ரஹஸ்யத்ரய தீபிகை

ரஹஸ்யத்ரய தீ3பிகை

பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த

ரஹஸ்யத்ரய தீ3பிகை

ஶ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே

யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப4: ஶ்ரீத4: ஸதா3 ।।

 

“ப்ராப்யஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: । ப்ராப்த்யுபாயம் ப2லம் ப்ராப்தேஸ் ததா2 ப்ராப்தி விரோதி4 ச ।। வத3ந்தி ஸகலா வேதா3ஸ் ஸேதிஹாஸபுராணகா: ।  முநயஶ்ச மஹாத்மாநோ வேத3வேதா3ந்தவேதி3ந: ।।  என்கிறபடியே ஸகல வேதா3ந்த ப்ரதிபாத்3யமான அர்த்த2 பஞ்சகத்தைத் திருமந்திரத்தில் விவரிக்கிறபடி எங்ஙனேயென்னில்; ப்ரணவத்தில் அர்த்த2 பஞ்சகத்தை விவரிக்கிறபடி எங்ஙனேயென்னில்; மகாரத்தாலே ஸ்வஸ்வரூபம் சொல்லிற்று. அகாரத்தாலே பரஸ்வரூபம் சொல்லிற்று. உகாரத்தாலே விரோத்4யுபாயங்களைச் சொல்லிற்று. அகாரத்தில் சதுர்த்தியாலே புருஷார்த்த2ஸ்வரூபம் சொல்லிற்று.

அகாரத்தில் அர்த்த2 பஞ்சகத்தை விவரிக்கிறபடி எங்ஙனேயென்னில்: அகாரத்தால் பரஸ்வரூபமும், அதில் சதுர்த்தி2யாலே ஸ்வஸ்வரூப புருஷார்த்த2ஸ்வரூபங்களையும் , அதில் ‘அவ-ரக்ஷணே’ என்கிற தா4துவினாலே விரோத்4யுபாயங்களையும் சொல்லிற்று. ப்ரணவத்தில் லுப்த சதுர்த்தி2யாலே ஶேஷத்வத்தைச் சொல்லி, அகாரத்தாலே ஶேஷத்வப்ரதிஸம்ப3ந்தி4யைச் சொல்லி, மகாரத்தாலே ஶேஷத்வாஶ்ரயஞ்சொல்லி, அவதா4ரணத்தாலே ஶேஷத்வத்தினுடைய அநந்யார்ஹதையைச் சொல்லி, ஸ்வஸ்வரூபம் சொல்லிற்று. அகாரத்தாலே ரக்ஷகனைச் சொல்லி, மகாரத்தாலே ரக்ஷ்யவஸ்துவைச் சொல்லி, சதுர்த்தி2யாலே ரக்ஷ்யரக்ஷகத்வ பா4வத்துக்கு வேண்டும் உறவு சொல்லி அவதா4ரணத்தாலே ரக்ஷ்யரக்ஷகங்களுடைய லக்ஷ்யலக்ஷணம் சொல்லுகையாலே உபாயம் சொல்லிற்று. ப்ரணவத்தாலே ஆத்மஸ்வரூபம் சொல்லிற்று. “நாராயண” பத3த்தாலே பரமாத்மஸ்வரூபம் சொல்லிற்று. சதுர்த்தி2யாலே  புருஷார்த்த2ஸ்வரூபம் சொல்லிற்று. நமஸ்ஸில் ம: என்கிற இத்தாலே விரோதி4ஸ்வரூபம் சொல்லிற்று. நம: என்கிற இத்தாலே உபாயஸ்வரூபம் சொல்லிற்று. ஆகையாலே, ஸகலவேதா3ர்த்த2 ப்ரதிபாத்3யமான அர்த்த2பஞ்சகம் சொல்லிற்றாயிற்று.

