஏவ போ₄க₃மோக்ஷஶூந்யமாய்க் கிடக்கிற சேதந வர்க்க₃த்தை, இவற்றின்பக்கல் தனக்குண்டான ஸ்வாபா₄விக ஸம்ப₃ந்த₄மே ஹேதுவாக ‘‘ததை₃க்ஷத’’ (தை.ஆ.6) என்கிறபடியே பார்த்தருளி, ‘ஸூரிகளுடைய அநுப₄வத்துக்கு இட்டுப்பிறந்த இச்சேதநர் இவ்வநுப₄வத்தை இழந்து இங்ஙனே க்லேஶிக்கவொண்ணாது’ என்று ‘‘கரணகளேப₃ரைர்க₄டயிதும் த₃யமாநமநா:’’ (ஸ்ரீர. ஸ்தவே 2-41) என்கிறபடியே த₃யமாநமநாவாய்க்கொண்டு கரணகளேப₃ர ப்ரதா₃நம் பண்ணுவதாக ‘‘ப₃ஹுஸ்யாம்’’ (தை. ஆ. 6) என்று ஸங்கல்பித்து ‘‘தத்ஸ்ருஷ்ட்வா’’ (தை. ஆ. 6) என்கிறபடியே யதா₂ ஸங்கல்பம் இவர்களுக்குக் கரணகளேப₃ரங்களைக் கொடுத்து, அநந்தரம், ‘‘தத₃நுப்ரவிஶ்ய’’ என்கிறபடியே அநுப்ரவேஶித்து வஸ்துத்வ நாமபா₄க்த்வங்களை உண்டாக்கி, ‘‘அந்த: ப்ரவிஷ்டஶ் ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா’’  (யஜு.ஆர.3-21) என்கிறபடியே ஜ்ஞாநவிகாஸத்தையும், ப்ரவ்ருத்தி- நிவ்ருத்தி யோக்₃யதையையும் பண்ணிக்கொடுத்து இந்த ஜ்ஞாநகார்யமான த்யாஜ்யோ- பாதே₃யவிவேகத்துக்குப் பரிகரமாக ‘‘மாநம் ப்ரதீ₃பமிவ காருணிகோ த₃தா₃தி’’ (ஸ்ரீர. ஸ்தவே 2-1) என்கிறபடியே வேத₃ப்ரதா₃நத்தைப்பண்ணி, அநந்தரம் மந்வாதி₃களுக்கு அந்தர்யாமியாய் நின்று சேதநருடைய விஶிஷ்டவேஷ விஷயமான ஶாஸ்த்ரத்தை வெளியிட்டருளியும், அந்த ஶாஸ்த்ரஜந்யஜ்ஞாநம் சிரகால ஸாத்₄யமுமாய், அதி₄க்ருதாதி₄காரமுமாய், அநேக யோக்₃யதா ஸாபேக்ஷமுமாய் இருக்கையாலே து₃ஷ்கரமுமாயிருக்கும் என்று, ஏவமாதி₃தோ₃ஷரஹிதமுமாய், நிஷ்க்ருஷ்டவேஷ விஷயமான திருவஷ்டாக்ஷர- ப்₃ரஹ்மவித்₃யைத்தானே உபதே₃ஶித்தவிடத்திலும் இதில் இழிவாரற்றபடியாலே ஓலைப்புறத்திலே செல்லாத ராஜ்யத்தை எடுத்துவிட்டுச் செலுத்திக்கொள்ளும் ராஜாக்களைப்போலே ‘‘அஜாயமாந:’’ (யஜு. ஆர.3-17) என்று சொல்லப்படுகிற தானே ஸாது₄பரித்ராணார்த்த₂மாக வந்து அவதரித்துப்போருகிற அளவிலும், இவை ஒன்றிலும் அர்த்த₂க்ரியாகார்யமாகாதிருக்கிறபடியாலே, ‘விஸஜாதீயரான நம்மால் ஒன்றாலும் இவர்களைத் திருத்தவொண்ணாது. இனிப் பார்வைகாட்டி ம்ருக₃ம் – பிடிப்பாரைப் போலே ஸஜாதீயரைக்கொண்டே கார்யம் கொள்ளக்கடவோம்’ என்று அறுதியிட்டு ‘‘ஸுஹ்ருத₃ம் ஸர்வபூ₄தாநாம்’’ (ப.கீதை 5-29) என்கிறபடியே ஸர்வபூ₄த ஸுஹ்ருத்தாகையாலே தன்னுடைய நிர்ஹேதுகமான ப்ரஸாத₃த்தாலே எங்கும் பார்த்து இலக்குக் காணாதிருக்கிற அளவிலே, அந்தப் பார்வைதானே தா₃க்ஷிண்யமானவளவிலே, ‘‘மாறி மாறிப்பல பிறப்பும் பிறந்து’’ (திருவாய். 2 – 6 – 8) என்கிறபடியே ஸம்ஸரிக்கிற ஆழ்வார் மேலே நிர்ஹேதுகமாகப்பட அதுதானே ‘‘மா நிஷாத₃ ப்ரதிஷ்டா₂ம் த்வமக₃மஶ் ஶாஶ்வதீஸ்ஸமா யத்க்ரௌஞ்ச மிது₂நாதே₃கமவதீ₄: காமமோஹிதம்’’ (ரா.பா₃.2-15) என்கிறபடியே ஶோகம் ஶ்லோகமாய் அவதரித்தாப் போலே ஸர்வலக்ஷணபேதமான ப்ரப₃ந்த₄மாய்த் தலைக்கட்டிற்று.  

                  அதுதானும் த்ராவிடவேதமானபடியாலே பலவான அர்த்தங்களை உடைத்தாய், பரந்திருக்கையாலே இதில் தாத்பர்யம் எல்லார்க்கும் ப்ரதிபத்தி பண்ணப் போகாதென்று பார்த்து, இதில் அர்த்தவிஶேஷங்களையும், இவற்றில் இவ்வாழ்வார்க்குத் திருவுள்ளக்கருத்து இன்னபடிப்பட்டிருக்குமென்று, இவ்வாசார்யருசி பரிக்ருஹீதமான அர்த்தமே எல்லார்க்கும் தஞ்சம் என்னுமிடத்தையும், இவர் தம்முடைய பரமக்ருபையாலே ஆசார்யபரம்பராப்ராப்தமான அர்த்தவிஶேஷங்களை எல்லார்க்கும் ப்ரதிபத்தி யோக்யமாம்படி ஸங்க்ரஹேண இவ்வாசார்ய ஹ்ருதய ப்ரபந்த முகத்தாலே அருளிச்செய்கிறார்.

இதில் முதல் சூர்ணையாலே பரமகாருணிகனான ஸர்வேஶ்வரன் ‘‘தத் ஸ்ருஷ்ட்வா’’ (தை.ஆ.6-2) என்கிறபடியே ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணி ஸ்ருஷ்ட்ய நந்தரம் அஜ்ஞாநாந்தகாராவ்ருதரான சேதநர் ஜ்ஞாநப்ரகாஶத்தை உடையராய் அஜ்ஞானம் நீங்கி, வேதாந்தவேத்யனாய், நித்யனாய், ஸ்வயம்ப்ரகாஶனாய் இருந்துள்ள தன்னைக் கண்டு ஸாராஸாரவிவேகம் பண்ணுகைக்கு ஸகலஶாஸ்த்ரஸங்க்ரஹமாய், ஸகல ஶப்ங்களும் தன்னுடைய கார்யமாகையாலே தான் காரணமாய், ஸகலார்த்தப்ரகாஶகமான அகாரத்தில் நின்றும் விஸ்த்ருதமான ஶாஸ்த்ரங்களைத்தன் க்ருபையாலே வெளியிட்டருளினான் என்கிறார்.

அவதாரிகை முற்றிற்று

@@@@@@@@@@

ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம்

ப்ரதம ப்ரகரணம்

த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம்

   ரம்யஜாமாத்ருதேவேந தரஶிதம் க்ருஷ்ண ஸூநுநா ।।

  1. காருணிகனான ஸர்வேஶ்வரன் அறிவிலா மனிசர் உணர்வென்னும்1. சுடர்விளக்கேற்றிப் பிறங்கிருள் நீங்கி, மேலிருந்த நந்தாவேத விளக்கைக் கண்டு, நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு, மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின  ப்ரதீபமான கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்.

(காருணிகனான ஸர்வேஶ்வரன்) க்ருபாவிஶிஷ்டஸ்வதந்த்ரன் என்றபடி. (ஸர்வேஶ்வரன்) என்று ஈஶேஶிதவ்யஸம்பந்தம் சொல்லுகிறது. இத்தால் ஸம்பந்தமே ப்ரதாநம் என்றபடி. ஸம்பந்தமுள்ள விஷயத்திலே க்ருபையுமாகப் பெற்றது என்கிறார். ஸ்வாதந்த்ர்யவிஶிஷ்டமான க்ருபை என்று க்ருபைக்கு ஸ்வாதந்த்ர்யம் உபயுக்தம் என்பாருமுண்டு. அத்தை வ்யாவர்த்திக்கிறது. (அறிவிலா மனிசர்) ‘‘அறிவிலா மனிசர்’’ (திருமாலை – 13) என்கிறபடியே அஜ்ஞாநாந்தகாரத்தாலே ஆவ்ருதரான சேதநர். (உணர்வெனும் சுடர்விளக்கேற்றி) ‘‘உய்த்துணர்வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி’’ (மூ. திரு. 94) என்றும், ‘‘ஞானச்சுடர்விளக்கேற்றினேன்’’ (இர. திரு. 1) என்றும் சொல்லுகிறபடியே உஜ்ஜீவநகரமுமாய், ஸவிபூதிகனான ஸர்வேஶ்வரனை விஷயமாக உடைத்தாய், (பரஸ்மை) ஸ்வயம்ப்ரகாஶமுமாய், ஸகலார்த்தப்ரகாஶகமுமான ஜ்ஞாநதீபத்தை உடையராய். (பிறங்கிருள் நீங்கி) ‘‘பிறங்கிருள் நிறங்கெட’’ (திரு மொழி 5-7-3) என்றும், ‘‘பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்க’’ (பெரியா. திரு.1-9-10) என்றும் சொல்லுகிறபடியே மிகுந்த அஜ்ஞாநம் போய். (மேலிருந்த நந்தா வேதவிளக்கைக்கண்டு) ‘‘வேதாந்தவிழுப்பொருளின் மேலிருந்த விளக்கு’’ (பெரியா. திரு.4-3-11) என்றும், ‘‘நந்தாவிளக்கு’’ (திருமொழி. 3- 8-1) ‘‘மிக்க ஞானமூர்த்தியாய வேத விளக்கினை’’ (திருவாய்.4-7-10) என்றும் வேதாந்தங்களிலே ஸர்வஸ்மாத்பரனாக ப்ரகாஶியாநிற்பானுமாய், நித்யனுமாய், வேதத்தாலே ப்ரகாஶ ஸ்வரூபனாக ப்ரதிபாத்யனுமாயிருந்துள்ள தன்னை, ‘‘என் தக்க ஞானக்கண்களாலே கண்டு’’ (திருவாய். 4-7-10) என்கிறபடியே ஜ்ஞாநத்வாரா ஸாக்ஷாத்கரித்து.

(நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு) ‘‘இவையன்றே நல்ல இவையன்றே தீய இவையென்றிவை அறிவனேலும்’’ (பெரிய திருவ.3) என்கிறபடியே ஸாராஸார விவேகம் பண்ணுகைக்கு. அதாவதுவத்விஷயம் நன்று, ஸம்ஸாரம் தீதுஎன்று அறிகைக்காக; வத்விஷயத்தைக்கண்டபின்பு ஸாராஸாரவிவேகம் பண்ணுகை யாவது என் என்னில்வத்விஷயத்தில் வைலக்ஷண்யம் கண்டபின்பிறே ஸம்ஸாரம் அவிலக்ஷணம் என்று அறியலாவது. (மறையாய்விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை) ‘‘மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை’’ (திருமொழி.8-9-4), துளக்கமில் விளக்கு (தி..வி.4) என்று ஸகலவேத ஸங்க்ரஹமாய், நித்யமாய், ஸகலார்த்தப்ரகாஶகமான அகாரத்தில்நின்றும் விஸ்த்ருதமான, ‘‘மாநம் ப்ரதீபமிவ காருணிகோ தாதி’’ (ஸ்ரீர. ஸ்தவே.2-1) என்றும், ‘‘பன்னுகலை நால்வேதப்பொருளை’’ (திருமொழி. 7-8-2) என்றும், ‘‘கலைகளும் வேதமும் நீதிநூலும்’’ (திருமொழி.2-8-5) என்றும்சொல்லப்படுவதாய், த்யாஜ்யோபாதேயார்த்த ப்ரகாஶகமான ஶாஸ்த்ரங்களை. (நீர்மையினாலருள்செய்தான்) ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே ஶாஸ்த்ரப்ரதாநம் பண்ணியருளினான் என்கிறார்.

      ‘‘மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கு’’ என்று வேதத்தையும், அகாரத்தையும்

ஸர்வேஶ்வரனோடே ஸமாநாதிகரிக்கைக்கடி ‘‘வேதைஶ்ச ஸர்வைரஹமேவ வேத்:’’ (ப.கீ.15-15) என்றும், ‘‘ஸமஸ்தஶப்மூலத்வாதகாரஸ்ய ஸ்வபாவத😐 ஸமஸ்தவாச்யமூலத்வாத்ப்ரஹ்மேணாபி ஸ்வபாவத:|| வாச்யவாசக ஸம்பந்த ஸ்தயோரர்த்தாத் ப்ரதீயதே’’ (வாமந.பு.) என்று ப்ரதிபாத்யப்ரதிபாதகபாவத்தாலும், காரணத்வவ்யாபகத்வாதிகளான அர்த்தஸாம்யத்தாலே தோற்றின வாச்யவாசகஸம்பந்தத்தாலும். ‘‘அக்ஷராணாமகாரோஸ்மி’’ (கீ.4) என்றானிறே. ஆக இத்தால் ‘‘ஹர்த்தும் தமஸ்ஸதஸதீ ச விவேக்துமீஶோ மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி’’ (.ஸ்தவே உ.1) என்கிறபடியே ஸம்ஸாரிகள் அஜ்ஞாநநிவ்ருத்திபூர்வகமாக ஜ்ஞாநப்ரகாஶத்தை உடையராய் ஸாராஸாரவிவேகம்பண்ணி உஜ்ஜீவிக்கைக்காக ஶாஸ்த்ரப்ரதாநம் பண்ணினதுக்கடி நிர்ஹேதுகக்ருபை என்றதாய்த்து. (1)

2.. விவேகபலம் வீடுபற்று.

(விவேகபலம்) இப்படி இவன்கொடுத்த ஶாஸ்த்ரஜந்யஜ்ஞாநத்தாலே ஸாராஸாரவிவேகம் பண்ணினதுக்கு லம் என்னென்னில் ; (வீடுபற்று) விடுகையும் பற்றுகையும்; இவை இரண்டையும். ‘‘வீடுமின் முற்றவும்’’ (திருவாய். 1 – 2 – 1) என்றும், ‘‘அற்றிறை பற்றே’’ (திருவாய். 1 – 2 – 5) என்றும் சொல்லக்கடவதிறே. (2)

3. த்யாஜ்யோபாதேயங்கள் ஸுகது:ங்கள்.

இனி த்யாஜ்யோபாதேயங்கள் எவை என்னில்; (த்யாஜ்யோபாதேயங்கள் ஸுகது:ங்கள்) என்கிறார். ‘ஸுகீ வேயம், து:கீ மா பூவம்என்று ஸர்வர்க்கும் து:ம் த்யாஜ்யமாய், ஸுகம் உபாதேயமாயிறே இருப்பது. (3)

4. இவற்றுக்கெல்லை இன்புதுன்பளி பன்மாமாயத்தழுந்துகையும், களிப்பும் கவர்வுமற்றுப் பேரின்பத்தின்புறுகையும்.

இந்த ஸுகது:ங்களுக்கு எல்லை எவை என்னில் (இன்புதுன்பளி பன்மா மாயத்தழுந்துகையும், களிப்பும் கவர்வுமற்றுப் பேரின்பத்தின்புறுகையும்). (இன்பு துன்பளி) துன்பத்தோடே கூடின இன்பத்தைத்தருமதாய் இருக்கை. இதுக்கு ப்ரமாணம் ‘‘அத்யந்தஸ்திமிதாங்காநாம் வ்யாயாமேந ஸுகைஷிணாம் | ப்ராந்திஜ்ஞாநவதாம் பும்ஸாம் ப்ரஹாரோபி ஸுகாயதே’’ (வி.பு.1-17-61). என்று திமிர்வாதம்பற்றின ஶரீரத்தையுடையவர்களாய், வ்யாயாமத்தினாலே ஸுகத்திலே ஆசையுடையவர்களுக்கு ஶரீரத்திலே குத்த, ப்ராந்தி ஜ்ஞாநத்தாலே அது ஸுகமாகிறாப்போலேயிறே. இன்புதுன்பளி பன்மா மாயத் தழுந்துகையாவது ‘‘ உலகினதியல்வே’’ (திருவாசிரியம் 6) என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே பர ஹிம்ஸாதிஸாதநமுகத்தாலே க்ஷுத்ரதேவதா ஸமாஶ்ரயணம் பண்ணி, தத்பலமாய் து:மிஶ்ரமான க்ஷுத்ரஸுகங்களை அநுபவிக்கைக்கீடான தேவாதி ஶரீரங்களிலே அஹமபிமாநம் பண்ணி ஸம்ஸரிக்கை. களிப்பும் கவர்வுமற்றுப் பேரின்பத்தின்புறுகையாவது ‘‘களிப்பும் கவர்வுமற்று’’ (திருவாய்.2-3-10) என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே ப்ராக்ருத பதார்த்தங்களினுடைய லாபாலாபங்களாலே வருகிற ஶோகஹர்ஷங்கள் போய், ஷட்பாவ விகாராஸ்பதமான ஸ்தூலஸூக்ஷ்மரூபமான ப்ரக்ருதி ஸம்பந்த{மு} மற்று, ‘‘பேரின்பவெள்ளத்தே’’ (திருவாய்.7-2-11) என்று சொல்லுகிற நிரதிஶயாநந்த மயமான தேஶவிஶேஷத்திலே போய், அப்ராக்ருதவிக்ரஹ பரிக்ரஹம்பண்ணி, திவ்யாஸ்தாநமண்டபத்திலே நிரதிஶயாநந்தமக்நரான நித்ய ஸூரிகளோடே‘‘ சுழி பட்டோடும் சுடர்ச்சோதிவெள்ளத்தின்புற்று’’ (திருவாய்.8-10-5) என்கிறபடியே வதநுபவம் பண்ணி, ஆநந்தநிர்பரராய் இருக்கையும். அந்த ஶாஸ்த்ர ஜந்யஜ்ஞாநத்தாலே பிறந்த விவேகத்துக்கு ப்ரயோஜநம் த்யாகஸ்வீகாரங்களென்றும், த்யஜிக்கைக்கும் ஸ்வீகரிக்கைக்கும் ஹேது ஸுகது₃:ங்களாகையாலே என்றும், இவை இரண்டுக்கும் எல்லை ஸம்ஸாரஸம்பந்தமும், பரமபதத்திலே போய் ஆநந்தநிர்பரராயிருக்கையும் என்றதாய்த்து. (4)

5. அநந்தக்லேஶநிரதிஶயாநந்தஹேது மறந்தேன் அறியகிலாதே உணர்விலேன் ஏணிலேன் அயர்த்தென்றும், உய்யும்வகை நின்றவொன்றை நன்கு அறிந்தனன் உணர்வினுள்ளே ஆம்பரிசென்றும் சொல்லுகிற ஜ்ஞாதவ்யபஞ்சக ஜ்ஞாந அஜ்ஞாநங்கள்.

(அநந்தக்லேஶநிரதிஶயாநந்த₃ஹேது) ‘‘ஸம்ஸாரஸாக₃ரம் கோ₄ரம் அநந்த க்லேஶபா₄ஜநம்’’ (ஜித.1-4) என்கிறபடியே அநந்தது₃:கா₂வஹமான ஸம்ஸாரத்துக்கும், ‘‘நிரஸ்தாதிஶயாஹ்லாத₃ஸுக₂பா₄வைகலக்ஷணா | பே₄ஷஜம் ப₄க₃வத்ப்ராப்திரேகாந்- தாத்யந்திகீ மதா’’ (வி.பு.6-5-59) என்கிறபடியே நிரதிஶய ஆநந்தா₃வஹமான மோக்ஷத்துக்கும் ஹேது என் என்னில் :- (மறந்தேன் என்று தொடங்கி). ‘‘ப்ராப்யஸ்ய ப்₃ரஹ்மேணா ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகா₃த்மந ப்ராப்த்யுபாயம் ப₂லம் ப்ராப்தே: ததா₂ ப்ராப்திவிரோதி₄ ச’’ (வ்ருத்₃த₄ஹாரீத. 8) என்று இத்யாதி₃களில் சொல்லுகிற அர்த்த₂ பஞ்சகஜ்ஞாநமும், தத்₃விஷயமான அஜ்ஞாநமும் என்கிறார் மேல். ‘‘மறந்தேனுன்னை முன்னம்’’ (திருமொழி 6-2-2) என்கையாலே பர விஷயமான அஜ்ஞாநமும், (அறியகிலாதே) ‘‘யானே என்னை அறியகிலாதே’’ (திருவாய்.2-9-9) என்கையாலே ஆத்ம விஷயமான அஜ்ஞாநமும், (உணர்விலேன்) ‘‘ஓடியுமுழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன்’’ (திருமொழி.1-6-6) என்கையாலே விரோதி₄விஷயமான அஜ்ஞாநமும், (ஏணிலேன்) ‘‘பிறவி நோயறுப்பான் ஏணிலேனிருந்தேன்’’ (திருமொழி.1-6-1) என்கையாலே உபாயவிஷயமான அஜ்ஞாநமும், (அயர்த்து) ‘‘ஆழியங்கையம்மானை ஏத்தாதயர்த்து’’ (பெரியதிருவ.82) என்கையாலே புருஷார்த்த₂விஷயமான அஜ்ஞாந- மும். ஏத்துகையிறே புருஷார்த்த₂ம். அத்தை மறக்கையாலே புருஷார்த்த₂விஷயமான அஜ்ஞாநமும் என்கிறார். ‘‘சூழ்ந்திருந்தேத்துவர்’’ (திருப்பல்.12) என்றும், ‘‘ஏதத்ஸாம கா₃யந்நாஸ்தே’’ (தை. ப்₄ருகு₃.) என்றும் சொல்லக்கடவதிறே.

(உய்யும்வகை) ‘‘உணர்ந்தேன் உண்மையாலினி யாதும் மற்ேறார் தெய்வம் பிறிதறியேன்’’ (திருமொழி 6-3-6) என்கையாலே பரவிஷயமான ஜ்ஞாநமும், ‘‘நின்றவொன்றை உணர்ந்தேன்’’ (திருவாய். 8-8-5) என்கையாலே ஸ்வரூபவிஷயமான ஜ்ஞாநமும், (நன்கறிந்தனன்) ‘‘அகற்ற நீ வைத்த மாயவல்ல ஐம்புலன்கள் ஆமவை நன்கறிந்தனன்’’ (திருவாய். 5-7-8) என்கையாலே விரோதிவிஷயமான ஜ்ஞாநமும், (உணர்வினுள்ளே) ‘‘உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவுமவனதின்னருளே’’ (திருவாய். 8-8-3) என்கையாலே உபாயவிஷயமான ஜ்ஞாநமும், (ஆம்பரிசு) ‘‘ஆம்பரிசறிந்துகொண்டு’’ (திருமாலை.38) என்கையாலே புருஷார்த்தவிஷயஜ்ஞாநமும் சொல்லிற்று. ஆக, கீழ்ச்சொன்ன ஸம்ஸாரஸம்பந்தத்துக்கும் மோக்ஷப்ராப்திக்கும் ஹேதுஜ்ஞாநாந் மோக்ஷம், அஜ்ஞாநாத்ஸம்ஸாரம்என்று அறியப்படுமதான அர்த்தபஞ்சகஜ்ஞாநமும், ததஜ்ஞாநமும் என்றதாய்த்து. (5)

6. இவற்றுக்குக் காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்.

இந்த அர்த்தபஞ்சகஜ்ஞாநமும், அஜ்ஞாநமுமாகிற இவற்றுக்குக் காரணம்இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள். அதாவது இரண்டில் ஒன்றுகையும், ஒன்றினில்

ஒன்றுகையும். இரண்டில் ஒன்றுகையாவது – ‘‘முத்திறத்து வாணியத்திரண்டில் ஒன்றும் நீசர்கள்’’ (திரு. . வி. 68) என்கிறபடியே ரஜஸ்தம:ப்ரசுரனாகை. ஒன்றினில் ஒன்றுகையாவது – ‘‘முக்குணத்திரண்டவையகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று’’ (திருவெழு.) என்கிறபடியே ஸத்த்வப்ரசுரனாகை. இத்தால் அர்த்தபஞ்சக ஜ்ஞாநாஜ்ஞாநகாரணம் ஸத்த்வாஸத்த்வப்ராசுர்யங்கள் என்றபடி. (6)

7.  ஸத்த்வாஸத்த்வநிதாநம்இருள்தரும் அமலங்களாக என்னும் ஜந்ம ஜாயமாந காலகடாக்ஷங்கள்.

இப்படிப்பட்ட ஸத்த்வத்துக்கும் அஸத்த்வத்துக்கும் நிதாநம் என் என்னில் – (இருள்தரும் அமலங்களாக என்னும் ஜந்மஜாயமாநகாலகடாக்ஷங்கள்). அவையாவன – ‘‘இருள்தரு மாஞாலத்துள் இனிப்பிறவி யான் வேண்டேன்’’ (திருவாய்.10-6-1) என்கிறபடியே அஜ்ஞாநாவஹமான ஸம்ஸாரத்திலே பிறப்பு. ‘‘ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஶ்யேந்மதுஸூத: | ஸாத்த்விகஸ்ஸ து விஜ்ஞேய: வை மோக்ஷார்த்தசிந்தக:’’ (பாரதே.ஶா..348 -73) என்கிற ஜாயமாநகாலத்தில் ‘‘அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்’’ (திருவாய். 1-9-9)  என்கிற வத்கடாக்ஷமும்.  (7)

 8. இவற்றுக்கு மூலம் இருவல்லருள் நல்வினைகள்.

(இவற்றுக்கு மூலம்) இந்த ஜந்மகடாக்ஷங்களாகிற இவற்றுக்குக் காரணம் என் என்னில் – (இருவல்லருள்நல் வினைகள்). ‘‘சார்ந்த இருவல்வினை’’யும், ‘‘தொல்லருள் நல்வினை’’யும். அவையாவனஆத்மாவுக்கு ஸஹஜம் என்னலாம்படி பொருந்தி புண்யபாபங்களும், ஈஶ்வரனுடைய ஸ்வாபாவிக க்ருபையும்.  (8)

9. கர்மக்ருபாபீஜம், பொய்ந்நின்ற அருள்புரிந்த என்கிற அவித்யா ஸௌஹார்த்தங்கள்.

(கர்மக்ருபாபீஜம்) ஏவம்விதமான கர்மத்துக்கும் க்ருபைக்கும் பீஜம் – (பொய்ந்நின்ற அருள்புரிந்த என்கிற அவித்யாஸௌஹார்த்தங்கள்). அவையாவன – ‘‘பொய்ந்நின்ற ஞானம்’’ (திருவிரு. 1) என்கிற அவித்யையும், ‘‘அருள்புரிந்த சிந்தை’’ (இர. திருவ. 59) என்றும், ‘‘ஈஶ்வரஸ்ய ஸௌஹார்த்தம்’’ ( ) என்றும் சொல்லுகிற ஈஶ்வரனுடைய ஸௌஹார்த்தமும். (9)

10.  ஏதந்நிமித்தம் முதல்முன்னமேயான அசிதயநாநாதி ஸம்பந்தங்கள்.

(ஏதந்நிமித்தம்) இந்த அவித்யைக்கும் ஸௌஹார்த்தத்துக்கும் ஹேது ஏதென்னில் – (முன்னமே முதல் முன்னமேயான அசிதயநாநாதிஸம்பந்தங்கள்). அவையாவன – ‘‘மூதாவியில் தடுமாறும் உயிர்முன்னமே’’ (திருவிரு. 95) என்கிற அநாதியான அசித்ஸம்பந்தமும், ‘‘அடியேனடைந்தேன் முதல்முன்னமே’’ (திருவாய்.2-3-6) என்கிற அநாதியான அயநஸம்பந்தமும். (10)

11. இவை கிட்டமும் வேட்டுவேளானும்போலே ஒண்பொருள் பொருளல்லாத{வை} என்னாதே நானிலாத யானுமுளனாவன் என்கிற ஸாம்யம் பெறத்தின்றூதி அந்தமும் வாழ்வுமாகிற ஹாநிஸத்தைகளை உண்டாக்கும்.

