Thiruvoymozhi 1-2
திருவாய்மொழி முதல் பத்து இரண்டாம் திருவாய்மொழி வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் * வீடு உடையானிடை வீடு இசைமினே. 1.2.1 மின்னின் நிலையில * மன்னுயிராக்கைகள் * என்னுமிடத்து * இறை உன்னுமின் நீரே. 1.2.2 நீர் நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து * இறை சேர்மின் * உயிர்க்கு, அதன் நேர் நிறையில்லே. 1.2.3 இல்லதும் உள்ளதும் * அல்லது அவனுரு * எல்லையில் […]
Thiruvoymozhi 1-1
திருவாய்மொழி ஸ்ரீ: நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி தனியன்கள் (நாதமுனிகள் அருளிச்செய்தது) பக்தாம்ருதம் விஶ்வஜநாநுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீஶடகோபவாங்மயம் ஸஹஸ்ரஶாகோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிடவேதஸாகரம் (ஈஶ்வரமுனிகள் அருளிச்செய்தது) திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும்* மருவினியவண்பொருநலென்றும்* – அருமறைகள் அந்தாதிசெய்தானடியிணையே எப்பொழுதும்* சிந்தியாய்!நெஞ்சே! தெளிந்து, (சொட்டைநம்பிகள் அருளிச்செய்தது) மனத்தாலும்வாயாலும் வண்குருகூர்பேணும்* இனத்தாரையல்லாதிறைஞ்சேன்* – தனத்தாலும் ஏதுங்குறைவிலேன் எந்தைசடகோபன் பாதங்கள்யாமுடைய பற்று. (அனந்தாழ்வான் அருளிச்செய்தது) ஏய்ந்தபெருங்கீர்த்திஇராமாநுசமுனிதன் வாய்ந்தமலர்ப்பாதம்வணங்குகின்றேன் * – ஆய்ந்தபெருஞ் சீரார்சடகோபன்செந்தமிழ்வேதம்தரிக்கும்* பேராதவுள்ளம்பெற. (பட்டர் அருளிச்செய்தது) வான்திகழும்சோலைதிளரங்கர் வண்புகழ்மேல்* ஆன்றதமிழ்மறைகளாயிரமும்* – ஈன்ற முதல்தாய்சடகோபன்* […]
वाळित्तिरुनामङ्गळ्
वाळित्तिरुनामङ्गळ् १. तिरुवाडिप्पूरत्तिल् शेकत्तुदित्ताळ् वाळिये तिरुप्पावैमुप्पदुं शेप्पिनाळ् वाळिये पेरियाळ्वार् पेत्तेडुत्त पेण्पिळ्ळै वाळिये पेरुम्बूदूर् मामुनिक्कुप्पिन्नानाळ् वाळिये ओरुनूत्रु नार्पत्तु मून्रुरैत्ताळ् वाळिये उयररङ्गर्के कण्णि उकन्दळित्ताळ् वाळिये मरुवारुम् तिरुमल्लिवळनाडि(तिरुवल्लिवळनाडु पाठं) वाळिये वण्पुदुवै नहर्कोदै मलर्प्पदङ्गळ् वाळिये २. तिरुक्कुरुहैप्पेरुमाळ् तन् तिरुत्ताळ्हळ् वाळिये तिरुवान तिरुमुकत्तुच्चेव्वियेन्रुं वाळिये इरुक्कमोळियेन्नेञ्जिल् तेक्किनान् वाळिये एन्दै यतिराशर्किरैवनार् वाळिये करुक्कुळियिल् पुकावण्णन् कात्ररुळ्वोन् वाळिये काशिनियिलारियनाय् काट्टिनान् वाळिये वरुत्तमरवन्देन्नै वाळ्वित्तान् […]
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஸ்ரீ : மணவாளமாமுனிகள் அருளிச்செய்த திருவாய்மொழி நூற்றந்தாதி தனியன்கள் அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்* சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான்* நல்ல மணவாள மாமுனிவன் மாறன் மறைக்குத்* தணவா நூற்றந்தாதிதான். .மன்னுபுகழ்சேர் மணவாளமாமுனிவன்* தன்னருளால் உட்பொருள்கள் தம்முடனே சொன்ன* திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை* ஒருவாதருந்து நெஞ்சே! உற்று. ** உயாவே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு* உயர்வேதம் நேர்கொண்டுரைத்து * – மயர்வேதும் வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்* வேராகவே விளையும் வீடு. 1. ** வீடு […]
உபதேசரத்தினமாலை
ஶ்ரீ: மணவாள மாமுனிகள் அருளிச்செய்த உபதேசரத்தினமாலை தனியன் (கோயிற் கந்தாடையண்ணன் அருளிச்செய்தது) முன்னந்திருவாய்மொழிப்பிள்ளைதாமுபதேசித்த* நேர் தன்னின்படியைத் தணவாதசொல் மணவாளமுனி* தன்னன்புடன்செய் உபதேசரத்தினமாலை தன்னை* தன்னெஞ்சுதன்னில் தரிப்பவர்தாள்கள்சரண்நமக்கே. **எந்தைதிருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால் * வந்தஉபதேசமார்க்கத்தைச் – சிந்தைசெய்து* பின்னவரும்கற்க உபதேசமாய்ப்பேசுகின்றேன்* மன்னியசீர் வெண்பாவில் வைத்து. 1 கற்றோர்கள்தாமுகப்பர் கல்விதன்னில்ஆசையுள்ளோர் * பெற்றோமெனஉகந்துபின்புகற்பர்* – மற்றோர்கள்* மாச்சரியத்தால் இகழில் வந்ததென்நெஞ்சே!* இகழ்கை ஆச்சரியமோ தானவர்க்கு. 2 **ஆழ்வார்கள்வாழி அருளிச்செயல்வாழி* தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி* – ஏழ்பாரும் உய்ய அவர்கள்உரைத்தவைகள்தாம் வாழி* செய்யமறைதன்னுடனே […]