“இவ்வாத்மாவுக்கு எம்பெருமான் கட்டின ஸூத்ரம் திருமந்த்ரம்” என்று பிள்ளை திருநறையூரரையர் அருளிச் செய்வர். ஸம்ஸாரவர்த்த4கமான தாலிக்கயிறு பதினாறிழையாய், இரண்டு சரடாய் இருக்கும். கைங்கர்ய வர்த்த4கமான மங்க3ள ஸூத்ரம் எட்டிழையாய், மூன்று சரடாய் இருக்கும். ஸ்வரூபத்தின் உணர்த்தியைப் பற்றியிருப்பதொரு சரடும்; ஸ்வரக்ஷணத்தில் அஶக்தியைப்பற்றியிருப்பதொரு சரடும்; ஸ்வரூபத்தின் உணர்த்தியாலும், ஸ்வரக்ஷணத்தில் அஶக்தியாலும் ப2லித்த அர்த்த2ம் ஈஶ்வரனைப் பேணுகை; இதை வெளியிட்டிருப்பதொரு சரடுமாயிருக்கும். ஶேஷத்வஜ்ஞாநமில்லாதார்க்கு ப்ரணவத்தில் அந்வயமில்லை. தே3ஹாத்மாபி4மானிகளுக்கு நமஸ்ஸில் அந்வயமில்லை.கைங்கர்ய ருசி இல்லாதார்க்கு நாராயண பத3த்தில் அந்வயமில்லை. ஶேஷத்வஜ்ஞாநம் இருக்கும்படியை இளையபெருமாள் ஆசரித்துக்காட்டினார்; ஈஶ்வரஶேஷபூ4தன் அந்யஶேஷத்வநிவர்த்தகனென்றும், விலக்ஷணநிரூபகனென்றும், அஹங்காரநிவர்த்தகனென்றும், ததீ3யபரத்ந்த்ரனென்றும், தத்ஸம்ப3ந்த4யுக்தனென்றும், கிங்கரஸ்வபா4வனென்றும் தன்னை அநுஸந்தி4ப்பான்.

ப்ரமாணப்ரமேயப்ரமாதாக்களைச்சேர அநுஸந்தி4க்கும்படி: ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அநந்யார்ஹஶேஷத்வம்; ஏதத்ப்ரகாஶகம் ப்ரணவம்; அநந்யார்ஹஶேஷத்வப்ரதிஸம்ப3ந்தி4 பெருமாள் பொருந்தவிட்ட திருவடிகள். ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அநந்யஶரணத்வம்; ஏதத்ப்ரகாஶகம் நமஸ்ஸு; அநந்யஶரணத்வப்ரதிஸம்ப3ந்தி4 பெருமாள் அமைத்த திருக்கை; ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அநந்யபோ4க்3யத்வம்; ஏதத்ப்ரகாஶகம் நாராயணபத3ம்; அநந்யபோ4க்3யத்வப்ரதிஸம்ப3ந்தி4 பெருமாள் திருமுறுவல். இதுக்குக் கருத்து: தானறிகை, சேதனமறிகை, ஸாராந்தரமறிகை. அதாவது: பேறறிகை, வ்யாபாரமறிகை, விஷயாந்தரமறிகை. ஸ்வாதந்த்ர்யம் மேலிட்டால் ப்ரணவத்தில் ப்ரத2மாக்ஷரத்தின் அர்த்த2த்தை அநுஸந்தி4ப்பான். இதரர் பக்கல் ஶேஷத்வப்ரதிபத்தி நடையாடிற்றாகில், உகாரார்த்த2த்தை அநுஸந்தி4ப்பான். “தே3ஹோஹம்” என்றிருந்தானாகில், மகாரார்த்த2த்தை அநுஸந்தி4ப்பான். ஸ்வரக்ஷணவிஷயத்தில் கரைந்தானாகில், நமஶ்ஶப்3தா3ர்த்த2த்தை அநுஸந்தி4ப்பான். ஈஶ்வரவிபூ4திகளோடே கலங்கா நின்றானாகில், நாரஶப்3தா3ர்த்த2த்தை அநுஸந்தி4ப்பான். ஆபா4ஸப3ந்து4க்கள் பக்கல் ப3ந்து4த்வம் நடையாடிற்றாகில், அயநஶப்3தா3ர்த்த2த்தை அநுஸந்தி4ப்பான். ஶப்3தா3திவிஷயங்களிலே போ4க்3யதாபு3த்3தி4 நடையாடிற்றாகில், “ஆய” ஶப்3தா3ர்த்த2த்தை அநுஸந்தி4ப்பான்.

