உபதேசரத்தினமாலை

ஶ்ரீ:

மணவாள மாமுனிகள் அருளிச்செய்த

 உபதேசரத்தினமாலை

 தனியன்

 (கோயிற் கந்தாடையண்ணன் அருளிச்செய்தது)

முன்னந்திருவாய்மொழிப்பிள்ளைதாமுபதேசித்த* நேர்

தன்னின்படியைத் தணவாதசொல் மணவாளமுனி*

தன்னன்புடன்செய் உபதேசரத்தினமாலை தன்னை*

தன்னெஞ்சுதன்னில் தரிப்பவர்தாள்கள்சரண்நமக்கே.

**எந்தைதிருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால் *

வந்தஉபதேசமார்க்கத்தைச் – சிந்தைசெய்து*

பின்னவரும்கற்க  உபதேசமாய்ப்பேசுகின்றேன்*

மன்னியசீர் வெண்பாவில் வைத்து.                           1

கற்றோர்கள்தாமுகப்பர்  கல்விதன்னில்ஆசையுள்ளோர் *

பெற்றோமெனஉகந்துபின்புகற்பர்* – மற்றோர்கள்*

மாச்சரியத்தால் இகழில் வந்ததென்நெஞ்சே!* இகழ்கை

ஆச்சரியமோ தானவர்க்கு.                                    2

**ஆழ்வார்கள்வாழி  அருளிச்செயல்வாழி*

தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி* – ஏழ்பாரும்

உய்ய  அவர்கள்உரைத்தவைகள்தாம் வாழி*

செய்யமறைதன்னுடனே சேர்ந்து.                           3

பொய்கையார் பூதத்தார் பேயார் * புகழ்மழிசை

ஐயன்அருள்மாறன் சேரலர்கோன்* – துய்யபட்ட

நாதன்அன்பர்தாள்தூளி  நற்பாணன்நன்கலியன்*

ஈதிவர்தோற்றத்தடைவா இங்கு.                           4

அந்தமிழால் நற்கலைகள்  ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்

இந்த உலகில் இருள் நீங்க* – வந்துதித்த

மாதங்கள்நாள்கள்தம்மை  மண்ணுலகோர்தாமறிய*

ஈதென்று சொல்லுவோம்யாம்.                                 5

**ஐப்பசியில் ஓணம்  அவிட்டம்சதயம்இவை*

ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்!* – எப்புவியும்

பேசுபுகழ்ப்  பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்*

தேசுடனே தோன்றுசிறப்பால்.                                6

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு  முன்னேவந்துதித்து*

நற்றமிழால்நூல்செய்து நாட்டை உய்த்த * – பெற்றிமையோர்

என்று  முதலாழ்வார்கள் என்னும் பெயர்இவர்க்கு*

நின்றதுலகத்தே நிகழ்ந்து.                                        7

பேதைநெஞ்சே!  இன்றைப்பெருமை அறிந்திலையோ*

ஏதுபெருமைஇன்றைக்கென்றென்னில் * – ஓதுகின்றேன்

வாய்த்தபுகழ்மங்கையர்கோன்  மாநிலத்தில்வந்துதித்த*

கார்த்திகையில் கார்த்திகைநாள்காண்.                          8

**மாறன்பணித்ததமிழ்மறைக்கு* மங்கையர் கோன்

ஆறங்கம்கூற அவதரித்த* – வீறுடைய

கார்த்திகையில் கார்த்திகைநாள்  என்றென்று காதலிப்பார்*

வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே! வாழ்த்து.                       9

