6000 Padi Centum 03

ஸ்ரீ:

ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த

திருவாய்மொழி

பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த

ஆறாயிரப்படி வ்யாக்2யாநம்

 

பகவத் விஷயம்   –    மூன்றாம் பத்து

3-1

முதல் பாட்டு

முடிச்சோதியாய் உனதுமுகச்சோதிமலர்ந்ததுவோ*

அடிச்சோதிநீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ*

படிச்சோதியாடையொடும் பல்கலனாய்* நின்பைம்பொன்

கடிச்சோதிகலந்ததுவோ திருமாலேகட்டுரையே.

வ்யா:-  (முடிச்சோதி) திருமலையை அநுப4வித்துச் செல்லாநிற்கச்செய்தே, திருமலையிலே அழகரைக்கண்டு ப்ரீத்யதிசயத்தாலே அழகருடைய திருவணிகலங்களுக்கும் தி3வ்யாவயவங்களுக்கும் உண்டான சேர்த்தியழகாலுள்ள அழகை விஸ்மிதராய்க்கொண்டு பேசுகிறார்.

இரண்டாம் பாட்டு

கட்டுரைக்கில்தாமரை நின்கண்பாதம்கையொத்வா*

சுட்டுரைத்தநன்பொன் உன்திருமேனியொளியொத்வாது*

ஒட்டுரைத்துஇத்வுலகுன்னைப் புகழ்வெல்லாம்பெரும்பாலும்*

பட்டுரையாய்ப்புற்கென்றே காட்டுமால்பரஞ்சோதி.

வ்யா:-  (கட்டுரைக்கில்) மெய்சொல்லில் தாமரை கண்பாதங்ககைளுக்கு நித3ர்சநமாகமாட்டாது.  கட்டுரைத்த நன்பொன் உன் திருமேனிக்கு நித3ர்சநமாகமாட்டாது. இப்படி யிருக்கச்செய்தே இவற்றாய் த்3ருஷ்டாந்தமாகச் சொல்லியிருந்த லோகம் உன்னைப் புகழாநிற்கும்; அத்த்3ருஷ்டாந்தமாகச் சொல்லுகிறவையெல்லாம் த்3ருஷ்டாந்தமாகமாட்டாமையன்றியே, உனக்கு நிகர்ஷத்தை ஆவாஹிக்குமென்று கொண்டு தி3வ்யாவ யவக3தமான அழகைப் பேசுகிறார்.

மூன்றாம் பாட்டு

பரஞ்சோதிநீபரமாய் நின்னிகழ்ந்துபின்* மற்றோர்

பரஞ்சோதியின்மையின் படியோவிநிகழ்கின்ற*

பரஞ்சோதிநின்னுள்ளே படருலகம்படைத்த* எம்

பரஞ்சோதிகோவிந்தா பண்புரைக்கமாட்டேனே.

வ்யா:-  (பரஞ்சோதி) நீ இப்படி அழகினால் எல்லாரிலும் மேற்பட்டு வர்த்தியாநின்று. பின்பு, மற்று உன்னைப்போலே அழகியாரில்லாமையாலே படியோவி வர்த்திக்கையாலே பரஞ்சோதிச்சப்3தா3பி4தே4யனாய், ஸர்வஜக3த்காரணத்வ ப்ரயுக்த நிரவதி4க தேஜஸ்ஸையுடையவனாய், நிரவதி4க ஸௌசீல்ய விசிஷ்டனாயிருந்த உன்னுடைய இந்த கு3ணங்கள் எனக்குச் சொல்ல நிலமல்ல என்கிறார்.

நான்காம் பாட்டு

மாட்டாதேயாகிலும் இம்மலர்தலைமாஞாலம் *நின்

மாட்டாயமலர்புரையும் திருவுருவம்மனம்வைக்க*

மாட்டாத பலசமயமதிகொடுத்தாய் மலர்த்துழாய்*

மாட்டேநீமனம்வைத்தாய் மாஞாலம்வருந்தாதே.

 

வ்யா:-  (மாட்டாதே)  ‘’இப்படி போ4க்3யனாயிருந்த எம்பெருமானை இந்த லோகம் இழந்து போகிறபடிகாண்!” என்று கொண்டு இன்னாதாகிறார்.

ஐந்தாம் பாட்டு

வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின்சுடருடம்பாய்*

வருந்தாதஞானமாய் வரம்பின்றிமுழுதியன்றாய்*

வருங்காலம்நிகழ்காலம் கழிகாலமாய்* உலகை

ஒருங்காக அளிப்பாய்சீர் எங்கு உலக்க ஓதுவனே.

வ்யா:-  (வருந்தாத) “இப்படி என்ன தபஸ்ஸுபண்ணிப் பெற்றதோ?” என்னும்படி அதிகல்யாணமாய், ஸ்வாபா4விகமாய், நிரதிஶயதேஜோமயமாயிருந்த திருவுடம்பை உடையனாய், ஸ்வாபா4விகா ஸங்குசித தி3வ்யஜ்ஞாந விஶிஷ்டனாய், ஸர்வ காலமும் ஒருபடியே ஸர்வாத்ம ரக்ஷணைக ஸ்வபா4வனாயிருந்த உன்னுடைய கு3ண்ங்களை நான் எங்கே முடியச்சொல்லுவது? என்கிறார்.

ஆறாம் பாட்டு

ஓதுவாரோத்தெல்லாம் எத்வுலகத்துஎத்வெவையும்*

சாதுவாய்நின்புகழின் தகையல்லால்பிறிதில்லை*

போதுவாழ்புனந்துழாய்முடியினாய்* பூவின்மேல்

மாதுவாழ்மார்பினாய் என்சொல்லியான்வாழ்த்துவனே.

வ்யா:-  (ஓதுவார்) ஸர்வலோகங்களிலும் உள்ள அத்4யேதாக்கள் எல்லாராலும் ஓதப்படுகிற ஸர்வவேத3ங்களாலும் அளவிடமுடியாத கல்யாண கு3ணங்களையுடையவனாய். நிரதிஶயஸௌந்த3ர்யாதி3 கல்யாண கு3ணக3ணநிதி4யாய், ச்ரிய:பதியாயிருந்த உன்னை நானொருவன் எத்தைச் சொல்லிப் புகழ்வது? என்கிறார்.

ஏழாம் பாட்டு

வாழ்த்துவார்பலராக நின்னுள்ளே நான்முகனை*

மூழ்த்தநீருலகெல்லாம் படையென்றுமுதல்படைத்தாய்*

கேழ்த்தசீர் அரன்முதலாக் கிளர்தெய்வமாய்க்கிளர்ந்து*

சூழ்த்தமரர்துதித்தால் உன்தொல்புகழ்மாசூணாதே.

வ்யா:-  (வாழ்த்துவார்) “நீர் ஒருவராகையாலே வாழ்த்த முடியாது என்கிறீராகில், பலரோடே நின்று வாழ்த்தினாலோ?” என்னில்.  “வாழ்த்துவார் பலராக ஆகிறார்.  நீ படைத்த ப்3ரஹ்மாவாலே ஸ்ருஷ்டரான ருத்3ராதி3 தே3வதைகளிறே ஏத்துவார்; அவர்களும் உன்னுடைய கு3ணங்களை முடிய ஏத்தவல்லரோ? ஏத்துகைக்குத்தான் அர்ஹரோ? அல்லரிறே” என்கிறார்.

எட்டாம் பாட்டு

மாசூணாச்சுடருடம்பாய் மலராதுகுவியாது*

மாசூணாஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்*

மாசூணாவான்கோலத்து அமரர்கோன்வழிப்பட்டால்*

மாசூணாஉனபாத மலர்ச்சோதிமழுங்காதே.

வ்யா:-  (மாசூணா) அந்த தே3வதைகளோடே கூட, ஸர்வாதி4பதியாய் நிர்தோ3ஷ ஜ்ஞாநனான சதுர்முக2ன் நின்று  ஏத்தினாலோ? என்னில்; ஹேயப்ரதயநீகமாய், தேஜோமயமாய், வ்ருத்3தி4க்ஷயாதி3 விகாரரஹிதமான தி3வ்யரூபத்தையுடையையாய், ஹேய ப்ரத்யநீக ஸார்வஜ்ஞ்யாத்3யஶேஷ கல்யாண கு3ணங்களையுடையையாயிருந்த உன் திருவடி மலர்களை அந்தச் சதுர்முக2ன்தான் ஏத்தவல்லனோ? யோக்3யனோ? இப்படியிருக்கிற உன்னை நான் எத்தைச் சொல்லி வாழ்த்துவது? என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

மழுங்காதவைந்நுதிய சக்கரநல்வலத்தையாய்*

தொழுங்காதற்களிறளிப்பான் புள்ளூர்ந்துதோன்றினையே*

மழுங்காத ஞானமே படையாக மலருலகில்*

தொழும்பாயார்க்களித்தால் உன்சுடர்ச்சோதிமறையாதே.

அவ:- (மழுங்காத) பின்னையும் அவனுடைய கு3ணங்களை ஏத்தியல்லது த4ரிக்கமாட்டாமையாலே, அவனுடைய கு3ணங்களைச் சொல்லி ஏத்துகிறார்.

வ்யா:– உன்னுடைய ஆச்ரிதவாத்ஸல்யமாகிற மஹாகு3ணத்தை ஒருவரும் அறியாத தொருபடி ஸங்கல்பஜ்ஞாநத்தாலே ஆஶ்ரிதனான ஸ்ரீக3ஜேந்த்3ராழ்வானை ரக்ஷித்தருளாதே, அந்த ஆச்ரிதவாத்ஸல்யம் ஸர்வலோகவிதி3தமாம்படி திருவாழியை ஏந்திக்கொண்டு பெரிய திருவடிமேலே வந்து தோன்றியருளி, என்னை உண்டாக்கியருளினாய் என்கிறார்.

பத்தாம் பாட்டு

மறையாயநால்வேதத்துள் நின்றமலர்ச்சுடரே*

முறையால் இத்வுலகெல்லாம் படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்தாய்*

பிறையேறுசடையானும் நான்முகனும்இந்திரனும்*

இறையாதல்அறிந்தேத்த வீற்றிருத்தல்இதுவியப்பே.

வ்யா:-  (மறை) ப4க்திஹீநர்க்கு உன்னை அறிய வொண்ணாதபடி மறைத்துக்கொண்டிருக்கிற ஸர்வவேத3ங்களி – னாலும் ப்ரதிபாத்3யனாய்.  ப்ராப்தியாலே ஜக3த் ஸ்ருஷ்டி ஸ்தி2தி ஸம்ஹாராதி3 ஹேதுபூ4தனாயிருந்த உன்னுடைய ஸர்வேஶ்வரத் -வத்தை அறிந்து உன்னை ஏத்துகைக்கு விஷயமாக உன்னைக் கொடுத்துக்கொண்டிருக்கிற இருப்பு உனக்கோர் ஏற்றமோ? அன்றிறே. இப்பட்யிருக்கிற உன்னை நான் எத்தைச் சொல்லி ஏத்துவது? என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

வியப்பாயவியப்பில்லா மெய்ஞ்ஞானவேதியனை*

சயப்புகழார்பலர்வாழும் தடங்குருகூர்ச்சடகோபன்*

துயக்கின்றித்தொழுதுரைத்த ஆயிரத்துள் இப்பத்தும்*

உயக்கொண்டுபிறப்பறுக்கும் ஒலிமுந்நீர்ஞாலத்தே.

வ்யா:-  (வியப்பாய) லோகத்தில் விஸ்மயநீயமானவற்றை விஸ்மயநீயமாகவுடையனன்றியே, யதா2பூ4தவாதி3யான ஸர்வ வேத3ங்களாலும் ப்ரதிபாத்3யனாயிருந்தவனை, ப43வத் கைங்கர்ய ரதித்வமாகிற கல்யாணமான புகழையுடையார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன், ஓரஜ்ஞாநக3ந்த4மில்லாதபடி ஸாக்ஷாத் கரித்துத் தொழுதுரைத்த இத்திருவாய்மொழி, ப43வத் ஸாக்ஷாத் கார விரோதி4 ஸம்ஸாரத்தைப் போக்கும் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

ப்ரவேம்    3-2

முந்நீர்ஞாலம்ப்ரவேம்

(முந்நீர்ஞாலம்) இப்படி ஸாக்ஷாத்குருதனான எம்பெருமானோடு, தம்முடைய ப்ரக்ருதி ஸம்ப3ந்த4த்தாலே யதா2மநோரத2ம் ஸம்ஶ்லேஷிக்கப் பெறாமே நிர்மர்யாத3வ்ய ஸநஸாக3ராந்தர் நிமக்4நராய்க்கொண்டு கூப்பிடுகிறார்.