ப்ரமாணம் பத3த்ரயாத்மகமாயிருக்கும். ப்ரமேயம் பர்வத்ரயாத்மகமாயிருக்கும். அதி4காரி ஆகாரத்ரயாத்மகமாயிருக்கும். ப்ரமாணம் பத3த்ரயாத்மகமாகையாவது: ப்ரத2ம பத3ம், மத்3யமபத3ம், த்ருதீயபத3ம். ப்ரமேயம் பர்வத்ரயாத்மகமாகையாவது: பொருந்தவிட்ட திருவடிகளும், அஞ்சலென்ற திருக்கையும், சிவந்த திருமுக2 மண்ட3லமும். அதி4காரி ஆகாரத்ரயாத்மகமாகையாவது: அநந்யார்ஹஶேஷபூ4தனாய், அநந்யஶரணனாய், அநந்யபோ4க்3யனாயிருக்கை. ப்ரத2மபத3ம் அநந்யார்ஹஶேஷத்வப்ரகாஶகம். பொருந்தவிட்ட திருவடிகள் அநந்யார்ஹத்வத்துக்கு ப்ரதிஸம்ப3ந்தி4யாயிருக்கும். மத்3யமபத3ம் அநந்யஶரணத்வத்துக்கு ப்ரகாஶகமாயிருக்கும். அஞ்சலென்ற திருக்கை அநந்யஶரணத்வத்துக்கு ப்ரதிஸம்ப3ந்தி4யாயிருக்கும். த்ருதீயபத3ம் அநந்யபோ4க்4யத்வப்ரகாஶகமாயிருக்கும். சிவந்த திருமுக2 மண்ட3லம் அநந்யபோ4க்3யத்வ ப்ரதிஸம்ப3ந்தி4யாயிருக்கும். திருமந்த்ரத்தாலே திருவபி4ஷேகத்தை அநுஸந்தி4ப்பான். சரமஶ்லோகத்தாலே திருமார்பில் நாச்சியாரோட்டைச் சேர்த்தியை அநுஸந்தி4ப்பான். த்3வயத்தாலே திருவடிகளை அநுஸந்தி4ப்பான்.

அர்த்த2பஞ்சகத்தையும் ரஹஸ்யத்ரயத்திலே சொல்லுகிறபடி எங்ஙனேயென்னில்: திருமந்த்ரத்தில் நாராயண பத3த்தாலே பரமாத்வஸ்வரூபம் சொல்லி, ப்ரணவத்தாலே ஆத்மஸ்வரூபம் சொல்லி, சதுர்த்தி2யாலே புருஷார்த்த2ஸ்வரூபம் சொல்லி, “நம:” என்று உபாய ஸ்வரூபம் சொல்லி, நமஶ்ஶப்த3த்திலே ஷஷ்ட்2யந்தமான மகாரத்தாலே விரோதி4 ஸ்வரூபம் சொல்லிற்று. சரமஶ்லோகத்தில் “மாம்” “அஹம்” என்கிற பத3ங்களாலே பரமாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று. “வ்ரஜ” என்கிற மத்3யமனாலும், “த்வா”, “மாஶுச:” என்கிற பத3ங்களாலும் ஸ்வஸ்வரூபம் சொல்லிற்று. “ஸர்வ பாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி” என்கையாலே அநிஷ்டநிவ்ருத்திபூர்வகமான புருஷார்த்த2ஸ்வரூபம் சொல்லிற்று. “ஸர்வ பாபேப்4ய:” என்று விரோதி4ஸ்வரூபம் சொல்லிற்று. ஏகபத3த்தாலே உபாயஸ்வரூபம் சொல்லிற்று. த்3வயத்தில் ஸவிஶேஷணமான நாராயணபத3த்தாலே பரமாத்மஸ்வரூபம் சொல்லிற்று. “ப்ரபத்3யே” என்கிற உத்தமனாலே ஆத்மஸ்வரூபம் சொல்லிற்று. சதுர்த்தி2 நமஸ்ஸுக்களாலே புருஷார்த்த2ஸ்வரூபம் சொல்லிற்று. நமஶ்ஶப்த3த்தில் மகாரத்தாலே விரோதி4ஸ்வரூபம் சொல்லிற்று. ‘சரணௌ’ ‘ஶரண’ பத3ங்களாலே உபாயஸ்வரூபம் சொல்லுகிறது திருமந்த்ரம். ஸ்வரூபாநுரூபமான உபாயத்தை விவரிக்கிறது சரமஶ்லோகம். இவ்விரண்டர்த்த2த்திலும் ருசியுடையாருடைய அநுஸந்தா4ந ப்ரகாரம் த்3வயம். ஶாஸ்த்ரருசிபரிக்3ருஹீதம் திருமந்த்ரம். ஶரண்யருசிபரிக்3ருஹீதம் சரமஶ்லோகம். ஆசார்யருசிபரிக்3ருஹீதம் த்3வயம். ப்ராப்யப்ரதா4நம் திருமந்த்ரம். ப்ராபகப்ரதா4நம் சரமஶ்லோகம். புருஷகாரப்ரதா4நம் த்3வயம். ஆசார்யாங்கீ3காரம் உடையவனுக்கு ஆசார்யன் இரங்கி திருமந்த்ரத்தில் உபதே3ஶித்த அவ்வர்த்த2த்தை க்ரமஶ: அநுஸந்தி4க்கும்படி சொல்லுகிறது. ஈஶ்வரஶேஷபூ4தன், அந்யஶேஷத்வநிவர்த்தகன் விலக்ஷணநிரூபகன், ததீ3யபரதந்த்ரன், தத்ஸம்ப3ந்த4யுக்தன், கிங்கரஸ்வபா4வனென்று தன்னை அநுஸந்தி4ப்பது.