உபய ஸம்பந்தத்தினுடையவும் கார்யம் சொல்லுகிறது மேல் ; (இவை கிட்டமும் வேட்டுவேளானும்போலே) என்று தொடங்கி. அதில் அசித்ஸம்பந்தம் கிட்டம் போலே. ‘‘எண்பெருக்கந்நலத்தொண்பொருள்’’ (திருவாய். 1 – 2 -10) என்கிற விலக்ஷணமான ஆத்மவஸ்துவென்று பாராதே ‘‘நானிலாதமுன்னெலாம்’’ (திரு. . வி. 65) என்னும்படி ஸாம்யம்பெற. ‘‘அறுத்துத்தின்று’’ (திருமொழி.7-7-7) என்கிறபடியே தின்று. ‘‘அந்தமும் வாழ்வும்’’ (திருமொழி .5-7-2) என்கிறதில் அந்தமாகிற ஹாநியை உண்டாக்கும். ‘‘அஸந்நேவ வதி’’ (தை. ஆந.) என்னக்கடவதிறே. இனி அயந ஸம்பந்தம் வேட்டுவேளான்போலே ‘‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி’’ (திருவாய். 5-7-3) என்கிறபடியே அவஸ்துஶப்வாச்யமான இத்தை வஸ்துஶப்வாச்யமாக்கி. ‘‘உள்ள உலகளவும் யானுமுளனாவனென் கொலோ’’ (பெரிய திருவ.76) என்கிறபடியே இவனும் ர்மபூதஜ்ஞாநத்வாரா விபுவாகையாலே ஈஶ்வரன் உள்ளவளவும் இவ்வாத்மா உண்டாம்படி ‘‘பரமம் ஸாம்யமுபைதி’’ (மு. 3-1-3) என்கிற ஸாம்யம் பெற ஊதி, வாழ்வாகிற ஸத்தையை உண்டாக்கும். ‘‘ஸந்தமேநம் ததோ விது:’’ (தை. ஆந.) என்றும், ‘‘கீட:பேஶக்ருதாருத்: குட்யாந்தரநுசிந்தயந் | ஸம்ரம்பயயோகே விந்ததே தத்ஸரூபதாம் | ஏவம் க்ருஷ்ணே வதி மாயாமநுஜ ஈஶ்வரே | கோவிந்தே மதிமாவேஶ்ய நரஸ்ஸத்யோ விமுச்யதே’’ ( ) என்றும் ‘‘அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்’’ (திருமொழி 5-7-2) என்றும் சொல்லக்கடவதிறே. (11)

12. ஒன்று கூடினதாய்ப் பற்றறுக்க மீண்டொழிகையாலே பழவடியேன் என்னுமதொன்றுமே ஒழிக்க ஒழியாதது.

இந்த உபயஸம்பந்தமும் அநாதியாய் நித்யமாயிருக்குமோவென்னில் ; அசித்ஸம்பந்தம் வந்தேறியுமாய், கர்மோபாதிகமாகையாலே அநித்யமுமாயிருக்கும். அயநஸம்பந்தம் அநாதியுமாய், நிருபாதிகமாகையாலே நித்யமுமாயிருக்கும் என்கிறார் மேல் (ஒன்றுகூடினதாய்) என்று தொடங்கி. (ஒன்று கூடினதாய்) ‘‘பெருந் துயரிடும்பையில் பிறந்து கூடினேன்’’ (திருமொழி.1-1-1) என்கையாலே அசித்ஸம்பந்தம் ஆகந்துகம். ஆனால் அசித்ஸம்பந்தம் அநாதி என்று சொல்லுவான் என் என்னில் ; வந்தேறினகாலம் பழையதாகையாலும், ப்ரமாணங்கள் தான் அநாதி என்கையாலும். இனி ‘‘வினை பற்றறுக்கும் விதியே’’ (திருமொழி.11-5-9), ‘‘அடைந்த அருவினையோடல்லல் நோய்பாவம் மிடைந்தவை மீண்டொழிய வேண்டில்’’ (மு.திருவ.59) என்றும் சொல்லுகிறபடியே ஒருநாள் வரையிலே வத் ப்ரஸாதத்தாலே கழியக் காண்கையாலே ஆகந்துகம் என்கிறது. ஆகையாலே ‘‘நானுமுனக்குப் பழவடியேன்’’ (திருப்பல்.11) என்கிறபடியே ஜீவபரர்களுக்குண்டான ஶேஷஶேஷிபாவஸம்பந்தமொன்றுமே ‘‘உறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது’’ (திருப்பாவை 28)  என்கிறபடியே கழியாதது. (12)

13.     இந்த உதரத்தரிப்பு த்ரைகுண்யவிஷயமானவற்றுக்கு  ப்ரகாஶகம்.

இவ்வயநஸம்பந்தமே கீழ்ச்சொன்ன ஶாஸ்த்ரப்ரதாநத்துக்கு ஹேது என்கிறார் மேல், (இந்த உதரத்தரிப்பு த்ரைகுண்யவிஷயமானவற்றுக்கு ப்ரகாஶகம்). (இந்த உதரத் தரிப்பு) இந்த நாராயணத்வப்ரயுக்தமான குடல் துடக்கு, ‘‘த்ரைகுண்யவிஷயா வேதா:’’ (ப.கீ..2-45) என்கிறபடியே த்ரிகுணவஶ்யரான சேதநரை விஷயமாக உடைய வேதங்களை ப்ரகாஶிப்பிக்கைக்கு ஹேது என்றபடி. தம:ப்ரசுரராயும், ரஜ:ப்ரசுரராயும், ஸத்த்வப்ரசுரராயுமிறே சேதநர் இருப்பது. ஆக, இந்த உதரத்தரிப்பு த்ரைகுண்யவிஷயமானவற்றுக்கு ப்ரகாஶகம் என்கிற இத்தால் ருச்யநுரூபபுருஷார்த்தங்களையும் தத்ஸாதநங்களையும் விதிக்கிற ஶாஸ்த்ரப்ரதாநத்துக்கு அடி இந்த ஸம்பந்தம் என்றதாய்த்து. கீழ் ‘‘நீர்மையினாலருள் செய்தான்’’ (திருமொ.1-8-5) என்று சொன்ன ஶாஸ்த்ரப்ரதாநத்துக்கு ஹேது சொல்லிற்றாய்த்து. (13)

14. வத்ஸலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண்தின்னவிட்டு ப்ரத்யௌஷதம் இடுமா போலே எவ்வுயிர்க்கும் தாயிருக்கும் வண்ணமான இவனும் ருசிக்கீடாகப் பந்தமும் பந்தமறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே.

இப்படி ஶாஸ்த்ரப்ரதாநம் பண்ணுகிறது ஸம்பந்தமடியாகவாகில் விமோசகஶாஸ்த்ரத்தையே வெளியிடாதே ந்தகஶாஸ்த்ரங்களையும் வெளியிடுவான் என் என்னில்; வத்ஸலனாகையாலே சேதநருடைய ருச்யநுகுணமாக வெளியிட்டான் என்கிறது மேல் (வத்ஸலையான மாதா) என்று தொடங்கி. ப்ரிய ப்ரவர்த்தகத்வத்தைப் பற்றவும் அதுக்கடியான வாத்ஸல்யத்தைப்பற்றவும் இப்போது மாதாவை த்ருஷ்டாந்த மாக்குகிறது. ‘‘எல்லாவெவ்வுயிர்க்கும் தாயோன்’’ (திருவாய்.1-5-3) என்றும், ‘‘தாய் இருக்கும் வண்ணமே’’ (திருமொழி.11-6-6) என்றும் சொல்லுகிறபடியே இவனும் அப்படியே ஸர்வாத்மாக்கள்பக்கலிலும் மாத்ருத்வப்ரயுக்தமான வாத்ஸல்யத்தை உடையனாகையாலே சேதநருடைய ருசிக்கீடான ‘‘பந்தமும்’’ என்கிற ந்தக ஶாஸ்த்ரங்களையும், ‘‘பந்த மறுப்பதோர் மருந்தும்’’ என்கிற மோசகஶாஸ்த்ரத்தையும் விதிக்கும் என்கிறார். (14)

15. அதுதானும் ஆஸ்திக்யவிவேக அந்யஶேஷத்வ ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்திபாரதந்த்ர்யங்களை உண்டாக்கின வழி.

இப்படி ந்தகமாக ஶாஸ்த்ரத்தையும் கலசி விதித்தால் அதுகொண்டு சேதநர் ஸம்ஸரித்தே போமித்தனையோ என்னில் ; அதுதானும் மோசக ஶாஸ்த்ரத்திலே வருகைக்கிட்ட வழி என்கிறார் மேல் (அதுதானும் ஆஸ்திக்யம்) என்று தொடங்கி. அதுதானும்ந்தக ஶாஸ்த்ரத்தைக் கலசி விதித்ததுதானும். பரஹிம்ஸாஶீலனாய் ஶாஸ்த்ரஸாமர்த்யம் {ஶாஸ்த்ரத்தில் ஆஸ்திக்யம்} முதலிலே இல்லாதவனைக் குறித்து மோக்ஷத்தை விதித்தால் அது அவனுக்கு ருசியாதாகையாலே அநபரஹிம்ஸா ரூபமான அபிசாரஶாஸ்த்ரத்தை விதித்து அது அவனுக்கு லித்தவாறே அவ்வழியாலே ஶாஸ்த்ரம் உண்டென்கிற ஆஸ்திக்யத்தை உண்டாக்கியும், ஆஸ்திகனானவாறே ‘‘ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்ககாமோ யஜேத’( ) என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸ்வர்க்காதிபுருஷார்த்தங்களையும், தத் ஸாதநங்களையும் சொல்லுகிற ஶாஸ்த்ரங்களையும் விதித்து, அவ்வழியாலே ப்ரக்ருத்யாத்மவிவேகத்தைப் பிறப்பித்தும், இப்படி ப்ரக்ருத்யாத்மவிவேகம் பிறந்தவாறே ஆத்மலாபரூபபுருஷார்த்தத்தைக் காட்டி அந்யஶேஷத்வத்தை நிவர்த்திப்பித்தும், அநந்தரம் வத்கைங்கர்யரூபபுருஷார்த்தத்தைக்காட்டி ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தை நிவர்த்திப்பித்தும், ஆத்மாவினுடய அத்யந்த பாரதந்த்ர்யத்தை உண்டாக்குகைக்கிட்ட வழி என்கிறார். (15)

16. சதுர்விதன தேவர்ணஆஶ்ரமஅதிகாரமோக்ஷஸாததியுகர்மவ்யூஹரூபக்ரியாதிகளை அறிவிக்கிற பாட்டுப்பரப்புக்குபெரிய தீவினில் ஒன்பதாம் கூறும், மானிடப்பிறவியும், ஆக்கைநிலையும், ஈரிரண்டிலொன்றும், இளமையும், இசைவுமுண்டாய், புகுவரேலும் என்கிறதுக்குள்ளே விக்நமற, நின்றவாநில்லா ப்ரமாதியைக்கொண்டு அறக்கற்கை அரிதென்றிறே வேதஸாரஉபநிஷத் ஸாரதராநுவாக ஸாரதமக காயத்ரியில் முதலோதுகிற பொருள்முடிவான சுருக்கைத் தெய்வவண்டாய், அன்னமாய், அமுதம் கொண்டவன் ஶாகைகளிலும், ஓதம்போல்கிளர் நால்வேதக்கடலிலும், தேனும் பாலும் அமுதுமாக எடுத்துப் பெருவிசும்பருளும் பேரருளாலே சிங்காமை விரித்தது.

இனிமேல் ஶாஸ்த்ரப்ரதிபாத்யமான அர்த்தவிஶேஷங்களை ஸங்க்ரஹேண ப்ரதிபாதியாநின்றுகொண்டு ஏவம்விதமான ஶாஸ்த்ரத்தினுடைய அப்யாஸத்துக்கு ஜம்பூத்வீபாதிதேஶதேஹாதிஸாபேக்ஷதயா ஜ்ஞாதும் அஶக்யமாயிருக்குமென்று இப்படி ஸாபேக்ஷமன்றிக்கே, நித்யநிரபேக்ஷமாய், அத ஏவ ஸுகரமுமாய், ஶாஸ்த்ரதாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஸ்ரீபரிகாஶ்ரமத்திலே வெளியிட்டருளினான் என்கிறார் (சதுர்விதமான தே) என்று தொடங்கி. (சதுர்விதமான தேஹம்) தேதிர்யங்மநுஷ்யஸ்தாவரரூபமான ஶரீரவிஶேஷங்கள். (வர்ணம்) ப்ராஹ்மணக்ஷத்ரியவைஶ்யஶூத்ரரூபமான வர்ணசதுஷ்டயம். (ஆஶ்ரமம்) ப்ரஹ்மசர்யகார்ஹஸ்த்வாநப்ரஸ்தஸந்ந்யாஸங்களாகிறவை. (அதிகாரம்) ‘‘ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ’’ (கீதை.7-16) என்று சொல்லுகிறவை.

இதில் ஆர்த்தனாவான்நஷ்டைஶ்வர்யகாமன். ஜிஜ்ஞாஸுவாவான்கேவலன். அர்த்தார்த்தியாவான்அபூர்வைஶ்வர்யகாமன். ஜ்ஞாநி என்கிறது வதநுபவைகபரனை. ஆர்த்தனுக்கும் அர்த்தார்த்திக்கும் நடுவே கேவலனைச்

சொல்லிற்றுஅவனும் ப்ரயோஜநாந்தரபரன் என்னுமிடம் தோற்றுகைக்காக. லம் – ‘‘ர்மஅர்த்தகாமமோக்ஷாக்யா:’’ ( ) என்று சொல்லுகிறவை. மோக்ஷமாவதுஸாலோக்யஸாமீப்யஸாரூப்யஸாயுஜ்யங்கள். ஸாதநம்கர்மஜ்ஞாநக்திப்ரபத்திகள். தியாவதுத்யு:பர்ஜந்யப்ருதிவீபுருஷயோஷித்துக்களான பஞ்சாக்நி வித்யையில் சொல்லுகிறபடியே வருகிற ர்ப்பதியும், யாம்யகதியும், தூம்ய கதியும், அர்ச்சிராதிதியும். யுகமாவதுக்ருதத்ரேதாத்வாபரகலியுகங்கள். ர்மமாவது – ‘‘த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஞை: த்ரேதாயாம் த்வாபரேர்ச்சயந் | யதாப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேஶவம்’’ (வி.பு.6-2-17) என்று சொல்லுகிற த்யாநயாகஅர்ச்சநஸங்கீர்த்தநங்கள்.

வ்யூஹமாவதுவாஸுதேஸங்கர்ஷணப்ரத்யும்நஅநிருத்ர்கள். ரூபமாவது ரக்தம் ஸிதேதரே பீதம் சதுர்த்தா யத்க்ருதே யுகே | ரக்தாத்யம் ஸிதநிஷ்டஞ்ச த்ரேதாயாம் ஹி மஹாமதே | பீதம் க்ருஷ்ணம் ஸிதம் ரக்தம் ஸம்ப்ராப்தேத்வாபரே யுகே | கலௌ க்ருஷ்ணஸிதம் ரக்தம் பீதஞ்சாநுக்ரமேண து’’( ) {யதாமதி ஶோதநீயம்} என்கிறபடியே க்ருதாதிகளில் ஸிதரக்தபீதக்ருஷ்ணாதி களான ஸங்கர்ஷணாதிகளுடைய வர்ணசதுஷ்டயங்கள். ‘‘பாலினீர்மை’’ (திரு..வி.44) இத்யாதி. க்ரியையாவதுஸ்ருஷ்டிஸ்திதிஸம்ஹாரமோக்ஷ ப்ரதத்வாதிகள். ஆதிஶப்த்தாலே மற்றும் அர்ச்சநீயரான தேவதா விஶேஷங்களைச் சொல்லுகிறது.

இப்படி சதுர்விதமான தேஹாத்யர்த்தவிஶேஷங்களுக்கு ப்ரகாஶகமான பாட்டுப் பரப்புக்கு ‘‘பாட்டும் முறையும்’’ (நா. திருவ.76) என்கிற பாட்டில் சொல்லுகிற ஶாஸ்த்ரவிஸ்தரத்துக்கு. (பெரியதீவினில் இத்யாதி) ‘‘நாவலம்பெரிய தீவு’’ (பெரியா.தி.3-6-1) என்கிற ஜம்பூத்வீபத்தில் நவகண்டையான ப்ருதிவியில் ரதகண்டமும். ‘‘துர்லபோ மாநுஷோ தே:’’ (பா.11-2-21) என்றும், ‘‘மானிடப்பிறவி அந்தோ’’ (திருக்குறு. 8) என்றும் சொல்லுகிற மநுஷ்யதேஹமும், ‘‘தேஹிநாம் க்ஷணங்கு:’’ என்றும், ‘‘மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்’’ (திருவாய்.1-2-2) என்றும் சொல்லுகிற தாத்ருஶதேஹங்களினுடைய ஸ்தைர்யமும். ஶாஸ்த்ரஜ்ஞாநத்துக்கு யோக்யமான வர்ணங்களில் ப்ரதமகண்யமாய், ‘‘குலங்களாய ஈரிரண்டிலொன்றிலும்’’ (திருச்ச.90) என்கிற ப்ராஹ்மணஜந்மமும், ‘‘கிளரொளி இளமை’’ (திருவாய்.2-10-1) என்று இதினுடைய பால்யமும். ‘‘தஸ்மாத்பால்யே விவேகாத்மா’’ (வி. பு.1-17-75) என்றும் சொல்லக்கடவதிறே.

அதிலும், ‘‘யானுமென்னெஞ்சும் இசைந்தொழிந்தோம்’’ (பெரியதிருவ. 36) என்கிற படியே இச்சையுமுண்டாய், ‘‘வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்’’ (திரு மாலை 3) என்றும், ‘‘ஶதாயுர்வை புருஷ:’’ (யஜு. கா. 1-5-2) என்றும் சொல்லுகிற படியே மநுஷ்யர் வேதோக்தமான ஆயுஸ்ஸை உடையவரேயாகிலும் அவ்வாயுஸ்ஸுக்குள்ளே ‘‘அநந்தஸாரம் ஹு வேதிதவ்யம் அல்பஶ்ச காலோ பஹவஶ்ச விக்நா:”  என்றும், ‘‘ஶ்ரேயாம்ஸி பஹுவிக்நாநி பவந்தி மஹதாமபி’’ ( ) என்றும் சொல்லுகிறபடியே ஶாஸ்த்ரஜ்ஞாநவிரோதியான ப்ரபலப்ரதிபந்தகங்களும் அற்று, ‘‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’’ (திருமொழி 1-1-4) என்றும், ‘‘சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி லவத்த்ருடம் | தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்’’ (கீதை 6-34) என்றும் சொல்லப்படுகிற மநஸ்ஸைக்கொண்டுகலையறக் கற்றமாந்தர்’’ (திருமாலை 7) என்கிறபடியே ஶாஸ்த்ரங்களைக் கரைகண்டு ‘‘ஆமாறறிவுடையார் ஆவதரிதன்றே’’ (பெரியதிருவ.37) என்கிறபடியே தாத்பர்ய ஜ்ஞனாகை அரிது என்றிறே.

வேதஸாரோபநிஷத் – {‘‘அஸாரமல்பஸாரஞ்ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் | ஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம் ரத்நாகர இவாம்ருதம்’’ (வைகுண்ட தீக்ஷிதீயம்)} அயதார்த்த ப்ரதிபாதகங்களான பாஹ்யஶாஸ்த்ரங்கள் அஸாரமாய், புத்ர பஶ்வந்நாத்யைஶ்வர்யஸாதநத்தையும்,  ஸ்வர்க்கஸாதந ஜ்யோதிஷ்டோமாதி களையும் விதிக்கிற முகத்தாலே ஶாஸ்த்ராஸ்திக்யம் ப்ரக்ருத்யாத்மவிவேகம் இவற்றைப் பிறப்பிக்கையாலே வேதத்தில் பூர்வபாம் அல்பஸாரமாயிருக்கும். இங்ஙனன்றிக்கே அநந்தஸ்திரபலப்ரஹ்மோபபாதநமான உபநிஷத்பாம் ஸாரமாயிருக்கும்.

அந்த உபநிஷத்துக்களிலும் சொல்லுகிற ‘‘பரம் ப்ரஹ்ம பரம் ஜ்யோதி:’’ இத்யாதிஸாமாந்ய வாசக ஶப்ங்களாலும், விஶேஷவாசியான ஶம்புஶிவாதி  ஶப்ங்களாலும் ப்ரதிபாதிக்கப்படுகிறவன் நாராயணனே என்று சொல்லுகிற நாராயணாநுவாகம் ஸாரதரமாய், அதில் வ்யாபகத்ரயத்தையும் ப்ராதாந்யேந ப்ரதிபாதிக்கிற  விஷ்ணு காயத்ரியில் முதலில் குறிக்கப்பட்டதான நாராயணஶப்ம் ஸாரதமமாகையாலே ‘‘ஓத்தின் பொருள் முடிவுமித்தனையேமாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு’’ (இர. திருவ. 39) என்கிறபடியே வேதாந்தத்தின் கருத்தாய், ‘‘ருக் வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம் அப்படியே அதர்வண வேதம் மற்ரும் உண்டான இதிஹாஸம் முதலானவைகள் எல்லாம் திருவெட்டெழுத்தினுள் பொதிந்து கிடக்கின்றன’’ (வ்ரு. ஹா.) என்று முதலானவற்றில் சொல்லுகிறபடியே எல்லா வேதங்களின் சுருக்கமுமாய், எல்லாப் பொருள்களையும் ப்ரகாஶப்படுத்துவதாய் ஸர்வேஶ்வரன்தனக்குத் திருநாமமான திருமந்த்ரத்தை ஆறு கால்களையுடைய வண்டானது கிளைகளிலே அலைந்து திரிந்து தேனை எடுக்குமாப்போலே தூவியம்புள்ளுடைத் தெய்வவண்டானவன் ஶாகைகளில் ஸாரரூபமான திருமந்த்ரத்தை எடுத்தும், ‘‘அன்னமாய் அன்றங்கருமறை பயந்தான்’’ (திருமொழி.5-7-3) என்கிறபடியே அன்னமானது நீரிலே பாலை எடுக்குமாப்போலே கிளர்வேதநீரிலே ஸாரமான திருமந்த்ரத்தை எடுத்தும்.

அநந்தரம், ‘‘பேணான் வாங்கி அமுதங்கொண்ட’’ (திருமொழி.6-10-3) என்கிறபடியே ஸ்வேந ரூபேண, அஸுரபயபீதரான தேவர்களுடைய ரக்ஷணார்த்தமாக க்ஷீராப்தியை மதித்து அம்ருதத்தை எடுத்தாப்போலே ஸம்ஸாரபயபீதரான சேதநருடைய ரக்ஷணார்த்தம் ‘‘நால்வேதக்கடலமுது’’ (பெரியா. தி.4-3-11) என்கிறபடியே நாலு வகைப்பட்ட வேதத்திலும் ஸாரபூதமான திருமந்த்ரத்தை எடுத்தும். ஆக, ஸர்வரஸமு- மாய் ஸர்வாதிகஸத்யத்வத்தையும் தருமதான ‘‘தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம்’’ (திருமொழி 6-10-6) என்கிற திருமந்த்ரத்தை ‘‘அமரர் பெருவிசும்பருளும் பேரருளாளன்’’ (திருமொழி .1-4-4) என்கிற பெருவிசும்பான பரமபதத்தைக் கொடுப்பதான நிர்ஹேதுகக்ருபையாலே ‘‘நரநாரணனாய் உலகத்தற நூல் சிங்காமை விரித்தவன்’’ (திருமொழி.10-6-1) என்கிறபடியே ஸ்ரீபரிகாஶ்ரமத் திலே நரநாராயணரூபேண வந்து அவதரித்து ஸ்வரூபஶாஸ்த்ரம் மடங்காதபடி விஸ்தரித்தருளினது; அறக்கற்கை அரிதென்றிறே  இத்தைக்கொண்டு அந்வயிப்பது. (16)

17. முனிவரை இடுக்கியும் முந்நீர்வண்ணனாயும் வெளியிட்ட ஶாஸ்த்ரதாத்பர்யங்களுக்கு விஶிஷ்டநிஷ்க்ருஷ்டவேஷங்கள் விஷயம்.

ஶாஸ்த்ரத்தையும் ஶாஸ்த்ரதாத்பர்யமான திருமந்த்ரத்தையும் வெளியிட்டு அருளினான் என்று நின்றது கீழ் ; ‘அவற்றை வெளியிட்ட ப்ரகாரமென் ; அவற்றுக்கு விஷயமேதுஎன்கிற ஶங்கையில் சொல்லுகிறது (முனிவரை இடுக்கியும்) என்று தொடங்கி. ‘‘இருள்கள் கடியும் முனிவரும்’’ (திருவாய். 10-7-7) என்கிற ஸ்மர்த்தாக் களான வ்யாஸாதிகளுக்கு ‘‘க்ருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் | கோஹ்யந்ய: புண்டரீகாக்ஷாந்மஹாபாரதக்ருத்பவேத்’’ (வி.பு. 3-4-5) என்கிறபடியே அந்தர்யாமியாய்நின்று தந்முகே ப்ரவர்த்திப்பித்த ஶாஸ்த்ரங்களுக்கு விஷயம் இவர்களுடைய தேஹவிஶிஷ்டஸ்வரூபம் என்றும், ‘‘கருங்கடல் முந்நீர்வண்ணன்’’(திருமொழி.1-4-10) என்கிறபடியே ஸ்ரீபரிகாஶ்ர மத்திலே ஸ்வேந ரூபேண நின்று வெளியிட்ட தாத்பர்யமான திருமந்த்ரத்துக்கு விஷயம் சேதநருடைய நிஷ்க்ருஷ்டஸ்வரூபம் என்றும் சொல்லப்பட்டது; ஶாஸ்த்ரத்துக்கு தேஹத்திலே நோக்கு; தாத்பர்யத்துக்கு ஸ்வரூபத்திலே நோக்கு என்றதாய்த்து. (17)

18. தோல்புரையே போமதுக்குப் பழுதிலா யோக்யதை வேணும். மனமுடையீர் என்கிற ஶ்ரத்தையே அமைந்த மர்மஸ்பர்ஶிக்கு  நானும் நமரும் என்னும்படி ஸர்வரும் அதிகாரிகள்.

ஆனால் இவையிரண்டும் ஸர்வாதிகாரமாயிருக்குமோ? அதிக்ருதாதிகாரமாய் இருக்குமோ? என்கிற ஶங்கையிலே சொல்லுகிறது (தோல்புரையே போமதுக்கு) என்று தொடங்கி. தேஹவிஶிஷ்டஸ்வரூபத்தை விஷயமாக உடைத்தாகையாலே தேஹ அவஸாநமே தனக்கு அவஸாநமான ஶாஸ்த்ரத்துக்கு ‘‘பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்’’ (திருமாலை.42) என்கிறபடியே அதிகாரிஸம்பத்தி ஸாபேக்ஷமாய் இருக்கும். ‘‘மனமுடையீர்’’ என்கையாலே ‘‘கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்’’ (திருவாய்.10-5-1) என்றும், ‘‘ தீர்த்தம் நக்ஷத்ரம் க்ரஹா சந்த்ரமா: | ஶ்ரத்தை காரணம் ந்ரூணாம் அஷ்டாக்ஷரபரிக்ரஹே’’ (பாஞ்சராத்ரே) என்றும் சொல்லுகிறபடியே ஶ்ரத்தாமாத்ரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்ஶியான தாத்பர்யத்துக்கு ‘‘நானும் சொன்னேன் நமருமுரைமின் நமோநாராயணமே’’ (திருமொழி.6-10-6) என்கையாலே அதிகாரி  நியமமில்லை. இத்தால் ஶாஸ்த்ரம் அதிக்ருதாதிகாரமாயிருக்கும் ; ஶாஸ்த்ரதாத்பர்யமான திருமந்த்ரம் ஸர்வாதிகாரம் என்றதாய்த்து. (18)

19. ஶாஸ்த்ரிகள் தெப்பக்கையரைப்போலே இரண்டையுமிடுக்கிப் பிறவிக் கடலை நீந்த, ஸாரஜ்ஞர் விட்டத்திலிருப்பாரைப்போலே இருகையும் விட்டுக் கரை குறுகும் காலமெண்ணுவர்கள்.

இனிமேல் ஶாஸ்த்ரோபலக்ஷிதமான க்தி நிஷ்டனுடையவும், தாத்பர்ய உபலக்ஷிதமான ப்ரபத்திநிஷ்டனுடையவும் ப்ரதிபத்திகளைச் சொல்லுகிறது (ஶாஸ்த்ரிகள் தெப்பக் கையரைப்போலே) என்று தொடங்கி. ஆறு நீஞ்ச வந்தவன் தெப்பத்தை ஒருகையிலே இடுக்கியும், தானும் ஒருகையாலே நீஞ்சுமாப்போலே, க்திநிஷ்டனும், ஸ்வயத்நமும் ஸ்வயத்நஸாத்யமான வத்க்ருபையையுங் கொண்டு ‘‘புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே’’ (திருவாய். 2 – 8 – 1) என்கிறபடியே ஸம்ஸாரஸாகரத்தைக் கடக்கத் தேடும். (ஸாரஜ்ஞர்) தாத்பர்யநிஷ்டரான ப்ரபந்நரானவர்கள். (விட்டத்திலிருப்பாரைப் போலே) ஆற்றின் கரையேறிப் போகிறவன் அதில் யத்நத்தில் அந்வயமற்று விட்டத்திலிருக்குமாப்போலே ; ‘‘விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்’’ ( ) என்கிறபடியே அக்கரையோடு உருவநின்று நடத்துகிற ‘‘வைகுந்தனென்பதோர் தோணி’’(நா. திரு.5-4) என்கிற விஷ்ணுபோதத்திலே இருந்து அவனுடைய ஜ்ஞாநஶக்த்யாதிகுணாநுபவத்தாலும் ஸ்வபாரதந்த்ர்ய அநுஸந்தாநத்தாலும் நிர்பரராய் மேல் உபாயதயா கர்த்தவ்யமில்லாமையாலே, இரு கையும் விட்டுஅசேதநக்ரியா கலாபத்தையும் தத்ஸாத்யமான வத்க்ருபையையும்

விட்டுகேவலபவத்க்ருபையே தங்களுக்கு உத்தாரகம் என்று அத்யவஸித்துக் கரை குறுகும் காலமெண்ணுவர்கள். ‘‘கூவிக்கொள்ளுங்காலமின்னம் குறுகாதோ’’ (திருவாய்.6-9-9) என்றும், ‘‘ஆக்கை விடும்பொழுதெண்ணே’’ (திருவாய்.1-2-9) என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்தியைச் சிந்தித்திருப்பர்கள்.

20. இவை ஸ்வரூபத்தை உணர்ந்துணர்ந்துணரவும் உணர்வைப் பெறவூர மிக உணர்வுமுண்டாம்.