முதல்பாட்டு

முந்நீர்ஞாலம்படைத்த எம்முகில்வண்ணனே*

அந்நாள்நீதந்த ஆக்கையின் வழி உழல்வேன்*

வெந்நாள் நோய்வீய வினைகளைவேரறப்பாய்ந்து*

எந்நாள்யானுன்னை இனிவந்துகூடுவனே.

வ்யா:-  ஸம்ஸார்யாத்மாக்கள் எல்லார்பக்கலிலும் சென்று வெள்ளங்கொள்ளும்படி கரைபுரண்டு பெருகுகிற உன்னுடைய நிரவதி4க காருண்ய வெள்ளத்தாலே, உன் திருவடிகளைச் சேர்கைக்கு உபாயமாக, கரணகளேப3ராத்3யுபகரணங்களை ஸர்வாத்மாக்களுக்கும் கொடுத்தருளினவனே! அன்று நீ எனக்குத் தந்தருளின அந்த உபகரணத்தைக் கொண்டு உன் திருவடிகளைச் சேரமாட்டாதே பின்னையும் ஸம்ஸார ஸமுத்3ரத்திலே போய்விழுந்தேன்; இப்படி உன்னைப் பிரிந்திருக்கிற இந்தக் காலமாகிற காலாக்3நி ஸத்3ருஶமான நோய் விடும்படி, உன்னைப் பிரிந்திருக்கைக்கு ஹேதுவான என்னுடைய வினைகளை வேரறப் பாய்ந்து என்று நான் உன்னை வந்து கூடுவது? என்கிறார்.

இரண்டாம் பாட்டு

வன்மாவையமளந்த எம்வாமனா!* நின்

பன்மாமாயப் பல்பிறவியில் படிகின்றயான்*

தொன்மாவல்வினைத் தொடர்களைமுதலரிந்து*

நின்மாதாள் சேர்ந்து நிற்பதுஎஞ்ஞான்றுகொலோ*.

வ்யா:-  (வன்மா) இப்படி நீ தந்த உபகரணத்தைக்கொண்டு பின்னையும் நான் ஸம்ஸார ஸமுத்3ரத்திலே போய் விழுமளவில் என்னை எடுத்தருளுகைக்காக இங்கே புகுந்தருளினாய்;  பின்னையும் உனக்கெட்டாததொருபடி நான் அந்த ஸம்ஸாரமாகிற கடலின் உள்ளேபோய் அழுந்தா நின்றேன்.  இப்படி இக்கடலிலே அழுந்துகைக்கு ஹேதுவாய் அநாதி3ஸித்34மாய் மஹாப3லமா யிருந்த என்னுடைய பாபபரம்பரைகளை முதலரிந்து உன்னுடைய நிரவதி4க போ4க்3யமான திருவடிகளை நான் சேர்ந்து பின்னை ஒருகாலமும் பிரியாதே நிற்பாது என்றோ? என்கிறார்.

மூன்றாம் பாட்டு

கொல்லாமாக்கோல் கொலைசெய்துபாரதப்போர்*

எல்லாச்சேனையும் இருநிலத்து அவித்தஎந்தாய்*

பொல்லாவாக்கையின் புணர்வினையறுக்கலறா*

சொல்லாய்யான்உன்னைச் சார்வதோர்சூழ்ச்சியே.*

வ்யா:-  (கொல்லா) இப்படி ஸ்ரீவாமநனாய் வந்து புகுந்தருளின அதுவும் எனக்குக் கார்யகரமன்றியேயொழிந்த -வாறே, பின்னையும் என் பக்கலுள்ள அபி4நிவேஶத்தாலே ஸ்ரீவஸுதே3வர் திருமகனாய் வந்து பிறந்தருளி, ஸர்வவசீகரணமாய், நிரதிஶயாஶ்சர்யமான தி3வ்யசேஷ்டிதங்களைப்பண்ணியருளாநின்று கொண்டு ஸர்வஸுலப4னாய் நின்றருளின அன்றும் உன் திருவடிகளைச் சேரப்பெற்றிலேன்; இப்படி அநர்த்த2கரமாய், உன்னாலல்லது அறுக்க முடியாதிருக்கிற இந்த ப்ரக்ருதி ஸம்ப3ந்த4த்தை நீயே அறுத்து நான் உன்னைச் சேருவதொரு விரகு பார்த்தருளாய் என்கிறார்.

நான்காம் பாட்டு

சூழ்ச்சிஞானச் சுடரொளியாகி* என்றும்

ஏழ்ச்சிக்கேடின்றி எங்கணும் நிறைந்தஎந்தாய்!

தாழ்ச்சிமற்றெங்கும் தவிர்ந்து நின்தாளிணைக்கீழ்

வாழ்ச்சி* யான்சேரும்வகை அருளாய்வந்தே.

வ்யா:-  (சூழ்ச்சி) ஸர்வாத்மாக்களையும் உன் கருத்தில் வர்த்திப்பிக்கவற்றாய், நித்யஸித்34மாய், ஸர்வக3தமாயிருந்த உன்னுடைய தி3வ்யஜ்ஞானமும் எனக்குக் கார்யகரமன்றியே யொழிந்தது; இப்படி உன்னுடைய ஜக3த்ஸ்ருஷ்கி தி3வ்யாவதார சேஷ்டித தி3வ்யஜ்ஞாநாதி3களை எனக்குக் கார்யகரமாகாமே ப்ரததிப3ந்தி4க்கிற ஸமஸ்த ப்ராக்ருத விஷய ப்ராவண்யத்தையும் தவிர்ந்து, நின்தாளிணைக்கீழ் வாழ்ச்சியான் சேரும்படி, சக்ரவர்த்தி திருமகனாயும் ஸ்ரீ வஸுதே3வர் திருமகனாயும் வந்து பிறந்தருளி -னாற்போலே இன்னமும் வந்து பிறந்தருளியே செய்தருளவேணும் என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

வந்தாய்போலேவந்தும் என்மனத்தினை நீ*

சிந்தாமல்செய்யாய் இதுவேயிதுவாகில்*

கொந்தார்காயாவின் கொழுமலர்த்திருநிறத்த

எந்தாய்* யான்உன்னை எங்குவந்தணுகிற்பனே*.

வ்யா:-  (வந்தாய்) அப்படி வருகை திருவுள்ளமன்றாகில், ஸ்ரீக3ஜேந்த்3ராழ்வானுக்கு வந்தாற்போலேயாகிலும் வந்து என் மனத்தினை நீ சிந்தாமற்செய்கிறிலை. நீ செய்யாதொழிந்தால் நான் என்னுடைய யத்நத்தால் உன்னை வந்து சேருகை என்றொரு பொருளில்லை; இனி உன்னுடைய அழகைக் காணப் பெறாதே இழந்துபோ மித்தனையாகாதே நான்? என்கிறார்.

ஆறாம் பாட்டு

கிற்பன்கில்லேனென்றிலன் முனநாளால்*

அற்பசாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன்*

பற்பல்லாயிரம் உயிர்செய்த பரமா!* நின்

நற்பொற்சோதித்தாள் நணுகுவதுஎஞ்ஞான்றே?

வ்யா:-  (கிற்பன்)  “இதுக்கு முன்புள்ள காலமெல்லாம் உன் திருவடிகளைச் சேருகைக்கு ஈடாயிருப்பதொரு ஸுக்ருதத்தைச் செய்வோம் என்று செய்தல். அதுக்கு விரோதி4யான து3ஷ்க்ருதத்தைத் தவிருவோமென்று தவிர்தல் செய்திலேன்; எடுத்த படிசெய்து திரிந்தேன்; இப்படிசெய்து திரிந்து அதிக்ஷுத்3ரமான விஷயரஸத்தை பு4ஜித்து உன் திருவடிகளைச் சேருகைக்கு அர்ஹனன்றிக்கே அகன்று போனேன்” என்று நசையற்றுப்போய்த் துவளப்புக்க வாறே பின்னையும் அவனுடைய ஸர்வாத்மநிர்மாணாநுகு3ண நிரதிசயசக்தியோக3த்தை அநுஸந்தி4த்துப்போய் உஜ்ஜீவித்து, “இந்த அபர்யந்தமான ஆத்மாக்கள் எல்லாரையும் ஸ்ருஷ்டித் தருளின உனக்கு என்னை ஒருவனையும் உன் திருவடிகளுக்கு ஈடாம்படி பண்ணியருளுகை ஒரு பொருளோ? ஆனபின்பு உன் திருவடிகளை என்று நான் சேர்வது?” என்கிறார்.

ஏழாம் பாட்டு

எஞ்ஞான்றுநாம்இருந்திருந்து இரங்கிநெஞ்சே*

மெய்ஞ்ஞானமின்றி வினையியல்பிறப்பழுந்தி*

எஞ்ஞான்றும்எங்கும் ஒழிவறநிறைந்துநின்ற*

மெய்ஞ்ஞானச்சோதிக் கண்ணனைமேவுதுமே.

வ்யா:-  (எஞ்ஞான்றும்) ப43வத்ப்ராப்த்யுபாயமான தத்ஸ்வரூப ரூப கு3ணவிபூ4தி விஷய யாதா2த்ம்ய ஜ்ஞாநஹீநராய், தத்ப்ராப்திவிரோதி4 ஸம்ஸாரத்திலே ப்ரவணருமாயிருப்பது; ஸர்வஜ்ஞனாகையாலே நம்முடைய இந்த அநர்ஹதையை அவனறிவது; ‘எஞ்ஞான்று நாம் இருந்திருந்து அவனைக் காண வேணும்?’ என்று வ்யஸநப்படுகை; அவனைக் காண்கைக்கு நமக்கு எங்கே உபகரணம்? என்கிறார்.

எட்டாம் பாட்டு

மேவுதுன்பவினைகளை விடுத்துமிலேன்*

ஓவுதலின்றி உன்கழல்வணங்கிற்றிலேன்*

பாவுதொல்சீர்க்கண்ணா! என்பரஞ்சுடரே!*

கூவுகின்றேன்காண்பான் எங்கெய்தக்கூவுவனே.

வ்யா:-  (மேவு) கர்மயோக3மாதல், ப3க்தியோக3மாதல், ஜ்ஞானயோக3மாதல் ஒன்று செய்கிறிலேன்; செய்யாதிருந்துவைத்து, ஸௌசீல்ய வாத்ஸல்ய காருண்யாத்3யஸங்க்2யேய தி3வ்யாத்மகு3ணங்களாலும், நிரதிசயௌஜ்ஜ்வல்ய ஸௌந்த3ர்ய ஸௌக3ந்த்4யாத்3யஸங்க்2யேய தி3வ்யரூபகு3ணங்களாலும் பரிபூர்ணனாயிருந்த உன்னைக்காணவேணும் என்றென்று கூப்பிடாநின்றேன்; இப்படி கூப்பீடு உன்னைக் காண்கைக்கு எங்கே கார்யகரமாகிறது? என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

கூவிக்கூவிக் கொடுவினைத்தூற்றுள்நின்று*

பாவியேன்பலகாலம் வழிதிகைத்துஅலமருகின்றேன்*

மேவியன்றாநிரைகாத்தவன் உலகமெல்லாம்*

தாவியஅம்மானை எங்கினித்தலைப்பெய்வனே.

