Thirukurundandakam Moolam

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

திருக்குறுந்தாண்டகம்

நிதியினைப் பவளத்தூணை நெறிமையால் நினைய வல்லார்

கதியினைக் * கஞ்சன் மாளக் கண்டு முன், அண்டமாளும் *

மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த

விதியினைக் * கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே. 1

காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதிளிலங்கை செற்ற

ஏற்றினை * இமயம் மேய எழில் மணித்திரளை * இன்ப

வாற்றினை அமுதந் தன்னை அவுண னாருயிரை யுண்ட

கூற்றினைக் * குணங் கொண்டு உள்ளம் ! கூறு நீ கூறுமாறே. 2                  திருப்பிரிதி

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து * வானோர்க்

காயிருந்து அமுதம் கொண்ட அப்பனை, எம்பிரானை *

வேயிருஞ் சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற *

மாயிருஞ் சோலை மேய மைந்தனை, வணங்கினேனே. 3      திருமாலிருஞ்சோலை

கேட்க யானுற்றதுண்டு கேழலாய் உலகங் கொண்ட *

பூக்கெழு வண்ணனாரைப் போதரக் கனவில் கண்டு *

வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் *

வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே. 4

இரும்பு அனன்றுண்ட நீர் போல் எம்பெருமானுக்கு * என்தன்

அரும் பெறலன்பு புக்கிட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன் *

வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக் *

கரும்பினின் சாறு போலப் பருகினேற்கு இனியவாறே. 5

மூவரில் முதல்வனாய ஒருவனை உலகம் கொண்ட

கோவினைக் * குடந்தை மேய குருமணித் திரளை * இன்பப்

பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை அமரர் சென்னிப்

பூவினைப் * புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே? 6                 திருக்குடந்தை (கும்பகோணம்)

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற

மெய்ம்மையை * விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய *

செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமை யானைத் *

தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே. 7      திருவரங்கம்,

திருவேங்கடம் திருப்பதி

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசம் ஈன்ற

தேனிடைக் * கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார் *

மானிடப் பிறவி அந்தோ ! மதிக்கிலர் கொள்க * தந்தம்

ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே. 8

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையிலெரி நின்றுண்ணும் *

கொள்ளி மேலெறும்பு போலக் குழையுமால் என்தனுள்ளம் *

தெள்ளியீர் ! தேவர்க்கெல்லாம் தேவராய், உலகம் கொண்ட

ஒள்ளியீர் ! * உம்மை யல்லால் எழுமையும் துணையிலோமே. 9

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீவினையேன் ? *

பத்திமைக் கன்புடையேனாவதே? பணியாய் எந்தாய் ! *

முத்தொளி மரகதமே ! முழங்கொளி முகில் வண்ணா !* என்

அத்த ! நின்னடிமை யல்லால் யாது மொன்றறிகிலேனே. 10

தொண்டெல்லாம் பரவி, நின்னைத் தொழுது அடி பணியுமாறு

கண்டு * தான் கவலை தீர்ப்பான் ஆவதே? பணியாய் எந்தாய் ! *

அண்டமாய் எண்திசைக்கும் ஆதியாய் ! நீதியான *

பண்டமாம் பரமசோதி ! நின்னையே பரவுவேனே. 11

ஆவியை அரங்கமாலை அழுக்குடம் பெச்சில் வாயால் *

தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்

பாவியேன் * பிழைத்தவாறென்று அஞ்சினேற்கு அஞ்சலென்று *

காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோன்றினாரே. 12                            திருவரங்கம்

இரும்பு அனன்றுண்ட நீரும் போதரும் கொள்க * என்தன்

அரும் பிணி பாவமெல்லாம் அகன்றன என்னை விட்டுச் *

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட *

கரும்பினைக் கண்டு கொண்டு என்கண்ணிணை களிக்குமாறே ! 13                           திருவரங்கம்

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி * நாளும்

பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்தொழிந்தேன் *

தூவி சேரன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தையானைப் *

பாவியேன் பாவியாது பாவியே னாயினேனே. 14            திருக்குடந்தை (கும்பகோணம்)

முன் பொலா இராவணன் தன் முதுமதிளிலங்கை வேவித்து*

அன்பினால் அனுமன் வந்து ஆங்கடியிணை பணிய நின்றார்க்கு *

என்பெலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்ச மென்னும்

அன்பினால் * ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே. 15

மாய மான் மாயச் செற்று மருதிற நடந்து வையம்

தாய் * அமா பரவை பொங்கத் தடவரை திரித்து * வானோர்க்கு

ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்களென்னும் *

தூய மாமாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே. 16

பேசினார் பிறவி நீத்தார் பேர் உளான் பெருமை பேசி *

ஏசினார் உய்ந்து போனார் என்பது இவ்வுலகின் வண்ணம் *

பேசினேன் ஏசமாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு *

ஆசையோ பெரிது கொள்க அலை கடல் வண்ணர் பாலே. 17                           திருப்பேர்நகர்

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி*

அளப்பி லைம்புல னடக்கி அன்பு அவர் கண்ணே வைத்துத் *

துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே *

விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையைக் காண்கிற்பாரே. 18

பிண்டியார் மண்டையேந்திப் பிறர் மனை திரிதந்துண்ணும் *

உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் * உலகமேத்தும்

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்று

மண்டினார் * உய்யலல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே? 19        திருவரங்கம்,

திருப்பேர்நகர்,

கண்டியூர்,

திருமெய்யம்,

திருக்கச்சி (அத்திகிரி),

திருக்கடல்மல்லை

வானவர் தங்கள் கோனும் மலர்மிசை யயனும் * நாளும்

தேமலர் தூவியேத்தும் சேவடிச் செங்கண்மாலை *

மானவேல் கலியன் சொன்ன வண்தமிழ் மாலை நாலைந்தும் *

ஊனமதின்றி வல்லார் ஒளி விசும்பாள்வர் தாமே. 20

திருக்குறுந்தாண்டகம் முற்றும்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.