கார்த்திகையில் உரோகிணி நாள்  காண்மினின்று காசினியீர்!*

வாய்த்தபுகழ்ப்பாணர் வந்துதிப்பால்* – ஆத்தியர்கள்

அன்புடனேதான்  அமலனாதிபிரான்கற்றதற்பின்

நன்குடனே கொண்டாடும்நாள்.                                 10

மன்னியசீர்மார்கழியில்  கேட்டைஇன்று மாநிலத்தீர்*

என்னிதனுக்குஏற்றமெனில்உரைக்கேன்* – துன்னுபுகழ்

மாமறையோன்  தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்*

நான்மறையோர் கொண்டாடும்நாள்.                              11

 தையில் மகமின்று  தாரணியீர்! ஏற்றம்* இந்தத்

தையில்மகத்துக்குச் சாற்றுகின்றேன்* – துய்யமதி

பெற்ற  மழிசைப்பிரான்பிறந்த நாளென்று

நற்றவர்கள் கொண்டாடும் நாள்                                 12

மாசிப்புனர்பூசம்  காண்மினின்று மண்ணுலகீர்!*

தேசுஇத்திவசத்துக்கேதென்னில்* – பேசுகின்றேன்

கொல்லிநகர்க்கோன்  குலசேகரன் பிறப்பால்*

நல்லவர்கள் கொண்டாடும்நாள்                                 13

**ஏரார்வைகாசிவிசாகத்தின் ஏற்றத்தைப்

பாரோர் அறியப்பகர்கின்றேன் * – சீராரும்

வேதந் தமிழ்செய்த  மெய்யன்* எழில் குருகை

 நாதன் அவதரித்தநாள்.                                        14

**உண்டோ வைகாசிவிசாகத்துக்கொப்பொருநாள் ? *

உண்டோ சடகோபர்க்கொப்பொருவர் ?* உன்டோ

திருவாய்மொழிக்கொப்பு தென்குருகைக்குண்டோ

ஒருபார்தனில் ஒக்குமூர்                                       15

 இன்றைப்பெருமைஅறிந்திலையோ  ஏழைநெஞ்சே!*

 இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் * – நன்றிபுனை

 பல்லாண்டுபாடிய  நம்பட்டர்பிரான் வந்துதித்த*

 நல்லானியிற் சோதிநாள்.                                     16

  மாநிலத்தில்முன் நம்பெரியாழ்வார்வந்துதித்த*

 ஆனிதன்னில் சோதியென்றால் ஆதரிக்கும்* – ஞானியர்க்கு

 ஒப்போரில்லை  இவ்வுலகுதனில் என்றுநெஞ்சே!*

 எப்போதும் சிந்தித்திரு.                                         17

 மங்களாசாசனத்தில்  மற்றுள்ள ஆழ்வார்கள்

 தங்கள்* ஆர்வத்தளவு தான் அன்றி * – பொங்கும்

  பரிவாலே  வில்லிபுத்தூர்ப்பட்டர்பிரான் பெற்றான்*

 பெரியாழ்வார் என்னும் பெயர்.                                 18

 கோதிலவாம் ஆழ்வார்கள்  கூறுகலைக்கெல்லாம்*

 ஆதி திருப்பல்லாண்டானதுவும்* – வேதத்துக்கு

 ஓம் என்னுமதுபோல்   உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்*

 தான் மங்கலம் ஆதலால்.                                      19

 **உண்டோ திருப்பல்லாண்டுக்கு  ஒப்பதோர் கலைதான் ?*

 உண்டோ பெரியாழ்வார்க்கொப்பொருவர் ?* – தண் தமிழ் நூல்

 செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில்  அவர்செய்கலையில்*

 பைதல்.நெஞ்சே! நீ உணர்ந்து பார்                              20

 ஆழ்வார்திருமகளார் ஆண்டாள்* மதுரகவி

 ஆழ்வார்  எதிராசராம் இவர்கள் * – வாழ்வாக

 வந்துதித்த மாதங்கள்நாள்கள்தம்மின்  வாசியையும்*

 இந்த உலகோர்க்குரைப்போம் யாம்                             21

   **இன்றோ திருவாடிப்பூரம்* எமக்காக

   அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்* – குன்றாத

   வாழ்வான   வைகுந்தவான்போகந்தன்னை இகழ்ந்து*