வ்யா:-  (கூவிக்கூவி) அஸக்ய நிஷ்க்ரமணமாய், நிரதிசய து3:க்கா2ஸ்பத3மாயிருந்த கொடுவினைத் தூற்றுள்ளே நின்று பாவியேன் பலகாலமும் கூவிக்கூவி. எம்பெருமான் திருவடிகளில் சென்று சேர்வழி அறியாதே திகைத்து அலமருகின்றேன்; திருவாய்ப் – பாடியிலே ஸர்வஸுலப4னாய்க்கொண்டு வர்த்தித்தருளினவன் திருவடிகளைச் சேரமாட்டிற்றிலேன்; அன்றொரு தே3ச விசேஷத்திலே வர்த்திக்கையாலே சேரப்பெறாதொழியவும் ஸம்ப4விக்கு மன்றோ? என்னில்; ஸர்வதே3சவர்த்திகளான ஸர்வாத்மாக்களும் தன் திருவடிகளினுள்ளே அகப்படும்படி உலகமெல்லாம் தாவியருளின வன்று உன் திருவடிக்ளைச் சேரப்பெற்றிலேன்.  அன்று சேரப்பெறாத நான் என்று சேரவிருக்கிறேன்? சேராதொழியில் இவ்வாத்மா முடிகை நிஸ்சிதம். இனி அவனுடைய ஈச்வரத்வம் விகலமாகவாகாதே புகுகிறது.  இனி ஆத்மாவதி4கமாக அவன் திருவடிகளைச் சேருகை என்றொரு பொருளில்லை என்று நசையற்றுக் கூப்பிடுகிறார்.

பத்தாம் பாட்டு

தலைப்பெய்காலம் நமன்தமர்பாசம்விட்டால்*

அலைப்பூணுண்ணும் அவ்வல்லலெல்லாம்அகல*

கலைப்பல்ஞானத்து என்கண்ணனைக்கண்டுகொண்டு*

நிலைப்பெற்றுஎன்னெஞ்சம்பெற்றது நீடுயீரே.

வ்யா:-  (தலைப்பெய்காலம்) உத்க்ராந்தி வ்யஸனம்போலே அதிகோ4ரமாய் அதிது3ஸ்ஸஹமாயிருந்த என்னுடைய அந்த ப43வத்3விஸ்லேஷ ஜநித நிரதி4க வ்யஸநமும்,  ”அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு வைகல்யம் வருகிறது” என்றுள்ள மஹாப4யமும் நிஸ்சேஷமாக எல்லாமும்போய, என் நெஞ்சும் நிலைநின்று, என்னுடைய ஆத்மாவும் நித்யமாம்படி சாஸ்த்ரைக ஸமதி43ம்யனான எம்பெருமானைத் திருமலையிலே கண்ணாலே காணப்பெற்றேன் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

உயிர்களெல்லாவுலகமு முடையவனை*

குயில்கொள்சோலைத் தென்குருகூர்ச்சடகோபன்*

செயிரில்சொல்லிசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்*

உயிரின்மேலாக்கை ஊனிடையொழிவிக்குமே.

வ்யா:-  (உயிர்கள்) இப்படி ஆழ்வார் உளராகையாலே எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வமும் அவிகலமாய், திருநகரியு -மடங்க ஸம்ருத்34மாயிற்று என்கிறது – (உயிர்களெல்லாவுலகமு முடையவனைக் குயில்கொள்சோலைத்தென்குருகூர்) என்கிற -விடம்.  இனிமேல் இத்திருவாய்மொழி ப43வத3நுப4வ விரோதி4 யான ப்ரக்ருதி ஸம்ப3ந்த4த்தைப் போக்கும் என்கிறது.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

3-3

முதல் பாட்டு

ஒழிவில்காலமெல்லாம் உடனாய்மன்னி*

வழுவிலா அடிமை செய்யவேண்டுநாம்*

தெழிகுரலருவித் திருவேங்கடத்து*

எழில்கொள்சோதி எந்தைதந்தைதந்தைக்கே.

வ்யா:-  (ஒழிவில் காலம்) இப்படி நிர்வதி4க ஸௌந்த3ர்யாதி3 கல்யாண கு3ணவிசிஷ்டனான திருவேங்கடமுடையானைக்கண்டு லப்3தா4த்ம ஸஞ்ஜீவனராய், அவனுடைய கு3ணங்களாலே தா3ஸ்ய முபாக3தராயிருந்த ஆழ்வார், ‘’திருவேங்கடமுடையானை பு4ஜிக்க வேணும்’’ என்று தம்முடைய திருவுள்ளத்திலே கோலி; அதுக்குத் துணையாகத் தம்முடைய திருவுள்ளத்தையும், தம்முடைய திருவுள்ளம்போலே ப43வதே3க போ43ராயிருப்பாரையும் குறித்து “திருவேங்கடமுடையானை பு4ஜிக்கவாருங்கள்; அவனை பு4ஜிக்கை யாவது – அவன் திருவடிகளிலே ஸர்வதே3ச ஸர்வகால ஸர்வா வஸ்தோ2சித ஸர்வசேஷவ்ருத்தியையும் பண்ணுகை” என்கிறார்.

இரண்டாம் பாட்டு

எந்தைதந்தைதந்தை தந்தைதந்தைக்கும்

முந்தை* வானவர் வானவர்கோனொடும்*

சிந்துபூமகிழும் திருவேங்கடத்து*

அந்தமில்புகழ்க் காரெழிலண்ணலே.

வ்யா:-  (எந்தை தந்தை) திருநாட்டிற் சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதன்றோ எல்லார்க்கும் ப்ரமப்ராப்யமென்னில்; “திருநாட்டிலுள்ள நித்யஸித்34 புருஷர்களும் திருவேங்கடமுடையான் கு3ணங்களிலே அகப்பட்டு அவன் திருவடிகளிலேயன்றோ வந்து அடிமை செய்கிறது; ஆதலால் தன்னுடைய நிரவதி4க கல்யாண கு3ணங்களாலே தன் அடியார்க்கு என்னை ஆட்படுத்தியருளின திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யுமதுவே நமக்குப் பரமப்ராப்யம்; அவனுக்கு அடிமைசெய்ய வேண்டும் நாம்; வாருங்கள்”  என்கிறார்.

மூன்றாம் பாட்டு

அண்ணல்மாயன் அணிகொள்செந்தாமரைக்

கண்ணன்* செங்கனிவாய்க் கருமாணிக்கம்*

தெண்ணிறைசுனைநீர்த் திருவேங்கடத்து*

எண்ணில்தொல்புகழ் வானவரீசனே.

வ்யா:-  (அண்ணல்) ஏவம்ரூபமான ஸ்வாநுப4வரூப ஸம்ருத்3தி4யைத் தந்தருளுமோ? என்னில்; நித்ய நிரவத்3ய நிரதிசயௌஜ்ஜ்வல்ய ஸௌந்த3ர்யாத்3யஸங்க்2யேய கல்யாண கு3ணக3ண மஹோத3தி4யாயிருந்த தன்னை அஸங்க்2யேயரான நித்யஸித்34 புருஷர்கள் எல்லாருக்கும் பு4ஜிக்கக் கொடுத்துக் கொண்டிருக்கிறானொரு பரமோதா3ரனல்லனோ அவன், ஆதலால் உங்களுக்கும் தன்னை பு4ஜிக்கத் தந்தருளும் என்கிறார்.

நான்காம் பாட்டு

ஈசன்வானவர்க்கென்பன் என்றால்* அது

தேசமோ திருவேங்கடத்தானுக்கு?

நீசனேன் நிறைவொன்றுமிலேன்* என்கண்

பாசம்வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கே.

 

வ்யா:-  (ஈசன்) ஸ்வரூபத்தினாலும், ஸ்வபா4வத்தினாலும், மற்றும் ஸர்வப்ரகாரத்தினாலும் “இனியில்லை” என்னும்படி தண்ணியனாயிருந்த என்பக்கலிலே ஸங்க3த்தைப்பண்ணி, எனக்குத் தன்னை போ4க்3யமாகத் தந்தருளின மஹாகு3ணத்தை யுடைய அவனுக்கு,  ‘அயர்வறும் அமரர்களு(1-1-1)க்குத் தன்னைக் கொடுக்கும்’ என்னும் இது ஓர் ஏற்றமோ? என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

சோதியாகி எல்லாவுலகும்தொழும்*

ஆதிமூர்த்தியென்றால் அளவாகுமோ?*

வேதியர்முழுவேதத் தமுதத்தை*

தீதில்சீர்த் திருவேங்டத்தானையே.

வ்யா:-  (சோதியாகி) எனக்குங்கூடத் தன்னைத் தந்தருளி -னான் என்னும் இதுதான் ஓர் ஏற்றமோ, தன்படியைப் பார்த்தால்? அவனுடைய ஔதா3ர்யாதி3 கு3ணங்களைச் சொல்லுமிடத்தில் அந்த வேத3ங்களே சொல்ல வேண்டாவோ? நமக்கு நிலமோ? ஆதலால் இப்படி பரமோதா3ரனான திருவேங்கடமுடையான், தன் திருவடிகளில், அடிமை செய்கையாகிற ஸம்பத்தை உங்களுக்குத் தந்தருளும் என்கிறார்.

ஆறாம் பாட்டு

வேங்கடங்கள் மெய்ம்மேல்வினைமுற்றவும்*

தாங்கள்தங்கட்கு நல்லனவேசெய்வார்*

வேங்கடத்துறைவார்க்கு நமவென்ன

லாங்கடமை* அதுசுமந்தார்கட்கே.

வ்யா:-  (வேங்கடங்கள்) இந்த ப்ராப்யத்தைப் பெறுகைக்கு உபாயம் ஏதென்னில்; ஸர்வாதி4காரமாய் அத்யந்த ஸுகரமா யிருந்த வேங்கடத் துறைவார்க்கு ‘நம:’ என்கிற இச்சொல்லைச் சொல்லவே, அந்தக் கைங்கர்ய ப்ரதிப3ந்த4கமான பாபங்களும், கரிஷ்யமாணமான பாபங்களும் எல்லாம் நிஶ்ஶேஷமாக த3க்34மாய்ப்போம்; பின்னைத் தந்தாம் உகந்தபடியில்லாம் செய்யப்பெறலாம் என்கிறார்.

ஏழாம் பாட்டு

சுமந்துமாமலர் நீர்சுடர்தூபங்கொண்டு*

அமர்ந்துவானவர் வானவர்கோனொடும்*

நமன்றெழும் திருவேங்கடம்நங்கட்கு*

சமன்கொள்வீடுதரும் தடங்குன்றமே.

வ்யா:-  (சுமந்து) இஸ்ஸம்ருத்3தி4 பெறுகைக்குத் திருவேங்கடமுடையானை இப்படி வருந்தவேணுமோ? பரமப்ராப்ய பூ4த ப43வத் கைங்கர்யாபேக்ஷராயிருந்த நம் பக்கல் கு3ண நிரூபண பூர்வகமாக நமக்கு அந்த ப்ராப்யத்தைத் தவிருகையாகிற இப்பழுதொன்றும் வாராதபடி நிர்ஹேதுகமாகத் திருமலைதானே அயர்வறும் அமரர்களுக்குக் கொடுத்தாற்போலே திருவேங்கட -முடையான் திருவடிகளிலே தான் செய்யும் சேஷவ்ருத்தியெல்லாம் நமக்குத்தரும் என்கிறார்.

எட்டாம் பாட்டு

குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவன்*

அன்றுஞாலம் அளந்தபிரான்* பரன்

சென்றுசேர் திருவேங்கடமாமலை*

ஒன்றுமேதொழ நம்வினை ஓயுமே.

வ்யா:-  (குன்றமேந்தி) ஸ்வரூபகு3ண சேஷ்டிதாதி3கள் எல்லாவற்றாலும் ஸ்வஸ்ய பரஸ்ய ச நிரதிசய போ4க்3ய பூ4தனான எம்பெருமானுக்குங்கூட பரமப்ராப்யமான திருமலை, தான் வேறொன்றைத் தரவேணுமோ, தானே பரமப்ராப்யமன்றோ; ஆதலால் திருமலை தன்னையே அநுப4விக்க, நம்முடைய க்லேசமெல்லாம்போம் என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப்பிணி*

வீயுமாறுசெய்வான் திருவேங்கடத்

தாயன்* நாள்மலராம் அடித்தாமரை*

வாயுள்ளும்மனத்துள்ளும் வைப்பார்கட்கே.

வ்யா:-  (ஓயுமூப்பு) திருவேங்கடமுடையனன்றோ ப்ராப்யம், திருமலையே ப்ராபயமென்று சொல்லுவானென்? என்னில்; திருவேங்கடமுடையானுடைய ப்ராப்யத்வமும் திருமலையோடுள்ள ஸம்ப3ந்த4த்தாலே வந்ததாதலால் திருமலையே ப்ராப்யம் என்கிறார்.