ஸவிப4க்திகமான அகாரத்தை அநந்தராக்ஷரத்3வயம் விவரிக்கிறது. அவ்வக்ஷர த்3வயத்தையும் மந்த்ரஶேஷ பத3த்3வயம் விவரிக்கிறது. அப்பத3த்3வயத்தையும் த்3வயத்தில் வாக்யத்3வயம் விவரிக்கிறது. அவ்வாக்யத்3வயத்தையும் ஶரமஶ்லோகத்தில் அர்த்த2த்3வயம் விவரிக்கிறது. அதில் அகாரத்தை அக்ஷரத்3வயத்தில் ப்ரத2மாக்ஷரம் விவரிக்கிறது. விப4க்தியை அநந்தராக்ஷரம் விவரிக்கிறது. அதில் ப்ரத2மாக்ஷரத்தை ப்ரத2மபத3ம் விவரிக்கிறது. அநந்தராக்ஷரத்தை அநந்தரபத3ம் விவரிக்கிறது. அதில் ப்ரத2மபத3த்தை ப்ரத2மவாக்யம் விவரிக்கிறது. அநந்தரபத3த்தை அநந்த்ரவாக்யம் விவரிக்கிறது. இதில் பூர்வ வாக்யத்தைப் பூர்வார்த்தம் விவரிக்கிறது. உத்தரவாக்யத்தை உத்தரார்த்த2ம் விவரிக்கிறது. அதில் ஶேஷத்வப்ரதிஸம்ப3ந்தி4யைச் சொல்லுகிற அகாரத்துக்கு அநந்யார்ஹஶேஷத்வ வாசகமான உகாரம் விவரணமாகிறபடி எங்ஙனே? என்னில்: அகாரவாச்யனுடைய ஶேஷித்வம் ஆஶ்ரயாந்தரங்களிலும் கிடக்குமோ? அநந்ய ஸாதா4ரணமாயிருக்குமோ? என்று ஸந்தி3க்3த்த4மானால், அதனுடைய அநந்ய ஸாதா4ரணத்வ ப்ரகாஶகமாகையாலே, உகாரம் அகாரவிவரணமாகிறது. எங்ஙனேயென்னில்: உகாரத்தில் சொல்லுகிற சேதனனுடைய அநந்யார்ஹஶேஷத்வம் ஸித்3தி4ப்பது அதற்கு ப்ரதிஸம்ப3ந்தி4யான ஶேஷித்வம் ஓரிடத்தில் இளைப்பாறில்; அங்ஙனன்றியிலே, அநேக ஶேஷிகளாகில், அநந்யார்ஹஶேஷத்வம் ஸித்3தி4யாது. ஆகையாலே, அகாரவாச்யனுடைய ஸமாப்4யதி4க தா3ரித்3ர்யத்தைச் சொல்லிற்றாயிற்று. சதுர்த்தி2யில் சொல்லுகிற ஶேஷித்வத்துக்கு ஆஶ்ரய விஷய ப்ரகாஶகமாய்க்கொண்டு விவரணமாகிறது மகாரம். நிராஶ்ரயமாக த4ர்மத்துக்கு ஸித்3தி4யில்லையே. ப43வத்3வ்யதிரிக்தரைத் தன்னோடு பிறரோடு வாசியற அந்யராகச் சொல்லி, அவர்களுக்கு அநர்ஹன் இச்சேதனன் என்கிறது உகாரம். இதில் கழிகிற தே3வதாந்தராதி3 மாத்ரத்தாலே அந்யஶப்33த்துக்குப் பூர்த்தியில்லாமையாலே அவ்வந்யஶப்33த்தில் அந்விதனான தன்னையும் கழித்து, அநந்யார்ஹத்வத்தைப் பூரிக்கிற முகத்தாலே உகார விவரணமாகிறது நமஶ்ஶப்33ம். “அஹமபி நமம” என்கிறபடியே ஸ்வரக்ஷணத்தில் ப்ராப்தியில்லாத அத்யந்த பாரதந்த்ர்யத்தைச் சொல்லுகிறது. நமஶ்ஶப்33த்திலேயிறே; ஆகையாலே உகார விவரணமாகிறது நமஶ்ஶப்33ம். ஶேஷத்வத்துக்கு ஆஶ்ரய விஶேஷப்ரகாஶகமான மகாரவாச்யனுடைய ஶேஷத்வபூர்த்தி ப்ரகாஶிப்பது. “அகிஞ்சித் கரஸ்ய ஶேஷத்வாநுப பத்தி:” என்கிறபடியே கிஞ்சித்காரத்தாலேயாகையாலே, கிஞ்சித்காரப்ரகாஶகமாய்க்கொண்டு மகாரவிவரணமாகிறது நாராயணபத3ம். அத்யந்த பாரதந்த்ர்ய ப்ரயுக்தமாய் வருகிற உபாயவேஷத்தினுடைய ஸ்வரூபமென்ன, இதிலிழிகைக்கு ஏகாந்தமான துறையென்ன, அவ்வுபாயமாகச் செய்யவேண்டும் அம்ஶமென்ன, இவற்றை ப்ரகாஶிப்பிக்கையாலே நமஶ்ஶப்33 விவரணமாகிறது, த்3வயத்தில் பூர்வ வாக்யம். கைங்கர்ய ப்ரதிஸம்ப3ந்தி4 ஒரு மிது2நமென்னுமிடத்தையும், அதற்குக்களையான அம்ஶத்தையும் ஒழித்துத் தருகையாலே நாராயண ஶப்33த்துக்கு விவரணமாகிறது த்3வயத்தில் உத்தரவாக்யம். அவ்வுபாய ஸ்வீகாரம் ஸாத4நாந்தர நிவ்ருத்திபூர்வமாகையாலே, தத்ப்ரகாஶகமாய்க் கொண்டு பூர்வ வாக்யத்துக்கு விவரணமாகிறது பூர்வார்த்த2ம். உத்தர வாக்யத்தில் சொன்ன ப்ராப்யஸித்3தி4 விரோதி4 நிவ்ருத்தி பூர்வகமாகக் கடவதென்று விவரிக்கிறது உத்தரார்த்த2ம்.