   ஆழ்வார் திருமகளாராய்.                                    22

   பெரியாழ்வார் பெண் பிள்ளையாய்* ஆண்டாள் பிறந்த

   திருவாடிப்பூரத்தின் சீர்மை* – ஒருநாளைக்கு

   உண்டோ மனமே!  உணர்ந்துபார் * ஆண்டாளுக்கு

   உண்டாகில் ஒப்பிதற்குமுண்டு.                               23

   அஞ்சுகுடிக்கொருசந்ததியாய்* ஆழ்வார்கள்

   தஞ்செயலைவிஞ்சிநிற்கும்தன்மையளாய்* பிஞ்சாய்ப்

   பழுத்தாளை ஆண்டாளைப்  பத்தியுடன்நாளும்*

   வழுத்தாய் மனமே! மகிழ்ந்து.                                 24

    **ஏரார்மதுரகவி  இவ்வுலகில்வந்துதித்த*

   சீராரும்சித்திரையில் சித்திரைநாள் * – பாருலகில்

   மற்றுள்ள ஆழ்வார்கள்  வந்துதித்தநாள்களிலும்*

   உற்றதெமக்கென்றுநெஞ்சே! ஓர்                             25

   **வாய்த்த திருமந்திரத்தின்  மத்திமமாம் பதம்போல்* –

   சீர்த்த மதுரகவி செய்கலையை* – ஆர்த்தபுகழ்

   ஆரியர்கள்தாங்கள்  அருளிச்செயல் நடுவே*

   சேர்வித்தார் தாற்பரியம்தேர்ந்து.                             26

   **இன்றுலகீர்! சித்திரையில் ஏய்ந்த திருவாதிரைநாள் *

   என்றையினும் இன்றிதனுக்கேற்றம் என்தான்?* – என்றவர்க்குச்

   சாற்றுகின்றேன்கேண்மின்  எதிராசர்தம் பிறப்பால்*

   நாற்றிசையும் கொண்டாடும்நாள்.                           27

   **ஆழ்வார்கள் தாங்கள்  அவதரித்தநாள்களிலும்*

   வாழ்வானநாள்நமக்கு மண்ணுலகீர்!* ஏழ்பாரும் –

   உய்ய  எதிராசருதித்தருளும்* சித்திரையில்

   செய்ய திருவாதிரை.                           28

   எந்தைஎதிராசர்  இவ்வுலகில்எந்தமக்கா*

   வந்துதித்த நாளென்னும் வாசியினால்* – இந்தத்

    திருவாதிரைதன்னின்  சீர்மைதனை நெஞ்சே*

   ஒருவாமல் எப்பொழுதும் ஓர்.                                29

   எண்ணரும்சீர்ப்பொய்கைமுன்னோர்  இவ்வுலகில் தோன்றியவூர்*

   வண்மைமிகு கக்சி மல்லை மாமயிலை* மண்ணியில்நீர்

   தேங்கும்குறையலூர்   சீர்க்கலியன் தோன்றியவூர்*

   ஓங்குமுறையூர் பாணனூர்.                   30

   தொண்டரடிப்பொடியார்  தோன்றிய ஊர் * தொல்புகழ்சேர்

   மண்டங்குடியென்பர்  மண்ணுலகில் * – எண்டிசையும்

   ஏத்தும்குலசேகரன் ஊரென வுரைப்பர் *

   வாய்த்த திருவஞ்சிக்களம்.                                    31

   மன்னுதிருமழிசை  மாடத்திருக்குருகூர்*

   மின்னுபுகழ்வில்லிபுத்தூர் மேதினியில்* – நன்னெறியோர்

   ஏய்ந்தபத்திசாரர்  எழில்மாறன் பட்டர்பிரான்*

   வாய்ந்துதித்த ஊர்கள்வகை.                                 32

   சீராரும்வில்லிபுத்தூர்  செல்வத்திருக்கோளூர்*

   ஏரார் பெரும்பூதூர் என்னுமிவை* – பாரில்

   மதியாரும் ஆண்டாள் மதுரகவியாழ்வார்*

   எதிராசர் தோன்றிய ஊரிங்கு.                                 33

   ஆழ்வார்கள் ஏற்றம்  அருளிச்செயல் ஏற்றம்*

   தாழ்வாதுமின்றி அவைதாம்வளர்த்தோர் * – ஏழ்பாரும் உய்ய

   உய்யஅவர்கள்செய்த வியாக்கியைகள் உள்ளதெல்லாம் *

   வையமறியப்பகர்வோம் வாய்ந்து.                            34

   ஆழ்வார்களையும்  அருளிச்செயல்களையும்*

   தாழ்வாநினைப்பவர்கள் தாம்* – நரகில் – வீழ்வார்கள்

   என்று நினைத்து நெஞ்சே!  எப்பொழுதும்நீ அவர்பால் *