பத்தாம் பாட்டு

வைத்தநாள்வரை எல்லைகுறுகிச்சென்று*

எய்த்திளைப்பதன் முன்னம்அடைமினோ*

பைத்தபாம்பணையான் திருவேங்கடம்*

மொய்த்தசோலை மொய்பூந்தடந்தாழ்வரே.

வ்யா:-  (வைத்த) ஆதலால் ஈண்டெனச்சென்று திருமலையை அநுப4வியுங்கள் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

தாள்பரப்பி மண்தாவிய ஈசனை*

நீள்பொழில் குருகூர்ச்சடகோபன்சொல்*

கேழிலாயிரத்து இப்பத்தும்வல்லவர்*

வாழ்வர்வாழ்வெய்தி ஞாலம்புகழவே.

வ்யா:-  (தாள்பரப்பி) ஸர்வாத்மாக்களுக்கும் பு4ஜிக்கலாம் -படி திருவடிகளைப் பரப்பி இந்த லோகத்தை அளந்தருளின திருவேங்கடமுடையானைச் சொன்ன இத்திருவாய்மொழியை வல்லார் – லோகமெல்லாம் புகழும்படி எல்லாவற்றிலும் மேற்பட்ட திருமலையாகிற மஹாசம்பத்தைப்பெற்று வாழ்வர் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

ப்ரவேம்    3-4

புகழும்ப்ரவேம்

(புகழும்) இப்படி திருவேங்கடமுடையானை பு4ஜிக்கவாருங்கள் என்று, தம்முடைய திருவுள்ளத்தையும், திருவுள்ளம்போலே ப43வத் கைங்கர்யைகரதிகளாயிருப்பாரையும் அழைத்து, அவனை பு4ஜிக் -கையிலே ப்ரவ்ருத்தராய்ச் சொல்லாநிற்க, நடுவே திருமலையி -னுடைய போ4க்3யதையைக்கண்டு திருமலையை அநுப4வித்து, பின்னையும் திருவேங்கடமுடையானுடைய ஸர்வவஸ்து சரீரித்வத் – தையும், ஸர்வவஸ்துக3தாஶேஷ தோ3ஷைரஸம்ஸ்ப்ருஷ்டத் -வத்தையும், தி3வ்யரூப பூ4ஷணாயுத4 மஹிஷீ பரிஜநாஸ்தா2ந விஶிஷ்டத்வத்தையும் சொல்லி பு4ஜிக்கிறார்.

முதற்பாட்டு

புகழும் நல்லொருவனென்கோ? பொருவில்சீர்ப்பூமியென்கோ*

திகழுந்தண்பரவையென்கோ? தீயென்கோ? வாயுவென்கோ?*

நிகழும் ஆகாசமென்கோ? நீள்சுடரிரண்டுமென்கோ?*

இகழ்வில் இத்வனைத்துமென்கோ? கண்ணனைக்கூவுமாறே.

வ்யா:-  ஸர்வைஸ்ஸம்ஸ்தூயமாநனாய், ஸகல கல்யாண கு3ணவிசிஷ்டனாய், நிருபமனாயிருந்தவனென்று சொல்லுவேனோ? க்ஷமாதி3கு3ணயுக்தமான ப்ருதி2வ்யாதி3 பூ4தங்களுக்கு அந்தராத்ம பூ4தனென்று சொல்லுவேனோ? ப்ரக்ருஷ்ட தேஜோ விசிஷ்டரான சந்த்3ரஸூர்யாதி3களுக்கு அந்தராத்ம பூ4தனென்று சொல்லுவேனோ? அன்றியே, ஒன்றொழி யாமே இந்த ஸர்வ பதா3ர்த்த2ங்களுக்கும் அந்தராத்ம பூ4தனென்று சொல்லுவேனோ? இவனை எங்ஙனே சொல்லுவேன்? என்கிறார்.

இரண்டாம் பாட்டு

கூவுமாறறியமாட்டேன் குன்றங்களனைத்துமென்கோ?*

மேவுசீர்மாரியென்கோ? விளங்குதாரகைகளென்கோ?*

நாவியல்கலைகளென்கோ? ஞானநல்லாவியென்கோ?*

பாவுசீர்க்கண்ணனெம்மான் பங்கயக்கண்ணனையே.

வ்யா:- (கூவுமாறு) மஹீத4ர வர்ஷ நக்ஷத்ர ஸ்ருதி ஸ்ம்ருதீ -திஹாஸபுராணாதி3 ரூபஶப்33 தஜ்ஜந்ய ஜ்ஞாநாதி3களுக்கு ஆத்மபூ4தன் என்கிறது.

மூன்றாம் பாட்டு

பங்கயக்கண்ணனென்கோ? பவளச்செத்வாயனென்கோ?*

அங்கதிரடியனென்கோ? அஞ்சனவண்ணனென்கோ?*

செங்கதிர்முடியனென்கோ? திருமறுமார்பனென்கோ?*

சங்குசக்கரத்தனென்கோ? சாதிமாணிக்கத்தையே.

வ்யா:- (பங்கயக்கண்ணன்) அசேஷதோ3ஷ ப்ரத்யநீகமாய், கல்யாணைகதாநமாய், நிரதிசய தேஜோமயமாய், நிரதிசய தீ3ப்தியுக்த தி3வ்யபூ4ஷணாயுத4 விசிஷ்டமான தி3வ்யரூபத்தை யுடையவனென்று சொல்லுகிறது.

நான்காம் பாட்டு

சாதிமாணிக்கமென்கோ? சவிகொள்பொன்முத்தமென்கோ?*

சாதிநல்வயிரமென்கோ? தவிவில்சீர்விளக்கமென்கோ?*

ஆதியஞ்சோதியென்கோ? ஆதியம்புருடனென்கோ?*

ஆதுமில்காலத்தெந்தை அச்சுதன் அமலனையே.

வ்யா:- (சாதிமாணிக்கம்) ஏவம்வித4 தி3வ்யரூபத்தையுடைய னாய்க்கொண்டு திருநாட்டிலே எழுந்தருளியிருக்கும் என்கிறது.

ஐந்தாம் பாட்டு

அச்சுதனமலனென்கோ? அடியவர்வினைகெடுக்கும்*

நச்சுமாமருந்தமென்கோ? நலங்கடலமுதமென்கோ?*

அச்சுவைக்கட்டியென்கோ? அறுசுவையடிசிலென்கோ?*

நெய்ச்சுவைத்தேறலென்கோ? கனியென்கோ? பாலென்கேனோ?

வ்யா:- (அச்சுதன்) அசேஷதோ3ஷ ப்ரத்யநீகனாய், ஆஸ்ரிதரோடு நித்ய ஸம்ஸ்லேஷ ஸ்வபா4வனாய், ஆஸ்ரிதஜந ஸமஸ்த து3:க்க2 நிரஸநஸ்வபா4வனாய், பரம போ4க்3யனா யிருக்கும் என்கிறது.

ஆறாம் பாட்டு

பாலென்கோ? நான்குவேதப்பயனென்கோ? *சமயநீதி

நூலென்கோ? நுடங்குகேள்வியிசையென்கோ? *இவற்றுள்நல்ல

மேலென்கோ? வினையின்மிக்கபயனென்கோ? *கண்ணனென்கோ?

மாலென்கோ?மாயனென்கோ? வானவராதியையே.

வ்யா:- (பாலென்கோ) பாலென்று சொல்லுவேனோ? ஸர்வவேத3ங்களாலும், ஸர்வவேதா3ர்த்த2நிர்ணாயகமாய் ஹேதுமத்தாயிருந்த ப்3ரஹ்மஸூத்ரபத்3ங்களாலும், பரம புருஷார்த்த2 தயா ப்ரதிபாத்3யமாநனென்று சொல்லுவேனோ? போ4க்3யதையால் அவன் நுடங்கு கேள்வி இசையென்று சொல்லுவேனோ? இங்குச் சொல்லப்பட்ட போ4க்3ய பதா3ர்த்த2ங்கள் எல்லாவற்றிலும் மேற்பட்ட போ4க்3யமென்று சொல்லுவேனோ? ஸகலபுண்யப2லமென்று சொல்லுவேனோ? ஆஸ்ரித ஸுலப4னென்று சொல்லுவேனோ? ஆஸ்ரிதவத்ஸலனெனன்று சொல்லுவேனோ? ஆஸ்சர்யபூ4தனென்று சொல்லுவேனோ? வானவராதி3யை எங்ஙனே சொல்லுவேன்? என்கிறார்.

ஏழாம் பாட்டு

வானவராதியென்கோ? வானவர்தெய்வமென்கோ?*

வானவர் போகமென்கோ? வானவர்முற்றுமென்கோ?*

ஊனமில்செல்வமென்கோ? ஊனமில்சுவர்க்கமென்கோ?*

ஊனமில்மோக்கமென்கோ? ஒளிமணிவண்ணனையே.

வ்யா:- வானவருடைய தா4ரகமென்று சொல்லுவேனோ? அவருடைய தை3வமென்று சொல்லுவேனோ? அவர்களுடைய போ43மென்று சொல்லுவேனோ? அவர்களுடைய ஸர்வஸ்வ -மென்று சொல்லுவேனோ? ஐஹிகமான பூர்ண ஸம்பத்துக்கு ஆத்மபூ4தனென்று சொல்லுவேனோ?  பூர்ணஸ்வர்க்க3 புருஷார்த்த3 த்துக்கு ஆத்மபூ4தனென்று சொல்லுவேனோ? பரமபுருஷார்த்த2 லக்ஷணமோக்ஷத்துக்கு ஆத்மபூ4தனென்று சொல்லுவேனோ? இவனை எங்ஙனே சொன்னால் பூர்ணமாகச் சொல்லிற்றாவது? என்கிறார்.

எட்டாம் பாட்டு

ஒளிமணிவண்ணனென்கோ? ஒருவனென்றேத்தநின்ற*

நளிர்மதிச்சடையனென்கோ? நான்முகக்கடவுளென்கோ?*

அளிமகிழ்ந்துலகமெல்லாம் படைத்தவையேத்தநின்ற*

களிமலர்த்துளவனெம்மான் கண்ணனைமாயனையே.

வ்யா:- (ஒளி மணிவண்ணன்) ஸர்வலோக ஸம்ரக்ஷணைக போ43னாய், ஸர்வஜக3த்ஸ்ரஷ்டாவாய், சதுர்முகா2தி3 ஸர்வஜநைஸ் ஸம்ஸ்தூயமாநனாயிருக்கும் களிமலர்த் துளவனெம்மான் கண்ணனை மாயனை நிரவதி4க ஸௌந்த3ர்ய மஹோத3தி4யென்று சொல்லுவேனோ? லோகமெல்லாம் ஐஸ்வர்யத்தினாலே அத்3விதீய -னென்று சொல்லி ஏத்தும்படி ருத்3ரனுக்கு ஐஸ்வர்யத்தைக் கொடுத்து அவனுக்கு ஆத்மபூ4தனானவன் என்று சொல்லுவேனோ? சதுர்பகா2ந்தாராத்மபூ4தன் என்று சொல்லுவேனோ? எங்ஙனே சொல்லுவேன்? என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

கண்ணனைமாயன்தன்னைக் கடல்கடைந்து அமுதங்கொண்ட*

அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்தன்மேல்*

நண்ணிநன்குறைகின்றானை ஞாலமுண்டுமிழ்ந்தமாலை*

எண்ணுமாறு அறியமாட்டேன் யாவையும்யவரும்தானே.

வ்யா:- (கண்ணனை) ஆஸ்ரித ஸுலப4த்வார்த்த2மாக தத்ஸஜாதீயதயா அவதீர்ணனாய், ஆஸ்சர்யாதி மநோஹர தி3வ்ய சேஷ்டிதங்களையுடையனாய், ஆஸ்ரிதரைக்கைவிடாத ஸ்வபா4வனாய், அநந்த கல்யாணகு3ண விசிஷ்டனாய, அநந்த கல்யாண கு3ண மஹோத3தி4யான திருவனந்தாழ்வானை தி3வ்யசய்யாஸநாதி3களாகவுடையனாய், ஸர்வலோக பரிபாலகனாய், ஸர்வாந்தராத்மபூ4தனான எம்பெருமானை இங்ஙனே சொல்லுவேன் என்று அறிகிலேன் என்கிறார்.