ஸர்வாதி4காரமாயும், அதி4க்ருதாதி4காரமாயும், ஆசார்யருசிபரிக்3ருஹீதமாயுமிருந்துள்ள வாக்யத்3வயத்தில் பூர்வவாக்யம் ப்ராபகமாயிருந்ததேயாகிலும், பத3த்ரயாத்மகமாயும் அர்த்த2த்ரயாத்மகமாயும் இருக்கும். இதில் “ஶ்ரீமத்” என்கிற பத3ம் புருஷகாரம். “ஶரணம் ப்ரபத்3யே” என்கிறபத3ம் அதி4காரிக்ருத்யம். நடுவே “நாராயணசரணௌ” என்கிற பத3ம் உபாயம். உபாயம் புருஷகாரஸாபேக்ஷமாயும் அதி4காரிஸாபேக்ஷமாயிமிருக்கும். ப2லத்தில் வந்தால் அந்யநிரபேக்ஷமாயும் இருக்கும். உத்தரவாக்யமும் பத3த்ரயாத்மகமாயிருக்கும். அதில் “ஆய” என்கிறவிடம் கைங்கர்யத்தைச் சொல்லுகிறது. இதுக்குக்கீழ் கைங்கர்ய ப்ரதிஸம்ப3ந்தி4யைச் சொல்லுகிறது. மேலில் பத3ம் கைங்கர்யத்தில்  களையறுக்கையைச் சொல்லுகிறது.