   சென்றணுகக் கூசித்திரி.                                      35

   தெருளுற்ற ஆழ்வார்கள்  சீர்மை அறிவார் ஆர் ?*

   அருளிச் செயலை அறிவார் ஆர்?* – அருள்பெற்ற

   நாதமுனிமுதலான  நம்தேசிகரைஅல்லால்*

   பேதைமனமே! உண்டோபேசு.                               36

   ஓராண்வழியாய்  உபதேசித்தார் முன்னோர்*

   ஏரார் எதிராசர் இன்னருளால் * – பாருலகில்

   ஆசையுடையோர்க்கெல்லாம்  ஆரியர்காள்! கூறுமென்று*

   பேசி வரம்பறுத்தார் பின்                                     37

   **எம்பெருமானார் தரிசனமென்றே இதற்கு*

   நம்பெருமாள் பேரிட்டு நாட்டிவைத்தார்* – அம்புவியோர்

   இந்தத்தரிசனத்தை  எம்பெருமானார் வளர்த்த *

   அந்தச்செயல் அறிகைக்கா.                                  38

   பிள்ளான் நஞ்சீயர்  பெரியவாச்சான்பிள்ளை*

   தெள்ளார் வடக்குத் திருவீதிப் – பிள்ளை *

   மணவாளயோகி  திருவாய்மொழியைக்காத்த*

   குணவாளரென்று நெஞ்சே! கூறு.                              39

   முந்துறவே பிள்ளான்முதலானோர் செய்தருளும்*

   அந்தவியாக்கியைகள் அன்றாகில்* – அந்தோ

   திருவாய்மொழிப்பொருளைத்  தேர்ந்துரைக்கவல்ல குருஆர்?*

   குருஆர்?* இக்காலம் நெஞ்சே! கூறு.                         40

   தெள்ளாரும் ஞானத்  திருக்குருகைப்பிரான்

   பிள்ளான் எதிராசர்பேரருளால் * – உள்ளாரும் அன்புடனே

   அன்புடனே மாறன்மறைப்பொருளை அன்றுரைத்தது *

   இன்பமிகும் ஆறாயிரம்.                                      41

   தஞ்சீரை ஞானியர்கள்தாம் புகழும் வேதாந்தி*

   நஞ்சீயர்தாம் பட்டர்நல்லருளால் * – எஞ்சாதா ஆர்வமுடன்

   ஆர்வமுடன் மாறன்மறைப்பொருளை ஆய்ந்துரைத்தது*

   ஏரொன்பதினாயிரம்.                                         42

   நம்பிள்ளை தம்முடையநல்லருளால் ஏவியிட*

   பின் பெரியவாச்சான்பிள்ளை அதனால் * – இன்பா வருபத்தி

   வருபத்தி மாறன்மறைப்பொருளைச் சொன்னது*

   இருபத்துநாலாயிரம்.                                         43

   **தெள்ளியதாநம்பிள்ளைசெப்பு நெறிதன்னை*

   வள்ளல் வடக்குத்திருவீதிப்பிள்ளை* – இந்த

   நாடறிய  மாறன்மறைப்பொருளை நன்குரைத்தது*

   ஈடுமுப்பத்தாறாயிரம்.                                       44

    அன்போடு அழகிய மணவாளச் சீயர் *

    பின்போரும் கற்றறிந்து பேசுகைக்கா* – தம்பெரிய போதமுடன்

    போதமுடன் மாறன்மறையின் பொருளுரைத்தது*

    ஏதமில் பன்னீராயிரம்.                                      45

    பெரியவாச்சான்பிள்ளை  பின்புள்ளவைக்கும்  தெரிய*

     தெரிய* வியாக்கியைகள் செய்வால்* – அரிய

    அருளிச்செயற்பொருளை  ஆரியர்கட்கிப்போது*

    அருளிச்செயலாய்த் தறிந்து.                                 46

    நஞ்சீயர் செய்த வியாக்கியைகள்  நாலிரண்டுக்கு

    எஞ்சாமையாவைக்கும் இல்லையே * – தம்சீரால்

    வையகுருவின்தம்பி  மன்னுமணவாளமுனி

    செய்யுமவைதாமும் சில.                                   47

    சீரார் வடக்குத்திருவீதிப்பிள்ளை * எழு

    தேரார்தமிழ்வேதத்து ஈடுதனை * – தாருமென

    வாங்கிமுன்நம்பிள்ளை  ஈயுண்ணிமாதவர்க்குத்தாம்

    தாம்கொடுத்தார்* பின்னதனைத் தான்.                         48