இவர்களுக்கு அவ்வதிகாரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூபஜ்ஞாந தாரதம்யத்தைச் சொல்லுகிறது (உணர்ந்துணர்ந்துணரவும் உணர்வைப்பெறவூர மிகவுணர்வுமுண்டாம்) என்று. (உணர்ந்துணர்ந்துணரவும்) ‘‘உணர்ந்துணர்ந்து இழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை உணர்ந்துணர்ந்துணரிலும்’’ (திருவாய்.1-3-6) என்கிறபடியே ஆத்மஸ்வரூபத்தை ஜ்ஞப்திமாத்ரமன்றிக்கே நித்யஜ்ஞாநகுணகமாய் தேஹேந்த்ரியாதி விலக்ஷணனாகவும், ஜ்ஞாதாவாகவும், கர்த்தாவாகவும் வச்சேஷமாகவும் ஶ்ரவணமநநாதிகளாலே ஸாக்ஷாத்கரித்த ஶாஸ்த்ரிகளுக்கு அந்த வ்ருத்தி உண்டாம். (உணர்வைப் பெறவூர மிக உணர்வும் உண்டாம்) ‘‘உணர்வுமுயிருமுடம்பும் மற்றுலப்பிலனவும் பழுதே யாம் உணர்வைப் பெறவூர்ந்து’’ (திருவாய்.8-8-3) என்கிறபடியே தேஹேந்த்ரியாதிகளில் வ்யாவ்ருத்தமான ஆத்மஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கும்படி நிர்ஹேதுகமாக ஈஶ்வரன் நடத்த ‘‘மெய்ம்மையை மிகவுணர்ந்து’’ (திருமாலை 38) என்கிறபடியே ததீயஶேஷத்வபர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம். (20)

21. ஶேஷத்வபோக்த்ருத்வங்கள்போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்.

இந்த ஸ்வரூபஜ்ஞாநமும் ஸ்வரூபயாதாத்ம்யஜ்ஞாநமுமாகிற இவை இரண்டும் தன்னிலொக்குமோ என்னில்; ஒவ்வாது என்கிறார் (ஶேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்த்ர்யபோக்யதைகள்) என்று தொடங்கி. ஶேஷத்வமாவதுஇஷ்டவிநியோகார்ஹதாமாத்ரம். பாரதந்த்ர்யமாவதுஅந்த ஶேஷ வஸ்துவை ஶேஷிக்கு இஷ்டமானபடி விநியோகப்படுத்திக்கொடுக்குமது. போக்த்ரு த்வமாவதுரஸாரஸங்களுக்குத் தானே போக்தாவாகை. போக்யதையாவதுபதார்த்ததமான ரஸவர்ணாதிகள் போக்தாவுக்கே போக்யமாய் இருக்குமாப் போலே ஆத்மகதமான ஜ்ஞாநாதிகளும் ஈஶ்வரனுக்கே போக்யமாய் இருக்கை. ஆகையால் இஷ்டவிநியோகார்ஹதாமாத்ரமான ஶேஷத்வம்போலே யன்றே, அத்தை இஷ்டமானபடி விநியோகப்படுத்திக் கொடுக்கிற பாரதந்த்ர்யம். ஸ்வபோத்துக்கும் ஹேதுவாயிருக்கிற போக்த்ருத்வம் போலேயன்றே அந்த போக்த்ருத்வத்தை ஶேஷியினுடைய ப்ரியோபயோகியாக்கிக் கொடுக்கிற போக்யதை. (21)

22. ஜ்ஞாந சதுர்த்திகளின்மேலேயிறே ஆநந்தஷஷ்டிகளுக்கு உதயம்.

ஆகையிறே போக்த்ருத்வப்ரகாஶகமாய்மநஜ்ஞாநேஎன்கிற தாதுவிலே உதிதமான ஜ்ஞாநத்துக்கு மேலே அந்த மகார விவரணரூபமாய் போக்யதா ப்ரகாஶகமான சரமசதுர்த்தியிலே ஆநந்தம் உதித்ததும், ஶேஷத்வப்ரகாஶகமான சதுர்த்தியின்மேலே பாரதந்த்ர்யப்ரகாஶகமான ஷஷ்டி உதித்ததும். (22)

23. முளைத்தெழுந்த ஸூர்யதுல்யயாதாத்ம்யசரமம் விதியில் காணும் ப்ரதமமத்யமதஶைகளைப் பகல்விளக்கும் மின்மினியுமாக்கும்.

இனிமேல் இந்த ஸ்வரூபஜ்ஞாநத்தினுடையவும் ஸ்வரூபயாதாத்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும் அத்யந்தவைஷம்யம் சொல்லுகிறது (முளைத்தெழுந்த) என்று தொடங்கி. ‘முளைத்தெழுந்த திங்கள்தானாய்’’ (திருநெடு.1) என்றும், ‘‘யதா ஸூர்யஸ் ததா ஜ்ஞாநம்’’ (வி.பு.6-5-62) என்றும், ஆஹ்லாதகரனாயும், அதிப்ரகாஶகனாயும் இருக்கிற சந்த்ராதித்யர்களை யாதாத்ம்யசரமமான பாரதந்த்ர்யபோக்யதா ஜ்ஞாநங்களுக்கு த்ருஷ்டாந்தமாக்குகையாலே வத்ப்ரஸாதலப்மாகையாலே அயத்நஸித்முமாய், அதிப்ரகாஶகமுமான அத்யந்தபாரதந்த்ர்யபோக்யதா ஜ்ஞாநங்களில் பாரதந்த்ர்யம் ஶேஷத்வலக்ஷணமான இஷ்டவிநியோகார்ஹதையை ஸ்வயமேவ நிர்வஹித்துத் தலைக்கட்டுகையாலும், போக்யதையானது அசித் வ்யாவ்ருத்திலக்ஷணமாத்ரமான போக்த்ருத்வத்தை ஶேஷியினுடைய ப்ரியோபயோகியாக்கிக் கொடுக்கையாலும் விதியில் காணும் ப்ரதமமத்யம தஶைகளை ‘‘விளக்கினை விதியில் காண்பார்’’ (திருக்குறு.18) என்கிறபடியே ஶாஸ்த்ரமுகத்தாலே வந்த ஶ்ரவணமநநாதிகளால் காணப்படுகிற ப்ரதமதஶையான ஶேஷத்வத்தையும், மத்யமதஶையான போக்த்ருத்வத்தையும், அந்த பாரதந்த்ர்ய போக்யதைகள் பகல்விளக்கையும் மின்மினியையும்போலே அப்ரயோஜகமாகவும் அல்பப்ரகாஶகமாகவும் பண்ணும் என்கிறார். (23)

24. நாலிலொன்று ப்ரவர்த்தகம்; ஒன்று நிவர்த்தகம்.

இந்நாலிலும் வைத்துக்கொண்டு உபாஸகனுக்கு போக்த்ருத்வம் உபாய ரூபப்ரவ்ருத்திஹேதுவாயிருக்கும் ; ப்ரபந்நனுக்கு போக்யதை நிவ்ருத்தி ஹேதுவாயிருக்கும் என்கிறார் மேல் (நாலிலொன்று ப்ரவர்த்தகம்) என்று தொடங்கி. உபாஸகன் தன்னை போக்தாவாக நினைத்திருக்கையாலே அந்த போக்த்ருத்வ நிபந்தநமான கர்த்ருத்வமும் அவனுக்கே ஆகையாலே அவனை உபாயரூப ப்ரவ்ருத்தியிலே மூட்டும் போக்த்ருத்வம். ப்ரபந்நனுக்கு போக்யதை ஸ்வரூபமாகை யாலே அந்த போக்யதைதானே தந்நிவ்ருத்திஹேதுவாயிருக்கும். (24)

25.முற்பாடர்க்கு க்ரியாங்கமானவை இரண்டும், செயல்தீர்ந்தார் வ்ருத்தியில்  ஸ்வநிர்ப்பந்தம் அறுக்கும்.

ஆனால் இந்த ஶேஷத்வபோக்த்ருத்வங்களிரண்டும் இவனுக்குச் செய்யும்படி என் என்னில் ; இவனுடைய வ்ருத்திக்கு அநுரூபமாயிருக்கும் என்னுமிடத்தைச் சொல்லுகிறது மேல் (முற்பாடர்க்கு) என்று தொடங்கி. ‘முற்பாடர்என்று சொல்லப்பட்ட உபாஸகர்க்கு (க்ரியாங்கமானவை இரண்டும்) கர்மத்துக்கு அங்கமான ஶேஷத்வபோக்த்ருத்வங்களிரண்டும்; கர்மத்துக்கு யோக்யதாபாதகங்களான ஶேஷத்வ போக்த்ருத்வங்கள் ; இப்படி இருக்கிற இவற்றைச் சொல்லுவான் என் என்னில் ; போக்த்ருத்வமாவதுபோக்யஸித்திக்கு அடியான யத்நத்திலே மூட்டுகையாலும், ஶேஷத்வம் அதில் ஆத்மஜ்ஞாநம் முன்னாக ப்ரவர்த்திக்க வேண்டுகையாலும், அந்த ஶேஷத்வபோக்த்ருத்வங்கள் ஸாதநப்ரதமபாவியான கர்மத்தினுடைய உத்பத்தியிலே ஸஹகரிக்கையாலும் அவற்றை க்ரியாங்கம் என்கிறது.

இப்படிப்பட்ட ஶேஷத்வ போக்த்ருதவங்கள் (செயல்தீர்ந்தார் வ்ருத்தியில்) ‘‘செயல் தீரச்சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்’’ (நா. திருவ.88) என்கிறபடியே உபாய ரூபப்ரவ்ருத்தியில் ஸ்வரூபபாரதந்த்ர்யத்தாலே நிவ்ருத்தரான ப்ரபந்நருடைய, வ்ருத்தியில்கைங்கர்யவ்ருத்தியிலே என்றபடி. (ஸ்வநிர்பந்தமறுக்கும்) ஸ்வபோக்த்ருத்வப்ரதிபத்தியையும், மதீயத்வப்ரதிபத்தியையும் தவிர்க்கும். எங்ஙனே என்னில் ; இவனுடைய போக்த்ருத்வம் அவனுடைய போத்துக்கு வர்த்தகமாய் இருக்கும். ‘‘அஹமந்நம்’’ என்ற பின்பு ‘‘அஹமந்நாத:’’ என்றதுபோக்த்ருத்வமிறே. இப்படிச்சொல்லாதபோது ஒரு சேதநேனாடே அநுபவித்ததாயிராதிறே ; இவனுடைய ஶேஷத்வமும் அத்தலைக்கு அதிஶயகரமாயிருக்கும், ‘‘பரகஅதிஶயஆதாநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஶேஷ:’’, ‘‘யதேஷ்டவிநியோகார்ஹம் ஶேஷஶப்தே கத்யதே’’, ‘‘ஈஶ்வரேண ஜகத்ஸர்வம் யதேஷ்டம் விநியுஜ்யதே’’ என்னக்கடவதிறே. (25)

26. கர்ம கைங்கர்யங்கள் ஸத்யாஸத்யநித்யாநித்யவர்ணதாஸ்யாநு குணங்கள்.

     இந்த க்ரியாவாசியான கர்மமும் வ்ருத்திவாசியான கைங்கர்யமும் எதுக்கு அநுகுணமாயிருக்குமென்னில் ; (கர்மகைங்கர்யங்கள் ஸத்யாஸத்யநித்யாநித்யவர்ணதாஸ்யாநுகுணங்கள்) என்கிறார். இவை இரண்டிலும் வைத்துக்கொண்டு எத்தை எதுக்கு அநுகுணம் என்கிறதென்னில் ; கர்மம் அஸத்யமுமாய், அநித்யமுமான வர்ணத்துக்கு அநுகுணமாயிருக்குமென்றும், கைங்கர்யம் ஸத்யமுமாய் நித்யமுமான ஸ்வரூபத்திலே ஆகையாலே ஸத்யமுமாய் நித்யமுமாயிருக்கும். (26)

27.  இவற்றுக்கு விதிராகங்கள் ப்ரேரகங்கள்

இவை இரண்டுக்கும் ப்ரேரகர் ஆர் என்னில் (இவற்றுக்கு விதிராகங்கள் ப்ரேரகங்கள்). ‘இதம் குரு’, ‘அநேந யஜேதஎன்றும் சேதநனைக் குறித்துச்சொல்லுகிற ஶாஸ்த்ரவிதிகள் கர்மத்துக்கு ப்ரேரகம். வதநுபவஜநிதப்ரீதி கைங்கர்யத்துக்கு ப்ரேரகம். ‘‘உற்றேனுகந்து பணிசெய்து’’ (திருவாய்.10-8-10) என்னக்கடவதிறே. வதநுப ஜநிதப்ரீதிகாரிதமிறே கைங்கர்யம். (27)

28.  மண்டினாரும் மற்றையாரும் ஆஶ்ரயம்.

இவற்றுக்கு ஆஶ்ரயம் ஆர் என்னில், (மண்டினாரும் மற்றையாரும் ஆஶ்ரயம்). ‘‘கண்டியூர்’’ (திருக்குறு.19) இத்யாதி. மண்டினார் என்கிறதுஉகந்தருளின நிலங்களிலே அத்யபிநிவிஷ்டராயிருக்கிற ப்ரபந்நரை ; மற்றையார் என்கிறது – ‘‘விளக்கினை விதியில் காண்பார்’’ (திருக்குறு.18) என்கிற உபாஸகர் என்று ப்ரஸித்மிறே. இத்தால் கர்மத்துக்கு ஆஶ்ரயம் உபாஸகர், கைங்கர்யத்துக்கு ஆஶ்ரயம் ப்ரபந்நர் என்றபடி. (28)

29. அருள்முடிய நிறுத்தி அடையநின்றதும் நல்லதோரருள் தன்னாலே நன்றுமெளியனாகிறதும் விஷயம்.

இவற்றுக்கு விஷயம் ஏதென்னில் ; ‘‘எத்தவம் செய்தார்க்கும் அருள் முடிவதாழியான் பால்’’ (நான். திருவ.2)  என்றும், ‘‘நிறுத்தி நும் உள்ளத்துக்கொள்ளும் தெய்வங்களும்மை உய்யக்கொள் மறுத்துமவேனாடே கண்டீர்’’ (திருவாய்.5-2-7) என்றும், ‘‘அவரவர் விதிவழி அடைய நின்றனரே’’ (திருவாய்.1-1-5) என்றும் சொல்லுகிறபடியே தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்க்கொண்டு நின்றவிடமும், ‘‘நல்லதோரருள்தன்னாலே காட்டினான் திருவரங்கம்’’ (திருமாலை.10) என்றும், ‘‘கருத்துக்கு நன்றுமெளியன்’’ (திருவாய்.3-6-11) என்றும் சொல்லுகிறபடியே அர்ச்சாவதாரமாய்க்கொண்டு நின்ற இடமும். (29)

30.     இவற்றாலே ஸாதாரணம் அஸாதாரணம் என்னும்.

ஆக (இவற்றாலே) இந்த ப்ரமாணப்ரகாரங்களாலே (ஸாதாரணம் அஸாதாரணம் என்னும்) ஸாதாரணமான விக்ரஹவிஶிஷ்டன் கர்மத்துக்கு விஷயம். அஸாதாரணமான விக்ரஹவிஶிஷ்டன் கைங்கர்யத்துக்கு விஷயம் என்று விஷயபேத்தை அருளிச்செய்து, அதில் அஸாதாரணவிக்ரஹவிஷய கைங்கர்ய நிஷ்டன் ஸாதாரணவிக்ரஹவிஷயத்திலே ஸர்வஸாமாந்யதயா கர்த்தவ்யமான வற்றில் அந்வயியான் என்கிறார். (30)

31.   ஜாத்யாஶ்ரமதீக்ஷைகளில்  பேதிக்கும் ர்மங்கள்போலே அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும்.

ஆனால் பழையதாக அநுவர்த்தித்துப் போந்ததுமாய் வர்ணாத்ய  ஸாதாரணமுமான ஸத்வாரகவிஷயப்ரவ்ருத்தியை இப்போது இவனாலே  விடப்போமோ என்னில் ; அதுதானே நழுவும் என்கிறார். எங்ஙனே என்னில் ; ஜாதி தர்மமானது ஜாத்யந்தரத்திலே பேதிக்கக்கண்டோம், கண்டபடி என் என்னில், யஜநயாஜநஅத்யயநஅத்யாபநதாப்ரதிக்ரஹங்களாகிற ஷட்கர்மங்கள் க்ஷத்ரியாதி களில் பேதியாநின்றனவிறே ; ஆஶ்ரமதர்மம் ஆஶ்ரமாந்தரத்தில் பேதியாநின்றது. இவை இத்தனையும் பேதித்தாலும் பேதியாத நித்யதர்மநைமித்திக தர்மங்கள் ஜ்யோதிஷ்டோமாதிதீக்ஷைகளில் பேதிக்குமாப்போலேஅத்தாணிச் சேவகமும்’’ (திருப்பல்.8) என்கிற அந்தரங்க கைங்கர்யத்தில் வர்ணாஶ்ரம ஸாதாரணதர்மம் தானே நழுவுமிறே, உறங்குகிறவன் கையில் எலுமிச்சம்பழம் போலே இதுதனக்கு அவகாஶமில்லை. இந்த த்ருஷ்டாந்தபலத்தாலே இவ்வதிகாரிக்கு அகரணே ப்ரத்யவாயமில்லை என்கிறது. கீழ்ச்சொன்னவை தன்னைப்போலே; இப்படி இருக்கச் செய்தேயும் ஶிஷ்டர்கள் அநுஷ்டித்துப் போருகிது ஆந்ருஶம்ஸ்யத்தாலேயிறே. (31)

32. ஸாதநஸாத்யங்களில் முதலும் முடிவும் வர்ணதர்மிகள் முடிவும் வர்ணதர்மிகள் தாஸவ்ருத்திகள் என்று துறை வேறிடுவித்தது.

இனி கர்மநிஷ்டனிற்காட்டில் கைங்கர்யநிஷ்டனுக்குள்ள வைஷம்யம் சொல்லுகிறது (ஸாதநஸாத்யங்களில்) என்று தொடங்கி. ஸாதநங்களில் முதற் சொல்லுகிறது கர்மம். கர்மஜ்ஞாநபக்திகளிறே ஸாதநங்கள். ஸாத்யங்களில் முடிவு கைங்கர்யம். வதநுபவம், அநுபவஜநிதப்ரீதி, அநந்தரமிறே ப்ரீதிகாரித கைங்கர்யம். திருவயிந்திரபுரத்தில் வில்லிபுத்தூர்ப்பகவர் என்பாரொருவர் எல்லாரும் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ணுவாராய், ஒருநாள் அநுஷ்டாநம் பண்ணி மீண்டெழுந்தருளா நிற்கச்செய்தே, இருந்த ப்ராஹ்மணர்ஏன் ஜீயரே! எங்கள் துறையில் அநுஷ்டாநம் பண்ண வாராதொழிவானென்என்ன, ‘‘விஷ்ணுதாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ணதர்மிண: | அஸ்மாகம் தாஸவ்ருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி:’’ என்று – ‘நீங்கள் ப்ராஹ்மணர், வர்ணதர்மிகள்; நாங்கள் தாஸவ்ருத்திகள், கைங்கர்யபரர். ஆகையாலே உங்களோடே எங்களுக்கு அந்வயமில்லைஎன்று துறை வேறிட்டுப் போனாரிறே. (32)

33. வேதவித்துக்களும் மிக்கவேதியரும் ந்தஸாம் மாதாவாலும், அதுக்கும் தாயாய்த் தாயினுமாயின செய்யுமத்தாலும் பிறப்பிக்குமது இருவர்க்கும் ஶ்ரேஷ்ட ஜந்மம்.

இனிமேல் இவர்களிருவர்க்கும் ஜந்மநிரூபக கூடஸ்தரிருக்கும்படி என் என்ன; இவை இப்படிப்பட்டிருக்கும் என்கிறார் (வேதவித்துக்களும்) என்று தொடங்கி. ‘‘யே வேதவிதோ விப்ரா:’’ (பார. ஆர.88) என்கிற வேதவித்துக்கள், ‘‘காயத்ரீம் ந்தஸாம் மாதா’’ என்கிற காயத்ர்யுபதேஶத்தாலே பிறப்பிக்குமது கர்மநிஷ்டனுக்கு ஶ்ரேஷ்டஜந்மம்; ‘‘யே சாத்யாத்மவிதோ ஜநா:’’ என்கிறபடியே மிக்கவேதியரான வேததாத்பர்யம் கைப்பட்டவர்கள் ‘‘ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்தம்’’ (வ்ரு.ஹா.) என்கிறபடியே, அந்த காயத்ரிதனக்கும் மாத்ருஸ்தாநமாய், ‘‘பெற்ற தாயினுமாயின செய்யும்’’ (திருமொழி.1-1-9) என்கிறபடியே ஶரீரோத்பத்தி மாத்ரமன்றியிலே ஜ்ஞாந விகாஸத்தைப் பண்ணிக்கொடுப்பதான திருமந்த்ரத்தாலே பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்டர்க்கு ஶ்ரேஷ்டஜந்மம். ‘‘ஜந்மநா ஜாயதே ஶூத்: கர்மணா ஜாயதே த்விஜ: | வேதாப் யாஸேந விப்ரத்வம் ப்ரஹ்மவித்ப்ராஹ்மேணா விது:’’ என்றும், ‘‘ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச்ச்ரேஷ்டம் ஜந்ம’’ (ஆப..1-1-16) என்னக்கடவதிறே. (33)

34. அந்தணர் மறையோர் என்றும், அடியார் தொண்டரென்றும் இவர்களுக்கு நிரூபகம்.

இப்படி ஶ்ரேஷ்டஜந்மரான இருவர்க்கும் நிரூபகம் ஏதென்னில் (அந்தணர் இத்யாதி). ‘‘துணைநூல் மார்விலந்தணர்’’ (திருமொழி 1-5-9) என்றும், ‘‘தீயோம்புகை மறையோர்’’ (திருமொழி .7-9-7) என்றும் சொல்லுகிற இவை கர்மநிஷ்டர்க்கு நிரூபகம். ‘வேதார்த்தாநுஷ்டாநயோக்யர் அந்தணர்என்றும், ‘வேதார்த்தாநுஷ்டாநபரர் மறையோர்என்றும் சொல்லக்கடவது. இனி, ‘‘அணியரங்கன் திருமுற்றத்தடியார்’’ (பெரு. திரு.1-10) என்றும், ‘‘அகமகிழும் தொண்டர்’’ (பெரு.திரு.1-10) என்றும் சொல்லுகிறபடியே கைங்கர்யநிஷ்டனுக்கு நிரூபகம்அடியார்; கிஞ்சித்காரார்ஹர். தொண்டர்; கிஞ்சித்காரஸ்வபாவர். (34)

35. ஒருதலையில் கிராம குலாதி வ்யபதேஶம், குலம் தரும் என்னும் மாசில் குடிப்பழி என்று, பதியாகக் கோயிலில் வாழும் என்பர்கள்.

கர்மகைங்கர்யங்களில் நிஷ்டராயிருக்கும் இருவர்க்கும் வ்யபதேஶம் ஏதென்னில் (ஒரு தலையில் க்ராமகுலாதிவ்யபதேஶம் என்று தொடங்கி).  கர்மநிஷ்டரை க்ராமகுலாதிகளாலே வ்யபதேஶிக்கக்கடவது; கைங்கர்ய நிஷ்டனுக்கு அந்த க்ராமகுலாதிகளால் வருகிற வ்யபதேஶம் ‘‘குலந்தரும்’’ (திருமொழி.1-1-9) என்றும், ‘‘மாசில் குடிப் பிறப்பு’’ (மூ.திருவ.10) என்றும் வத் ஸம்பந்தஜ்ஞாநத்தாலே இதரவ்யாவ்ருத்தமான வைஷ்ணவஜாதீயனான இவனுக்கு அவத்யமாகையாலே நிரவத்யமான வத்ஸம்பந்தப்ராதாந்யமே தோற்றும் படியாக, ‘‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்’’ (நா.திரு.8-9) என்றும், ‘‘கோயிலில் வாழும் வைட்டணவர்’’ (பெரியா.திரு.5-1-3) என்றும் சொல்லுகிறபடியே வத் ஸம்பந்தமுள்ள தேஶத்தையிட்டும், வத்ஸம்பந்தந்தன்னையிட்டும் வ்யபதேஶிக்கக் கடவது; ‘‘ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராமகுலாதிபி: | விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ்தஸ்ய ஸர்வம் ஏவ ஹி || (வி.ஸ) நத்யாஸ் தஸ்யைவ நாமாதி ப்ரவிஷ்டாயா யதார்ணவம் | ஸர்வாத்மநா ப்ரபந்நஸ்ய விஷ்ணுமே காந்திநஸ்ததா’’ என்னாநின்றதிறே. (35)

36. விப்ரர்க்கு கோத்ரசரணஸூத்ரகூடஸ்தர் பராஶரபாராஶர்ய போதாயநாதிகள்; ப்ரபந்நஜநகூடஸ்தர் பராங்குஶபரகாலயதிவராதிகள்.

இனிமேல் இருவருடையவும் கூடஸ்தரைச் சொல்லுகிறது (விப்ரர்க்கு என்று தொடங்கி). முற்பட்ட ப்ராஹ்மணர்க்கு பராஶர(வ்யாஸ)வஸிஷ்டாதிகள் கோத்ரகுருக்களுமாய், போதாயநாதிகள் ஸூத்ரகுருக்களுமாய், (தத்தச்சரணஉபயங்களில்) பூர்வபூர்வபுருஷர்கள் கூடஸ்தருமாய் இருப்பர்கள். ப்ரபந்நஜந கூடஸ்தர் ‘‘‘பத்யுஶ்ஶ்ரிய: ப்ரஸாதே ப்ராப்தஸார்வஜ்ஞ்யஸம்பதம் | ப்ரபந்நஜந கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீபராங்குஶம்’’ (பரா..)  என்றும், ‘‘ராமாநுஜாங்க்ரிஶரேணாஸ்மி குலப்ரதீபஸ்த்வாஸீத் யாமுநமுநேஸ்ஸ நாதவம்ஶ்ய: | வம்ஶ்ய: பராங்குஶமுநேஸ்ஸ ஸோபி தேவ்யா தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய:’’ (வரத.ஸ்தவே.102) என்றும் சொல்லுகிறபடியே நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் தொடக்கமான ஆழ்வார்களும், உடையவர்க்கு முன்பும் பின்புமுள்ள ஆசார்யர்களும் என்கிறார். (36)

37. அத்யயநஜ்ஞாநாநுஷ்டாநங்களாலே ப்ராஹ்மண்யமாகிறாப்போலே சந்தங்களாயிரமும் அறியக்கற்று வல்லரானால் வைஷ்ணவத்வ ஸித்தி..

இனிமேல் விப்ரரும் ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும் ப்ராஹ்மண்ய ஸித்திஹேது ஏது? வைஷ்ணவத்வஸித்திஹேது ஏது? என்னச் சொல்லுகிறார் (அத்யயநஜ்ஞாநாநுஷ்டாநங்களாலே என்று தொடங்கி). அத்யயநமாவதுஓதுகை. ஜ்ஞாநமாவதுஅதில் அர்த்தபரிஜ்ஞாநம். அநுஷ்டாநமாவதுஅறிந்தபடியே அநுஷ்டிக்கை என்று இவற்றாலே ப்ராஹ்மண்யமாகிறாப்போலே, (சந்தங்கள் ஆயிரமும்) ‘‘சந்தங்களாயிரத்திவை வல்லார்’’ (திருவா.10-9-11) என்று ந்தோ ரூபமான ஆயிரத்தையும், ‘‘அறியக் கற்றுவல்லார் வைட்டணவர்’’(திருவா.5-5-11) என்கிறபடியே திருவாய்மொழி ஆயிரமும் அத்யயநம்பண்ணி, ஆசார்யமுகத்தாலே அர்த்தஶ்ரவணம்பண்ணி, அறிந்த படியே அநுஷ்டிக்கவும் வல்லாரானாலாய்த்து வைஷ்ணவத்வம் ஸித்தித்ததாவது. ‘ஸ்வாத்யாயோத்யேதவ்ய:’’ (தை. .2) என்கிற என்று அந்த வேதாந்ததாத்பர்யமாய், இந்த த்ராவிடவேதத்துக்கு உள்ளீடான பாவதஶேஷத்வபர்யந்தமான வச்சேஷத்வபரிஜ்ஞாநாபாவத்தால் ப்ராஹ்மண்ய ஸித்தியுமில்லை. (37)

38. இந்த உட்பொருள் கற்றுணர்ந்து மேலைத்தலைமறையோராகாதாரை அயல் சதுப்பேதிமார் என்று உத்பத்தி நிரூபிக்கும்.

அவர்களுடைய உத்பத்தியும் நிரூபிக்கவேணுமென்கிறார் (இந்த உட்பொருள் கற்றுணர்ந்து என்று தொடங்கி). ‘‘மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்’’ (.நு.சி.9) என்று உபநிஷத்குஹ்யமுமான இந்த த்ராவிடவேதத்தினுடைய ரஹஸ்யார்த்தத்தை, (கற்றுணர்ந்து மேலைத்தலைமறையோராகாதாரை) ‘‘வேட்பனவும்’’ (மு.திருவ.66) என்கிறபடியே கற்றுணர்ந்தும் அநுஷ்டாநபரருமாகாதாரை ‘‘அயல்சதுப்பேதிமார்கள்’’ (திருமாலை.39) என்று அசலிட்டு உத்பத்தி நிரூபிக்கக்கடவதிறே. ‘‘ஓளபாஸநிஸஹஸ்ரேப்யோ ஹ்யாஹிதாக்நிர்விஶிஷ்யதே | ஆஹிதாக்நிஸஹஸ்ரேப்யஸ்ஸோமயாஜீ விஶிஷ்யதே | ஸோமயாஜிஸஹஸ்ரேப்யஸ்ஸத்ரயாஜீ விஶிஷ்யதே | ஸத்ரயாஜிஸஹஸ்ரேப்யஸ்ஸர்வவேதாந்தபாரக: | ஸர்வவேதாந்தவித்கோட்யா விஷ்ணுக்தோ விஶிஷ்யதே | விஷ்ணுபக்திவிஹீநோ யஸ்ஸர்வஶாஸ்த்ரார்த்தவேத்யபி | ப்ராஹ்மண்யம் தஸ்ய வேத் தஸ்யோத்பத்திர்நிரூப்யதாம்’’ என்னக்கடவதிறே.(38)

39. ‘‘எவ்வுலகத்தெவ்வெவையும்’’ என்கையாலே வேதம் ஹுவிதம்.