நம்மாசார்யர்கள் திருமந்த்ரத்தையும் சரமஶ்லோகத்தையும் த்3வயத்திலே அநுஸந்தி4க்கும்படி: இதுதான் உபாயோபேயம் இரண்டையும் சொல்லுகையாலே த்3வயமென்கிறது. திருமந்த்ரத்தில் உபேயப்ராதா4ந்யேந சொல்லுகிற அர்த்த2த்தையும், சரமஶ்லோகத்தில்  உபாயப்ராதா4ந்யேந சொல்லுகிற அர்த்த2த்தையும், இதில் பூர்வவாக்யத்தாலும், உத்தரவாக்யத்தாலும் சொல்லுகிறது. எங்ஙனேயென்னில்: அகாரத்தில் ஸ்வரூபாநுப3ந்தி4த்வத்தால் சொல்லுகிற லக்ஷ்மீஸம்ப3ந்த4த்தையும் நாராயணபத3த்திலே பிராட்டிக்கும் அந்தர்பா4வமுண்டாகையாலே வருகிற லக்ஷ்மீஸம்ப3ந்த4த்தையும் த்3வயத்தில் உத்தரவாக்யத்தில் “ஶ்ரீமதே” என்கிற பத3த்தாலே சொல்லுகிறது. அகாரத்திலே சொல்லுகிற ஸர்வரக்ஷகத்வத்தையும், அதில் விவரணமான நமஸ்ஸில் சொல்லுகிற அத்யந்தபாரதந்த்ர்யத்தையும், தத்ப்ரவ்ருத்தியை ப்ரார்த்தி2க்கிற சதுர்த்2யர்த்த2த்தையும், உத்தரவாக்யத்தில் சதுர்த்தி2யாலே சொல்லுகிறது. திருமந்த்ரத்தில் நமஶ்ஶப்3தா3ர்த்தமான அஹங்கார மமகாரநிவ்ருத்தியை உத்தரவாக்யத்தில் நமஸ்ஸிலே சொல்லுகிறது. ஆக, திருமந்த்ரம் த்3வயத்தில் உத்தரவாக்யத்திலே அந்வயித்தது. இனி சரமஶ்லோகம் பூர்வவாக்யத்திலே அந்வயிக்கும்படி சொல்லுகிறது. “மாம்” என்கிற பத3த்தில் ஸ்வரூபாநுப3ந்தி4த்வத்தால் சொல்லுகிற லக்ஷ்மீஸம்ப3ந்த4த்தையும் த்3வயத்தில் பூர்வவாக்யத்தில் “ஶ்ரீமத்” பத3த்தாலே சொல்லுகிறது. “மாம்” என்கிற பத3த்தில் சொல்லுகிற ஸௌலப்4யத்தையும் “அஹம்” என்கிற பத3த்தில் சொல்லுகிற ஸ்வாமித்வத்தையும், இதில் “நாராயண” பத3த்தாலே சொல்லுகிறது. “மாம்” என்கிற பத3த்தில் சொல்லுகிற ஸேநாதூ4ளியும், சிறுசதங்கையும், தாங்கின உழவுகோலும், பிடித்த சிறுவாய்க்கயிறும், நாட்டின திருவடிகளுமாய் நிற்கிற விக்3ரஹத்தை த்3வயத்தில் “சரணௌ” என்கிற பத3த்தாலே சொல்லுகிறது. ‘ஏக’ ஶப்33த்தாலே சொல்லுகிற அவதா4ரணார்த்தையும் ‘சரண’ ஶப்3தா3ர்த்தையும், ‘ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மாஶுச:’ என்கிற விரோதி4 நிவ்ருத்தியையும், த்3வயத்தில் சரண ஶப்33த்தாலே சொல்லுகிறது. “வ்ரஜ” என்கிற இடத்தின் அர்த்த2த்தையும் “ஸர்வத4ர்மான் பரித்யஜ்ய” என்கிற அர்த்த2த்தையும் “த்வா” என்கிறவிடத்தில் சொல்லுகிற அதி4காரியையும் “ப்ரபத்3யே” என்கிற