பத்தாம் பாட்டு

யாவையும்யவரும்தானாய் அவரவர்சமயந்தோறும்*

தோய்விலன்புலனைந்துக்கும்சொலப்படான் உணர்வின்மூர்த்தி*

ஆவிசேருயிரினுள்ளால் ஆதுமோர்பற்றிலாத*

பாவனையதனைக்கூடில் அவனையும்கூடலாமே.

வ்யா:- (யாவையும்) இப்படி ஸர்வ வஸ்துக்களோடும் ஆத்மதயா ஸம்ப3ந்த3 முண்டாயிருக்கச்செய்தே, ஹேயப்ரத்யநீக -தயா ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விஸஜாதீயனாய் ஜ்ஞாநஸ்வரூபனா யிருக்கையாலே ஸ்வசரீர பூ4தஸமஸ்தவஸ்துக3த ஸர்வதோ3ஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனாயிருக்கும். இதுகூடுமோ? என்னில்; இந்த சரீரத்திலே வர்த்திக்கிற இந்த ப்ரத்யகா3த்மாவுக்கு இந்த சரீர க3ததோ3ஷங்களினால் அஸம்ஸ்ப்ருஷ்டனாயிருக்கையாகிற இஸ் ஸ்வபா4வங்கூடுமாகில் எம்பெருமானுக்கு இது கூடும் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

கூடிவண்டறையுந்தண்தார்க்கொண்டல்போல்வண்ணன்தன்னை*

மாடலர்பொழில் குருகூர்வண்சடகோபன்சொன்ன*

பாடலோராயித்துள் இவையுமொருபத்தும்வல்லார்*

வீடிலபோகமெய்தி விரும்புவர் அமரர்மொய்த்தே.

வ்யா:- (கூடி) இத்திருவாய்மொழி வல்லார் ஸர்வகாலமும் ப43வத் கைங்கர்யத்தைப்பெற்று அயர்வறும் அமரர்களு(1-1-1)க்குப் பரமபோ4க்3யராவர் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

ப்ரவேம்    3-5

மொய்ம்மாப்ரவேம்

(மொய்ம்மாம் பூம்பொழில்) ஏவம்பூ4தனான எம்பெருமானுடைய ஆஸ்ரிதவாத்ஸல்யாதி3 கல்யாணகு3ணங்களை அநுப4வித்து, அவ்வநுப4வஜநிதமான ப்ரீத்யதிசயத்தாலே அப்ரக்ருதிங்க3தராய்க் கொண்டு அக்கு3ணங்களைச் சொல்லிப் பிதற்றி, ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்கநின்றாடி ஆர்வம்பெருகிக் குனிக்குமவர் -களுடைய மாஹாத்ம்யத்தையும், இப்படி செய்யாதாருடைய அவஸ்துத்வத்தையும் சொல்லுகிறார்.

முதற்பாட்டு

மொய்ம்மாம்பூம்பொழில்பொய்கை முதலைச்சிறைப்பட்டுநின்ற*

கைம்மாவுக்கு அருள்செய்த கார்முகில்போல்வண்ணன்கண்ணன்*

எம்மானைச்சொல்லிப்பாடி எழுந்தும்பறந்தும்துள்ளாதார்*

தம்மால்கருமமென்? சொல்லீர்தண்கடல்வட்டத்துள்ளீரே!

வ்யா:- முதலைச்சிறையிலே அகப்பட்டுத் தன்னாலொரு செயலின்றிக்கே நின்ற கைம்மாவுக்குத் தன்னளவிலே அருள்செய்த நிரவதி4காஸ்ரித வாத்ஸல்யத்தையுடையனான எம்பெருமானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் என்ன ப்ரயோஜநமுண்டு? என்று அவர்களை நிந்தி3க்கிறார்.

இரண்டாம் பாட்டு

தண்கடல்வட்டத்துள்ளாரைத் தமக்கிரையாத்தடிந்துண்ணும்*

திண்கழற்காலசுரர்க்குத் தீங்கிழைக்குந்திருமாலை*

பண்கள்தலைக்கொள்ளப்பாடிப் பறந்துங்குனித்துழலாதார்*

மண்கொளுலகிற்பிறப்பார் வல்வினைமோதமலைந்தே.

வ்யா:- (தண்கடல்) பரது3:க்கா2 ஸஹிஷ்ணுதையாலே பரது3:க்க2 நிரஸனைக ஸ்வப4வனாயிருந்தவனைப் பண்கள் தலைக்கொள்ளப் பாடிப் பறந்துங்குனித்துழலாதார் நித்ய ஸம்ஸாரிகள் என்கிறார்.

மூன்றாம் பாட்டு

மலையையெடுத்துக்கல்மாரிகாத்துப் பசுநிரைதன்னை*

தொலைவுதவிர்த்தபிரானைச் சொல்லிச்சொல்லிநின்றுஎப்போதும்*

தலையினோடாதனந்தட்டத் தடுகுட்டமாய்ப்பறவாதார்*

அலைகொள்நரகத்தழுந்திக் கிடந்துழைக்கின்றவம்பரே.

வ்யா:- (மலையை) உபகாராநபி4ஜ்ஞபஸ்வாதி3ரக்ஷணைக போ43த்வமாகிற மஹாகு3ணத்தையுடையனானவனை அநு ஸந்தி4த்து அப்ரக்ருதிங்க3தராகாதார் யாவர் சிலர், அவர்கள் ரௌர வாதி3 நரகயாதனையை அநுப4விக்கிறார் கிடீர்! என்கிறார்.

நான்காம் பாட்டு

வம்பவிழ்கோதைபொருட்டா மால்விடையேழுமடர்த்த*

செம்பவளத்திரள்வாயன் சிரீதரன்தொல்புகழ்பாடி*

கும்பிடுநட்டமிட்டாடிக் கோகுகட்டுண்டுழலாதார்*

தம்பிறப்பாற்பயனென்னே சாதுசனங்களிடையே.

வ்யா:- (வம்பவிழ்) ஸ்ரீத4ரனாகையாலே நப்பின்னைப் பிரட்டியோடு ஸம்ஸ்லேஷிக்கைக்காக எருதேழடர்க்கப் பெற்றதினாலுள்ள ப்ரீத்யதிசயத்தினாலே புதுக்கணித்த திருப்பவளத்தையுடையவனுடைய இந்த ப்ரணயித்வாதி3கு3ணாநு ஸந்தா4நஜநித ப்ரீத்யதிசயத்தாலே அப்ரக்ருதிங்க3தராகாதார் ப43வதே3கபோ43ரான ஸ்ரீவைஷ்ணவர்கள் நடுவே என்ன ப்ரயோஜநத்துக்காகப் பிறந்தார்கள்? என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

சாதுசனத்தைநலியும் கஞ்சனைச்சாதிப்பதற்கு*

ஆதியஞ்சோதியுருவை அங்குவைத்திங்குப்பிறந்த*

வேதமுதல்வனைப்பாடி வீதிகள்தோறும்துள்ளாதார்*

ஓதியுணர்ந்தவர்முன்னா என்சவிப்பார்மனிசரே?

வ்யா:- (சாது) ஸர்வ வேத3ங்களாலும் ஸர்வேச்வரத்வேந ப்ரதிபாத்3யமானனாயிருந்துவைத்து ஆஸ்ரிதஜநவிரோதி4 கம்ஸாத்3யஸுர நிரஸனார்த்த2மாக ஸ்வாஸாதா4ரண தி3வ்யரூப விஶிஷ்டனாய்க்கொண்டு இந்த லோகத்திலே மநுஷ்யனாய் வந்து பிறந்த மஹாகு3ணத்தையுடையனாயிருந்தவனைப் பாடி வீதிகள் தோறும் திரியாதார் எத்தனையேனும் அறிவுடையாரேயாகிலும் அவர்களால் ஒரு ப்ரயோஜநமில்லை என்கிறார்.

ஆறாம் பாட்டு

மனிசரும்மற்றும்முற்றுமாய் மாயப்பிறவிபிறந்த*

தனியன்பிறப்பிலிதன்னைத் தடங்கடல்சேர்ந்தபிரானை*

கனியைக்கரும்பினின்சாற்றைக் கட்டியைத்தேனையமுதை*

முனிவின்றியேத்திக்குனிப்பார் முழுதுணர்நீர்மையினாரே.

வ்யா:- (மனிசரும்) ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விஸஜாதீயனாய், கர்மாதீ4ந ஜநநரஹிதனாய், க்ஷீரார்ணவநிகேதநனாய், ஆஸ்ரிதபரித்ராணார்த்த2மாக, ஸ்வஸங்கல்பத்தினாலே ப்ராக்ருத தோ3ஷங்களொன்றும் க3ந்தி4யாமே மநுஷ்யாதி3 ஸர்வ யோநிகளிலும் வந்து அவதீர்ணனாய், நிரதிஶய போ4க்3ய பூ4தனாயிருந்தவனை அநஸூயுக்களாய்க்கொண்டு ஏத்திக் குனிப்பார் யாவர் சிலர், அவர்கிடீர் ஸர்வஜ்ஞராகிறார் என்கிறார்.

ஏழாம் பாட்டு

நீர்மையில்நூற்றுவர்வீய ஐவர்க்கருள்செய்துநின்று*

பார்மல்குசேனையவித்த பரஞ்சுடரைநினைந்தாடி*

நீர்மல்குகண்ணினராகி நெஞ்சங்குழைந்துநையாதே*

ஊன்மல்கிமோடுபருப்பார் உத்தமர்கட்கென்செய்வாரே?

வ்யா:- (நீர்மையில்) பாண்ட3வர்கள் பக்கலுள்ள வாத்ஸல்யத்தாலே தத்3விரோதி4களான து3ர்யோத4நாதி3களையும் மற்றுமுள்ள ப்ரதிகூல வர்க்க3த்தையுமடங்க நிரஸித்ததுவே தனக்கு நிரதிசய தேஜஸ்ஸாக இருந்தருளினவனை நினைத்து நீர்மல்கு கண்ணினராகி நெஞ்சம் குழைந்து நையாதே, கேவலம் சரீரபோஷகராயிருப்பார் இந்த ஸ்ரீவைஷ்ணவர்க்ள் வர்த்திக்கிற தே3சத்திலே என் செய்யவுளரானார்? என்கிறார்.

எட்டாம் பாட்டு

வார்புனலந்தண்ணருவி வடதிருவேங்கடத்தெந்தை*

பேர்பலசொல்லிப்பிதற்றிப் பித்தரென்றேபிறர்கூற*

ஊர்பலபுக்கும்புகாதும் உலோகர்சிரிக்கநின்றாடி*

ஆர்வம்பெருகிக்குனிப்பார் அமரர்தொழப்படுவாரே.

வ்யா:- (வார்புனல்) நிரதிசய போ4க்3யமான திருமலையிலே நின்றருளி என்னை அடிமைகொண்ட திருவேங்கட முடையானுடைய திருநாமங்களைச் சொல்லிப் பிதற்றி, வைஷ்ணவர்களல்லாதார் பித்தரென்று சொல்லும்படி மநுஷ்யர் ஸந்நிதா4நத்தோடு அஸந்நிதா4நத்தோடு வாசியின்றிக்கே லௌகிகர் சிரிக்க, அதுவே உத்தம்ப4கமாம்படி ஸஸம்ப்4ரம சேஷ்டிதத்தையுடையராய் அபி4நிவேசம் மிகுத்து ஆடுமவர்கள், அயர்வறும் அமரர்களிலும் ஸ்ரேஷ்ட2ர் என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

அமரர்தொழப்படுவானை அனைத்துலகுக்கும்பிரானை*

அமரமனத்தினுள் யோகுபுணர்ந்து அவன்தன்?ேனாடொன்றாக*

அமரத்துணியவல்லார்களொழிய அல்லாதவரெல்லாம்*

அமரநினைந்தெழுந்தாடி அலற்றுவதேகருமமே.

வ்யா:- (அமரர்) அயர்வறும் அமரர்கள் அதிபதியாய், ஸர்வ லோகேஸ்வரனாயிருந்த எம்பெருமானைக் கைவல்யார்த்த2மாக ஆஸ்ரயிக்கும் அந்த க்ஷுத்3ரரானவர்களொழிய அல்லாதவர் எல்லாம் இப்படி எம்பெருமானை அநுஸந்தி4த்து அப்ரக்ருதிங்க3தராம்படியாக அவனை ஆஸ்ரயியுங்கள் என்கிறார்.