வேதாத்யயநவிதிபோலே இப்ப்ரபந்தாத்யயநமும் விதி என்பது,  இதினுடைய அர்த்தபரிஜ்ஞாநாபாவத்தில் உத்பத்தி நிரூபிக்கவேணுமென்பதாய்க் கொண்டு வேதத்தோடொக்கச் சொல்லாநின்றீர். இதுவும் பிற்றை வேதமோ என்னில் ; இதுவும் வேதம்; இது என்ன வேதம் என்ன; ‘‘வேதா வா ஏதே | அநந்தா வை வேதா:’’ (யஜு. கா.) என்றும், ‘‘ஓதுவாரோத்தெல்லாம் எவ்வுலகத்தெவ்வெவையும்’’ (திருவா.3-1-6) என்றும் சொல்லுகிறபடியே அத்யேதாக்களுடைய பேத்தாலும், லோகபேத் தாலும் வேதம் ஹுவிதம் என்கிறார். (39)

40.  இதில் ஸம்ஸ்க்ருதம், த்ராவிடம் என்கிற பிரிவு ருகாதிபேதம் போலே.

ஆனால் அது ஸம்ஸ்க்ருதமாய், இது த்ராவிடமாய்ப் பிரிந்திராநின்றதீ என்ன, சொல்லுகிறது மேல். (இதில்) இந்த வேதத்தில். (ஸம்ஸ்க்ருதம் த்ராவிடம் என்கிற பிரிவு ருகாதிபேம்போலே என்று) வேதங்கள்தான் ஒன்றுபோலேயோ மற்றது? ஸம்ஸ்க்ருத வேதந்தான் ருக்யஜுஸ்ஸாமாதர்வணங்களாய்ப் பிரிந்தாப்போலே வேதந்தான் ஸம்ஸ்க்ருதரூபமாயும், த்ராவிடரூபமாயும் பிரிந்ததென்கிறார். (40)

41. செந்திறத்த தமிழென்கையாலே ஆகஸ்த்யமும் அநாதி

ஆனாலும் அந்த ஸம்ஸ்க்ருத பாஷைதான் அநாதியாயிராநின்றதே என்ன; (செந்திறத்த தமிழென்கையாலே ஆகஸ்த்யமும் அநாதி) ‘‘செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’’ (திருநெடு.4) என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹபடிக்குமிடத்தில் ‘‘செந்திறத்த தமிழோசை’’ என்றதுக்குப் பின்பிறே ‘‘வடசொல்லாகி’’ என்றது. ஆகையாலே இரண்டும் அநாதியிறே. (41)

42. வடமொழிமறை என்றது தென்மொழிமறையை நினைத்திறே.

ஆனால் அந்த பாஷை அநாதியாகிறது; திருவாய்மொழிக்கு வேதத்வமுண்டாக வேணுமென்கிற நிர்பந்தமுண்டோ என்னில்; (வடமொழிமறை என்றதுதென்மொழி மறையை நினைத்திறே) வேதம் என்னாதே ஸம்ஸ்க்ருதவேதம் என்கையாலே த்ராவிடவேதமுமுண்டாகவேணுமென்கிறார். (42)

43. வேதசதுஷ்டயஅங்கோபாங்கங்கள் பதினாலும்போலே, இந்நாலுக்கும் இருந்தமிழ்நூற்புலவர் பனுவல் ஆறும்  மற்றை எண்மர் நன்மாலைகளும்.

அங்கோபாங்கஸஹிதத்வம் இதுக்குமுண்டோ என்ன, உண்டென்கிறார் மேல் (வேதசதுஷ்டயாங்கோபாங்கங்கள் என்று தொடங்கி). ‘‘அங்காநி வேதாஶ்சத்வாரோ மீமாம்ஸாந்யாயவிஸ்தர: | புராணம் ர்மஶாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாஶ்சதுர்த’’ என்கிறபடியே சதுர்தஶவித்யாஸ்தாநவேதம்போல் இங்கும் இவருடைய ப்ரந்தங்கள் நாலும் நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய், ‘‘இருந்தமிழ்நூற்புலவன் மங்கையாளன்’’ (திருமொழி.1-7-10) என்றும், ‘‘கலியன்வாயொலிசெய்தபனுவல்’’ (திருமொழி.1-4-10) என்றும் சொல்லுகிற திருமங்கையாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும், அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய், மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும் உபாங்கங்களாயிருக்கும். (43)

44.  ஸகலவித்யாதிகவேதம்போலே இதுவும் திவ்ய ப்ரபந்த ப்ரதாநம்.

ஸகலவித்யைகளிலும் வைத்துக்கொண்டு அங்கியான வேதம் அதிகமாயன்றோ இருப்பது என்னில், (ஸகலவித்யாதிகவேதம்போலே) அந்த ஸகல வித்யைகளிலும் அதிகமான வேதம் ப்ரதாநமானாப்போலே இதுவும் திவ்ய ப்ரபந்தங்களில் ப்ரதாநமாயிருக்கும். (44)

45. வேதநூல், இருந்தமிழ்நூல், ஆஜ்ஞை, ஆணை, வசையில், ஏதமில், சுருதி, செவிக்கினிய, ஓதுகின்றதுண்மை, பொய்யில்பாடல், பண்டை, நிற்கும், முந்தை, அழிவில்லா என்னும் லக்ஷணங்களொக்கும்.

ஆனால் வேதத்துக்குச் சொல்லுகிற ‘‘வேதஶாஸ்த்ராத்பரம் நாஸ்தி’’ (ஹரி வம்ஶே) என்கிற ஶாஸ்த்ரத்வமும், ‘‘ஶ்ருதிஸ்ம்ருதிர்மமைவாஜ்ஞா’’ என்கிற வதாஜ்ஞாரூபத்வமும், ப்ரமவிப்ரலம்பாதிதோஷரஹிதத்வமும், பூர்வ பூர்வோச்சாரணக்ரமத்தாலே உத்தரோத்தரோச்சார்யமாணத்வம், நித்யத்வம், ஸத்யத்வம் தொடக்கமான லக்ஷணங்கள் இத்திருவாய்மொழிக்குமுண்டோ என்னில், உண்டென்கிறார் (வேதநூல் என்று தொடங்கி). ‘‘வேதநூல்’’ (திருச்ச.72) என்றாப்போலே ‘‘இருந்தமிழ்நூல்’’ (திருமொழி 1-7-10) என்று ஶாஸ்த்ரத்வமும், ‘‘ஶ்ருதிஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா’’ என்றாப்போலே ‘‘ஆணையாயிரத்து’’ (திருவா. 6-3-11) என்று பவதநுஶாஸநரூபமாய், ‘‘வசையில் வேதம்’’ (திருமொழி 5-3-2) என்றாப்போலே ‘‘ஏதமிலாயிரம்’’ (திருவா. 1-6-11) என்று ப்ரமவிப்ரலம்பாதிதோஷரஹிதமாய்,  ‘‘சுடர்மிகுசுருதி’’ (திருவா. 1-1-7) என்றும், ‘‘செவிக்கினிய செஞ்சொல்’’ (திருவா. 10-6-11)

என்றும் ஶ்ராவ்யமாய், ‘‘வேதநூலோதுகின்றதுண்மை’’ (திருச்ச.72) என்றாப்போலே  ‘‘பொய்யில்பாடலாயிரம்’’ (திருவா. 4-3-11) என்று இதில் சொல்லுகிற அர்த்தங்களில் ஒரு பொய் இன்றியிலே இருப்பதாய், ‘‘பண்டைநான்மறை’’(திருமொழி 5-7-3), ‘‘நிற்கும் நான்மறை’’ (திருவா. 6-5-4) என்றாப்போலே ‘‘முந்தையாயிரம்’’ (திருவா. 6-5-11) என்றும், ‘‘அழிவில்லா ஆயிரம்’’ (திருவா. 9-7-11) என்றும், ஆத்யந்தரஹிதமாய், அதிற்சொல்லுகிற லக்ஷணங்கள் இதுக்குமுண்டென்கிறார். (45)

46. ‘‘சொல்லப்பட்ட’’ என்றதில் கர்த்ருத்வம்ஸ்ம்ருதிஅத்தை ஸ்வயம்பு படைத்தான்என்றது போலே.

ஆனால் ‘‘சொல்லப்பட்ட ஆயிரத்துள்’’ (திருவா.8-10-11) என்று இவர்தம்மாலே சொல்லப்பட்டது என்கிற இதில் கர்த்ருத்வத்தால் நித்யத்வஅபௌருஷேயத்வஹாநி வாராதோ என்னில், வாராதென்கிறார். அது என்போலவென்னில், ‘‘முன்னம் திசை முகனைத்தான் படைக்க, மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள்’’ (பெ.திருமடல்) என்றும், ‘‘அநாதிநிதநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா’’ (பார.ஶா.) என்றும் சொல்லுகிறபடியே, ஸ்ம்ருதி, ‘ப்ரஹ்மா வேதங்களைப் படைத்தான்என்ற இடத்தில், அந்த ப்ரஹ்மாவால் வந்த கர்த்ருத்வத்தால் அவற்றினுடைய நித்யத்வஅபௌருஷேயத்வங்களுக்கு ஹாநி வாராதாப்போலே இதுக்கும் நித்யத்வஅபௌருஷேயத்வஹாநி வாராது. (46)

47. நால்வேதங்கண்ட புராண ருஷிமந்த்ரதர்ஶிகளைப்போலே இவரையும் ருஷி, முனி, கவி என்னும்.

(நால்வேதங்கண்ட இத்யாதி) ‘‘நால்வேதங்கண்டானே’’ (திருமொழி.8-10-11) என்கிறபடியே நாலுவேதங்களைக் கரைகண்டவர்களையும் அஷ்டாதஶபுராண கர்த்தாக்களையும் ‘‘சதுர்வேதர்ஶநாத்ருஷி:’’ என்கிறபடியே ருஷிகளென்றும், ‘‘ஜிதந்தே’’ இத்யாதிஜிதந்தாமந்த்ரதர்ஶிகளான ஶௌநகாதிகளை முனிகளென்றும், இதிஹாஸகர்த்தாக்களான ஸ்ரீவால்மீகிபகவான்போல்வாரை கவிகளென்றும் சொல்லுமாப்போலே இவரையும் ‘‘ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணா தத்த்வ மிவோதிதம் | ஸஹஸ்ரஶாகாம் யோத்ராக்ஷீத்த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்’’ (பரா..) என்றும், ‘‘ஶடகோபமுநிம் வந்தேஶடாநாம் புத்திதூஷகம் | அஜ்ஞாநாம் ஜ்ஞாநஜநகம் திந்த்ரிணீமூலஸம்ஶ்ரயம்’’ (பரா. ) என்றும், ‘‘உலகம் படைத்தான் கவி’’ (திருவா.3-9-10) என்றும் சொல்லுகையாலே இவரையும் ருஷி முனி கவி என்னும் என்கிறார். (47)

48. ‘‘படைத்தான் கவி’’ என்றபோதே இதுவும்  யதாபூர்வகல்பநமாமே.

‘‘ஒன்றியொன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு’’ (திருவா.3-10-10) என்று அடுத்தடுத்து ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணினவனுக்குக் கவியானேன் என்கையாலே ‘‘ஸூர்யாசந்த்ரமஸௌதாதாயதாபூர்வமகல்பயத்’’ (தை. .) என்று ஸ்ருஷ்டிதோறும் ஸூர்யாசந்த்ரமாக்கள் உண்டானாப்போலே ஸ்ருஷ்டிதோறும் இந்த ப்ரபந்தமும் உண்டென்னுமிடம் தோற்றுகிறது. இத்தாலும் இதினுடைய அநாதித்வம் சொல்லுகிறது. (48)

49. உறக்கம் தலைக்கொண்டபின்னை மறைநான்குமுணர்ந்த தங்க ளப்பனோடே ஓதின சந்தச்சதுமுகன் சலங்கலந்த வெண்புரிநூல் மானுரி திரிதந்துண்ணும் காமனுடல் இருக்கிலங்கு ஜ்யேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப்போலே ஆதுமில் காலத்தெந்தையான வாய்முதலப்பன் பிரமகுருவாய் இராப்பகல் முன்சொல்லக் கற்றனமே என்ற இவரும் நாவினால் நன்மையால் என்னும் ஓதவல்ல பிராக்களை ‘‘கன்மின்கள்’’ என்று சொல்பயிற்ற, வேதம் ஓதுவாரோத்தாகையாலே ஆதர்வணாதிகள்போலே இதுவும் பேர்பெற்றது.

ஆனால் அதிகாரிகள் ஸம்ஹ்ருதராக வேதம் நித்யமானபடி என் என்னில், ஸர்வஜ்ஞனான ஸர்வேஶ்வரன் நித்யனாகையாலே அவன் திருவுள்ளத்திலே வாஸனை கிடந்து ஸுப்தப்ரபுத்ந்யாயத்தாலே ஸம்ஹாராநந்தரம் ‘‘யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை’’ (ஶ்வே.6-18) என்கிறபடியே ப்ரஹ்மாவை உண்டாக்கி, அநந்தரம் அவனுக்கு வேதப்ரதாநத்தைப்பண்ண, ஸர்வேஶ்வரேனாடே அத்யயநம் பண்ணின அந்த ப்ரஹ்மாவானவன் ஜ்யேஷ்டபுத்ரனான ருத்ரன் தொடக்கமானாரை ஓதுவித்தாப் போலே ஸர்வேஶ்வரன் இந்த த்ராவிடவேதஸம்ஸ்காரத்தைத் திருவுள்ளத்திலே வைத்து இவரை ஓதுவிக்க, இவரும் தம்பக்கலில் க்ருதஜ்ஞரான ஸ்ரீமதுரகவிகள் போல்வாரை அத்யயநம் பண்ணுவிக்க, இதுவும் இவரையிட்டு நிரூபிக்கும்படியாய்த்து என்கிறார் (உறக்கம் தலைக்கொண்ட பின்னை என்று தொடங்கி). ‘‘உன்னிய யோகத்துறக்கம் தலைக்கொண்ட பின்னை’’ (பெ. திருமடல்) என்கிறபடியே ‘‘ ப்ரஹ்மா நேஶாநோ நேமே த்யாவாப்ருதிவீ நக்ஷத்ராணி’’ (மஹோபநிஷத்) என்றும், ‘‘ப்ருதிவ்யப்ஸு ப்ரலீயதே’’ என்றுதொடங்கி, ‘‘மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தமக்ஷரே லியதே அக்ஷரம் தமஸி லீயதே தம: பரே தேவ ஏகீபவதி’’(ஸு..), ‘‘ஏகோ வை நாராயண ஆஸீத்’’ (..) என்றும், ‘‘ஒன்றுந்தேவுமுலகுமுயிரும் மற்றும் யாதுமில்லாவன்று’’ (திருவா.4-10-1) என்றும் சொல்லுகிறபடியே ஸகலதத்த்வங்களும் அவர்பக்கலிலே ஏகீபவித்து ‘‘அப்ரஜ்ஞாதமலக்ஷணம்’’ (மநு..1-5) என்கிறபடியே நாமரூபவிபாகாநர்ஹமாய் அவனையிட்டு நிரூபிக்கவேண்டும்படி அவனொருவனுமேயாய், மேல் ஸ்ருஷ்ட்யாதிமுகத்தாலே சேதநருடைய ரக்ஷணப்ரகாரங்களைத் திருவுள்ளத்தோடே கூட்டுகிற ஶையிறே ஸம்ஹாரமாவது.

பின்னை ஸம்ஹாராநந்தரம் யோகநித்ராஸமாரூடனாய் ஸ்ருஷ்ட்யுந் முகனான காலத்தில் ‘‘உணர்ந்தாய் மறைநான்கும்’’ (.திருவ.48) என்கிறபடியே நாலு வேதங்களையும் ஸ்மரித்த ‘‘திசை முகனார் தங்களப்பன்’’ (திருமொழி.2-2-7) என்கிறபடியே தனக்குப் பிதாவான ஸர்வேஶ்வரேனாடே அத்யயநம் பண்ணின. முன்புள்ளவையையிறே அத்யயநம் பண்ணலாவதும், ஸ்மரிக்கலாவதும். ‘‘சந்தச் சதுமுகன்’’ (பெரியா.2-5-8) என்கிறபடியே ப்ரஹ்மாவானவன் ‘‘சலங்கலந்த செஞ்சடை’’, (திருச்ச.113) ‘‘வெண்புரிநூல்மார்வன்’’ (மு.திருவ.46), ‘‘மானுரியதளுமுடையவர்’’ (திருமொழி.10-9-5) , ‘‘பிறர்மனை திரிதந்துண்ணும்’’(திருக்குறு.19) , ‘‘காமனுடல்கொண்ட தவத்தான்’’(நா.திருவ.79) , ‘‘இருக்கிலங்குதிருமொழிவாய் எண்டோளீசர்’’ (திருமொழி   6– 6- 9) என்றும்,  நித்யஸ்நாநயஜ்ஞோபவீதக்ருஷ்ணாஜிநதாரணமும், பிக்ஷா சரணமும், ஜிதேந்த்ரியத்வமும், ஸதாத்யயநபரத்வமுமாகிற ப்ரஹ்மசர்யலக்ஷணத்தை உடையனாய், ‘‘ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்டா ஶ்ரேஷ்டா’’ என்கிறபடியே ஜ்யேஷ்டபுத்ரனான ருத்ரன்முதலானார்க்கு ‘‘சரணாமறைபயந்த தாமரையான்’’ (மு.திருவ.60) என்று புருஷார்த்ததத்ஸாதநஜ்ஞாந ஸாதநமான வேதத்தை ஓதுவித்தாப்போலே ‘‘ஆதுமில் காலத்தெந்தை’’ (திருவா.3-4-4) என்கிறபடியே சேதநாசேதநாத்மகமான ஸகலபதார்த்தங்களும் வஸ்துத்வநாமபாக்த்வங்களை இழந்த காலத்தில் இவற்றைத் தன்பக்கலிலே ஏறிட்டுக்கொண்டுநோக்கி, ‘என்கைஎன்கிறபடியே ஸ்வாமியாயிருக்கிறவன். ‘‘என் வாய்முதலப்பன்’’ (திருவா.7-9-3) எனக்கு வாய்த்த ப்ரதமோபகாரகன் என்கிற. ‘‘பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி’’ (பெரியா. 5-2-8) என்கிறபடியே ஸர்வேஶ்வரன்தானே இவர்தமக்கு ஆசார்யனாய்வந்து ‘‘எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகலோதுவித்து’’ (பெரியா.5-2-3) என்கிறபடியே திவாராத்ரமோதுவித்து. இப்படி ஓதுவிக்குமிடத்தில் ‘‘என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே’’(திருவா.7-9-2) என்கிறபடியே ஈஶ்வரன் முன்னுருச்சொல்ல, ‘‘திருநாமச்சொல் கற்றனமே’’ (திருவிரு.64) என்று அநூச்சாரணம் பண்ணினேன் என்று அவேனாடே ஓதின இவரும். ‘‘நாவினால் நவிற்றின்பமெய்தினேன்’’ (.நு.சி.2) என்று தொடங்கி ‘‘குருகூர்நம்பிப்பாவினின்னிசை பாடித்திரிவன்’’ என்றும், ‘‘நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவராம் படியான ‘‘என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன்’’ (.நு.சி.4) என்கிற ப்ரதிபத்தியையுடைய ஓதவல்லபிராக்களான ஸ்ரீமதுரகவிகள்போல்வாரை ‘‘கன்மின்களென்றும்மையான் கற்பியாவைத்த மாற்றம்’’ (திருவா.6-8-6) என்கிறபடியே இப்ப்ரபந்தத்தை அப்யஸியுங்கோள் என்று ‘‘சொல்பயிற்றிய நல்வளமூட்டினீர்’’ (திருவா.9-5-8) என்கிறபடியே சொல்லிச் சொல்லுவிக்க, வேதமானது ‘‘ஓதுவார் ஓத்தெல்லாம்’’ (திருவா.3-1-6) என்கிறபடியே அத்யேதாக்களையிட்டு, அதர்வணம் என்றும், தைத்திரீயம் என்றும் பேர்பெற்றாப்போலே இதுவும் ‘‘சடகோபன்சொல்’’ என்கையாலேதிருவாய்மொழிஎன்று பேர்பெற்றது. (49)

50. இயற்பா மூன்றும் வேதத்ரயம்போலே; பண்ணார்பாடல்  பண்புரை இசைகொள் வேதம்போலே.

கீழே இவருடைய ப்ரபந்தங்கள் நாலும் வேதசதுஷ்டயம்போலே என்றது, எந்த ப்ரபந்தம் எந்த வேதஸ்தாநத்திலே என்னில், (இயற்பா மூன்றும் என்று தொடங்கி). இயற்பாவாயிருக்கிற திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்கிற ப்ரபந்தங்கள் மூன்றும் ருக்யஜுரதர்வணம் என்கிற மூன்று வேதஸ்தாநத்திலே; ‘‘பண்ணார்பாடல்’’ (திருவா.10-7-5) என்கிற திருவாய்மொழி ‘‘பண்புடைவேதம்’’, (திருவா. 6-6-5) ‘‘இசைகொள்வேதநூல்’’ (திருமொழி. 5-3-2) என்றும் சொல்லுகிற காநப்ரதாநமான ஸாமவேதம்போலே என்கிறார். (50)

51. ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய், ஸ்தோபத்தாலே பரம்புமாப் போலே சொல்லார் தொடையல் இசைகூட்ட அமர்சுவை ஆயிரமாயிற்று.

இதில் ருக்கு ஸாமமாகப் பாடப்படுகிறாப்போலே ருக்வேத ஸ்தாநேயாயிருக்கிற திருவிருத்தம் திருவாய்மொழியாகப் பாடப்படும் என்கிறார் (ருக்கு ஸாமத்தாலே என்று தொடங்கி). ஸாமஸங்க்ரஹம் ருக்கு; ருக்விவரணம் ஸாமம். அப்படியே திருவிருத்தமும் திருவாய்மொழியும். (ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய்) ருக்கு ஸாமத்தோடேகூடி ரஸஸஹிதமாய். (ஸ்தோபத்தாலே பரம்புமாப் போலே) ஸ்தோபம் என்கிறது ருக்வேதங்களையொழிந்த ‘‘ஹாவு ஹாவு ஹாவு’’ இத்யாதிகளாலே பாட, ஒன்று பத்தாக விஸ்த்ருதமாமாப்போலே சொல்லார் தொடையலான இந்நூறுபாட்டும் ‘‘இசைகூட்டி வண்சடகோபன்’’ (திருவா.2-4-11) என்கிறபடியே இசையிலே கூட்டினவாறே ‘‘அமர் சுவையாயிரம்’’ (திருவா.1-3-11) என்கிறபடியே ஸரஸமான ஆயிரமாயிற்று. (51)

52. சந்தோகனென்று ஸாமாந்யமாகாமல் முதலிலே பிரித்து யாழ்பயில் காந ஸ்வரூபியை ‘‘பாலையாகி’’ என்று விஶேஷிக்கையாலே வேதகீதச்சாமி நானென்ன ஸாமந்தோன்ற உத்கீப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி சரமகதிமுடிவாகத் தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹாகோஷநல்வேதவொலிபோலே மஹாத்யயனம்ன்னப்பாடுகையாலே இத்தை சாந்தோக்யஸமமென்பர்கள்.

ஸாமந்தான் ஆயிரமாய் அநேகவிதமாயிருக்குமே. எந்த ஸாமத்தோடே ஒப்பாகிறது என்னில், சாந்தோக்யஸமமாயிருக்கும் என்கிறார் மேல் (சந்தோகன்) என்றுதொடங்கி. ‘‘சந்தோகன் பௌழியன் ஐந்தழலோம்புதைத்திரியன் சாமவேதி’’ (திருமொழி.5-5-9) என்கிறவிடத்தில் ‘‘ஸாமவேதி’’ என்று ஸாமஸாமாந்யமாகாமல் ‘‘சந்தோகன்’’ என்று முதலிலே பிரித்து ‘‘முன்னல்யாழ்பயில் நூல்நரம்பின் முதிர்சுவை’’ (திருவா.2-3-7) என்கிற காநரூபியைகாநரஸமானவனை; ‘‘யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி’’ (திருமொழி.7-3-7) என்றுகொண்டு காநஸ்வரூபி என்று ஸமுதாயமாக்காமல், ‘‘பாலை’’, ‘‘யாழ்’’ என்கிற பண்ணையிட்டு விஶேஷிக்கையாலே ‘‘சாமவேதகீதனாய’’ (திருச்ச.14) என்றும், ‘‘வேதாநாம் ஸாம வேதோஸ்மி’’ (கீதை.10-22) என்றும் அவன்தன்னோடொக்க ஸமாநாதிகரிக்கும்படியான ந்தோஸாமம் இத்திருவாய்மொழி என்னுமிடம் தோற்ற ‘‘உத்கீமேதத் பரமநுப்ரஹ்ம’’, ‘‘ஓங்காரோத்கீ மேவ’’, ‘‘ஓமித்யேததக்ஷரமுத்கீமுபாஸீத’’(சா.உ.1-1-1) என்று சொல்லுகிற உத்கீப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி. இப் ப்ரபந்தத்துக்கு உத்கீம் என்கிற இது ப்ரதாநம் என்னுமாகாரம் தோன்ற ப்ரணவத்தை ப்ரபந்தாதி₃- யிலே ‘‘உயர்வற, மயர்வற, அயர்வறும்’’ என்று மாறாடி ‘‘உயர்ந்தே’’ என்று சரமகதி முடிவாக அகாரமகாரங்களிரண்டினுடைய சரமமான நடு தகாரம் அத்தைத் திருவாய் மொழிக்கு முடிவாக்கி {அகாரஉகாரங்களின் சரமமான தகாரத்தைத் திருவாய் மொழிக்கு முடிவாக்கி}.

 அன்றிக்கே அர்ச்சிராதியை முடிவாக்கி என்னவுமாம்.   அதுக்கடிமுடிவிலே சூழ்விசும்பணிமுகிலாகையாலே. ‘‘தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்’’ (திருவா.9-4-9) என்று இப்ப்ரபந்தத்தை ‘‘ஹாவு ஹாவு ஹாவு’’ என்று தொடங்கி, ‘‘அஹமந்நாதோஹமந்நாதோஹமந்நாத:’’ என்று தேவபோக்யமானாப் போலே, வத்விஷயத்தில் சபலரானார்க்கு போக்யமாக்கி.  

‘‘ஸர்வேப்யோபி ஹி வேதேப்: ஸாமகோஷோ மஹாநபூத்| அந்வகோ யதத்யர்த்தம் தேந ப்ரஹ்மாண்டமண்ட:’’ என்று (மஹாகோஷம்) பெரிய ஆரவாரத்தை உடைத்தாயிருப்பது ஸாமகோஷமிறே. ‘‘எழுந்த நல்வேதத்தொலி’’ என்றும், ‘‘ஸாமத்வநி’’ என்றும் சொல்லுமாப் போலே இப்ப்ரபந்தத்தையும் மஹாத்யயநம் என்னப்பாடுகையாலே பெரிய திருவத்யயநம் என்னக் கடவதிறே. ஆகையாலே இத்தை சாந்தோக்யஸமமென்பர்கள் என்கிறார். (52)

53. புரவியேழொருகாலுடைய தேரிலே திருச்சக்கரமொத்துக் காலசக்கரச் செங்கோல் நடாவி ஜ்யோதிஶ்சக்ரவொளிசுருக்கி அக்நீஷோமீய தேஜோம்ருதத்துக் கூற்றும், மந்தேஹர்க்குச் செந்தீயும்முக்திமார்க்கத்தலைவாசலும், கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே தண்டாமரை சுமக்கத் தோள்வளையும், குழையும், திருச்செய்யமுடியும் ஆரமும் படையும்,வளையும் குழையும், திருச்செய்யமுடியும் ஆரமும் படையும்,  திகழும் பொன்மேனியும், செஞ்சுடர்த் தாமரைக்கண்ணுமாய், அணிநிறமூர்த்தி ஈதென்னும்படி இரண்டையும் தன்னிறமாக்குகிற செய்யாளான வித்யையோடே அருக்கன் மேவின ஸதாத்யேய தேஜஸ்ஸின் ஸாமரஸோத்காந நாமம் உள்ளுறையான ஆத்யந்தங்களாலே ஓராயிரமாமவற்றிலே ஒன்றை ஆயிர முகத்தினாலருளின தீர்த்தம் போலே தீர்த்தங்களாயிரமுமாக விஸ்தரிக்கிறாரென்று வேத குரூபதேரூபதேஶம்.

திலே சொல்லுகிற அந்தராதித்யவித்யை தொடக்கமானவற்றையும் இதிலே சொல்லுமென்றுகொண்டு முற்பட்ட யோஜனையை அருளிச்செய்கிறார் மேல் (புரவி ஏழொருகாலுடைய தேரிலே என்றுதொடங்கி). ‘‘காரார் புரவியேழ்’’ (சி. திருமடல்) என்றும், ‘‘ஒருகாலுடைய தேரொருவன்’’ (திருமொழி.5-7-8) என்றும், ‘‘ஸப்த யுஞ்ஜந்தி ரதமேகசக்ரம்’’ (அருணம். 3) என்றும், ‘‘ஏகோ அஶ்வோ வஹதி ஸப்தநாமா’’ (அருணம் 3) என்று ஸப்தநாமாவாயிருப்பதொரு அஶ்வத்தாலே வஹிக்கப்படுவதாய், ஏகசக்ரியுமாயிருக்கிற தேரிலே.