க்ரியாபத3த்தாலே சொல்லுகிறது. த4ர்மத்யாக3ம் அங்கே உண்டோ? என்னில்: உபாயஸ்வீகாரம், உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாகவல்லது நில்லாமையாலே, ஸ்வீகாரம் சொன்னவிடத்திலே த்யாக3ம் சொல்லுகிறது. ஆக, சரமஶ்லோகம் த்3வயத்தில் பூர்வவாக்யத்தில் அந்வயித்தது. திருமந்த்ரத்திலும், சரமஶ்லோகத்திலும் சொல்லுகிற அர்த்த2ம் த்3வயத்திலே சேர அநுஸந்தி4க்கும்படி சொல்லிற்றாயிற்று. சரமஶ்லோகத்தாலே பூர்வக2ண்ட3த்தை விஶதீ3கரிக்கிறது. திருமந்த்ரத்தாலே உத்தரக2ண்ட3த்தை விஶதீ3கரிக்கிறது. “மாம்”, “அஹம்” என்கிற பத3ங்களில் லக்ஷ்மீஸம்ப3ந்த4த்தை பூர்வக2ண்ட3த்தில் ‘ஶ்ரீமத்’ பத3த்தாலே சொல்லுகிறது. “மாம்”, “அஹம்” என்கிற பத3ங்களில் ஸௌஶீல்ய ஸர்வஜ்ஞத்வாதி3களை த்3வயத்தில் பூர்வக2ண்ட3த்தில் ‘நாராயண’ பத3த்தாலே சொல்லுகிறது. “மாம்” என்கிற பத3த்தில் விக்3ரஹத்தையும், “ஏகம்” என்கிற பத3த்தில் அர்த்த2த: வந்த அவதா4ரணார்த்த2த்தையும் “சரணௌ” என்கிற பத3த்தாலே சொல்லுகிறது. சரமஶ்லோகத்தில் ‘சரண’ ஶப்33த்தின் அர்த்த2த்தையும், இங்குற்ற ‘சரண’ ஶப்33த்தாலே சொல்லுகிறது. “ஸர்வத3ர்மாந் பரித்யஜ்ய”, “வ்ரஜ”, “த்வா”, “ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மாஶுச:” என்கிற பத3ங்களின் அர்த்த2ங்களை “ப்ரபத்3யே” என்கிற பத3த்தாலே சொல்லுகிறது. அகாரத்தில் ஸ்வரூபாநுப3ந்தி4யான லக்ஷ்மீஸம்ப3ந்த3த்தையும், “நாராயண” பத3த்தில் நாரஶப்33த்தின் அர்த்த2த்தையும், இங்குற்ற நாராயண லக்ஷ்மீஸம்ப3ந்த4த்தையும் உத்தரக2ண்ட3த்திலே “ஶ்ரீமதே” என்கிற பத3த்தில் சொல்லுகிறது. அகாரத்தில் அர்த்த2த்தையும் லுப்தசதுர்த்தி2யில் அர்த்த2த்தையும் உத்தரக2ண்ட3த்தில் நாராயணபத3த்தாலும், சதுர்த்தி2யாலும் சொல்லுகிறது. ப்ரணவத்தில் மத்4யமாக்ஷரத்தையும், நமஸ்ஸின் அர்த்த2த்தையும், உத்தரக2ண்ட3த்தில் நமஸ்ஸாலே சொல்லுகிறது. “மத்ஸ்யத்தினுடைய ஆகாரமெல்லாம் ஜலமயமாயிருக்குமாப்போலே, ஶ்ரீமானுடைய வடிவத்தனையும் ஶ்ரீமயமாய் இருக்கும்” என்று பெரியமுதலியார் அருளிச்செய்வர்.

பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்

ரஹஸ்யத்ரய தீபிகை முற்றிற்று.

 

 

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.