பத்தாம் பாட்டு

கருமமும்கருமபலனுமாகிய காரணன்தன்னை*

திருமணிவண்ணனைச் செங்கண்மாலினைத்தேவபிரானை*

ஒருமைமனத்தினுள்வைத்து உள்ளங்குழைந்தெழுந்தாடி*

பெருமையும் நாணும்தவிர்ந்து பிதற்றுமின்பேதைமைதீர்ந்தே.

வ்யா:- (கருமமும்) புண்யபாப கர்மங்களுக்கும், கர்ம ப2லங்களுக்கும் நியந்தாவாய், ஸர்வஜக3த்காரணமாய், நிரதிசயௌஜ்ஜ்வல்ய நீலரத்ன ஸத்3ருச தி3வ்யரூபனாய், பத்3மபத்ரேக்ஷணனாய், சேஷசேஷாசநாத்3யபரிமித பரம ஸூரிபி4ஸ்ஸேவ்யமானனாயிருந்த எம்பெருமானை அநந்ய ப்ரயோஜந மனஸ்கராய், நிரதிசய ப4க்தியுக்தராய், நிரஸ்தாஹங்காராதி3 தோ3ஷராய், ப43வத்3வ்யதிரிக்த விஷய ஸங்க4ரஹிதராய்க்கொண்டு ஏத்துங்கள் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

தீர்ந்த அடியவர்தம்மைத் திருத்திப்பணிகொள்ளவல்ல*

ஆர்ந்தபுகழச்சுதனை அமரர்பிரானைஎம்மானை*

வாய்ந்தவளவயல்சூழ் தண்வளங்குருகூர்ச்சடகோபன்*

நேர்ந்தவோராயிரத்திப்பத்து அருவினைநீறுசெய்யுமே.

வ்யா:- (தீர்ந்த) தன் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்4யவஸித்திருக்கும் ஆஶ்ரிதரை நிரஸ்த ப்ரதிப3ந்த4க ராக்கி அடிமை செய்வித்துக் கொள்ளவல்ல ஆர்ந்தபுகழையுடையனாய், அயர்வறும் அமரர்களோடே ஸம்ஸ்லேஷிக்குமாபோலே ஆஸ்ரிதரோடு ஸம்ஸ்லேஷிக்கும் ஸ்வபா4வனாய், எனக்கு ஸ்வாமியாயிருந்த எம்பெருமானைச் சொன்ன இத்திருவாய்மொழி ப43வத்34க்தி விரோதி4களைப் போக்கும் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

பகவத் விஷயம்   –    மூன்றாம் பத்து

ப்ரவேம்    3-6

செய்யதாமரைப்ரவேம்

(செய்ய தாமரைக் கண்ணன்) A ‘’பிதற்றுமின் பேதைமை தீர்ந்து’’ என்றுகொண்டு எம்பெருமானை ஆஸ்ரயியுங்கள் என்று முன்பு சொல்லப்பட்டவர்களைக் குறித்து எம்பெருமானுடைய ஸுலப4த்வகாஷ்டை2யை அருளிச்செய்கிறார்.

முதற்பாட்டு

செய்யதாமரைக்கண்ணனாய் உலகேழுமுண்டஅவன்கண்டீர்*

வையம்வானம்மனிசர்தெய்வம் மற்றும்மற்றும்மற்றும்முற்றுமாய்*

செய்யசூழ்சுடர்ஞானமாய் வெளிப்பட்டிவைபடைத்தான்* பின்னும்

மொய்கொள்சோதியோடாயினான் ஒருமூவராகியமூர்த்தியே.

வ்யா:-  ஸங்கல்ப ஸஹஸ்ரைகதே3ஶத்தாலே, வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும்  முற்றுமாய்க்கொண்டு தோற்றுகிற இவற்றுக்கு ஸ்ரஷ்டாவாய், பின்னையும் தேஜ:ப்ரப்4ருத்யஸங்க்2யேய கல்யாண கு3ணவிஶிஷ்டனாய், ப்3ரஹ்ம ருத்3ராந்தராத்மதயா அவஸ்தா2ய ஸர்வ ஜக3த்ஸ்ருஷ்டி ஸம்ஹாரஹேதுபூ4தனாய், ஸ்வேந ரூபேண அவஸ்தா2ய ஸர்வ ஜக3த்3ரக்ஷகனாயிருந்த ஸர்வேச்ரனாகிறான் “செய்ய தாமரைக்     கண்ணனாய் உலகேழுமுண்ட அவன் கண்டீர்” (3-5-10).என்றுகொண்டு,        ஸமாச்ரயணீயபுருஷன் இன்னான் என்கிறார்.

இரண்டாம் பாட்டு

மூவராகியமூர்த்தியை முதல்மூவர்க்கும்முதல்வன்தன்னை*

சாவமுள்ளனநீக்குவானைத் தடங்கடற்கிடந்தான்தன்னை*

தேவதேவனைத் தென்னிலங்கையெரியெழச்செற்றவில்லியை*

பாவநாசனைப் பங்கயத்தடங்கண்ணனைப்பரவுமினோ.

வ்யா:- (மூவராகிய) இதின்மேல் ஸமாச்ரயணீயனான எம்பெருமானுடைய எளிமையைச் சொல்லுகிறது.  இப்படி த்ரிமூர்த்திரூபேண அவஸ்தி2தனாய், ஸர்வலோக நிர்வாஹகரான ப்3ரஹ்ம ருத்3ரேந்த்3ரர்களுக்கு நிர்வாஹகனாய், அவர்களுடைய வேதா3பஹார கு4ருபாதக தை3த்யபீடா3த்3யாபத்3 விமோசந கரனாய், க்ஷீரார்ணவ நிகேதனனாயிருந்துவைத்து ஆஸ்ரித -ஸ்மாஸ்ரயணீயத்வார்த்த2மாக த3சரதா2த்மஜனாய்வந்து அவதீர்ணனாய், இப்படி மநுஷ்யனாயிருக்கச்செய்தே, ரூபகு3ண விப4வசேஷ்டிதாதி3களால் மநுஷ்யரிறக்கட்டில் தே3வர்கள் யாதொருபடி விலக்ஷணராயிருப்பார், அப்படியே தே3வர்களிற் காட்டிலும் விலக்ஷணனாய், ஆஸ்ரித விரோதி4நிரஸனைக போ43னாய் த3ர்ஶந மாத்ரத்தாலே ஸர்வஜந்தூநாம் ஸர்வபாப க்ஷயகரனாயிருக்கிற எம்பெருமானைப் பரவுமினோ என்கிறார்.

மூன்றாம் பாட்டு

பரவிவானவரேத்தநின்ற பரமனைப்பரஞ்சோதியை*

குரவைகோத்த குழகனை மணிவண்ணனைக்குடக்கூத்தனை*

அரவமேறியலைகடலமரும் துயில்கொண்டஅண்ணலை*

இரவும் நன்பகலும்விடாது என்றும் ஏத்துதல் மனம்வைம்மினோ.

வ்யா:- (பரவி) அயர்வறும் அமரர்களாலே அநவரத ஸம்ஸ்தூயமானனாய், நிரதிசய தேஜோவிசிஷ்டனாய், நாக3பர்யங்கஶாயியாயிருந்துவைத்து வஸுதே3வ க்3ருஹேவ -தீர்ணனாய், ஆஸ்ரித ஸம்ஸ்லேஷைக ஸ்வபா4வனாய், ஆஸ்ரிதஸுலப4னாய், அதிமநோஹர தி3வ்யசேஷ்டிதனா -யிருந்தவனை இரவும் நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ என்கிறார்.

நான்காம் பாட்டு

வைம்மின்நும்மனத்தென்று யானுரைக்கின்றமாயவன்சீர்மையை*

எம்மனோர்களுரைப்பதென் அதுநிற்கநாடொறும்* வானவர்

தம்மையாளுமவனும் நான்முகனும்சடைமுடியண்ணலும்*

செம்மையால்அவன்பாதபங்கயம் சிந்தித்தேத்தித்திரிவரே.

வ்யா:- (வைம்மின்) இப்படி ஆஸ்ரயித்தால் அவன் நம்மை விஷயீகரித்தருளுமோ? என்னில், ஐஸ்வர்ய ப்ரவணராய், அதிக்ஷுத்3ரரான ப்3ரஹ்மேசாநாதி3களுக்குங்கூட ஒரு தடையின்றியே ஆஸ்ரயிக்கலாம்படி தன் திருவடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிற அளவிறந்த நீர்மையையுடையனாயிருந்தவன், அநந்யப்ரயோஜநராய்க்கொண்டு ஆஸ்ரயிக்குமவர்களைக் கைவிடுமோ? என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

திரியும்காற்றோடுஅகல்விசும்பு திணிந்தமண்கிடந்தகடல்*

எரியும்தீயோடுஇருசுடர்தெய்வம் மற்றும்மற்றும்முற்றுமாய்*

கரியமேனியன்செய்யதாமரைக்கண்ணன் கண்ணன்விண்ணோரிறை*

சுரியும்பல்கருங்குஞ்சி எங்கள்சுடர்முடியண்ணல்தோற்றமே.

வ்யா:- (திரியும்) ஸ்வஸ்ங்கல்பாதீ4னமான வாய்வாகாஶாதி3 ஸகல பதா3ர்த்த2ங்களையும், க3த்வரத்வ விஶாலத்வாதி3 தத்தத்34ர்மங்களையுமுடையனாய், இந்தீ3வரத3ளஶ்யாமனாய், பத்3மபத்ரேக்ஷணனாய், நீலாளகப3ந்த43ந்து4ரனாய், ஶேஷ ஶேஷாஶந வைநதேய ப்ரப்4ருத்யஸங்க்2யேய நித்யஸித்34 பரமஸூரிப்3ஸ்ஸேவ்யமானனாயிருந்த எம்பெருமானை நான் காணப்பெற்றேனாகாதே! என்கிறார்.

ஆறாம் பாட்டு

தோற்றக்கேடவையில்லவனுடையான் அவனொருமூர்த்தியாய்*

சீற்றத்தோடருள்பெற்றவன் அடிக்கீழ்ப்புகநின்றசெங்கண்மால்*

நாற்றத்தோற்றச்சுவையொலி உறலாகிநின்ற* எம்வானவ

ரேற்றையேயன்றி மற்றொருவரையானிலேன்எழுமைக்குமே.

வ்யா:- (தோற்றம்) ஜந்மமரணாதி3 தோ3ஷைரஸம்ஸ்ப்ருஷ்ட – னாய், ஜ்நமமரணாதி3 தோ3ஷயுக்த பதா3ர்த்த2ங்களுக்கு நியந்தாவாய், ஆஸ்சர்யதம ந்ருஸிம்ஹவேஷ பூ4ஷிதனாய், ஹிரண்யவிஷய நிரவதி4க க்ரோத4த்தினாலே அத்யந்தம் அநபி4– ப4வநீயனாயிருக்கச்செய்தே, ஆஶ்ரிதனான ஸ்ரீப்ரஹ்லாதா3ழ்வான் கூசாதே சென்று திருவடிகளின் கீழே புகலாம்படி அவனுக்கு ஸுலப4னாய், தத்ஸம்ஶ்லேஷஜநித நிரதிசய ப்ரீதியாலே ஆதாம்ராயதலோசநனாயிருந்த எம்பெருமான். அயர்வறும் அமரர்களுடைய ஸர்வ கரணங்களுக்கும் போ3க்3யமானாற்போலே என்னுடைய ஸர்வகரணங்களுக்கும் போ4க்3யமானான்; இனி ஆத்மாந்தமாக இவனல்லது எனக்கு மற்றொரு ப்ராப்யமில்லை என்கிறார்.

ஏழாம் பாட்டு

எழுமைக்கும்எனதாவிக்கு இன்னமுதத்தினைஎனதாருயிர்*

கெழுமியகதிர்ச்சோதியை மணிவண்ணனைக்குடக்கூத்தனை*

விழுமியஅமரர்முனிவர்விழுங்கும் கன்னற்கனியினை*

தொழுமின்தூயமனத்தராய் இறையும்நில்லாதுயரங்களே.