‘‘திருமால் திருக்கைத் திருச்சக்கரமொக்கும்’’ (திருவிரு.86) என்கிறபடியே திருவாழியாழ்வானோடே ஒப்புச்சொல்லலாய், (காலசக்கரச் செங்கோல் நடாவி) ‘‘கால சக்கரத்தாய்’’ (திருவா.7-2-7), ‘‘தனிவளர் செங்கோல் நடாவுதிர்’’ (திருவிரு. 13) என்கிறபடியே காலசக்ரநிர்வாஹகமுமாய், (ஜ்யோதிஶ்சக்ரவொளி சுருக்கி) ‘‘துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி’’ (திருப்பள்ளி. 3) என்கிறபடியே நக்ஷத்ரதேஜஸ்ஸுக்கு ஸங்கோசத்தைப்பண்ணுமதாய்.

(அக்நீஷோமீயதேஜோம்ருதத்துக்கு ஊற்றும்) அக்நியினுடைய தேஜஸ்ஸுக்கும் சந்த்ரனுடைய அம்ருதகலைக்கும் உத்பத்திஸ்தலமுமாய். பூர்வாபரங்களாகிற பக்ஷத்வயத்திலும் சந்த்ரகலையானது போவதுவருவதாவது ஆதித்யன்பக்கல்நின்றுமிறே.

(மந்தேஹர்க்குச் செந்தீயும்) மந்தேஹரென்றுஆதித்யேனாடேஉதயாஸ்தமயஸமயங்களிலே யுத்தம் பண்ணுவார் சில அசுரர்கள். அவர்களை ‘‘எரிகொள் செந்தீவீழ்’’ (திருவிரு. 82) என்கிறபடியே தப்தமாக்குகைக்கு ஒரு அக்நிஜ்வாலையுமாய்.

(முக்திமார்க்கத்தலைவாசலும்) ‘‘நக்ஷத்ராதாதித்யம்’’ என்று முக்திமார்க்கத்வாரமுமாய், ‘‘ஸம்வத்ஸராதாதித்யம்’’ என்று ஆதித்யனைக்கூட்டி ‘‘தத்பித்வா ஸூர்யமண்டலம்’’ என்றும், ‘‘தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு’’ (சி.திருமடல்) என்றும் சொல்லுகிறபடியே ஆதித்யமண்டலத்தை பேதித்தே முக்தனுக்குப் போகவேண்டுகையாலும், மற்றவையெல்லாம் கிட்டுமளவேயாய் அண்டபேம் பின்பே{அண்டபேத்துக்குமுன்பே}யாகையாலே முக்திமார்க்கத் தலைவாசலும் என்கிறார்.

(கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும்) ‘‘கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்கு’’ (திருவாய்.1-8-3) என்றும், ‘‘சக்ஷுர்தேவாநாமுத மர்த்யாநாம்’’ (யஜு. ஸம்.4-6) என்றும் சொல்லுகிறபடியே தேவர்களுக்கு நேத்ரபூதனான ஸர்வேஶ்வரனுடைய ‘‘சக்ஷோஸ்ஸூர்யோ அஜாயத’’ (பு.ஸூ.) என்கிறபடியே திவ்யசக்ஷுஸ்ஸைப் பிறப்பகமாக உடைத்தாய்.

‘‘ஜகதேகசக்ஷுஷே’’ என்கிறபடியே ஜகத்துக்கு த்ருஷ்டிபூதமாய், (த்ரயீமயமுமான மண்டலத்திலே) ‘‘த்ரயீமயாய’’ என்கிறபடியே வேதமயமுமான ஆதித்யமண்டலத்திலே. (தண்டாமரை சுமக்க) ‘‘தண்டாமரை சுமக்கும் பாதப்பெருமான்’’ (திருவாய்.4-5-8) என்றும், ‘‘த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண ஸரஸிஜாஸநஸந்நிவிஷ்ட:I கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ ஹாரீஹிரண்மயவபு: த்ருதஶங்கசக்ர:’’ என்றும், ‘‘மங்கல வைம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும்’’ (பெரியா.திரு.1-5-9) என்றும், ‘‘திருச்செய்ய முடியுமாரமும் படையுந்திகழ’’ (திருவாய்.8-4-7) என்றும், ‘‘நீண்டபொன் மேனியோடும்’’ (திருவாய்.5-5-7), ‘‘செஞ்சுடர்த்தாமரைக்கண் செல்வனும்’’ (திருவாய்.5-4-9) என்றும் சொல்லுகிறபடியே பாஹுவலயமகரகுண்டலஅபிஷேகஹாரகேயூரஶங்கசக்ராதிதிவ்ய பூஷணங்களாலும் விளங்கா நிற்பதுமாய், ‘‘ருக்மாபம் ஸ்வப்நதீ ம்யம் வித்யாத்து புருஷம் பரம்’’ (மநு.12-122) என்றும், ‘‘ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:’’ (சா.1-6-6) என்றும் சொல்லுகிற ஸ்ப்ருஹணீயமான திவ்ய விக்ரஹத்தையும், ‘‘யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ’’ (சா.) என்கிறபடியே ஆதித்யகிரணத்தாலே அலர்த்தப்பட்டு சிவந்த தேஜஸ்ஸையுடைய திருக்கண் மலரையுமுடைத்தாய்,

‘‘அருக்கனணிநிறமும் கண்டேன்’’ (மூ.திரு.1) என்றும், ‘‘செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி’’ (திருவாய்.4-4-2) என்றும் சொல்லுகிறபடியே ஆதித்யதேஜஸ்ஸுபோலேயிருக்கிற வத்விக்ரஹத்தையும், ப்ரபாப்ரபாவான் களுடைய சேர்த்தியாலே ஶ்ரிய:பதித்வத்துக்கு ஸ்மாரகமுமாயிருக்கிற ஆதித்ய மண்டலத்தையும், இவையிரண்டையும் தன்னிறமாக்கும்படியான ‘‘கமல மலர்மேல் செய்யாள்’’ (திருவாய்.9-3-1) என்கிறபடியே ஹிரண்யவர்ணையாய், ‘‘வித்யா ஸஹாயம்’’ ‘‘ஆதித்யஸம்ஸ்தம் வித்யாப்ரபாவகம் {ப்ரஸாதகம்}’’ என்கிறபடியே வித்யை என்கிற திருநாமத்தை உடையளாயிருக்கிற பெரிய பிராட்டியாரோடே.

 ‘‘வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு’’ (பெ.திருமொழி.2-1-7) என்கிறபடியே ஆதித்யாந்தர்வர்த்தியாய், ஸதாத்யேயதேஜோரூபமாயிருக்கிற இவரை ப்ரதிபாதிக்கிற ‘‘ஸாம்ந உத்கீதோ ரஸ:’’ (சா.) என்று ஸாமத்துக்கு ரஸமாய், ‘‘தஸ்யோதிதி நாம’’ (சா.) என்கிறபடியேஅவர்க்குத் திருநாமமாயிருக்கிற உத்காந நாமத்தை உள்ளுறையாக உடைத்தாகையாலே ‘‘உத்’’ என்கிறவிதில் உகாரதகாரங்களை ஆத்யந்தங்களில் உடைத்தாயிருக்கிற இப்ப்ரபந்தத்தை.

‘‘ஓராயிரமாயd உலகேழளிக்கும் பேராயிரம்’’ (திருவாய்.9-3-1) என்கிறபடியே ஓரோ திருநாமமே அநேக ப்ரகாரமாக ரக்ஷிக்கும்படியான திருநாமங்களில் வைத்துக் கொண்டு ஆதித்யாந்தர வஸ்திதனானவனுக்குத் திருநாமமான ‘‘உத்’’ என்கிற உத்துக்கு பர்யாயமான நாராயணஶப்த்தை ‘‘ஆயிரமுகத்தினாலருளி மந்தரத்திழிந்த கங்கை’’ (பெரிய. திரு.1-4-7) என்கிறபடியே கங்கை லோகபாவநார்த்தமாக ஸஹஸ்ர முகமாக ப்ரவஹித்தாப் போலே ‘‘தீர்த்தங்களாயிரத்து’’ (திருவாய்.7-10-11) என்கிறபடியே லோகபாவநார்த்தமாக ஆயிரம் பாட்டாக விஸ்தரிக்கிறார் என்று வேதாசார்யபட்டர் அருளிச்செய்யும்படி.

ஆக, ‘‘எவ்வுலகத்தெவ்வெவையும்’’ என்று தொடங்கி, இவ்வாழ்வார் அருளிச்செய்த ப்ரபந்தங்கள் நாலுக்கும் வேதரூபத்வமும், அங்கோபாங்க ஸஹிதத்வமும், ஶாஸ்த்ரத்வம் முதலான வேதலக்ஷணங்களும் இவற்றினுடைய நித்யத்வஅபௌருஷேயத்வமும், இந்நாலு ப்ரபந்தங்களுக்கும் நாலுவேத ஸ்தாநேயான ப்ரகாரத்தையும், அதில் திருவாய்மொழி ஸாமஸாமாந்யமன்றிக்கே, ந்தோ ஸாமோபநிஷத்தாயிருக்கிற ப்ரகாரத்தையும், அதில் விஶேஷ லக்ஷணங்களையும் சொல்லுகையாலே இப்ப்ரபந்தத்துக்கு வேதஸாம்யம் சொல்லாநின்றது. (53)

54. அன்றிக்கே, ஸ்வரூபகுணவிபூதிசேஷ்டிதங்களை விஶதமாக்குகிற பஞ்சராத்ரபுராணேதிஹாஸங்கள் போலே நீலபாரூபோக்தி தெரியச்சொன்ன வேதோபப்ரும்ஹணமென்பர்கள்.   

        இனிமேல் ஸ்வரூபாதிகளை விஶதமாகச் சொல்லுகிற ஸ்ரீபாஞ்சராத்ராதிகளைப்

போலே விக்ரஹத்தை விஶதமாகச் சொல்லுகிற வேதத்துக்கு இப்ப்ரபந்தம் விவரணரூபமாயிருக்கும் என்பாருமுண்டென்கிறார் (அதவா வேதஸாம்யமுண்டான மாத்ரமேயன்றிக்கே ஸ்வரூபரூபகுணவிபூதிசேஷ்டிதங்கள் என்று தொடங்கி).

ஸ்வரூபரூபகுணவிபூதிசேஷ்டிதங்களித்தனையும் வேதத்திலே சொல்லும். இதில் ஸ்வரூபத்தையும், குணத்தையும் விஶதமாகச் சொல்லும் ஸ்ரீபாஞ்சராத்ரம், விபூதியை விஶதமாகச் சொல்லும் புராணங்கள், அவனுடைய திவ்ய சேஷ்டிதங்களுக்கு ப்ரகாஶகமாயிருக்கும் இதிஹாஸங்கள், அவைபோலே ‘‘நீலதோயதமத்யஸ்தா வித்யுல்லேகே பாஸ்வரா’’ (தை.நா.) என்றும், ‘‘பாரூபஸ் ஸத்ய ஸங்கல்ப:’’ (மு..2-2-7) என்றும் விக்ரஹபரமான வேதவாக்யங்களை ‘‘தெரியச் சொன்ன ஓராயிரம்’’ (திருவாய்.6-9-11) என்கிறபடியே விஶதமாக்குகிற வேதோபப்ரும்ஹணம் என்பாருமுண்டென்கிறார்.

‘‘சுடரடி’’ (திருவாய்.1-1-1) என்று தொடங்கி ‘‘புனக்காயாநிறத்த புண்டரீகக்கட் செங்கனிவாய்’’ (திருவாய்.10-10-5) என்று தலைக்கட்டுகையாலே ஸ்வரூபாதிகள் எல்லாவற்றிலும் உண்டேயாகிலும் ஒன்றுக்கு ஒன்றிலே நோக்கு என்கிறார். (54)

55. கல்பாதியில் தோற்றிற்று வர்ணிக்கும் சதுர்முகன் சந்தஸ்ஸும் மோஹஶாஸ்த்ரப்ரவர்த்தகன் பிணச்சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து ஏறேறிச்சுழன்றாடும் ஆலமமர் பிச்சுத்தெளிந்து தான் வணங்குமாறுரைக்கக்கேட்ட ஸஜாதீயர்ப்ரஸாதமும் ஆர்ஷமூலம்.

கீழ்ச்சொன்ன புராணேதிஹாஸகர்த்தாக்களான ருஷிகளாலே சொல்லப்பட்ட ஆர்ஷங்களுக்கு மூலமெது; இவர் திருவாய்மொழி பாடுகைக்கு மூலமெது என்ன; கல்பாதியிலே உத்ரிக்தகுணாநுகுணமாகச் சொல்லும் ப்ரஹ்மாவின் ப்ரஸாதமும், ரஜஸ்தம:ப்ரசுரனான ருத்ரன், அவை தலைசாய்ந்து ஸத்த்வம் தலையெடுத்தபோது அத்யாத்மம் சொல்லக்கேட்ட ஸப்ரஹ்மசாரிகளான ப்ருகுபுலஸ்த்யமார்க்கண்டேவாமதேவாதிகள் என்று சொல்லப்படுகிறவவர்கள் ப்ரஸாதமும் ஆர்ஷத்துக்கு மூலம். ப்ரஹ்மருத்ராதிகளுக்கு அந்தர்யாமியாய்க்கொண்டு அவர்களுக்கு ஜ்ஞாந ப்ரதாநம் பண்ணினவன்தானே ஶ்ரிய:பதியாய், பரமஸத்த்வஸமாஶ்ரயமான திவ்ய விக்ரஹயுக்தனுமாய் நின்று செய்த ப்ரஸாதம் இவர்க்கு மூலம் என்கிறார் ‘ (கல்பாதியில் தோற்றிற்று வர்ணிக்கும் என்று தொடங்கி).

(கல்பாதியில்) ‘‘யஸ்மிந் கல்பே து யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா | தஸ்ய தஸ்ய து மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே || அக்நேஶ்ஶிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்யதே | ராஜஸேஷு ச மாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மேணா விது: | ஸாத்த்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்யம் அதிகம் ஹரே: | தேஷ்வேவ யோக– ஸம்ஸித்தாமிஷ்யந்தி பராம் கதிம்’’ (மாத்ஸ்யே) என்று குணத்ரயவஶ்யனாகையாலே கல்பாதியிலே தனக்குத் தோற்றின குணாநுகுணமாக தமஸ்ஸு தலையெடுத்தபோது ருத்ராக்நிமாஹாத்ம்யமும், ரஜஸ்ஸு தலையெடுத்த போது ஸ்வவர்ணநமும், ஸத்த்வம் தலையெடுத்தபோது வத் வர்ணநமும் சொல்லக்கடவனான ப்ரஹ்மாவினுடைய ‘‘மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ’’ (ரா. பா.2-31) என்கிற நினைவும். ‘‘சந்தஸ்ஸு’’ என்றது நினைவென்றபடி

(மோஹஶாஸ்த்ரப்ரவர்த்தகன்) ‘‘த்வம் ஹி ருத்ர மஹாபாஹோ மோஹஶாஸ்த்ராணி காரய | மாஞ்ச கோபய யேந ஸ்யாத் ஸ்ருஷ்டிரேஷோத்தரோத்தரா | த்ரய்யாமபி ச ஸாமாந்யவாதஶ்சித்தவிபேத: || கிம்புநர்லோகமோஹார்த்தம் ப்ரவ்ருத்தம் ருத்ர- ஶாஸநம் | மயாநுஶிஷ்டோ ருத்ரஸ்து மோஹஶாஸ்த்ரம் வ்யதாத் ஸ்வயம்’’ என்கிற படியே பவந் நியோகத்தாலே மோஹ ஶாஸ்த்ர  ப்ரவர்த்தகனான ருத்ரன். (பிணச்சுடலை இத்யாதி) ‘‘பிணங்களிடுகாடதனுள்’’ (திருமொழி 2-6-9) என்றும், ‘‘சுடலையில் சுடு நீறன்’’ (திருமொழி 10-1-5) என்றும், ‘‘வெந்தாரென்பும் சுடுநீறும்’’  (திருமொழி.1-5-8) என்றும், ‘‘அக்கும் புலியினதளுமுடையர்’’ (திருமொழி. 9-6-1) என்றும், ‘‘ஆறும் பிறையுமரவமும் அடம்பும் சடைமேலணிந்து’’ (திருமொழி. 6-7-9) என்றும், ‘‘வேறேறிப் பட்டவிடுசாபம்’’ (இர.திருவ. 63) என்றும், ‘‘தன்னினுடனே சுழலச் சுழன்றாடும்’’ (பெ.திருமடல்) என்றும், ‘‘ஆலமமர் கண்டத்தரன்’’ (மு.திருவ. 4) என்றும், ‘‘ஆல்மேல் வளர்ந்தானைத்தான் வணங்குமாறுமேலையுகத்துரைத்தான்’’ (நா. திருவ. 17) என்றும் சொல்லுகிற இவற்றாலே ருத்ரன் தமஸ்ஸு தலைமண்டையிட்டு வத்விமுகனாய் ப்ரமித்து, பிணங்களிடுகாடுகள்தோறும் ஸஞ்சரியாநின்றுகொண்டு, ‘‘தீபாக்நிம் தீபதைலஞ்ச ஸ்ம சாஸ்திம் ரஜஸ்வலாம் | ப்ரமாதாத் ஸ்பர்ஶநாத் விப்ரஸ்ஸவாஸா ஜலமாவிஶேத்’’ என்று ர்ஶநஸ்பர்ஶநஅநர்ஹங்களான ஸ்மாஸ்திகளை ரித்து, வ்யாக்ரசர்மவஸநனாய், நதீசந்த்ரர்களை ஜடையிலே ரித்து, ஶாபோபஹதனாய், க்ருத்யாக்ருத்ய விவேகஶூந்யனாய் விஷத்தை ரித்து, சக்ரப்ரமம் போலே ப்ரமிக்கிறவன்,

அதுக்குமேலே ஸத்த்வம் தலையெடுத்து, ஸத்த்வம் விஷ்ணுப்ரகாஶக மாகையாலே, அகடிதகடநாஸாமர்த்யத்தையுடைய ஸர்வேஶ்வரனே உபாஸ்யன் என்று தான் அவனை உபாஸிக்கும் ப்ரகாரத்தை உபதேஶிக்கக்கேட்டு ஸத்த்வஸ்தராய், ருஷித்வத்தால் ஸாஜாத்யத்தையுடையரான புலஸ்த்யப்ருகுமார்க்கண்டேவாமதேவாதிகளுடைய ப்ரஸாதம் ஆர்ஷங்களான புராண இதிஹாஸங்களுக்கு காரணமென்றதாய்த்து. புலஸ்த்யாதிகளுக்கு பராஶரேனோடே ருஷிஸாஜாத்யமுண்டாகையாலே ஸஜாதீயர் என்றது. (55)

56. பரமஸத்த்வத்தோடே உள்ளி உரைக்கும் நிறைஞானத்தயனாம் சிவனாம் திருமாலருள்கொண்டு இவர் பாடினார்.

இனி (பரமஸத்த்வம்) என்றுதொடங்கி – ‘‘பரமஸத்த்வஸமாஶ்ரய: :’’ (ஸ்தோ.. 12) என்கிறபடியே ரஜஸ்தமஸ்ஸுக்கு ஆஶ்ரயமன்றிக்கே பரமஸத்த்வஸமாஶ்ரயனாய், அவர்களைப்போலே தோற்றிற்றுச் சொல்லுகையன்றிக்கே ‘‘நெறியுள்ளியுரைத்த’’ (திருவா.1-3-5) என்கிறபடியே இவன் சொல்லிற்றொன்று வேதார்த்தமாயிருக்கச் செய்தேயும், இச்சேதநர்பக்கல் க்ருபாதிஶயத்தாலே விசாரித்துச் சொல்லலாம்படி ஆப்தனுமாய், ‘‘நிறைஞானத்தொருமூர்த்தி’’ (திருவா.4-8-6) என்கிறபடியே அதுக்கடியான ஸார்வஜ்ஞ்யத்தையுமுடையனாய், ‘‘அயனாய் சிவனானாய் திருமாலாலருளப் பட்ட சடகோபன்’’ (திருவா.8-8-11) என்கிறபடியே ப்ரஹ்மருத்ராதிகளுக்கும் அந்தர்யாமியாய் நின்று அவர்களை ப்ரவர்த்திப்பித்தாப்போலே ஶ்ரிய:பதியாய் அஸாதாரண விக்ரஹயுக்தனான ஈஶ்வரனுடைய க்ருபை இவர் திருவாய்மொழி பாடுகைக்கு மூலமென்கிறார்.

57. கருவுள் வேறலாமை அரன் அயன் எனச்செய்யுமவைபோலே மூவுருவா முதல்வன் துப்பரவாலே பரமகவிகளால் பாடுவியாது நேர்படச்சொல்லும் நீர்மையிலா என்னைத்தன்னாக்கி என் நாமுதல் வந்து புகுந்து தப்புதலறத் தன்னை வைகுந்தனாகத் தன் சொல்லால் தானே துதித்து மலக்கு நாவியல் மொய்யசொல்லால் சொல்லவல்லேன் என்று நானும் சொல்லி நாடும் கையெடுக்கும்படி என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்தான் என்றாரிறே.

அவர்களுடைய ப்ரஸாதம்  ஆர்ஷத்துக்கு மூலமென்னுமிடம் ப்ரமாண ப்ரஸித்மாயிருந்தது. இவருடைய ப்ரபந்தத்துக்கு வத்ப்ரஸாதம் மூலம் என்னுமிடம் அறிந்தபடி என் என்னில், அவர்தம்முடைய வசநங்கள் ப்ரமாணம் என்கிறார் (கருவுள் வேறலாமை என்றுதொடங்கி).

 ‘‘ஸ்ருஷ்டிஸ்தித்யந்தகரணீம் ப்ரஹ்மவிஷ்ணுஶிவாத்மிகாம் | ஸம்ஜ்ஞாம் யாதி வாந் ஏக ஏவ ஜநார்த்த:’’ (வி.பு.1-2) என்றும், ‘‘ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி த்வாமாவிஶ்ய ப்ரஜாபதே’’, ‘‘கல்பாந்தே ருத்ரரூபீ யோ க்ரஸதே ஸகலம் ஜகத் | தமாத்யம் புருஷம் விஷ்ணும் ப்ரணதோஸ்மி ஜநார்த்தநம்’’, ‘‘விஷ்ணுராத்மா வதோ வஸ்யாமிததேஜஸ: | தஸ்மாத்நுர்ஜ்யாஸம்ஸ்பர்ஶம் ஸவிஷேஹே மஹேஶ்வர:’ (பா. கர்ண. 29) என்றும், ‘‘திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்’’ (திருவா.5-10-8) என்றும், ‘‘வெள்ளநீர்ச்சடையானும் நின்னிடை வேறலாமை விளங்கநின்றதும்’’ (திருவா.5-10-4) என்றும் சொல்லுகிறபடியே ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர்யாமியாய் ஸ்ருஷ்ட்யாதி களைப் பண்ணாநிற்கச் செய்தேயும் ‘‘அரனயனென உலகழித்து அமைத்துளன்’’ (திருவா.1-1-8) என்கிறபடியே ப்ரஹ்மா ஜகத்தை ஸ்ருஷ்டித்தான்; வேதங்களை உபதேஶித்தான்; ருத்ரன் ஜகத்தை ஸம்ஹரித்தான்; த்ரிபுரங்களை ஹித்தான்என்று லோகத்தார் செய்தாப்போலே ‘‘மூவுருவாம் முதல்வன்’’ (திருவா.7-9-2) என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்குத் தானே காரணமானாப்போலே தனக்குத்தானே அடியாயிருக்கிறவன்,

‘‘திறத்துக்கே துப்பரவாம்’’ (திருவா.7-9-9) என்கிறபடியே யாதொன்றைக் கொண்டு யாதொருகார்யம் கொள்ளநினைத்தான், அத்தைக்கொண்டே அக்கார்யம் கொள்ளவல்ல ஸாமர்த்யத்தை உடையனாகையாலே, தன்னைக்கவி சொல்லுவித்துக் கொள்ள நினைத்தால் ‘‘இன்கவிபாடும் பரமகவிகளால் தன்கவி தான் தன்னைப் பாடுவியாது’’ (திருவா.7-9-6) என்கிறபடியே வ்யாஸபராஶரவால்மீகிகளைக்கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல், முதலாழ்வார்களைக்கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளுதல் செய்யாதே. (நேர்படச்சொல்லும் நீர்மையிலா என்னைத் தன்னாக்கி) ‘‘நேர்பட யான் சொல்லும் நீர்மையிலாமையில்’’ (திருவா.7-9-5) என்கிறபடியே தன்னைக்கவிபாடுகைக்குத் தகுதியான ஜ்ஞாநஶக்த்யாதிகளின்றிக்கே இருக்க, ‘‘என்னைத் தன்னாக்கி’’ (திருவா.7-9-1) என்கிறபடியே என்னைத் தனக்கு அநந்யார்ஹமாக்கி என்னுதல்; என்னைத் தன்னோடொத்த ஜ்ஞாநஶக்த்யாதிகளை உடையனாம்படி பண்ணி, ‘‘என் நாமுதல் வந்துபுகுந்து’’ (திருவா.7-9-3) என்கிறபடியே ஜ்ஞாநாதிகளை உண்டாக்கித் தான் தூரஸ்தனாயிராதே என்னுடைய ஜிஹ்வாக்ரத்திலே வந்து புகுந்திருந்து.

‘‘தப்புதலின்றித்தனைக்கவிதான் சொல்லி’’ (திருவா.7-9-4) என்கிறபடியே என்னை உபகரணமாகக்கொண்டு கவிபாடாநிற்கச்செய்தே என்னுடைய ஸ்பர்ஶத்தால் வந்த தோஷம் தட்டாதபடிபண்ணி, ‘‘தன்னை வைகுந்தனாகப்புகழ வண்தீங்கவி’’ (திருவா.7-9-7) என்கிறபடியே நான் கவிபாடினபின்பு தன்னை ஸ்ரீவைகுண்ட நாதனாகவும் அவ்விபூதியில் ஐஶ்வர்யம் தான் பெற்றானாகவும் நினைத்து,  ‘‘தன்சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்’’ (திருவா.7-9-2) என்கிறபடியே சொல்லும் தன்னதாய், சொன்னானும் தானாய், சொல்லிற்றும் தன்னையாய், ‘‘தன்னைத்தானே துதித்து’’ (திருவா.10-7-2) என்கிறபடியே எனக்கு அந்தர்யாமியாய் நின்று தன்னைத்தானே ஸ்துதியாநிற்கச் செய்தேயும்.

‘‘மலக்குநாவுடையேற்கு’’ (திருவா.6-4-9) என்றும், ‘‘நாவியலாலிசை மாலைகளேத்தி’’ (திருவா.4-5-4) என்றும், ‘‘மொய்யசொல்லாலிசைமாலைகளேத்தி’’ (திருவா.4-5-2) என்றும், ‘‘வானக்கோனைக் கவி சொல்லவல்லேற்கு’’ (திருவா.4-5-9) என்றும் இப்படி நானும் சொல்லி, ‘‘சடகோபன்சொல்’’ என்றவாறே நாடும் அஞ்ஜலி பண்ணும்படி பண்ணி, ‘‘என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்து’’ (திருவா.7-9-2) என்றுசொல் என்னதாகவும், சொன்னேன் நானாகவும், அதுதான் எனக்கு இனிதாகவும் சொல்லுவித்தான் என்கிறாரிறே. ஆகையால் இவருடைய உக்திகளால் ஸர்வேஶ்வரனருளாலே திருவாய்மொழி பாடினார் என்னுமிடம் ஸித்ம்.  (57)

58. தர்மவீர்யஜ்ஞாநத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப்போலன்றே அருளின பக்தியாலே உள்கலங்கிச்சோகித்து, மூவாறு மாஸம் மோஹித்து, வருந்தி, ஏங்கித் தாழ்ந்த சொற்களாலே நூற்கிறவிவர்.

இதுக்குக்கீழ் ப்ரபந்தமூலவைலக்ஷண்யம் சொல்லிற்று.  இனிமேல் வக்த்ருவைலக்ஷண்யம் சொல்லுகிறது (ர்மவீர்யஜ்ஞாநத்தாலே என்று தொடங்கி). ‘‘ஹஸிதம் பாஷிதஞ்சைவ திர்யா யச்ச சேஷ்டிதம் | தத்ஸர்வம் ர்மவீர்யேண யதாவத்ஸம்ப்ரபஶ்யதி’’ (ரா. பா.3-4) என்கிறபடியே தந்தாமுடைய தபோபலத்தாலே லப்தமான ஞானத்தாலே ‘‘கண்டும் தெளிந்தும்’’ (திருவா 7-5-7) என்கிறபடியே கண்டு தெளிந்து ஹ்ருஷ்ட- ராய், மேலே மேலே ஶப்ங்களைத் தொடுக்கும் ருஷிகளைப் போலன்றே அருளின க்திரூபமான ஞானமெல்லாம் அடிமண்டியோடே கலங்கி யதாமநோரதம்  பகவதநுபவம் பண்ணப்பெறாமையாலே ஶோகித்து, ‘‘தாம்நா சைவோதரே  பத்த்வா ப்ரத்யபத்நாதுலூகலே | யதி ஶக்நோஷி கச்சத்வம் அதிசஞ்சல- சேஷ்டித’’ என்றும், ‘‘உரலிேனாடிணைந்திருந்தேங்கிய எளிவு எத்திறம்’’ (திருவா. 1 – 3 – 1) என்றும், ‘‘போனாய் மாமருதின் நடுவே’’ (திருவா. 5 – 1 – 2) என்றும், ‘‘பிறந்தவாறும் வளர்ந்தவாறும்’’ (திருவா. 5 – 10 – 1) என்றும், ‘ஸர்வஜ்ஞனாய் ஸர்வஶக்தியாயிருக்கச் செய்தே இப்படி ஓரபலைகையாலே கட்டுண்பதே! இதென்ன ஆஶ்ரிதவ்யாமோஹந்- தான்!’ என்கிற ஆஶ்ரிதவ்யாமோஹாநுஸந்தாநமும்,

இவர் பக்திபாரவஶ்யத்தாலே கலங்கி ஸர்வஜ்ஞத்வாதிகளை மறந்து விரோதம் பண்ணுவதாக நின்ற இரண்டு மருதுக்கும் நடுவே தவழ்ந்து சென்றதை அநுஸந்தித்து, ‘உலகங்கட்கெல்லாம் ஓருயிரான வஸ்துவுக்கு ஒரு தீங்குவரில் செய்வதென்?’ என்கிற ப்ரேமாதிஶயமும், ‘ஜநநஹேதுவான கர்மஸ்பர்ஶமில்லாத வஸ்து ‘‘ததஶ்ச த்வாதஶே மாஸே’’ (ரா.பா. 10 – 8) என்கிறபடியே பன்னிரண்டுமாஸம் கர்ப்பவாஸம்பண்ணி ஶத்ருக்ருஹத்திலே இருளிலே வந்து அவதரிப்பதே!’ என்றும், ஓரொன்றில் மூவாறு மாஸம் மோஹித்து, ‘‘வருந்திநான் வாசகமாலைகொண்டு’’ (திருவா. 3 – 8 – 10) என்கிற படியே ஒரு சொல் எடுக்கும்போது ஒரு மலை எடுத்தாப்போலே வருந்தி. (ஏங்கி) ‘‘என்றென்றேங்கி அழுதக்கால்’’ (திருவா. 8 – 5 – 3) என்கிறபடியே அவன்திருநாமங்- களைச் சொல்லப்புக்கு பலஹாநியாலே நடுவுநடுவே ஏங்குவது இளைப்பதாய். (தாழ்ந்த) ‘‘அங்கே தாழ்ந்த சொற்களால்’’ (திருவா. 8 – 5 – 11) என்கிறபடியே சொல்லப்புக்குச் சொல்லமாட்டாதே தரைப்பட்டு கத்கதஸ்வரத்தோடே ‘‘வண்டமிழ்நோற்க நோற்றேன்’’ (திருவா. 4 – 5 – 10) என்று நூற்கிறவிவர் என்கிறார். (58)

59. ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றும் தெளிந்தும் கண்டமைமைப்பாலே ஓதி உணர்ந்தவர் இன்றும் ஆஶாபாஶபத்தர்..