    ஆங்கவர்பால்பெற்ற  சிறியாழ்வான் அப்பிள்ளை*

    தாம்கொடுத்தார் தம்மகனார்தம்கையில் * – பாங்குடனே

    நாலூர்ப்பிள்ளைக்கு அவர்தாம்  நல்லமகனார்க்கவர்தாம்*

    மேலோர்க்கீந்தாரவரே மிக்கு.                                49

    **நம்பெருமாள் நம்மாழ்வார்  நஞ்சீயர் நம்பிள்ளை

    யென்பர்* அவரவர் தம்ஏற்றத்தால் * – அன்புடையோர்

    சாற்றுதிருநாமங்கள்தானென்றுநன்னெஞ்சே!*

    ஏத்ததனைச் சொல்லிநீ யின்று.                             50

    துன்னுபுகழ்க்கந்தாடைத்தோழப்பர் தம் முகப்பால்*

    என்னஉலகாரியனோ என்றுரைக்க* – பின்னை

    உலகாரியன் என்னும்பேர்  நம்பிள்ளைக்கோங்கி*

     விலகாமல் நின்றதென்றும் மேல்.                          51

    பின்னை வடக்குத் திருவீதிப்பிள்ளை* அன்பால்

    அன்ன திருநாமத்தை யாதரித்து* – மன்னுபுகழ்

    மைந்தர்க்குச் சாற்றுகையால்  வந்து பரந்தது* எங்கும்

     இந்தத் திருநாமம் இங்கு.                                         52

    **அன்னபுகழ்முடும்பைஅண்ணல் உலகாசிரியன்*

    இன்னருளால்செய்தகலை யாவையிலும்*- உன்னில்

    திகழ்வசனபூடணத்தின்சீர்மை  ஒன்றுக்கில்லை*

    புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது.                    53

    முன்னம்குரவோர்  மொழிந்த வசனங்கள் தன்னை

     தன்னை*மிகக்கொண்டு கற்றோர் தம்முயிர்க்கு* – மின்னணியாச்

    சேரச்சமைத்தவரே   சீர் வசனபூடணம்என்

     பேர்*    இக்கலைக்கிட்டார் பின்.                              54

    ஆர்வசனபூடணத்தின்  ஆழ்பொருள்எல்லாமறிவார்

    ஆரதுசொல்நேரில்அனுட்டிப்பார்?*- ஓரொருவர்

    உண்டாகில்  அத்தனை காணுள்ளமே! * எல்லார்க்கும்

    அண்டாத தன்றோ வது?                                                55

     உய்யநினைவுடையீர்!  உங்களுக்குச் சொல்லுகின்றேன்*

    வையகுரு முன்னம்வாய்மொழிந்த* – செய்யகலை

     யாம் வசனபூடணத்தின் ஆழ்பொருளைக்கற்று*  அதனுக்

     காம் நிலையில் நில்லும் அறிந்து.                                   56

    தேசிகர்பால் கேட்ட  செழும் பொருளை* சிந்தைதன்னில்

    மாசறவே ஊன்ற மனனஞ்செய்து* ஆசரிக்க

    வல்லார்கள்தாம்  வசனபூடணத்தின் வான்பொருளை

    கல்லாததென்னோ கவர்ந்து.                                 57

     சச்சம்பிரதாயம்  தாமுடையோர்கேட்டக்கால்*

     மெச்சும் வியாக்கியைதானுண்டாகில்* – நச்சி

     அதிகரியும்நீர்  வசனபூடணத்துக்கற்ற மதியுடையீர்!

     மதியுடையீர்! மத்தியத்தராய்.                          58

     சீர் வசனபூடணத்தின் செம்பொருளை* – சிந்தைதன்னால்

     தேரிலுமாம் வாய்கொண்டுசெப்பிலுமாம்* – ஆரியாகாள்!

     என்தனக்குநாளும் இனிதாக நின்றதையோ*

     உந்தமக் கெவ்வின்பமுளதாம்.                              59

     தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பொன்றில்லாதார்*

     அன்பு தன்பால் செய்தாலும் அம்புயைகோன்*- இன்பமிகு

     விண்ணாடுதானளிக்க வேண்டியிரான்* ஆதலால்

     நண்ணாரவர்கள்திருநாடு.                                            60

     **ஞானம் அனுட்டானமிவை  நன்றாகவே உடையனான*

     குருவை அடைந்தக்கால்* – மாநிலத்தீர்!