வ்யா:- (எழுமைக்கும்) எற்றைக்கும் எனக்குப் பரமபோக்3ய -மாய், மத்ஸம்ஸ்லேஷைக போ43மாயிருக்கையாகிற மஹாகு3ணத்தையுடையனாய், விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற்கனியாயிருந்துவைத்து எனக்கு ஸுலப4னாய் அதிமநோஹர தி3வ்யசேஷ்டிதனாயிருந்த எம்பெருமானை ‘அரியன்’ என்று கூசாதே தொழுங்கோள்; தொழ, உங்களுடைய ஸமஸ்த து3:க்க2ங்களும் போம் என்கிறார்.

எட்டாம் பாட்டு

துயரமேதருதுன்பவின்பவினைகளாய் அவையல்லனாய்*

உயரநின்றதோர்சோதியாய் உலகேழுமுண்டுமிழ்ந்தான்தன்னை*

அயரவாங்கும்நமன்தமர்க்கு அருநஞ்சினைஅச்சுதன்தன்னை*

தயரதற்குமகன்தன்னையன்றி மற்றிலேன்தஞ்சமாகவே.

வ்யா:- (துயரமேதரு) ஸ்வாதீ4ந புண்யபாபஸ்வரூபனாய், அகர்மவஸ்யனாய், நிரவதி4க தேஜோவிசிஷ்டனாய், ஸர்வலோகரக்ஷகனாய், ஸ்வாஸ்ரித ஜநங்களை யமகிங்கரர் பா3தி4யாதபடி அவர்களை ரக்ஷித்தருளும் ஸ்வபா4வனாய், அவர்களோடு ஆத்மாந்தமாக ஸம்ஸ்லேஷிக்கும் ஸ்வபா4வனாயிருந்த தயரதற்கு மகன் தன்னையன்றி  மற்றிலேன் தஞ்சமாக; நீங்களும் ஆஸ்ரயியுங்கள் என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

தஞ்சமாகியதந்தைதாயொடு தானுமாய் அவையல்லனாய்*

எஞ்சலிலமரர்குலமுதல் மூவர்தம்முள்ளுமாதியை*

அஞ்சிநீருலகத்துள்ளீர்கள் அவனிவனென்றுகூழேன்மின்*

நெஞ்சினால்நினைப்பான்யவன் அவனாகும்நீள்கடல்வண்ணனே.

வ்யா:– (தஞ்சமாகிய) எம்பெருமான் திருவவதாரம்பண்ணி ஸர்வஸுலப4னாய் வர்த்தித்தருளுகிற காலத்தில் உதவப் -பெற்றிலோம்; ஸ்ரீவைகுண்ட2த்திலே எழுந்தருளியிருக்கும் இருப்பு நமக்கு கோ3சரமன்று; ஆனபின்பு, எங்ஙனே அவனை ஆஸ்ரயிக்கும் – படி? என்னில் – ப்3ரஹ்மருத்3ரேந்த்3ரர்களுக்கும் த்3யேயனாய், காரண பூ4தனுமாய், அயர்வறும் அமரர்கள் அதிபதியாய், ஆஸ்ரிதர்க்கு ஸர்வாவஸ்தை2களிலும் ரக்ஷகனாய்ப் பிதாவுமாய் மாதாவுமாய்த் தானுமாய் மற்றுமெல்லாமாயிருந்த எம்பெருமானை உகந்தருளப்பண்ணி ஆஶ்ரயிப்பது; நாம் அவனுக்கு ஒரு ரூபத்தை ஸங்கல்பித்தால் அது அவனுக்கு ரூபமோ? ஸ்ரீவைகுண்ட2த்தில் யாதொரு ரூபத்தையுடையனாய்க்கொண்டு எழுந்தருளியிருக்கும். அதுவன்றோ அவனுக்கு ரூபம்? – என்னில்: – (அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்) – இப்படி ஸம்சயிக்கவேண்டா; யாதொன்றை அவனுக்கு ரூபமாக நினைத்திகோள், அத்தையே அவன் தி3வ்யரூபமாகக்கொண்டருளும் என்கிறார்.

பத்தாம் பாட்டு

கடல்வண்ணன்கண்ணன் விண்ணவர்கருமாணிக்கம் எனதாருயிர்*

படவரவினணைக்கிடந்த பரஞ்சுடர்பண்டுநூற்றுவர்*

அடவரும்படைமங்க ஐவர்கட்காகிவெஞ்சமத்து* அன்றுதேர்

கடவியபெருமான் கனைகழல்காண்பது என்றுகொல்கண்களே.

வ்யா:- (கடல்வண்ணன்) அபரிச்சே2த்3ய மாஹாத்ம்யனாய், அயர்வறும் அமரர்களுக்கு போ4க்3யமாய், நாக2பர்யங்கசாயியா யிருந்து வைத்து வஸுதே3வக்3ருஹே அவதீர்ணனாய், எனக்கு ப்ராணனாய், து3ர்யோத4நாதி3கள் ஸஸைந்யமாக நசிக்கும்படி பாண்ட3வர்களுக்காக ஸாரத்2யே ஸ்தி2தனாயிருந்த எம்பெருமானுடைய திருவடிகளை என்றோ என்னுடைய கரணங்கள் காண்பது? என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

கண்கள்காண்டற்கரியனாய்க் கருத்துக்குநன்றுமெளியனாய்*

மண்கொள்ஞாலத்துயிர்க்கெல்லாம் அருள்செய்யும்வானவரீசனை*

பண்கொள்சோலைவழுதிநாடன் குருகைக்கோன்சடகோபன்சொல்*

பண்கொளாயிரத்திப்பத்தால் பத்தராகக்கூடும்பயிலுமினே.

வ்யா:- (கண்கள்) A அயர்வறும் அமரர்களுக்கு அருள்செய்யுமாபோலே ஸ்வாஶ்ரிதரான மநுஷ்யாதி3களுக்கும் அருள்செய்யும் ஸ்வபா4வனாயிருந்துவைத்து என்னுடைய கருத்துக்கு நன்றும் எளியனாய், என் கண்கள் காண்டற்கரியனாயிருந்த எம்பெருமான் விஷயமான இத்திருவாய்மொழியை வல்லார் வைஷ்ணவராவர்; இத்தைச் சொல்லுங்கள் என்கிறார்.                          

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

ப்ரவேம்    3-7

பயிலும்ப்ரவேம்

(பயிலும் சுடரொளி) இப்படி எம்பெருமானுடைய நிரவதி4க ஸுலப4த்வரூப மஹாகு3ணாநுப4வஜநித நிர்வதி4கப்ரீதியாலே ப43வச்சேஷத்வகாஷ்டா2ரூப பா43வத சேஷதைகபோ43ராய், அந்த பா43வதஶேஷத்வம் தமக்கு ப்ராப்யம் என்கிறார்.

முதற்பாட்டு

பயிலுஞ்சுடரொளிமூர்த்தியைப் பங்கயக்கண்ணனை*

பயிலவினிய நம்பாற்கடற்சேர்ந்தபரமனை*

பயிலுந்திருவுடையார் யவரேலும் அவர்கண்டீர்*

பயிலும்பிறப்பிடைதோறு எம்மையாளும்பரமரே.

வ்யா:- பிராட்டியுடைய ஜந்மபூ4மியாகையாலே திருப்பாற் -கடலைத் தனக்கு ப்ரியமான தா4மமாகவுடையனாய், ஸர்வதா3 அநுபூ4தனானாலும் அபூர்வவத்3போ4க்3யபூ4தனாய், நிரதிசய தீ3ப்தியுக்தானாய், தி3வ்யரூபனாய், பங்கயக்கண்ணனாயிருந்த எம்பெருமானுடைய அநுப4வ ஸம்பூ4த ப்ரீதிகாரித தா3ஸத்வ  ஸம்பத்தையுடையார் ஆரேனுமாகிலும் அவர்கிடீர் நமக்கு ஸ்வாமிகள் என்கிறார்.

இரண்டாம் பாட்டு

ஆளும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை*

தோளும் ஓர்நான்குடைத் தூமணிவண்ணன் எம்மான் தன்னை*

தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர்கண்டீர்*

நாளும்பிறப்பிடைதோறு எம்மையாளுடைநாதரே.

வ்யா:- (ஆளும்) திருப்பாற்கடலில் நின்றும் ஆஶ்ரித பரித்ராணார்த்த2மாக சதுர்பு4ஜத்வ ஶங்க2 சக்ர க3தா3 ஶார்ங்கா3தி3 தி3வ்யாயுத4 ஸ்வாஸாதா4ரணாகார விஶிஷ்டனாய்க்கொண்டு வஸுதே3வ க்3ருஹே அவதீர்ணனாய், ஸமஸ்தஹேயப்ரத்யநீகனா -யிருந்த எம்பெருமானைத் தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும -வர் கண்டீர் நமக்கு என்றைக்கும் ஸ்வாமிகள் என்கிறார்.

மூன்றாம் பாட்டு

நாதனைஞாலமும்வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்

போதனை* பொன்னெடுஞ்சக்கரத்து எந்தைபிரான்தன்னை*

பாதம்பணியவல்லாரைப் பணியுமவர்கண்டீர்*

ஓதும்பிறப்பிடைதோறு எம்மையாளுடையார்களே.

வ்யா:- (நாதனை) ஸர்வஸ்வாமியாய், தே3வமநுஷ்யாத்3யா -ச்ரிதருடைய உத்கர்ஷாபகர்ஷம் பாராதே அவர்களெல்லார்க்கு -மொக்கத் தன்னைக்கொடுத்தருளும் ஸ்வபா4வனாய், திருவாழி – யாழ்வானாலே அலங்க்ருதனாயிருந்த எம்பெருமானைப் பாதம் பணியவல்லாரைப் பணியுமவர்கண்டீர் நமக்கு என்றைக்கும் ஸ்வாமிகள் என்கிறார்.

நான்காம் பாட்டு

உடையார்ந்தஆடையன் கண்டிகையன்உடைநாணினன்*

புடையார்பொன்னூலினன் பொன்முடியன்மற்றும்பல்கலன்*

நடையாவுடைத்திருநாரணன் தொண்டர்தொண்டர்கண்டீர்*

இடையார்பிறப்பிடைதோறு எமக்கு எம்பெருமக்களே.

வ்யா:- (உடையார்ந்த) நிரதிஶய ஸுக3ந்த4மாய், நிரதிசய ஸுக2 ஸ்பர்சமாய், நிரதிசயௌஜ்ஜ்வல்யமாய், நித்யஸித்34மாய், அஸங்க்2யேயமான தி3வ்யபூ4ஷணங்களாலே பூ4ஷிதனாயிருந்த எம்பெருமானுடைய அழகுக்குத் தோற்று அடிமையாயிருப்பார்க்கு அடிமையாயிருப்பார்கிடீர் இடையார் பிறப்பிடைதோறு எமக்கு எம்பெருமக்கள் என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

பெருமக்களுள்ளவர் தம்பெருமானை* அமரர்கட்கு

அருமையொழிய அன்று ஆரமுதூட்டிய அப்பனை*

பெருமைபிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கண்டீர்*

வருமையும் இம்மையும் நம்மையளிக்கும்பிராக்களே.

வ்யா:- (பெருமக்கள்) ப்3ரஹ்மேஶாநாதி3 ஸர்வதே3வர்களுக் -கும் ஈச்வரனாய், அம்ருத ப்ரதா3நாதி3களாலே அவர்களுக்கு ரக்ஷகனாயிருந்த அவனுடைய இப்பெருமையைப் பிதற்றவல்லாரைப் பிதற்றும் அவர்கண்டீர் ஸர்வகாலமும் நமக்கு ரக்ஷகரான ஸ்வாமிகள் என்கிறார்

ஆறாம் பாட்டு

அளிக்கும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை*

துளிக்கும் நறுங்கண்ணித் தூமணிவண்ணன் எம்மான்தன்னை*

ஒளிக்கொண்டசோதியை உள்ளத்துக்கொள்ளுமவர்கண்டீர்*

சலிப்பின்றியாண்டுஎம்மைச் சன்மசன்மாந்தரங்காப்பரே.