     இனிமேல் இந்த ருஷிகளிற்காட்டில் இவர்க்கு ஸம்ஸாரத்தில் நசையறுகையால்

உண்டான வைலக்ஷண்யம் சொல்லுகிறது (ஸ்வாத்யாயயோகங்களைக் கற்றும் தெளிந்தும் என்று தொடங்கி). வேதங்களைக் கற்றும் அதில் அர்த்தத்தைத் தெளிந்தும் யமநியமாத்யஷ்டாங்கயோகத்தாலேயும் அவனைக்கண்டமைப்பாலேஸ்வபாஹு பலார்ஜிதமான ஶாஸ்த்ரஜந்யஜ்ஞாநத்தாலே தாங்கள் காண்கிறதாகையாலே மெய்ம்மையற்றிருக்கும்; அவிஶதமாயுமிருக்கும். அத்தாலே ‘‘ஓதியுணர்ந்தவர் முன்னா’’ (திருவா.3-5-5) என்கிறபடியே வேதஶாஸ்த்ரங்களை ஓதி, த்யாஜ்ய உபாதேயங்களை உணர்ந்திருக்கிற ருஷிகள், இன்றும் ‘‘ஆஶாபாஶஶதைர்பத்: காமக்ரோதபராயண:’’ என்கிறபடியே ஸாம்ஸாரிகஸங்கபாஶபத்ர். இவர்க்கோ வென்னில் :- (அவன் வழங்கும் திவ்யசக்ஷுஸ்ஸாலே) ‘‘அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்’’ (திருவா.1-9-9) என்றும், ‘திவ்யம் தாமி தே சக்ஷு: பஶ்ய மே யோகமைஶ்வரம்’’ (கீதை11-8) என்றும் சொல்லுகிறபடியே இவரை அமலராம்படி கடாக்ஷித்து, அவனாலே த்தமான திவ்ய சக்ஷுஸ்ஸாலே ‘‘நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணனடிக்கமலந் தன்னை அயன்’’ (மு.திருவ.56) என்றும், ‘‘கார்செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான்’’ (நா.திருவ.73) என்றும், ‘‘நீறாடி தான் காணமாட்டாத தாரகலசேவடி’’ (நா. திருவ.27) என்றும், ‘‘கட்கரிய பிரமன் சிவனிந்திரனென்றிவர்க்கும் கட்கரிய கண்ணன்’’ (திருவா.7-7-11) என்றும், ‘‘விதிஶிவ ஸநகாத்யைர்த்யாதுமத்யந்ததூரம்’’ (ஸ்தோ..47) என்றும் சொல்லுகிறபடியே தங்களைப்போரப்பொலிய நினைத்திருக்கும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் காணவரிதாயிருக்கிற ‘‘அரும் பொருளாய் நின்ற அரங்கனே’’ (நா. திருவ.60) என்கிறபடியே பெறுதற்கரிய ப்ரயோஜநமாய் பரத்வஸௌலப் விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனை ‘‘கண்டேன் கமலமலர்ப்பாதம்’’ (திருவா.10-4-9) என்கிறபடியே கண்டபோதே ‘‘பொய்ந்நின்ற ஞானமும்’’ (திருவிரு.1) என்று தொடங்கி, ‘‘இனி யாமுறாமை’’ (திருவிரு. 1) என்று – ‘அவித்யாதிகளை விடுவித்தருளவேணும்என்று இவர்தாமே அவனைக்கால்கட்டி அபேக்ஷிக்கும்படி இவர்க்கு வேறொருவரால் விடுவிக்க அரிதான ‘‘மற்ற வன்பாசங்கள்’’ (திருவா.8-2-11) என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸகலபாஶங்களும் ‘‘பாசங்கள் நீக்கி’’ (திருவா.7-8-5) என்கிறபடியே அவன்தானே போக்குகையாலே நீங்கிற்று; நேராக நிவ்ருத்த மாய்த்தென்கிறார். (59)

60. அவர்களுக்குக் காயோடென்னுமிவையே தாரகாதிகள்; இவர்க்கு எல்லாம் கண்ணனிறே.

இனிமேல் அவர்களுக்கும் இவர்க்கும் தாரகாதிகளும் வேறுபட்டபடி சொல்லுகிறது. ‘‘காயோடு நீடுகனியுண்டு’’ (திருமொழி.3-2-2) என்றும், ‘‘வீழ்கனியும் ஊழிலையும் என்னுமிவையே நுகர்ந்து’’ (பெ.திருமடல்) என்றும் சொல்லுகிறபடியே மூலபத்ரவாயுதோயங்களே அவர்களுக்கு தாரகபோஷக போக்யங்கள். இவரையும்ருஷிஎன்று கீழே சொல்லிற்றிறே. அது இவர்க்கும் ஒவ்வாதோ என்னில், ஒவ்வாது. ‘‘உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்’’ (திருவா.6-7-1) என்கிறபடியே தாரகாதிகளுமெல்லாம் ஸர்வஸுலபனான ஸர்வேஶ்வரனிறே இவர்க்கு. (60)

61. அழுநீர்துளும்பக் கடலும் மலையும் விசும்பும் துழாய் திருமால் என்று ‘‘எங்கே காண்கேன்’’ என்னும் இவர் அலமாப்பு அவர்களுக்கு புத்திர வியோகத்திலே.

ஆகில் இவர்க்கு ஸம்ஸாரத்தில் நசையற்றதென்றும், அவர்களுக்கு நசையற்றதில்லை என்றும் சொல்லிற்றே, அதறிந்தபடி என் என்னில், அத்தைச் சொல்லுகிறது. ‘‘அழுநீர்துளும்ப அலமருகின்றன’’ (திருவிரு.2) என்றும், ‘‘கடலும் மலையும் விசும்பும் துழாய்’’ (திருவா.2-1-4) என்றுதொடங்கி, ‘‘சிந்தை கலங்கித் திருமால் என்றழைப்பன்’’ (திருவா.9-8-10) என்றும், ‘‘எங்கே காண்கேன் ஈன்துழாய் அம்மான் தன்னை’’ (திருவா.8-5-11) என்றும், ‘‘உன்னைக்காண்பான் நானலைப்பாய்’’  (திருவா.5-8-4) என்றும் சொல்லுகிறபடியே பகவத்விஶ்லேஷவ்யஸநத்தாலே கண்ணும் கண்ணீருமாய் அபரிச்சேத்யமான கடலோடு, நிர்விவரமான மலையோடு, அச்சமான ஆகாஶத்தோடு வாசியற, எங்கும் தேடிஶ்ரிய:பதியே!’ என்று கூப்பிட்டுப்படுகிற இவருடைய அலமாப்பு – (அவர்களுக்கு புத்ரவியோகத்திலே) வஸிஷ்ட வ்யாஸாதிகளான அவர்களுக்கு ஶக்திஶுகாதிகளாகிற புத்ரவியோகத்திலே காணலாம். (61)

62.ல ஸாதந தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்.

பல ஸாதந தேவதாந்தரங்களில் இவர்கள் இருவர்க்கும் நினைவு ஒக்குமோ என்னில், அவற்றிலுண்டான வாசி பேச்சிலே தெரியுமென்கிறார். எங்ஙனே என்னில், ‘‘பேஷஜம் வத்ப்ராப்தி:’’(வி. பு. 6-5-59) என்று வத்ப்ராப்தி லமாகவும், அதுக்கு ஸாதநம் கர்மஜ்ஞாநபக்திகள் என்றும், இந்த்ராதிதேவதாந்தர்யாமியாய்க்கொண்டு ஈஶ்வரன் உபாஸ்யனாயிருக்குமென்றுமிறே அவர்கள் சொல்லுவது. இவரோ வென்றால் ‘‘தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே’’ (திருவா.2-9-4) என்றும், ‘‘வழுவிலா வடிமை செய்யவேண்டும்நாம்’’ (திருவா.3-3-1) என்கிற கைங்கர்யம் புருஷார்த்தமாக வும், அதுக்கு ஸாதநம் ‘‘நாகணைமிசைநம்பிரான் சரணே சரண் நமக்கு’’ (திருவா.5-10-11) என்றும், ‘‘அடிக்கீழமர்ந்து புகுந்தேன்’’ (திருவா.6-10-10) என்றும் சொல்லுகிற ப்ரபத்தி என்றும், தேவதாந்தரங்களை ‘‘உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்’’ (திருவா.4-6-10) என்றுமிறே இவரருளிச்செய்வது. (62)

63. ராமாயணம் நாராயணகதை என்று தொடங்கி கங்காகாங்கேய ஸம்பவாத்ய ஸத்கீர்த்தநம் பண்ணின எச்சில்வாய் ஶுத்தி பண்ணாமல் திருமாலவன்கவி’’ என்ற வாயோலைப்படியே மாற்றங்களாய்ந்து கொண்டு உரியசொல் வாய்த்தவிதுவேதாதிகளில் பௌருஷமாநவகீதாவைஷ்ணவங்கள் போலே அருளிச்செயலில் ஸாரம்.

ஆக, இதுக்குகீழ் வக்த்ருவைலக்ஷண்யம் சொல்லிற்றுஇனிமேல் ப்ரபந்தவைலக்ஷண்யம் சொல்லுகிறது. அவர்கள் ப்ரபந்தங்களுக்கு கதாந்தர ப்ரஸ்தாவம் உண்டு; இதுக்கு இல்லை என்னாநின்றுகொண்டு இதினுடைய ஸாரதமத்வம் சொல்லுகிறார் (ராமாயணம் நாராயணகதை என்று தொடங்கி). ‘‘காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நமீத்ருஶை: கரவாண்யஹம்’’ (ரா.பா.242), ‘‘நமோ வதே தஸ்மை வ்யாஸாயாமிததேஜஸே | யஸ்ய ப்ரஸாதாத்வக்ஷ்யாமி நாராயணகதாமிமாம்’’ (பா.ஆதி) என்றும் சொல்லுகிறபடியே இதிஹாஸஶ்ரேஷ்டமான ஸ்ரீராமாயணம் நாராயணகதை என்று தொடங்கி, கங்கையினுடைய வர்ணநமும், ஸுப்ரஹ்மண்ய கதையும், புஷ்பகவர்ணநமுமாய், ஸ்ரீமஹாபாரதத்தில் நாராயணகதை என்று தொடங்கி, கங்கையினுடையவும் ஸ்ரீபீஷ்மருடையவும் உத்பத்திமுதலான பூசல் பட்டோலையாய், ‘‘அஸத்கீர்த்தநகாந்தாரபரிவர்த்தநபாம்ஸுலாம்’’ (ஹரிவம்ஶே) என்கிறபடியே அஸத்கீர்த்தநம்பண்ணின எச்சில்வாயானது ‘‘வாசம் ஶௌரிகதா லாபகங்கயைவ புநீமஹே’’ என்று ஶுத்தி பண்ண வேண்டிற்றிறே அவர்களுக்கு. ‘‘ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தௌதி’’ (வி.ர்மே.1) என்றும், ‘‘வாயவனையல்லது வாழ்த்தாது’’ (மு.திருவ.11) என்றும் சொல்லுகிற இவர் நாக்குக்கு வத் வ்யதிரிக்தமான வர்ணநம் உச்சிஷ்டமிறே.

இவருடைய ப்ரபந்தத்தில் அப்படி எச்சில்வாய் ஶுத்திபண்ணவேண்டாதே ‘‘திருமாலவன்கவி யாதுகற்றேன்’’( திருவிரு.48) என்று வாயோலையிட்டாப்போலே ‘‘மாற்றங்களாய்ந்துகொண்டு’’ (திருவா.6-8-11) என்கிறபடியே எல்லாச் சொற்களும் புறம்பு அந்யபரங்களாயிராதே ஸர்வமும் ‘‘உரியசொல்லாலிசைமாலைகளேத்தி’’ (திருவா.4-5-6) என்கிறபடியே அவனுக்கு ப்ராப்தமான சொல்லாய் ‘‘வாய்த்தவாயிரத்துள்’’ (திருவா.2-2-11) என்கிறபடியே வாச்யனுக்கு வாய்த்த ப்ரபந்தம்; (வேதாதிகளில்) வேதஶாஸ்த்ரேதிஹாஸ புராணங்களில் வைத்துக் கொண்டு ‘‘வேதேஷு பௌருஷம் ஸூக்தம் ர்மஶாஸ்த்ரேஷு மாநவம் | பாரதே வத்கீதா புராணேஷு வைஷ்ணவம்’’ என்கிறபடியே வேதத்தில் ஸாரமான ஸ்ரீபுருஷஸூக்தம் போலேயும், ர்மஶாஸ்த்ரத்தில் மநுப்ரணீதமானது ஸாரமானாப்போலேயும், ஸ்ரீமஹாபாரதத்தில் கீதை ஸாரமானாப்போலவும், புராணங்களில்வைத்துக்கொண்டு ஸ்ரீவிஷ்ணுபுராணம் ஸாரமானாப்போலவும், அருளிச்செயலில்வைத்துக்கொண்டு இத்திருவாய்மொழிப்ரபந்தத்தினுடைய ஸாரதமத்வம் சொல்லிற்று. (63)

64. குருஶிஷ்யக்ரந்தவிரோதங்களை பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ்சொல், செந்தமிழ், இன்கவி, பரவி, அழைக்கும் என்று அந்யோந்யம் கொண்டாடிப்பேசிற்றேபேசும் ஏககண்டரில் ‘‘என்னில் மிகு’’ என்னும் இவருரைகொளின்மொழிகொண்டு ஶாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்க வேண்டுகையாலே வலங்கொண்ட இதுக்குச் சேராதவை மநுவிபரீதங்கள்போலே.

ஆனால் இவ்வாழ்வார்களுடைய ப்ரபந்தங்களும் பரஸ்பர விருத்ங்களாய் இருக்குமோ என்ன, இவர்களெல்லாரும் எககண்டராகையாலே எல்லாம் ஏகார்த்த ப்ரதிபாதகங்களுமாய், எல்லா ப்ரபந்தங்களும் இவருடைய ப்ரபந்தத்தைப் பின்செல்லும்படியான வைபவத்தை உடைத்தாய், இத்தோடு சேராத ஶாஸ்த்ரங்கள் எல்லாம் த்யாஜ்யங்களாயிருக்குமென்று இதினுடைய ப்ராமாண்யம் சொல்லுகிறது (குருஶிஷ்யக்ரந்தவிரோதம் என்று தொடங்கி). ருஷிகளில் குருஶிஷ்யர்களான வ்யாஸஜைமிநிகளில் குருவான வ்யாஸனுடைய க்ரந்தமான ப்ரஹ்மஸூத்ரத்துக்கு ஶிஷ்யனான ஜைமிநிக்ரந்தமான கர்மஸூத்ரத்தில் நிரீஶ்வரவாதத்தால் வந்த விரோதத்தை வ்யாஸன்தானே ‘‘ஜைமிநிராசார்யோ மந்யதே’’ என்று ஆப்தமாக எடுக்கையாலே இருவரும் ஏககண்டர்; இனி  நிரீஶ்வரவாதம் சொன்னதுவைதிக க்ரியைகளை நாஸ்திவாதம் பண்ணுகிற பாஹ்யரை நிராகரிக்கைக்காக பரமதத்தை அதிஷ்டித்துச்சொன்னானென்று பரிஹரிக்கவேண்டிற்று அங்கு. இதுக்கு அப்படிப் பரிஹரிக்கவேண்டாதபடி ‘‘செஞ்சொற்கவிகாள்’’ (திருவா.10-7-1) என்றும், ‘‘செந்தமிழ் பாடுவார்தாம்’’ (திருமொழி.2-8-2) என்றும், ‘‘இன்கவி பாடும் பரமகவிகள்’’ (திருவா.7-9-6) என்றும், ‘‘பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம்’’ (திருவா.1-5-11) என்றும், ‘‘பரவித்தொழும் தொண்டர்தமக்குக்கதி’’ (திருமொழி.7-1-7) என்றும், ‘‘அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும்பெயரே பேசி’’ (. திருவ.50) என்றும், ‘‘அரங்கவோ என்றழைக்கும்’’ (பெரு. தி.2-2) என்றும் சொல்லுகிறபடியே அந்யோந்யம் கொண்டாடி ‘‘பேசிற்றே பேசலல்லால்’’ (திருமாலை.22) என்று ஏககண்டராகையாலே ஏகார்த்தப்ரதிபாதகரான இவர்களில்வைத்துக்கொண்டு, ‘‘என்னில் மிகுபுகழார் யாவரே’’ (பெ.திருவ.4) என்கிறபடியே  தாஸ்யஹ்ருஷ்டோக்தியை உடையரான இவருடைய ‘‘உரைகொளின்மொழி’’ (திருவா. 6-5-3) என்கிறபடியேஅது அதுஎன்று வாய்புலற்றும்படியாகப் பேச்சுக்கு அவிஷயமாய், மாற்றுமுறையுமற்றிருப்பதாய், ஸ்ரீராமாயணத்திலுங்காட்டில் இனிமையை உடையதாயிருக்கிற இவருடைய உக்திகளைக்கொண்டு தத்வஹித புருஷார்த்தங் களை ப்ரதிபாதிக்கிற வேதாந்தஶாஸ்த்ரங்களில் ஸம்ஶயித்தவற்றை நிர்ணயிக்க வேண்டும்படி இருக்கையாலே ‘‘சொல் வலங்கொண்ட’’ (திருவா.3-8-11) என்கிறபடியே அர்த்தப்ரதிபாதநஸாமர்த்யத்தை உடைத்தான இப்ப்ரபந்தத்தோடு சேராதவை யாவை சில ஶாஸ்த்ரங்கள், அவை, ‘‘மந்வர்த்தவிபரீதா து யா ஸ்ம்ருதிஸ்ஸா ஶஸ்யதே’’ என்று மநுவிபரீதமான ஸ்ம்ருதிகளைப்போலே கழிக்கப்படுகிறது. (64)

65. பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்கவிடுவர்.

ஆகையாலேபாஷ்யகாரர் இப்ப்ரபந்தங்கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்க விடுவர்என்கிறார். (65)

66. அதுக்கு மூலம்  ‘‘விதயஶ்ச’’ என்கிற பரமாசார்யவசநம்.

வேதாந்த ஸூத்ரங்களைக்கொண்டு இதில் அர்த்தங்களை கடிப்பியாதே இப்ப்ரபந்தத்தைக் கொண்டு வேதாந்தஸூத்ரங்களை கடிப்பிப்பானென் என்னில், அதுக்கடி ‘‘விதயஶ்ச’’ (ஸ்தோ. ர. 20) என்கிற பரமாசார்யவசநமென்கிறார். ‘‘வைதிகா: விதயஶ்ச த்வதீயகம்பீரமநோநுஸாரிண:’’ என்றுகொண்டு ‘இதம் குர்யாத், இதம் ந குர்யாத்’, ‘‘விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத’’ (ப்ரு.6-4-21), ‘‘த்யாயத’’ (மு.2-2-6), ‘‘உபாஸீத’’ (சா.உ1-1-1) என்கிற வைதிக ஶாஸ்த்ரங்களானவை ஐஶ்வர்ய கைவல்யங்களால் கடக்க ஒண்ணாதபடி கம்பீரமான த்வதீயருடைய மநஸ்ஸைப்பின்செல்லுமென்றுகொண்டு பரமாசார்யரான ஆளவந்தார் அருளிச்செய்கையாலே. (66)

67. ஆப்திக்கு இவர் ‘‘சுருதி, மார்க்கண்டேயன், பார்த்தன்’’என்கிற இவை வ்யாஸமநுப்ரஹ்மவாதிகளை வேதம் சொல்லுமாப்போலே.

            ஆனால் பாஷ்யகாரருட்பட  ப்ரஹ்மஸூத்ரங்களில் ஸந்தேஹார்த்தங்களையும்

இது கொண்டு நிர்ணயிக்கும்படியான ஆப்தியையுடைய இப் ப்ரபந்தத்துக்கு இவர் வேறே சிலரை ஆப்தராக எடுப்பானென் என்னில்; வேதந்தான் ஆப்ததமமாயிருக்கச் செய்தேயும் ஆப்திக்கு ‘‘ஸஹோவாச வ்யாஸ: பாராஶர்ய:’’ (யஜு. அரு.), ‘‘யத்வை கிஞ்ச மநுரவதத், தத்பேஷஜம்’’ (யஜு.2-2-10) என்றும், ‘‘ப்ரஹ்மவாதிநோ வதந்தி’’ (யஜு.1-7-1) என்றும் எடுத்தாப்போலே இவரும், ‘‘உளன் சுடர்மிகு சுருதியுள்’’ (திருவா.1-1-7) என்றும், ‘‘மார்க்கண்டேயனும் கரியே’’ (திருவா.5-2-7) என்றும், ‘‘பார்த்தன் தெளிந்து ஒழிந்த’’ (திருவா.2-8-6) என்றும் ஆப்த்யதிஶயத்துக்காக எடுத்தார் என்கிறார். (67)

 68. பாரதகீதைகளின் வேதோபநிஷத்த்வம்போலே இதுவும் வ்யாக்யை யானாலும் வேதரஹஸ்யமாம்.

இதுக்கு வேதரஹஸ்யத்வம் சொல்லிற்று; இப்படியிருக்க இத்தை க்ரந்தஸ்தமாக்கி வ்யாக்யாநம் பண்ணப்படாநின்றது {இது உபப்ரும்ஹண ஸமமானால் வேதவ்யாக்யாநமாம்பா}.   அப்போது வேதத்வத்துக்கும் ரஹஸ்யத்வத்துக்கும் கொத்தை வாராதோ என்னில், ப்ரஸித்லிகிபடிபாடங்களான மஹாபாரதத்துக்கும் ஸ்ரீகீதைக்கும் ‘‘வேதாநத்யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந்’’ (வி.பு) என்றும், ‘‘வத் கீதாஸு உபநிஷத்ஸு’’ (கீ. 1) என்றும் சொல்லுகிறபடியே இவையிரண்டுக்கும் வேதத்வஉபநிஷத்வங்கள் உண்டானாப்போலே இதுவும் லிகிபடிதங்களாய்ப் போந்ததே யாகிலும் வேதத்வமும் ரஹஸ்யத்வமும் உண்டாமென்கிறார். (68)

69. உதாத்தாதி பதக்ரமஜடாவாக்யபஞ்சாதிபாதவ்ருத்தப்ரஶ்நகாண்டஅஷ்டகஅத்யாயஅம்ஶபர்வாத்யலங்காரங்கள் போலே, எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை, நிரைநிரை, ஓசை, தளை, இனம், யாப்பு, பா, துறை, பண், இசை, தாளம், பத்து,, நூறு, ஆயிரம் முதலான செய்கோலம் இதுக்குமுண்டு.

 ஆக, இப் ப்ரபந்தம் வேதத்தோடும், உபப்ரும்ஹணத்தோடும் துல்யமென்றீர், அவை இரண்டுக்குமுள்ள உதாத்தாதிகளான வேதலக்ஷணங்களும், அத்யாயாம்ஶபர்வாதிகளான உபப்ரும்ஹணலக்ஷணங்களும் இதுக்குமுண்டோ என்னில், த்ரமிடோபநிஷத் விஹிதங்களாய், ‘‘செய்கோலத்தாயிரம்’’ (திருவா.4-1-11) என்கிற படியேஎழுத்து, அசை, சீர்என்று இத்யாதிகளான அலங்காரங்கள் இதுக்கும் ண்டு என்கிறார் (உதாத்தாதி என்று தொடங்கி). பாஷாநுகுணமாயும், வேதாநுகுமாயுமிறே லக்ஷணங்களிருப்பது, ஆகையாலே அந்த பாஷாநுகுணமான லக்ஷணங்களை அருளிச்செய்தது. (69)

70. அதவா வேதவேத்ய ந்யாயத்தாலே பரத்வபரமுதுவேதம் வ்யூஹவ்யாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய் ஆகமுர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தாரென்னும்.

ஆக இதுக்குக்கீழ் வேதத்தினுடையவும், ததுபப்ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலேயாக்கி அவற்றினுடைய ஶப்லக்ஷணங்களும் அர்த்தலக்ஷணங்களும் அருளிச்செய்தார்.  இனிமேல் ப்ரமேயபூதனான ஸர்வஸ்மாத்பரனுடைய அவதாரபரம்பரையில் எல்லையான அர்ச்சாவதாரம்போலே ப்ரமாணவேதாவதாரத்தினுடைய எல்லை இத்திருவாய்மொழி என்கிறார் (அதவா வேதவேத்யந்யாயத்தாலே என்று தொடங்கி). (அதவா) என்றதுகீழ்ச்சொன்ன யோஜனையொழிய யோஜநாந்தரமென்கை. ‘‘வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே ஶரதாத்மஜே | வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத்ராமாயணாத்மநா’’ (ரா. பா.) என்கிறபடியே வேதவேத்யனான பரமபுருஷன் ஶரதபுத்ரனாய் வந்தவதரித்தவிடத்தில் அபௌருஷேயமான வேதமும் ஸ்ரீவால்மீகி பகவான்பக்கலிலே ஸ்ரீராமாயணமாய் வந்தவதரித்ததென்கிற ந்யாயத்தாலே. (பரத்வபரமுதுவேதம்) ‘‘முதுவேதமுதல்வனுக்கு’’ (திருவா.1-6-2) என்கிற ப்ரத்வப்ரதிபாதகமான பழைய வேதம். இத்தால் நித்யநிர்தோஷமாய், அபௌருஷேயமாய் ப்ரமவிப்ரலம்பாதிதோஷரஹிதமான வேதம் என்றபடி.

அந்த பரத்வந்தானே வ்யூஹீபவித்த அவஸ்தையில் அந்த வேதந்தானே ‘‘பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ்ஸ்வயம்’’ (பா. மோ.) என்றும், ‘‘ஓதினாய் நீதி’’ (. திருவ.48) என்றும் சொல்லுகிறபடியே அவனருளிச்செய்த ஸ்ரீபாஞ்சராத்ரஶாஸ்த்ரமாய் வந்தவதரித்தும், அந்தர்யாமியான அவஸ்தையில் ‘‘கேட்ட மனுவும்’’ (நா.திருவ.76) என்கிறபடியே ஆசாரவ்யவஹாரப்ராயஶ்சித்தங்களுக்கு ப்ரகாஶகமான மந்வாதிஸ்ம்ருதிகளாயும், ராமக்ருஷ்ணாத்யவதாரங்களில் வந்தவாறே ‘‘பாட்டும் முறையும் படுகதையும்’’ (நா. திருவ. 76) என்கிறபடியே வேதங்கள்தான் இதிஹாஸாதிகளானாப் போலேயும்,  ‘‘ஆகமூர்த்தியாயவண்ணம்’’ (திருச்ச.17) என்கிறபடியே ஸர்வேஶ்வரன் ஆஶ்ரித ஹ்ருதயாநுகுணமாக ‘‘தமருகந்ததெவ்வுருவம்’’(மு.திருவ.45) என்கிறபடியே த்ரவ்யநாமரூபஆஸநஶயநதேகாலஅதிகாயுபோஜநாதிஸகலவ்யாபாரங்களையும் ஆஶ்ரித ஹ்ருதயாநு குணமாக்கிக்கொண்டு ஸர்வஸுலபமான அர்ச்சாவதாரமான இடத்தில் ப்ரமாணமும் அப்படியே ப்ரமேயம்போலே ஸர்வஸுலபமாய் ஸர்வாதிகாரமாம்படி த்ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்தமாகையாலே ‘‘பண்ணிய தமிழ்மாலை’’ (திருவா.2-7-13) என்கிறபடியே வேதத்தைத் திருவாய்மொழியாகச் செய்தருளினார் என்னவுமாம் என்கிறார். அந்த வேதம் முதலானவை எல்லாத்திலும் எல்லாம் சொல்லிற்றேயாகிலும் ஒன்றுக்கொன்றிலே நோக்காகக்கடவது. (70)

71. மண்ணாடின ஸஹ்யஜலம் தோதவத்திச்சங்கணிதுறையிலே துகில் வண்ணத்தெண்ணீராய் அந்தஸ்ஸ்தத்தைக் காட்டுமாப்போலே அல்பஶ்ருதர் கலக்கின ஶ்ருதி நன்ஞானத்துறைசேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது.