Iramanuja Nootrandadi Moolam
திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த ப்ரபந்நகாயத்ரி என்னும் இராமாநுச நூற்றந்தாதி தனியன்கள் (வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை) முன்னைவினை அகல மூங்கிற்குடி அமுதன்* பொன்னங்கழற்கமலப்போதிரண்டும்* – என்னுடைய சென்னிக்கணியாகச்சேர்த்தினேன்* தென்புலத்தார்க்கு என்னுக்கடவுடையேன்யான். நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதின்றிநண்ணினர்பால் * சயந்தருகீர்த்திஇராமானுசமுனிதாளிணைமேல்* உயர்ந்தகுணத்துத்திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால் இயம்பும்கலித்துறைஅந்தாதி ஓதஇசைநெஞ்சமே! இனியென்குறைநமக்கு? எம்பெருமானார் திருநாமத்தால்* முனிதந்தநூற்றெட்டுச் சாவித்திரிஎன்னும்நுண் பொருளை* கனிதந்தசெஞ்சொல்கலித்துறைஅந்தாதிபாடித்தந்தான்* புனிதன்திருவரங்கத்தமுதாகியபுண்ணியனே. சொல்லின்தொகைகொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்* நல்லன்பரேத்தும்உன்நாமமெல்லாம்என்தன்நாவினுள்ளே* அல்லும்பகலம்அமரும்படிநல்கு அறுசமயம் வெல்லும்பரம!* இராமானுச! இது என்விண்ணப்பமே. பூமன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ் மலிந்த பாமன்னு […]
Periya Thirumadal Moolam
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரியதிருமடல் தனியன் (பிள்ளை திருநறையூர்அரையர் அருளிச்செய்தது) பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும்* நல்நுதலீர்! நம்பிநறையூரர்* – மன்னுலகில் என்னிலைமை கண்டும் இரங்காரேயாமாகில்* மன்னுமடலூர்வன்வந்து. மன்னிய பல்பொறி சேர் ஆயிரவாய் வாளரவின் * சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் * மன்னிய நாகத்தணை மேல் ஓர் மாமலை போல் * மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத் * துன்னிய தாரகையின் பேரொளி சேர் ஆகாசம் * என்னும் விதானத்தின் […]
Ciriya Thirumadal Moolam
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்.. தனியன் (பிள்ளைதிருநறையூர் அரையர் அருளிச்செய்தது) முள்ளிச்செழு மலரோதாரான்முளைமதியம் * கொள்ளிக்கென்னுள்ளங்கொதியாமே* – வள்ளல் திருவாளன்சீர்க்கலியன்கார்க்கலியைவெட்டி* மருவாளன்தந்தான்மடல். காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை * சீரார் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேராற்று * பேரார மார்பின் பெரு மாமழைக் கூந்தல் * நீரார வேலி நிலமங்கை யென்னும் * இப் பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே. 1 அம்மூன்றும் ஆராயில் தானே அறம் பொருளின்ப மென்று * ஆரார் இவற்றினிடை யதனை எய்துவார் […]
Thiruvezhukootrirukkai Moolam
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை தனியன் (எம்பெருமானார் அருளிச்செய்தது) வாழிபரகாலன் வாழிகலிகன்றி* வாழிகுறையலூர் வாழ்வேந்தன் * – வாழியரோ மாயோனைவாள்வலியால்மந்திரங்கொள்மங்கையர்கோன்* தூயோன்சுடர்மானவேல். சீரார்திருவெழுகூற்றிருக்கையென்னும்செந்தமிழால்* ஆராவமுதன்குடந்தைப்பிரான்தனடியிணைக்கீழ்* ஏரார்மறைப்பொருள்எல்லாமெடுத்திவ்வுலகுய்யவே* சோராமற்சொன்னஅருண்மாரிபாதம்துணைநமக்கே. ஒருபேருந்தி இருமலர்த் தவிசில் * ஒருமுறை அயனை யீன்றனை –* ஒருமுறை இருசுடர் மீதினில் இயங்கா * மும்மதிள் இலங்கை இருகால் வளைய* ஒருசிலை – யொன்றிய ஈரெயிற்றழல் வாய் வாளியின் அட்டனை * மூவடி நானிலம் வேண்டி * முப்புரி நூலொடு மானுரி யிலங்கு மார்வினின் * […]
Periya Thiruvandadi Moolam
நம்மாழ்வார் அருளிச்செய்த அதர்வணவேதஸாரமான பெரிய திருவந்தாதி தனியன் (எம்பெருமானார் அருளிச்செய்தது) முந்துற்றநெஞ்சே! முயற்றிதரித்துரைத்து வந்தித்து வாயாரவாழ்த்தியே* – சந்த முருகூருஞ்சோலைசூழ் மொய்பூம்பொருநல் குருகூரன்மாறன்பேர் கூறு. முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே !* இயற்றுவாய் எம்மொடு நீ கூடி *- நயப்புடைய நாவீன் தொடைக் கிளவி யுள் பொதிவோம் * நற்பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ். 1 புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் * இகழ்வோம் மதிப்போம் மதியோம் – இகழோம் * மற்று எங்கள்மால் ! […]