      தேனார்கமலத்  திருமாமகள்கொழுநன்*

     தானே வைகுந்தம் தரும்.                                  61

     உய்ய நினைவுண்டாகில்  உங்குருக்கள் தம் பதத்தே வையும்

     வையும்* அன்புதன்னை இந்தமாநிலத்தீர்!* – மெய்யுரைக்கேன்

     பையரவில்மாயன்பரமபதம் உங்களுக்காம்*

     கையிலங்கு நெல்லிக்கனி.                                 62

     ஆசாரியன்செய்த  உபகாரமானவது*

     தூய்தாக நெஞ்சுதன்னில் தோன்றுமேல்* – தேசாந்தரத்திலிருக்க

     தரத்திலிருக்க மனந்தான் பொருந்தமாட்டாது*

     இருத்தலினி ஏதறியோம் யாம்.                           63

     தன் ஆரியனுக்குத்  தான் அடிமை செய்வது* அவன்

     இந்நாடு தன்னில் இருக்கும் நாள் * – அந்நேர்

     அறிந்தும் அதிலாசையின்றி  ஆசாரியனைப்

     பிரிந்திருப்பாரார்?*  மனமே! பேசு.                      64

     ஆசாரியன் சிச்சன்  ஆருயிரைப் பேணுமவன்*

     தேசாரும் சிச்சனவன் சீர்வடிவை* – ஆசையுடன்

     நோக்கும் அவனென்னும்  நுண்ணறிவைக் கேட்டுவைத்தும்*

     ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்.                        65

     பின்பழகராம்பெருமாள்சீயர் * பெருந்திவத்தில்

     அன்பதுவுமற்று மிக்க ஆசையினால் * – நம்பிள்ளைக்

     கானவடிமைகள் செய்  அந்நிலையை நன்னெஞ்சே!*

     ஊனமற வெப்பொழுதுமோர்.                               66

     ஆசாரியர்கள் அனைவருமுன்னாசரித்த*

     ஆசாரந் தன்னை அறியாதார்* – பேசுகின்ற

     வார்த்தைகளைக்கேட்டு  மருளாதே* பூருவர்கள்

     சீர்த்த நிலைதன்னை நெஞ்சே! சேர்.                                  67

      நாத்திகரும் நற்கலையின்நன்னெறிசேராத்திகரும்

     ஆத்திகநாத்திகருமாம் இவரை* – ஓர்த்து நெஞ்சே!

     முன்னவரும்பின்னவரும்  மூர்க்கரெனவிட்டு* நடுச்

     சொன்னவரை நாளும்தொடர்.                                68

     நல்லமணமுள்ளதொன்றை  நண்ணியிருப்பதற்கு*

     நல்லமணமுண்டாம் நயமதுபோல்* – நல்ல

     குணமுடையோர்தங்களுடன்  கூடியிருப்பார்க்கு*

     குணமதுவேயாம் சேர்த்தி கொண்டு.                          69

     தீய கந்தமுள்ளதொன்றைச் சேர்ந்திருப்பதொன்றுக்கு*

     தீயகந்தமேறும் திறமதுபோல்* – தீய

     குணமுடையோர்தங்களுடன்  கூடியிருப்பார்க்கு*

     குணமதுவேயாம் செறிவுகொண்டு                         70

     **முன்னோர்மொழிந்த  முறைதப்பாமல்கேட்டு

     பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே* – தந்நெஞ்சில்

     தோற்றினதேசொல்லி  இதுசுத்தஉபதேசவர

     வாற்றதென்பர்* மூர்க்கராவார்.                              71

     **பூருவாசாரியர்கள் போதமனுட்டானங்கள்*

     கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் – தேறி*

     இருள்தருமாஞாலத்தே  இன்பமுற்று வாழும்

     தெருள்தரு மாதேசிகனைச் சேர்ந்து!                         72

     **இந்த உபதேசரத்தினமாலைதன்னை*

     சிந்தைதன்னில் நாளும்சிந்திப்பார் * – எந்தை

     எதிராசர்  இன்னருளுக்கென்றும் இலக்காகி*

     சதிராக வாழ்ந்திடுவர் தாம்.                               73

(எறும்பியப்பா அருளிச்செய்தது )

     மன்னுயிர்காள் இங்கே!  மணவாளமாமுனிவன்*

     பொன்னடியாம் செங்கமலப்போதுகளை* – உன்னிச்

     சிரத்தாலேதீண்டில்  அமானவனும்நம்மை*

     கரத்தாலேதீண்டல் கடன்.                                  74

             உபதேசரத்தினமாலை முற்றும்

மணவாளமாமுனிகள் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.