ஆனால் இப்படி பரத்வப்ரதிபாதகமானவேதம் அவஸ்தாந்தரபாக்காய் உள்ளவளவில் ப்ரமேயப்ரகாஶகமாகவற்றோ என்ன, இவ்வவஸ்தையிலே யதாவாக ப்ரகாஶிக்கும் என்னுமிடத்தை த்ருஷ்டாந்த முகத்தாலே பேசுகிறார் (மண்ணாடின ஸஹ்யஜலம் என்று தொடங்கி). மண்ணாடின ஸஹ்யஜலமாவது – ‘‘தோதவத்தித்தூய் மறையோர் துறைபடிய’’ (பெரியா.4-8-1) என்றும், ‘‘பொருநல் சங்கணிதுறை’’ (திருவா.10-3-11) என்றும் சொல்லுகிற துறைகளிலே  ‘‘துகில்வண்ணத்தூநீர்ச்சேர்ப்பன்’’ (திருவா.7-2-11) என்றும், ‘‘தெண்ணீர்ப்பொன்னி’’ (பெருமா.தி.1-1) என்றும் சொல்லுகிற படியே தெளிந்த நீராய்த் தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை ப்ரகாஶிப் பிக்குமாப்போலே, அல்பஶ்ருதர் கலக்கின ஶ்ருதி – ‘‘இதிஹாஸபுராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்ஹயேத்| பிபேத்யல்பஶ்ருதாத்வேத: மாமயம் ப்ரதரிஷ்யதி’’ (பா. ஆதி) என்கிறபடியே அல்பஶ்ருதராயிருக்குமவர்கள் ஒரு ஶ்ருதிவாக்யத்தைப்பிடித்து இதுக்குப் பொருள் த்வைதமென்றும், அத்வைதமென்றும், த்வைதாத்வைதமென்றும் இப்படி ஹுப்ரகாரமாகக்கலக்க, கலங்கின ஶ்ருதியானது – (நன்ஞானத்துறைசேர்ந்து) ‘‘ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்யமநோ யதா’’ (ரா. பா.2-5) என்றும், ‘‘காலைநன் ஞானத்துறை’’(திருவிரு.93) என்றும் சொல்லுகிறபடியே ஞானத்துறையான இவ்வாழ்வார்பக்கலிலே சேர்ந்து, (தெளிவுற்று ஆழ்பொருளை அறிவித்தது) ‘‘தெளிவுற்றவாயிரம்’’ (திருவா.7-5-11) என்கிறபடியே ப்ரஸந்நகம்பீரமான ஆயிரம் பாட்டாய், ‘‘அறிவித்தேன் ஆழ்பொருளை’’ (நா.திருவ.1) என்கிறபடியே அகாமாய் பரமரஹஸ்யமான அர்த்த விஶேஷங்களை எல்லாம் யதார்ஶநம் பண்ணுவிக்கும் என்கிறார். (71)

72. மேகம் பருகின ஸமுத்ராம்புபோலே நூற்கடல்சொல் இவர் வாயன வாய்த்திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோபஜீவ்யமாமே.

இனிமேல் அந்த ப்ரதாநமான வேதத்திற்காட்டிலும் இதினுடைய அவதார ரூபமான திருவாய்மொழிக்கு இவருடைய ஸ்பர்ஶத்தாலே வந்த ஏற்றம் சொல்லுகிறது (மேகம் பருகின என்று தொடங்கி). ஸமுத்ரஜலம் விரஸதையையுடைத்தாய் ததந்தர்கதமான பதார்த்தங்களுக்கே உபஜீவ்யமாய், புறம்புள்ளார்க்கு உபஜீவ்யமன்றியிலே இருப்பதாய், அபர்வணி ஸ்பர்ஶிக்கைக்குக் கால நியதியையுமுடைத்தாயிருக்கும். அந்த ஸமுத்ரஜலத்தை மேகமானது பாநம் பண்ணி ஜகத்திலே வர்ஷிக்க அந்த மேகஸ்பர்ஶத்தாலே அதினுடைய விரஸதையும், ஸ்பர்ஶகாலநியதமும் போய், ஸர்வஜநபோக்யமுமாமாப்போலே, வத் ஸ்வரூபாநுரூபகுணவிபூதிகளை ப்ரதிபாதிக்கிற வேதம் வத்விபூதிபூதரான தேவதாந்தரங்களை ப்ரதிபாதிக்கையாகிற விரஸதையை உடைத்தாய், வேதாதிகாரி களான த்ரைவர்ணிகர்க்கே அத்யேதவ்யமாகையாலே அதிக்ருதாதிகாரமுமாய் அத்யயநஅநத்யயநகாலநியதியையுமுடைத்தாயிருக்கும். ‘‘நூற்கடல்’’ (மூ. திருவ.32) என்கிறபடியே அபரிச்சேத்யமான அந்த வேதமாகிற ஶாஸ்த்ரத்திலுண்டான அர்த்த விஶேஷங்கள் ‘‘இவள்வாயனகள் திருந்தவே’’ (திருவா.6-5-7) என்கிறபடியே இவருடைய வாக்தமாய்க்கொண்டு கட்டளைப்பட்டவாறே வத்வ்யதிரிக்த ப்ரஶம்ஸா பரதையாகிற விரஸதையும்போய் ‘‘அத்யேதவ்யம் த்விஜஶ்ரேஷ்டைர் வேதரூபமிதம் க்ருதம் | ஸ்த்ரீபிஶ்ஶூத்ராதிபிஶ்சைவ தேஷாம் முக்தி: கரே ஸ்திதா’’ (பாஞ்ச.) என்கிறபடியே ஸர்வாதிகாரமுமாய் ஸர்வகாலாத்யேதவ்யமுமாயிருக்கும். (72)

73. ம்ருத்கடம் போலன்றே பொற்குடம்.

ஸமுத்ரஜலத்தையும்தத்கார்யமான மேகம் பருகின ஜலத்தையும் அதிக்ருதாதிகாரமான வேதத்துக்கும் தத்கார்யமான திருவாய்மொழிக்கும் த்ருஷ்டாந்தமாக்கினால் காரணம் போலே கார்யமும் அதிக்ருாதிகாரமாயிருக்குமோ

என்னில், அப்படியிராது, ஸர்வாதிகாரமாய், ஶ்லாக்யமாய், ஸ்ப்ருஹணீயமாய் இருக்குமென்கிறார் (ம்ருத்டம் போலன்றே பொற்குடம் என்று). ம்ருத்டமானது தொடுமவர்களே தொடுமித்தனை போக்கி எல்லார்க்கும் தொடவொண்ணாதிறே. அங்ஙனன்றிக்கே பொற்குடம் பார்த்திவமாயிருக்கச்செய்தேயும் எல்லார்க்கும் ஸ்பர்ஶிக்கவுமாய், ஶ்லாக்யமுமாய், ஸ்ப்ருஹணீயமுமாயிருக்கும். ஆகையாலே அதிக்ருதாதிகாரமான வேதந்தான் திருவாய்மொழியான அவஸ்தையை ஜித்தாலும் ஸர்வாதிகாரமுமாய், ஸ்ப்ருஹணீயமுமாயிருக்குமென்கிறார். (73)

74. பெரும்புறக்கடலும், ஶ்ருதிஸாகரமும் அலைத்தாழ்ந்து ஓடும் இடங்களில் அயோக்யர்க்குச் சமைத்த மடுவும், சாய்கரகமும் மாநமேயசரமம்.

ஸர்வஸுலபமாய் ஸர்வாதிகாரமான அர்ச்சாவதாரத்தையும் திருவாய்மொழியையும் கீழ் ‘‘பரத்வபரமுது வேதம்’’ என்று ப்ரஸ்துதமான ப்ரமாண ப்ரமேயங்களை ‘‘பெரும்புறக்கடலும்’’ ‘‘ஶ்ருதிஸாகரமும்’’ என்று பராமர்ஶித்து, அவற்றினுடைய எல்லையான அர்ச்சாவதாரமும் திருவாய்மொழியும் கீழ்ச்சொன்ன பரத்வாதிகளுக்கும் வேதம் முதலான ஶாஸ்த்ரங்களுக்கும் அயோக்யரானார்க்கும் அநுபாவ்யமாம்படி சரமமாயிருக்கும் என்கிறார்.

(பெரும்புறக்கடலும் ஶ்ருதிஸாக`மும்) அபரிச்சேத்யமான ப்ரமாண ப்ரமேயங்கள்; அவையாவனபரத்வமும்  பரத்வப்ரதிபாதகமான வேதமும். அவற்றுக்குடலானால் அலையக்கடவதிறே. அலைகையாவது பரவாஸுதேவர் பக்கல்நின்றும் பிறந்த ஸங்கர்ஷண ப்ரத்யும்நாதிகளான வ்யூஹமும் த்த்ப்ரதிபாதகமான ஸ்ரீபாஞ்சராத்ரஶாஸ்த்ரமும். (ஆழ்ந்து) ‘‘யமாத்மா வேத’’ (ப்ரு. 5-7-22) என்று சொல்லுகிற அந்தர்யாமித்வமும், தத்பரமான மந்வாதிஸ்ம்ருதிகளும். (ஓடுமிடம்) ராமக்ருஷ்ணாத்யவதாரங்களும் தத் ப்ரகாஶகங்களான இதிஹாஸங்களும்; இவை தேகாலஇந்த்ரியவிப்ரக்ருஷ்டங் களாகையாலே பரத்வாதிகளை அநுபவிக்க யோக்யரல்லாதவர்களுக்கு அப்படி தேஶகாலவிப்ரகர்ஷமுமின்றிக்கே பெருகின ஆற்றில் மடுப்போலே ஸர்வஸுலபமுமாய், ருசிஜநகமுமாய், ஶ்ரமஹரமுமாய், ஸர்வஜநபோக்யமுமாய், ஸர்வாபாஶ்ரயமுமான அர்ச்சாவதாரமும், வேதாதிகளுக்கு யோக்யராயிருக்கிறவர்களுக்கு சாய்கரகம்போலே ஸுகரமுமாய், ஸர்வாதிகாரமுமான திருவாய்மொழியும் ப்ரமாணப்ரமேயங்களினுடைய சரமமென்கிறார். ஆக, இத்தால் ‘‘பரத்வபரமுதுவேதம்’’ என்று தொடங்கின அர்த்தங்களை உபபாதித்து அவ்வர்த்தத்துக்கெல்லை அர்ச்சாவதாரமும் திருவாய்மொழியுமென்று நிகமித்தாராய்த்து. (74)

75. வீட்டின்பஇன்பப்பாக்களில் த்ரவ்யபாஷாநிரூபணஸமம் இன்பமாரியில் ஆராய்ச்சி.

ஆக, ப்ரமாணப்ரமேயங்களை ஸஹபடித்து இந்த ப்ரஸங்கத்திலே இவற்றோடே சேர்த்து ப்ரமாத்ருவைபவத்தை அருளிச்செய்கிறார் (வீட்டின்பமென்று தொடங்கி). மேலெல்லாம் இதில் ப்ரமாணப்ரமேயங்களினுடைய எல்லையான அர்ச்சாவதாரத்தி னுடையவும், திருவாய்மொழியினுடையவும் த்ரவ்யபாஷா நிரூபணத்தோடு ஒக்குமென்று இவற்றை ஸித்வத்கரித்து இவற்றோடொக்கும் ப்ரமாதாக்களின் ஜன்மநிரூபணம் என்கிறார் (வீட்டின்பமித்யாதி).  ‘‘கனிவார் வீட்டின்பமே’’ (திருவா.2-3-5) என்கிறபடியே அவன் என்றால் உள் கனிந்திருக்கிறவர்களுடைய க்ருஹங்களிலே வந்து இன்பத்தை அளிக்கும் அர்ச்சாவதாரத்தினுடையவும், ‘‘அந்தமிழினின்பப்பாவினை’’ (பெருமா.திரு.1-4) என்றும் சொல்லுகிற ரஸாவஹமான திருவாய்மொழியினுடையவும் த்ரவ்யநிரூபணத்தோடும் பாஷாநிரூபணத்தோடும் ஒக்கும் என்றும், ‘‘அடியார்க்கு இன்பமாரி’’ (திருவா.4-5-10) என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் திருவாய்மொழிமுகத்தாலே ஆநந்தாவஹமான வத்குணங்களை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வாருடைய திருவவதாரத்தில் ஆராய்ச்சியுமென்கிறார். அர்ச்சாவதாரத்தில் த்ரவ்யநிரூபண நிஷேதம் ஹுப்ரமாணஸித்ம். அத்தோடே சேர்த்துச்சொல்லுகையாலே திருவாய் மொழியினுடைய பாஷாநிரூபணம் பண்ணலாகாதென்னுமிடம் ஸித்மாய்த்து. ‘‘ஹரிகீர்த்திம் விநைவாந்யத்ப்ராஹ்மணேந நரோத்தம | பாஷா காநம் காதவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம்’’ (லைங்கே . 3-44) என்றிறே மநுவும் சொன்னது. அப்படியாகிறதுஅர்ச்சாவதாரத்தில் த்ரவ்யநிரூபண நிஷேதத்துக்கு ப்ரமாணமென் என்னில்; ‘‘அர்ச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவே ஜாதிசிந்தநம் | மாத்ரு யோநிபரீக்ஷாயாஸ்துல்யமாஹுர்மநீஷிண:’’ (பாஞ்ச.) என்றும், ‘‘யோ விஷ்ணோ: ப்ரதிமாகாரே லோஹபாவம் கரோதி வை | யோ குரௌ மாநுஷம் பாவம் உபௌ நரகபாதிநௌ’’ (வச்சாஸ்த்ரே) என்றும் சொல்லக்கடவதிறே. (75)

76. பேச்சுப்பார்க்கில் கள்ளப்பொய்ந்நூல்களும் க்ராஹ்யங்கள்; பிறவி பார்க்கில் அஞ்சாமோத்தும் அறுமூன்றும் கழிப்பனாம்.

ஆகிலும் த்ராவிடபாஷையாயிராநின்றதே, அது க்ராஹ்யமாம்படி எங்ஙனே என்னில்; (பேச்சுப்பார்க்கில்) பாஷாமாத்ரமே அங்கீகாரஅநங்கீகாரஹேதுவாகில், (கள்ளப் பொய்ந்நூல்களும் க்ராஹ்யங்கள்) ‘‘வெள்ளியார் பிண்டியார் போதியாரென்றிவர் ஓதுகின்ற கள்ளநூல்தன்னையும்’’ (திருமொழி.9-7-9) என்றும், ‘‘பொய்ந்நூலை மெய்ந்நூல்’’(திருமொழி. 3-5-2) என்றும் சொல்லுகிற பாஹ்யஶாஸ்த்ரங்களும் குத்ருஷ்டிஶாஸ்த்ரங்களும் அங்கீகரிக்கப்படும். அவற்றுக்கு அப்படி ஶிஷ்டாசாரமில்லாமையாலும், இத்தை ஶிஷ்டரானவர்கள் பரிக்ரஹிக்கையாலும் பாஷாவதிமாத்ரமே பரிக்ராஹ்யஅபரிக்ராஹ்யதாஹேதுவாக ஒண்ணாது.

ஆனாலும் ப்ரபந்தகர்த்தா சதுர்த்தவர்ணாதிகாரியாயிராநின்றாரே? ப்ரபந்தமும் ப்ரதிபாத்யவஸ்துவும் விலக்ஷணமேயாகிலும் கர்த்ருமாந்த்யத்தாலே ப்ரபந்தமாந்த்யமும் பிறக்குமே என்ன (பிறவிபார்க்கில் அஞ்சாமோத்தும் அறுமூன்றும் கழிப்பனாம்) என்கிறார். (பிறவிபார்க்கில்) இதுக்கு வக்தாவான ஆழ்வாருடைய ஜந்மத்தையிட்டுக் கழிக்கப்பார்க்கில், வலைச்சிவயிற்றிலே பிறந்த வ்யாஸன் சொன்ன பஞ்சமவேதமான மஹாபாரதமும், இடைச்சேரியிலே பிறந்த க்ருஷ்ணனருளிச்செய்த ஷட்கத்ரயாத்மகமான ஸ்ரீகீதையும் கழியுண்ணும். (76)

77. க்ருஷ்ணக்ருஷ்ணத்வைபாயநோத்பத்திகள் போலன்றே. க்ருஷ்ண த்ருஷ்ணாதத்த்வஜந்மம்.

               ஆக, இதுக்குக் கீழ் க்ருஷ்ணத்வைபாயநனான வ்யாஸேனாடும், க்ருஷ்ணேனாடும் உண்டான ஜந்மஸாதர்ம்யம் சொல்லி, ‘‘க்ருஷ்ண க்ருஷ்ணத்வைபாய நோத்பத்திகள் போலன்றே’’ என்றுஇனிமேல் வைதர்ம்யம் சொல்லுகிறது. எங்ஙனே என்னில்; இடைச்சிவயிற்றிலே பிறந்த க்ருஷ்ணனுடையவும் வலைச்சிவயிற்றில் பிறந்த க்ருஷ்ணத்வைபாயநனுடையவும் {உத்பத்திபோலன்றே, இவர்} திருவவதாரம் ; இவ்வளவேயோ, இவ்வாழ்வாருடைய திருவவதாரத்தையும் அவர்களுடைய ஜந்மத்தையும் நிரூபித்தால் இத்தோடு அவை நேர்நில்லாது. ஆகையால் இவர்க்கு அவர்கள் ஸத்ருஶரல்லர். (77)

78. பெற்றும் பேறிழந்தும் கன்னிகையானவளும் எல்லாம் பெற்றாளாயும், தத்துக்கொண்டாள், என்பர் நின்றார் என்னுமவளும் நெடுங்காலமும் நங்கைமீர் என்னுமிவர்க்கு நேரன்றே.

இவர்களுடைய உத்பத்திப்ரகாரங்களையும் ஸ்தலங்களையும் விசாரித்தால் அவையும் வாசாமகோசரம் என்கிறார் மேல் (பெற்றும் பேறிழந்தும் என்று தொடங்கி). ‘‘தேவகி பெற்ற’’ (பெரியா.1-3-11) என்கிறபடியே ஸ்ரீதேவகிப்பிராட்டி க்ருஷ்ணனைப் பெற்றுவைத்து, ‘‘திருவிலே ஒன்றும் பெற்றிலேன்’’ (பெருமா.தி.7-5) என்கிறபடியே அவனுடைய பால்யரஸம் அநுபவிக்கப் பெற்றிலளிறே. வ்யாஸனைப்பெற்ற அநந்தரம் ‘‘புந: கந்யா விஷ்யதி’’ (பா.) என்று ஸ்ரீபராஶரபகவான் சொல்ல மீண்டும் கந்யகையான மத்ஸ்யகந்தியும் அவனுடைய பால்யரஸம் அநுபவிக்கப்பெற்றிலள். (எல்லாம் பெற்றாளாயும்) ‘‘எல்லாம் தெய்வநங்கை யசோதை பெற்றாளே’’ (பெருமா.தி.7-5) என்கிற யசோதையும் க்ருஷ்ணனுடைய பால்ய சேஷ்டிதங்களெல்லாம் அநுபவிக்கப்பெற்றாளேயாகிலும், ‘‘தத்துக்கொண்டாள்கொலோ’’ (பெரியா.2-1-7) என்றும், ‘‘உன்னை என்மகனே என்பர் நின்றார்’’ (பெரியா.3-1-3) என்றும்தானும் பிறரும் ஶங்கிக்கும்படியாயிருக்கும். இவருடைய உத்பத்திஅங்ஙனன்றிக்கே ‘‘நெடுங்காலம் கண்ணன் நீண்மலர்ப்பாதம் பரவிப்பெற்ற’’ (திருவிரு.37) என்றும், ‘‘நங்கைமீர் நீருமோர் பெண்பெற்று நல்கினீர்’’ (திருவா.4-2-9) என்றும் சொல்லுகிற படியே பரிபூர்ணைகளான நீங்களும் சில பெண்களைப் பெற்று வளர்த்திகோளல்லிகோளோ, வல்லாஞ்ச₂- நாதிகளை திவாராத்ரவிபாமற வாய்புலற்றும்படியான என் பெண்பிள்ளைக்கு ஸத்ருஶமுண்டோ என்கையாலே இவர்க்கும் அவர்களுக்கும் அத்யந்த வைஷம்யம் சொல்லிற்று. (78)

79. மீனநவநீதங்கள் ந்திக்குமிடமும் வெறிகொள்துழாய் கமழுமிடமும் தன்னிலொக்குமோ.

மத்ஸ்யகந்தத்தையுடய வ்யாஸன் பிறந்தவிடமும், நவநீதகந்தியான க்ருஷ்ணன் பிறந்தவிடமும் – ‘‘வெறிகொள்துழாய் மலர்நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற’’ (திருவா.4-4-3) என்கிற வத்ஸம்பந்தந்தியான ஆழ்வார் திருவவதரித்த இடத்துக்கு ஸத்ருஶமன்றே. (79)

80. ஆற்றில் துறையில் ஊரிலுள்ள வைஷம்யம் வாசாமகோசரம்.

வ்யாஸனுக்கு உத்பத்திஸ்தலமான அஶிஷ்டபரிக்ரஹமுடைய ங்கா நதிக்கும், அதில் ஓடத்துறைக்கும், அவ்விடத்தில் வலைச்சேரிக்கும், க்ருஷ்ணோத்பத்தி ஸ்தலமான க்ருஷ்ணஜலப்ரவாஹமான யமுநாநதிக்கும், காளியவிஷதூஷிதமான அதில் துறைக்கும், ‘‘கறவைகள் பின்சென்று’’ என்கிறபடியே பசுக்கள்தான் ஸர்வஜ்ஞம்என்னும்படி அறிவுகேடரான இடையர் வர்த்திக்கிற இடைச் சேரிக்கும் ஆகிய இவற்றுக்கும், முக்தாபலப்ரஸவோந்முகஶங்கஸமூஹங்களுக்கு வாஸஸ்தாநமான தாம்ரபர்ணி நதிக்கும் ஶுத்ஸ்வபாவமாயிருக்கிற அந்த ஶங்கங்கள்சேருகிற திருச்சங்கணித் துறைக்கும், ‘‘நல்லார் நவில் குருகூர்’’ (திருவிரு. 100) என்கிறபடியே ஸத்துக்களாலே கொண்டாடப்படுமதாய் ‘‘சயப்புகழார் பலர் வாழும் தடங்குருகூர்’’ (திருவா.3-1-11) என்கிறபடியே ஸம்ஸாரத்தை ஜயித்த புகழை உடையராய், வதநுபவம் பண்ணி வாழ்கிற ஜ்ஞாநாதிகர் பலரும் வர்த்திக்கிற திருக்குருகூர்க்கும் உண்டான வைஷம்யம் பேச்சுக்கு அவிஷயமாயிருக்கும். ஆக, க்ருஷ்ணக்ருஷ்ணத்வைபாயநோத்பத்தி என்று தொடங்கி, இவ்வளவாக, அவர்களவதாரத்தோடு இவருடைய அவதாரத்துக்குண்டான ஸாதர்ம்ய வைதர்ம்யங்கள்  சொல்லிற்று. (80)

81. தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள்போலே ப்ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டைநாளில் பிறவி உண்ணாட்டுத்தேசிறே. .

இனிமேல், இப்படி ஆழ்வார் தாழ்ந்த வர்ணத்திலே அவதரித்தாரேயாகிலும், மிகவும் தேஜஸ்ஸு உண்டாமென்கிறார். எங்ஙனே என்னில், ஸர்வேஶ்வரன் லோகஸம்ரக்ஷணார்த்தமாக அவதரித்தவிடத்தில் பரத்வஶங்கையும் அஸஹ்யமாம் படி தாழ்ந்தவதரிக்க, தேஜஸ்ஸு அதிஶயித்திருக்குமாப்போலே பாவதத்வ ரஹிதமான உத்க்ருஷ்டஜந்மமும் அவத்யம் என்றிருக்கிறவர்களுக்கு ஜந்மாதிகளால் வருகிற அஹங்காரமின்றிக்கே கைங்கர்யமே நிரூபகமான குலங்களில் ஜந்மம் நித்யவிபூதியிலும் தேஜஸ்கரம் என்கிறார் (தேவத்வம் என்று தொடங்கி).

(தேவத்வமும் நிந்தையானவனுக்கு) ராவணவதாநந்தரம் ப்ரஹ்மாதிகள் ‘‘வாந் நாராயேணா தே:’’ (ரா.யு.120-13) என்றவதுதிருவுள்ளத்துக்கு அஸஹ்யமாய், ‘‘ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் ஶரதாத்மஜம்’’ (ரா.யு.120-11) என்றும், கோவர்த்தநோத்தரணாநந்தரம் அந்த அதிமாநுஷசேஷ்டிதங்கண்டு ஆஶ்சர்யப்பட்ட இடையர் ‘‘பாலத்வஞ்சாதிவீர்யஞ்ச ஜந்ம சாஸ்மாஸ்வஶோபநம் | தேவோ வா தாநவோ வா த்வம் யக்ஷோ ந்தர்வ ஏவ வா’’ (வி.பு.5-13-7) என்று ஶங்கிக்க, ‘‘க்ஷணம் பூத்வா த்வஸௌ தூஷ்ணீம் கிஞ்சித்ப்ரணயரோஷவாந்’’ என்று அது அஸஹ்யமாய், ‘‘நாஹம் தேவோ ந்தர்வோ யக்ஷோ தாநவ: | அஹம் வோ பாந்தவோ ஜாத: நைதச்சிந்த்யமதோந்யதா’’ (வி. பு.5-13-12) என்று இப்படி பரத்வஶங்கையும், அஸஹ்யமாம்படி ஶீலாதிகனாயிருக்கிறவனுக்கு.

(ஒளிவரும் ஜநிகள்போலே) ‘‘ ஶரேயாந் வதி ஜாயமாந:’’ என்றும், ‘‘பல பிறப்பாய் ஒளிவருமுழுநலம்’’ (திருவா.1-3-2) என்றும் சொல்லுகிறபடியே ஆநந்தாதி கல்யாணகுணங்கள் ஒளிபெற்றுவரும் அவதாரங்கள்போலே. (ப்ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்கு) ‘‘இதராவஸதேஷு மா ஸ்ம பூதபி மே ஜந்ம சதுர்முகாத்மநா’’ (ஸ்தோ. .55) என்கிறபடியே அபாவதக்ருஹங்களில் ப்ரஹ்மாவாய்ப் பிறக்கையும் அவத்யமாம்படி வத்தாஸ்யமே ரஸித்த ஜ்ஞாநாதிகர்க்கு.

(பண்டைநாளில் பிறவி) ‘‘பண்டைநாள்’’ (திருவா.9-2-1) என்கிற பாட்டின்படியே லக்ஷ்மீதத்வல்லபருடைய கடாக்ஷமடியாகக் கைங்கர்யமே நிரூபகமாக உடைத்தாய், தாஸ்யவிரோதிஜந்மாதிகளால் வரும் அஹங்காரரஹிதமான குலங்களில் ஜந்மமும். (உண்ணாட்டுத்தேசிறே) புறநாடான லீலாவிபூதிபோலன்றிக்கே வதாநுகூல்யைகபோராலே நெருங்கி வானுக்கு போவிபூதியாகையாலே அந்தரங்கமாய் இருக்கிற பரமபதத்தில் தேஜஸ்ஸன்றோ என்கிறார். (81)

82. ஜநகஶரதவஸுதேவ குலங்களுக்கு மூத்த பெண்ணும், நடுவில் பிள்ளையும், கடைக்குட்டியும் போலே இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அஞ்சிறையுமறுத்தார்.

இப்படிப்பட்ட இவருடைய அவதாரம் ஜநககுலஸுந்தரியான நாச்சிமார் முதலானாருடைய அவதாரம்போலே ஸர்வோபகாரகம் என்கிறார் (ஜநகேத்யாதி). ஜநககுலத்துக்கு மூத்தபெண்ணான நாச்சியார் திருவவதரித்து. ‘‘ஸீதா ர்த்தாரமாஸாத் ராமம் ஶரதாத்மஜம் | ஜநகாநாம் குலே கீர்த்திம் ஆஹரிஷ்யதி மே ஸுதா’’ (ரா. பா.67-21) என்று தான் பிறந்து ஜநககுலத்துக்குக் கீர்த்தியை உண்டாக்கினாப் போலவும்,

ஶரதகுலத்துக்கு நடுவில் பிள்ளையான ஸ்ரீபரதாழ்வான் பிறந்து ‘‘விலலாப ஸபாமத்யே ஜகர்ஹே புரோஹிதம் | ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய ர்மம் வக்துமிஹார்ஹஸி’’ (ரா. . 82 – 10) என்றும், ‘‘ஜடிலம் சீரவஸநம் ப்ராஞ்ஜலிம் பதிதம் புவி’’ (ரா. . 102 – 1) என்றும், ‘‘குடிக்கிடந்தாக்கம் செய்து’’ (திருவா.9-2-2) என்றும்

சொல்லுகிறபடியே மூத்தாரிருக்க இளையார் முடிசூடக்கடவதன்று என்கிற குலமர்யாதையை நடத்தினவளவன்றிக்கே, ஜ்யேஷ்டரான பெருமாளுடைய விஶ்லேஷத்தில் ஜடை புனைந்து, வல்கலை சாத்தி, கண்ணநீராலுண்டான சேற்றிலே தரைக்கிடை கிடந்து அக்குலத்துக்கு முன்பில்லாத ஏற்றங்களை உண்டாக்கினாப் போலேயும்,

வஸுதேவகுலத்துக்கு ‘‘மக்களறுவரைக் கல்லிடை மோத இழந்தவள்தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய்’’ (பெரியா. தி.5-3-1) என்று சொல்லுகிறபடியே கடைக்குட்டியான க்ருஷ்ணன் பிறந்து ‘‘தந்தைகாலில் பெருவிலங்கு தாளவிழ’’ (திருமொழி.7-5-1) என்கிறபடியே தங்களாலே விடுவித்துக் கொள்ள வொண்ணாத மாதாபிதாக்களுடைய கட்டை அறுத்தாப்போலேயும்,

இவரும் திருவவதரித்து ‘‘மலிபுகழ்வண்குருகூர்’’ (திருவா.4-2-11) என்றும், ‘‘ஏற்கும் பெரும்புகழ் வண்குருகூர்’’ (திருவா.3-9-11) என்றும் சொல்லுகிறபடியே தாம் திருவவதரித்து அந்நகரிக்குக் கீர்த்தியை உண்டாக்கி, ‘‘குடிக்கிடந்தாக்கம் செய்து’’ (திருவா.9-2-2) என்கிறபடியே அங்குள்ளார்க்கு ஜ்ஞாநவர்த்தகரானமாத்ரமேயன்றியிலே ப்ரேமவர்த்தகராயும், ‘‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’’ (திருவா.1-3-11) என்கிறபடியே தம்முடைய ப்ரபந்தாப்யாஸமுகத்தாலே ஸம்ஸாரிகளுடைய அறவைச்சிறையையுமறுத்தார். (82)

83. ஆதித்யராமதிவாகரஅச்யுதபாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி, விகஸியாத போதில் கமலமலர்ந்தது வகுளபூஷண பாஸ்கரோதயத்திலே.

அவ்வளவேயன்றிக்கே அஜ்ஞாநாந்தகாரநிரஸநாதிகளாலே ஆதித்யராம க்ருஷ்ணர்களில் வ்யாவ்ருத்தர் என்கிறார் (ஆதித்யேத்யாதி). பாஹ்யமான அந்தகாரத்தைப் போக்கிக் கொண்டு உதிக்கிற ஆதித்யனுக்குப் போகாத உள்ளிருளான அஜ்ஞாநாந்த காரமும்,

‘‘தமோ பாஹ்யம் விநஶ்யேத்து பாவகாதித்யஸந்நிதௌ | பாஹ்யா ப்யந்தரஞ்சைவ விஷ்ணுபக்தார்க்கஸந்நிதௌ’’ என்கிறபடியே நீங்கி, ‘‘ஶரஜாலாம் ஶுமாந் ஶூர: கபே ராமதிவாகர: | ஶத்ருரக்ஷோமயம் தோயம் உபஶோஷம் நயிஷ்யதி’ (ரா.ஸு.37-16) என்று ஶரஜாலங்களாகிற கிரணங்களை உடையனாய்க்கொண்டு ஶத்ருராக்ஷஸராகிற ஸமுத்ரத்தை வற்றப்பண்ணுகிற ராமதிவாகரர்க்கு வற்றாத ஸம்ஸாரஸமுத்ரம் ‘‘பிறவி என்னும் கடலும் வற்றி’’ (பெரியா.தி.5-4-2) என்கிறபடியே வற்றி,

        ‘‘ததோகில ஜகத்பத்மபோதாயாச்யுதபாநுநா | தேவகீபூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா’ (வி.பு.5-3-2) என்று ஜகத்பத்மம் விகஸிதமாம்படி தேவகியாகிற பூர்வ ஸந்த்யையிலே ஆவிர்பூதனான அச்யுதபாநுவான க்ருஷ்ணனுக்கு விகஸியாத ‘‘போதில்கமல வன்னெஞ்சம்’’(பெரியா.தி.5-2-8) என்கிற ஹ்ருத்பத்மம் விகஸிதமாயிற்று,  

‘‘யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் நாராயேணா வஸதி யத்ர ஸஶங்கசக்ர: | யந்மண்டலம் ஶ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுலபூஷணபாஸ்கராய’’ (பரா. .) என்றும் திருவாய்மொழி ஆயிரமாகிற கிரணங்களை உடையராய், மஹிஷீபூஷணாயுதவிஶிஷ்டனான நாராயணனை கண்கள் சிவந்திற்படியே உள்ளே உடையராய், வேதவித்துக்களான ஸர்வஶிஷ்டர்களும் ப்ரணாமம் பண்ணும்படியான வைபவத்தை உடையராய், வகுலபூஷணரான ஆழ்வாராகிற பாஸ்கரோதயத்திலே என்கிறார். கீழ்ச்சொன்ன ஆதித்யதிவாகரபாநுஶப்ம் போலன்றிக்கே இவர்பக்கலிலே பாஸ்கரஶப் ப்ரயோகம் பண்ணுகையாலே ‘‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் (திருவா.6-7-2) என்கிறபடியே தம்மோடு ஸம்பந்தமுடையாரெல்லார்க்கும் தம்மோடொத்த ப்ரபாவத்தை உண்டாக்குமவர் என்னுமிடமும் தோற்றுகிறது. (83)

84. வம்ஶபூமிகளை உத்ரிக்கக் கீழ்க்குலம் புக்க வராஹகோபாலரைப் போலே இவரும் நிமக்நரை உயர்த்தத்தாழ இழிந்தார்.

இப்படி மஹாப்ரபாவத்தை உடையரான இவர் அத்ரைவர்ணிகத்திலே தாழ இழிவானென் என்னில், க்ஷத்ரியரில் வைத்துக்கொண்டு ஹீநமான யதுகுலத்தை உத்ரிக்கைக்காக ‘‘அங்கோராய்க்குலம் புக்கு’’ (திருவா.6-4-5) என்றும், ‘‘அயம் கத்யதே ப்ராஜ்ஞை: புராணார்த்தவிஶாரதை₃: | கோபாலோ யாதவம் வம்ஶம் மக்நமப்யுத்ரிஷ்யதி’’ (வி.பு 5-20-49)  என்றும் சொல்லுகிறபடியே அறிவுகேடர்க்கு எல்லையான இடையரோடு ஸஜாதீயனாய்க்கொண்டு கோபாலனானாப்போலவும், ப்ரளயார்ணவ மக்னையான ஸ்ரீபூமிப்பிராட்டியை எடுக்கைக்காக ‘‘உத்த்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஶதபாஹுநா’’ (தை..) என்றும், ‘‘நமஸ்தஸ்மை வராஹாய லீலயோத்ரதே மஹீம் | குரமத்யகதோ யஸ்ய மேரு: கணகணாயதே’’ (வராஹ பு.) என்கிறபடியே வராஹஸஜாதீயனாய்க்கொண்டு ‘‘கேழலாய்க் கீழ்ப்புக்கு’’(திருவா.2-8-7) என்கிற படியே பாதாளத்திலே தாழ இழிந்த வராஹரூபியைப்போலவும், ஸம்ஸாரார்ணவ மக்நரான ஸகலஜந்துக்களையும் அதில்நின்றும் எடுக்கைக்காக அத்ரைவர்ண்யத்திலே தாழ இழிந்தார் என்கிறார். அல்லது த்ரைவர்ண்யத்திலே நின்று ப்ரபந்தீகரித்தாராகில் வேதமும் ததுபப்ரும்ஹணங்களும்போலே அதிக்ருதாதிகாரமாமிறே.

ஆக, வீட்டின்பமென்று தொடங்கி, இவ்வளவும் வர மந்தமதிகளுடைய ஶங்காநிராகரணார்த்தமாகப்ரமாணப்ரமேயங்களினுடைய சரமாவதியான அர்ச்சாவதாரத்தி னுடையவும் திருவாய்மொழியினுடையவும் த்ரவ்யபாஷாநிரூபணத்தோடொக்கும் ஆழ்வாருடைய உத்பத்திநிரூபணமும்என்று இவருடைய உத்பத்திநிரூபணத்தால் வரும் ப்ரத்யவாயத்தையும், வ்யாஸாதிகளைப்பற்ற இவருடைய அவதாரவைலக்ஷண்யத்தையும், அவதாரம் பரார்த்தம் என்னுமிடத்தையும், இப்படி மஹாப்ரபாவரான இவர் தாழ அவதரிக்கைக்கு ஹேதுவையும் அருளிச்செய்தார். (84)

85. ம்லேச்சனும் க்தனானால்  சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குலதைவத்தோடொக்கப் பூஜைகொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனாம் என்கிற திருமுகப் படியும், விஶ்வாமித்ரவிஷ்ணுசித்த-துளஸீ ப்ருத்யரோடே உள்கலந்து தொழு குலமானவன் நிலையார் பாடலாலே ப்ராஹ்மணவேள்விக்குறை முடித்தமையும், கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய்த் தம்பிக்கு முன்பிறந்து வேலும் வில்லுங் கொண்டு பின்பிறந்தாரைச்சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத்பாவம் சொல்லும்படி ஏககுலமானமையும், தூது மொழிந்து நடந்துவந்தவர்களுடைய ஸம்யக் ஸகுண ஸஹபோஜநமும், ஒருபிறவியிலே இருபிறவியானாரிருவர்க்கு தர்மஸூநு ஸ்வாமிகள் அக்ரபூஜைகொடுத்தமையும், ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஶமாகச் செய்த புத்ரக்ருத்யமும், புஷ்பத்யாகபோகமண்டபங்களில் பணிப்பூவும் ஆலவட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் மஹாமுனியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாகாநுயாகோத்தர வீதிகளில் காயாந்நஸ்தல ஶுத்திபண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது.

இனிமேல் ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக ஸாமாந்யேந பாவதவைபவத்தைப் பல உதாஹரணங்களாலும் அருளிச்செய்கிறார். அதில், அவர்கள் ஜந்மவ்ருத்தஜ்ஞாநங்களால் குறைய நின்றார்களேயாகிலும் வத் க்தரானார்களாகில் அவர்கள் ஸர்வோத்க்ருஷ்டரென்றும், அவர்கள் உத்க்ருஷ்ட ஜந்மாக்களாலே அநுவர்த்தநீயரென்றும், அவர்களுடைய ஸம்பந்தமே உத்தாரகம் என்றும், அவர்கள் விஷயத்தில் வானுடையவும், வதீயருடையவும் ஆதர ப்ரகாரத்தையும், அநுவர்த்தநீயரான ப்ரகாரத்தையும், அவர்களுடைய ஸ்பர்ஶாதிகளே பாவநம் என்னுமிடத்தையும், ப்ரமேயபூதனுடையவும், ப்ரமாதாக்களினுடையவும், உக்த்யநுஷ்டாநங்களாலே வெளியிடுகிறார்.

(ம்லேச்சனும் க்தனானால்) ‘‘மத்க்தஜநவாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநு மோதநம் | ஸ்வயமப்யர்ச்சநஞ்சைவ மதர்த்தே ம்பவர்ஜநம் | மத்கதாஶ்ரவணே ப்ரீதி: ஸ்வரநேத்ராங்கவிக்ரியா | மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி | க்திரஷ்டவிதாஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே’’ (வச்சாஸ்த்ரே) என்று பாவதவிஷயத்தில் வாத்ஸல்யம் முதலான அஷ்டவிதையான க்தி ம்லேச்சன் பக்கலிலே உண்டாயிற்றாகிலும். (சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்துக் குலதைவத்தோடொக்கப் பூஜைகொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனாமென்கிற திரு முகப்படியும்) ‘‘ விப்ரேந்த்ரோ முநிஶ்ஸ்ரீமாந் யதிஸ்ஸ பண்டி: |  தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் பூஜ்யோ யதா ஹ்யஹம் | தத்பாதாம்ப்வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம் | ததுக்தி மாத்ரம் மந்த்ராக்ர்யம் தத்ஸ்ப்ருஷ்டம் அகிலம் ஶுசி’’ (வச் சாஸ்த்ரே) என்று – ‘அவர்கள் ஜந்ம வ்ருத்தஜ்ஞாநங்களால் உத்க்ருஷ்டர். அவர்கள் உத்க்ருஷ்டஜந்மாக்களாலே அநுவர்த்தநீயர். அவர்கள் வித்யோபஜீவநத்துக்கு விஷயபூதர். அவர்கள் என்னைப்போலேயாகிலும் பூஜ்யர். அவர்கள் தீர்த்த ப்ரஸாதாதிகள் பரமபாவநம்என்கிற திருமுகமான வதுக்தியும், ‘‘பழுதிலா ஒழுகலாற்று’’ (திருமாலை 42) இத்யாதியான திருமுகப்படியும்.

(விஶ்வாமித்ரவிஷ்ணுசித்ததுளஸீ ப்ருத்யரோடே உள்கலந்து) ‘‘கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே | உத்திஷ்ட நரஶார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்’’ (ரா.பா.23-2) என்று பெரியபெருமாளைத் திருப்பள்ளி உணர்த்தின விஶ்வாமித்ரேனாடும், ‘‘அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத்துயிலெழாயே’’ (பெரியா. தி.2-2-1) என்று க்ருஷ்ணனைத் திருப்பள்ளி உணர்த்தின பெரியாழ்வாரோடும், ‘‘அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே’’ (திருப்பள்ளி.) என்று பெரியபெருமாளைத் திருப்பள்ளி உணர்த்தின துளவத் தொண்டாய ஸ்ரீதொண்டரடிப்பொடி ஆழ்வாரோடும் ஸகோத்ரிகளாய்க் கொண்டு திருப்பள்ளி உணர்த்தி, ‘‘வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணர்க்காளென்று உள்கலந்தாரடியார்’’ (திருவா.3-7-9) என்கிறபடியே வலவருகே ரிக்கப்பட்ட திருவாழியையும், அதுக்குப்பரபாமான நீலமணிபோலே இருக்கிற திருமேனியையுமுடைய ஸர்வஸ்வாமிக்கு அநந்யார்ஹஶேஷபூதரென்று கொண்டு ஶேஷத்வஜ்ஞாநபூர்வகமான வ்ருத்தியிலே அந்வயித்து, ‘‘எம் தொழுகுலம்

தாங்களே’’ (திருவா.3-7-8) என்று ஜ்ஞாதாக்களாலே அநுவர்த்தநீயருமாய், ஶேஷத்வ ஜ்ஞாநாநுகுணமான குலத்திலே பிறந்தவர்.

     (நிலையார் பாடலாலே ப்ராஹ்மணவேள்விக்குறை முடித்தமையும்) சரகவம்ஶத்திலே பிறந்த ஸோமஶர்மாவான ப்ராஹ்மணன் வைதிகமான யாகத்தை உபக்ரமித்து அதில் மந்த்ரக்ரியாத்ரவ்யக்ஷிணாலோபத்தாலே யாகமத்யே ம்ருதனாய் ப்ரஹ்மரக்ஷஸ்த்வத்தை அடைந்துவந்தவன், கைஶிகவ்ருத்தாந்தத்தில் வந்த ஸ்ரீவைஷ்ணவரைக்கண்டு ‘‘த்வம் வை கீதப்ரபாவேந நிஸ்தாரயிதுமர்ஹஸி | ஏவமுக்த்வாத சண்டாளம் ராக்ஷஸஶ்ஶரணம் : | ப்ரஹ்மரக்ஷோவசஶ்ஶ்ருத்வா ஶ்வபாகஸ்ஸம்ஶிதவ்ரத: | பாமித்யேவ தத்வாக்யம் ப்ரஹ்மராக்ஷஸசோதிதம் | யந்மயா பஶ்சிமம் கீதம் ஸ்வரம் கைஶிகமுத்தமம் | லேந தஸ்ய த்ரம் தே மோக்ஷயிஷ்யாமி கில்பிஷாத் | ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராக்ஷஸோ ப்ரஹ்மஸம்ஜ்ஞித: | யஜ்ஞஶாபாத்விநிர்முக்தஸ்ஸோமஶர்மா மஹாயஶா:’’ (கை. பு.) என்று அவன் ஶரணம் புக, (நிலையார் பாடலாலே) கைஶிகம் என்கிற பண்ணில் தாம் பண்ணின கீதப்ரபாவத்தாலே அவனுடைய ப்ரஹ்மரக்ஷஸ்த்வத்தை விடுவித்து உஜ்ஜீவிப்பிக்கையாலே அந்த யாகக்குறையும் தலைக்கட்டினாரானமையும்.

(கீழ்மகன்) ‘‘ஏழை ஏதலன் கீழ்மகன்’’ (திருமொழி 5 – 8 – 1) என்று ஜந்மவ்ருத்தஜ்ஞாநங்களால் குறையநின்ற ஸ்ரீகுஹப்பெருமாள் ‘‘வானோர்தலைமகன்’’ (திருவி. 53) என்கிறபடியே தலைமகனான சக்ரவர்த்தி திருமகேனாடே ‘‘உகந்து தோழன் நீ’’ (திருமொழி 5 – 8 – 1) என்னும்படி ஸமஸகாவாய், (தம்பிக்குமுன்பிறந்து) ‘என்தம்பி உன்தம்பிஎன்கையாலே அவருடைய தம்பியாரான இளைபெருமாளுக்கும் முற்பாடராய், (வேலும் வில்லுங்கொண்டு பின்பிறந்தாரைச்சோதித்து) இளையபெருமாள் பெருமாள் பக்கல் ஸௌகுமார்யாநுஸந்தாநத்தாலுண்டான பரிவாலே அநிமிஷ த்ருஷ்டியாய்க் கொண்டு இவரையும் அதிஶங்கைபண்ணி ஸாயுதராய்க்கொண்டு நோக்கும்படி பெருமாள்பக்கல் பரிவையுடையராய்.

       (தமையனுக்கு இளையோன் ஸத்₃பா₄வம் சொல்லும்படி ஏககுலமானமையும்) ‘‘ஆசசக்ஷேத₂ ஸத்₃பா₄வம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந ப₄ரதாயாப்ரமேயாய கு₃ஹோ க₃ஹநகோ₃சர:’’ (ரா.ஆ.86-1) என்று அளவிறந்த வைப₄வத்தை உடையராயிருக்கிற ஸ்ரீபரதாழ்வானுக்கு இளையபெருமாள் கைங்கர்யஸ்ரீயாலே உளராயிருக்கிறபடியை இவர் உபதேஶிக்கும்படி இக்ஷ்வாகு வம்ஶ்யரோடு ஏக குலமானமையும்.

       (தூதுமொழிந்து) ‘‘முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து’’ (திருமொழி.2-2-3) என்று பிராட்டிபக்கல் திருவடியோடே தூ₃து வாக்யத்தை அருளிச் செய்துவிட்டபெருமாள் ‘‘ஶப₃ர்யா பூஜிதஸ்ஸம்யக்₃ராமோ த₃ஶரதா₂த்மஜ:’’ (ரா.பா₃.1-58) என்று ஶபரிகையாலே ஸம்யக்காக பூஜிதரானபின்பு அழகுநிலைபெற்றபடியையும், (நடந்து) ‘‘குடைமன்னரிடை நடந்த தூதா’’ (திருமொழி 6-2-9) என்று பாண்டவதூதனான க்ருஷ்ணனுடைய ‘‘பு₄க்தவத்ஸு த்₃விஜாக்₃ர்யேஷு நிஷண்ண: பரமாஸநே | விது₃ராந்நாநி பு₃பு₄ஜே ஶுசீநி கு₃ணவந்தி ச’’ (பா₄ர. உத்₃.) என்று பாவநத்வபோ₄க்₃யத்வங்களை உடைத்தாயிருக்கிற விது₃ராந்நபோ₄ஜநத்தையும், (வந்த) ‘‘தூது வந்த குரங்கு’’ (திருமொழி.10-2-6) என்கிறபடியே ‘‘த்₃ருஷ்டா ஸீதா’’ (ரா.பா.1-78) என்ற திருவடியோடே ‘‘உபகாராய ஸுக்₃ரீவோ ராஜ்யகாங்க்ஷீ விபீ₄ஷண நிஷ்காரணாய ஹநுமாந் தத்துல்யம் ஸஹபோ₄ஜநம்’’ (பாத்₃மோத்தரே) என்றும், ‘‘உடனே உண்பன் நானென்ற ஒண்பொருள்’’ (திருமொழி 5 – 8 – 2) என்கிறபடியே பெருமாள் ஸஹபோ₄ஜநம் பண்ணினபடியும்.

(ஒருபிறவியிலே இருபிறவியானார் இருவர்க்கு) யதுகுலத்திலே பிறந்து கோபகுலத்திலே வளர்ந்த கண்ணனுக்கும், ருஷி கர்ப்பமாய்க் கொண்டு வந்த இடத்திலே வளர்ந்த திருமழிசைப்பிரானுக்கும், (ர்மஸுநுஸ்வாமிகள் அக்ரபூஜை கொடுத்தமையும்) ர்மபுத்ரரும், பெரும்புலியூர் அடிகளும் தங்கள் யாகங்களிலே அக்ரபூஜை கொடுத்தமையும்.

(ஐவரில் இத்யாதி) ஐவரில் முற்பட்ட ர்மபுத்ரர் ஸ்ரீவிதுரர்க்கு ஞானத்தின் மேம்பாட்டினையும் அஶரீரி வாக்யத்தையம் கொண்டு ஸந்தேஹியாமல் புத்ரன் செய்ய வேண்டிய இறுதிக்கடனைப் பண்ணினமையும், நால்வரில் முற்பட்ட சக்ரவர்த்தி திருமகன் ஸஹஜரான இளைய பெருமாளோடேகூட  ‘‘அப்போது அந்த சோகத்தாலேயே ஜடாயு என்கிற கழுகை தகனம் செய்து’’   (ரா.பா.1-54) என்கிறபடியே பெரிய உடையார்க்குப் புத்ரன் செய்வதை  அநுட்டித்தபடியும், மூவரில் முற்பட்ட பெரியநம்பி மாறனேரிநம்பிக்குப் புரோடாஶமாகப் புத்ரக்ருத்யம் அநுட்டித்தபடியும்.  (புஷ்பத்யாகே த்யாதி₃) ‘‘சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து’’ (திருவா.3-3-2) என்கிறபடியே புஷ்ப மண்டபமான திருமலையிலே பணிப்பூவும் கையுமாய்த் திருவுள்ளமறியப் பறிமாறுகையாலே திருவேங்கடமுடையானுக்கு அந்தரங்கரான குறும்பறுத்த நம்பியை ‘‘துளங்குநீண்முடி அரசர்தம் குரிசில் தொண்டை மன்னவன்’’ (திருமொழி.5-8-9) என்கிற திருவபிஷேகம் செய்யப்பட்ட அரசனின் புத்ரரான தொண்டைமான் சக்ரவர்த்தி பின்பற்றிய முறையும், ‘‘வேகவதியின் வடகரையில் புண்யகோடி விமானத்தில் விஷ்ணுவானவர் எல்லா உயிர்களுக்கும் வரம் கொடுக்கும் பெருமானாய் இன்றும் எல்லாராலும் காணப்படுகிறார்’’ (ஹஸ்திகிரி மாஹா.) என்கிறபடியே  த்யாகமண்டபமான பெருமாள்கோயிலிலே திருவாலவட்டமும் கையுமாய்ப் பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற திருக்கச்சி நம்பியை வைதிகோத்தமரான உடையவர் பின்பற்றிய முறையும்,  ‘‘தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்’’ (பெருமா.தி.1-1) என்கிறபடியே போமண்டபமான கோயிலில் வீணையும் கையுமாய்ப் பெரிய பெருமாளுக்கு அந்தரங்கரான திருப்பாணாழ்வாரை லோகஸாரங்க மஹாமுனிகள் அநுவர்த்தித்த க்ரமமும்,

(யாகா₃நுயாகே₃த்யாதி₃) யாக₃மென்று – திருவாராத₄நமாய், அதுக்குப் பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்பர்ஶத்தாலே காயஶுத்₃தி₄ பண்ணின உடையவருடையவும், அநுயாக₃ம் என்று – ப₄க₃வத்ஸமாராத₄நாநந்தரம் பண்ணப்படுகிற ப்ரஸாத₃ஸ்வீகாரம். அதுக்குப் பிள்ளை ஏறுதிருவுடையார் தாஸருடைய கரஸ்பர்ஶத்தாலே அந்நஶுத்₃தி₄ பண்ணின நம்பிள்ளையுடையவும், உத்தரவீதி குடிபுகுருகைக்கு ‘‘ஆலோக்ய ராஜநக₃ரீ- மதி₄ராஜஸூநுராஜாநமேவ பிதரம் பரிசிந்த்ய பூ₄ப ஸுக்₃ரீவமாருதிவிபீ₄ஷண- புண்யபாத₃ ஸஞ்சாரபூதப₄வநம் ப்ரவிவேஶ ராம:’’ என்று பெருமாள் ஸ்த₂லஶுத்₃தி₄ பண்ணினாப்போலே, உத்தரவீதி குடிபுகுருகிற காலத்திலே பிள்ளை வானமாமலை தாஸருடைய ஸஞ்சாரத்தாலே ஸ்த₂லஶுத்₃தி₄பண்ணின நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டருடையவும் அநுஷ்டா₂நப்ரகாரங்களையும் அறிவார்க்கிறே ஜந்மத்தினுடைய உத்க்ருஷ்டாபக்ருஷ்டத்வம் தெரிவது.

ஆக, கீழ் ஜந்மவ்ருத்தஜ்ஞாநங்களால் குறையநின்றார்களேயாகிலும் வதீயரானார்களாகில் அவர்கள் ஸர்வோத்க்ருஷ்டராய்க்கொண்டு உபாதேயர் என்னுமிடத்தைச் சொல்லிற்று. (85)

86. அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரமவித்யாவ்ருத்தங்களை கர்தப ஜந்மம், ஶ்வபசாதமம், ஶில்பநைபுணம், பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழிப்பர்கள்.

இனிமேல் வஜ்ஜ்ஞாநமின்றியிலே இருக்கிற அஜ்ஞர் ப்ரமிக்கிற கேவல வர்ணாதிகள் வ்யர்த்தமாகையாலே த்யாஜ்யமென்னுமிடத்தை ஸப்ரமாணமாக அருளிச் செய்கிறார் (அஜ்ஞர் ப்ரமிக்கிற என்று தொடங்கி). அஜ்ஞர்வச் சேஷத்வஜ்ஞாநமில்லாதவர்கள், உத்தம வர்ணமென்றும், உத்தமாஶ்ரமமென்றும், ஸத்வித்யை என்றும், ஸத்வ்ருத்தமென்றும் கேவலம் உத்க்ருஷ்டமாக ப்ரமிக்கிற இவற்றை.

(ர்த்தஜந்மமித்யாதி) ‘‘சதுர்வேதரோ விப்ரோ வாஸுதேவம் விந்ததி | வேதபாரபராக்ராந்தஸ்ஸ வை ப்ராஹ்மணகர்த்த:’’ என்கிறபடியே ஸகலவேதத்தையும் அதிகரித்துவைத்து ‘‘வேதைஶ்ச ஸர்வைரஹமேவ வேத்:’’ (கீதை.15-15) என்கிறபடியே ஸகலவேதப்ரதிபாத்யன் ஸர்வேஶ்வரன் என்றறியாதவர் குங்குமம் சுமந்த கழுதையோபாதி என்றும், ‘‘விஷ்ணுபக்திவிஹீநஶ்சேத்யதிஶ்ச ஶ்வபசாத:’’ என்று யதியேயாகிலும் வத்க்தி இன்றிக்கே இருக்குமாகில் அவன் ஶ்வபாகனிற்காட்டில் தண்ணியனென்றும், ‘‘தத்கர்ம யந்ந ந்தா ஸா வித்யா யா விமுக்தயே | ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா ஶில்பநைபுணம்’’ (வி.பு.1-19) என்று மோக்ஷார்த்தமான ஜ்ஞாநமே ஜ்ஞாநம்; அல்லாத ஜ்ஞாநம் செருப்புக்குத்தக் கற்றவோபாதி என்றும்,  ‘‘ஆம்நாயாப்யஸநாந்யரண்யருதிதம் வேதவ்ரதாந்யந்வஹம் மேதஶ்சே லாநி  பூர்த்தவித: ஸர்வே ஹுதம் ஸ்மநி | தீர்த்தாநாமவகாஹநாநி   ஜஸ்நாநம் விநா யத்பதத்வந்த்வாம்போருஹஸம்ஸ்ம்ருதீர்விஜயதே தேவஸ்ஸ நாராயண:’’ (முகு.மாலை-25) என்றும் பகவஜ்ஜ்ஞாநமில்லாதவர்களுடைய கர்மாதிகள் எல்லாம் பஸ்மாஹுதிபோலே நிஷ்ப்ரயோஜநமென்றும்,

‘‘தே ஶவா: புருஷா லோகே யேஷாம் ஹ்ருதி₃ ந கேஶவ கேஶவார்ப்பித ஸர்வாங்கா₃: ந ஶவா ந புநர்ப₄வா:’’, ‘‘யஸ்யாகி₂லாமீவஹபி₄ஸ் ஸுமங்க₃லைர்வாசோ விமிஶ்ரா கு₃ணகர்மஜந்மபி₄ ப்ராணந்தி ஶும்ப₄ந்தி புநந்தி வை ஜக₃த்யாஸ்தத்₃வியுக்தாஶ்- ஶவஶோப₄நா மதா:’’ என்று ப₄க₃வஜ்ஜ்ஞானம் இல்லாதவர்கள் ஜீவந்ம்ருதராகையாலே அவர்கள் ஶவப்ராயர் என்றும், ‘‘ப்ராது₃ர்பா₄வைஸ்ஸுரநரஸமோதே₃வதே₃வஸ்ததீ₃யா ஜாத்யா வ்ருத்தைரபி ச கு₃ணதஸ்தாத்₃ருஶோ நாத்ர க₃ர்ஹா | கிந்து ஸ்ரீமத்₃பு₄வநப₄வந- த்ராணதோந்யேஷு வித்₃யாவ்ருத்தப்ராயோ ப₄வதி வித₄வாகல்பகல்ப: ப்ரகர்ஷ:’’ என்று ப₄க₃வஜ் ஜ்ஞாநமில்லாதவர்களுடைய வித்₃யாதி₃கள் ப₄க₃வத்ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநமென்கிற ஸௌமங்கல்யமில்லாமையாலே வித₄வாலங்காரமென்று இந்த ஜந்மாதி₃களை ப்ரமாணிகரான ஜ்ஞாதாக்கள் அநாத₃ரிப்பர்களென்கிறார். ப₄க₃வஜ் ஜ்ஞாநமில்லாத ஜந்மாதி₃கள் த்யாஜ்யமென்னுமிடம் சொல்லிற்று. (86)

முதல் ப்ரகரணம் முற்றிற்று

அழகியமணவாளப்பெருமாள்நாயனார் திருவடிகளே ஶரணம்

திருநாராயணபுரத்தாய் திருவடிகளே ஶரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.