வ்யா:- (அளிக்கும்) தே3வமநுஷ்யாதி3 ரூபேண அவதீர்ணனாய், ஸர்வஜக3த்3 ரக்ஷகனாய், சங்க2சக்ராதி3 தி3வ்யாயுத4 4ரனாய், தி3வ்யமால்யோபஶோபி4தனாய், ஹேயப்ரத்யநீகனாய், நிரதிசய தேஜோவிசிஷ்டனாயிருந்த எம்பெருமானை உள்ளத்துக்கொள்ளுமவர் கண்டீர் ஒரு சலநமில்லாதபடி ஆண்டு எம்மைச் சன்மசன்மாந்தரம் காப்பார் என்கிறார்.

ஏழாம் பாட்டு

சன்மசன்மாந்தரம்காத்து அடியார்களைக்கொண்டுபோய்*

தன்மைபெறுத்தித் தன்தாளிணைக்கீழ்க்கொள்ளும் அப்பனை*

தொன்மைபிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கண்டீர்*

நன்மைபெறுத்துஎம்மை நாளுய்யக்கொள்கின்றநம்பரே.

வ்யா:- (சன்மசன்மாந்தரம்) ஜந்மங்கள் தோறும் இந்த லோகத்திலே தானும் வந்து பிறந்தருளி ஆச்ரிதரை ரக்ஷித்து, பின்னை அவர்களைக் கொண்டுபோய் அஸங்குசித ஜ்ஞாநராக்கித் தன் தாளிணைக்கீழ்க் கொள்ளும் அப்பனுடைய இந்த ஸ்வாபா4விகமான கு3ணத்தைப் பிதற்றவல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர், ஸ்வசேஷதைகரதித்வ ஸம்பத்தை நமக்குத் தந்து அத்தை நித்யஸித்34மாக்குவர் என்கிறார்.

எட்டாம் பாட்டு

நம்பனைஞாலம்படைத்தவனைத் திருமார்பனை*

உம்பருலகினில்யார்க்கும் உணர்வரியான்தன்னை*

கும்பிநரகர்களேத்துவரேலும் அவர்கண்டீர்*

எம்பல்பிறப்பிடைதோறு எம்தொழுகுலம்தாங்களே.

வ்யா:- (நம்பனை) ஸர்வஸ்வாமியாய், ஜக3த்ஸ்ர்ஷ்டாவாய், ஶ்ரிய:பதியாய், ப்3ரஹ்மாதி3களுக்கு வாங்மநஸாபரிச்சே2த்3ய மஹிமனாயிருந்தவனை அநந்ய ப்ரயோஜநராய்க் கொண்டு ஏத்துவார் கும்பீ4நரக யாதநாநுப4வாநு கு3ணபாபங்களைப் பண்ணிணாரேயாகிலும் அவர்கண்டீர் எம் பல் பிறப்பிடைதோறு எம் தொழுகுலம் தாங்கள் என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

குலந்தாங்குசாதிகள்நாலிலும் கீழிழிந்து* எத்தனை

நலந்தானிலாத சண்டாளசண்டாளர்களாகிலும்*

வலந்தாங்குசக்கரத்தண்ணல் மணிவண்ணற்காளென்று*உள்

கலந்தாரடியார்தம் அடியார் எம்அடிகளே.

வ்யா:- (குலம்) வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு அடிமை செய்யும் இதுவே ப்ரயோஜநமாக ஆஸ்ரயிப்பார், ஜாத்யாசாராதி3களால் எத்தனையேனும் தண்ணியரேயாகிலும் அவரடியார் நமக்கு ஸ்வாமிகள் என்கிறார்.

பத்தாம் பாட்டு

அடியார்ந்தவையமுண்டு ஆலிலையன்னவசஞ்செய்யும்*

படியாதுமில்குழவிப்படி யெந்தைபிரான்தனக்கு*

அடியாரடியார்தம்மடியாரடியார் தமக்கு

அடியாரடியார்தம்* அடியாரடியோங்களே.

வ்யா:- (அடியார்ந்த) இந்த லோகத்தை அளந்தருளி உண்டருளி ஆலிலையிலே கண்வள்ர்ந்தருளின அவனுடைய காருண்ய ஸௌந்த3ர்யாதி3 கு3ணங்களுக்குத் தோற்று அடிமையாயிருப்பார் அடியார்தம் அடியாரடியார் தமக்கு அடியாரடியார் தம்மடியாரடியோங்கள் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

அடியோங்குநூற்றுவர்வீய அன்று ஐவர்க்கருள்செய்த

நெடியோனை* தென்குருகூர்ச்சடகோபன் குற்றேவல்கள்*

அடியார்ந்த ஆயிரத்துள் இவைபத்துஅவன்தொண்டர்மேல்

முடிவு*ஆரக்கற்கிற்கில் சன்மம்செய்யாமைமுடியுமே.

வ்யா:- (அடியோங்கு) “பாண்ட3வர் பக்கலுள்ள நிரவதி4க வாத்ஸல்யத்தாலே, தத்3விரோதி4களாய், ஐஸ்வர்ய ப3லத3ர்ப்பிதரான து3ர்யோத4நாதி3களை நிரஸித்தருளின எம்பெருமானுடைய வாத்ஸல்ய ஸௌஶீல்ய காருண்ய ஸௌந்த3ர்ய ஸௌக3ந்த்4ய ஸௌகுமார்யாத்3யஸ்ங்க்2யேய கல்யாண கு3ணங்களுக்குத் தோற்று அடிமையாயிருகும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரேனுமாகிலும் அவர்களுக்கு அடிமை பரமப்ராப்யம் என்று சொன்ன இத்திருவாய்மொழியை ஆரக் கற்கவல்லாராகில்அவர்களுடைய பா43வத சேஷதைகரதித்வ விரோதி4களெல்லாம் போம் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

ப்ரவேம்    3-8

முடியானேப்ரவேம்

(முடியானே) (3-6-10.) ”தேர்கடவிய பெருமான் கனைகழல் காண்பதென்று கொல் கண்கள்” என்று பிறந்த அபேக்ஷையானது மிகவும் உத்3பூ4தையாய், அந்த அபேக்ஷாநுகு3ணமாகக் காணப்பெறாத வ்யஸநத் -தினாலே அத்யந்தம் அவஸந்நராய்க் கொண்டு, தம்முடைய ஸர்வகரணங்களாலும் ஸர்வப்ரகாரத்தாலும் எம்பெருமானை அநுபவிக்கவேணும் என்று சொல்லிக்கொண்டு கூப்பிடுகிறார்.

முதற்பாட்டு

முடியானேஎ மூவுலகுந்தொழுதேத்தும் சீர்

அடியானேஎ!* ஆழ்கடலைக்கடைந்தாய்! புள்ளூர்

கொடியானே!* கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில்

நெடியானே!* என்றுகிடக்கும் என்நெஞ்சமே.

வ்யா:- ‘ஸர்வலோகாதி4பத்ய ஸூசகமாய், நிரதிசயதீ3ப்தி –யுக்தமாய், அதிரமணீயத3ர்ஶநமாயிருந்த திருவபி4ஷேகத்தாலே அலங்க்ருதனாய், ப்3ரஹ்மேசாநாதி3களுக்கும் ஈச்வரனாய் வைத்து  அநாலோசித விசேஷலோக சரண்யனாய், ஆஸ்ரிதஜந ஸமீஹித நிர்வர்த்தகனாயிருந்தவனே! பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போலே பெரியதிருவடி திருத்தோளின் மேல் ஏறியருளி இந்த லோகத்திலே வந்து தோன்றாய்’  என்று எம்பெருமானைக் காண ஆசைப்பட்டபோதே காணப்பெறாமையாலே குறைப்பட்டுக் கிடக்கும் என்நெஞ்சம் என்கிறார்.

இரண்டாம் பாட்டு

நெஞ்சமேநீள்நகராக இருந்த என்

தஞ்சனேஎ!* தண்ணிலங்கைக்கு இறையைச் செற்ற

நஞ்சனேஎ!* ஞாலங்கொள்வான்குறளாகிய

வஞ்சனேஎ!* என்னும் எப்போதும் என்வாசகமே.

வ்யா:- (நெஞ்சமே) ஆஸ்ரித ஸ்மீஹித விரோதி4நிரஸந ஸமர்த்த2னாய், தத்ஸமீஹித நிர்வர்த்தநோபாயஜ்ஞனாயிருந்த நீ, நெஞ்சு உன்னை நினைக்க அருள்செய்தாற்போலே நானும் உன்னை நினைக்க அருள்செய்தருளவேணும் என்று எப்போதும் அலற்றாநிற்கும் என்வாசகம் என்கிறார்.

மூன்றாம் பாட்டு

வாசகமேயேத்தஅருள்செய்யும் வானவர்தம்

நாயகனேஎ!* நாளிளந்திங்களைக்கோள்விடுத்து*

வேயகம்பால்வெண்ணெய்தொடுவுண்ட ஆனாயர்

தாயவனேஎ!* என்றுதடவும் என்கைகளே.

வ்யா:- (வாசகமே) வானவர்தம் நாயகனாய் வைத்து வாசகமேயேத்த அருள் செய்தருளினாற்போலே, அபி4நவ பூர்ண சந்த்3ரகிரணம் போலே திருமுத்தினொளி புறப்படும்படி திருப்பவளத்தைத் திறந்து, வெண்ணெய் தொடுவுண்ட உன்னுடைய அவ்வழகை நானும் ஏத்தும்படி அருள் செய்யவேணும் என்று தடவும் என் கைகள் என்கிறார்.

நான்காம் பாட்டு

கைகளாலாரத் தொழுதுதொழுது உன்னை*

வைகலும்மாத்திரைப்போதும் ஓர்வீடின்றி*

பைகொள்பாம்பேறி உறைபரனே!* உன்னை

மெய்கொள்ளக்காண விரும்பும் என்கண்களே.

வ்யா:- (கைகளாலார) பைகொள்பாம்பேறியுறை பரனே! உன்னை ஒரு க்ஷணமாத்ரமும் ஒழியாமே எப்போதும் கைகளாலே ஆரத்தொழுது, மெய்கொள்ளக்காண விரும்பாநிற்கும் என்கண்கள் என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

கண்களால்காண வருங்கொல் என்று ஆசையால்*

மண்கொண்டவாமனன் ஏற மகிழ்ந்துசெல்*

பண்கொண்டபுள்ளின் சிறகொலிபாவித்து*

திண்கொள்ளஓர்க்கும் கிடந்து என்செவிகளே.

வ்யா:- (கண்களால்) மண்கொண்ட வாமநன் ஏறியருள, மது4பாநம் பண்ணின வண்டுபோலே களித்திக்கொண்டு செல்லும் பெரிய திருவடிமேலே அவன் ஏறியருளி வரும்படியைக் காணவேணுமென்றும், வரும்போது  பெரியதிருவடியினுடைய அத்திருச்சிறகினொலி கேட்கவேணுமென்றும் ஆசைப்படாநிற்கும் என் செவிகள் என்கிறார்.

ஆறாம் பாட்டு

செவிகளாலார நின்கீர்த்திக்கனியென்னும்

கவிகளே* காலப்பண்தேன் உறைப்பத்துற்று*

புவியின்மேல் பொன்னெடுஞ்சக்கரத்து உன்னையே*

அவிவின்றி ஆதரிக்கும் எனதாவியே.

வ்யா:- (செவிகளாலார) உன்னுடைய கீர்த்திக் கவியென்னும் கனிகளை காலப்பண்ணாகிற தேனிலே கலந்து என் செவிகளாரத் துற்று, பொன்னெடுஞ்சக்கரத்து உன்னை இந்த லோகத்திலே காணவேணுமென்று அவிவின்றி ஆதரிக்கும் எனது ஆவி என்கிறார்.

ஏழாம் பாட்டு

ஆவியே! ஆரமுதே! என்னையாளுடை*

தூவியம்புள்ளுடையாய்! சுடர்நேமியாய்!*

பாவியேன்நெஞ்சம் புலம்பப்பலகாலும்*

கூவியும்காணப்பெறேன் உனகோலமே.

வ்யா:- (ஆவியே) என்னுடைய தா4ரகமே! என்னுடைய போ4க்3யமே! உன்னை விஸ்லேஷித்து நான் அவஸந்நனான இந்த த3சையிலே நான் முடிவதற்கு முன்னே இக்ஷணத்திலே வந்து என்னை அடிமை கொள்ளுகைக்காகப் பெரிய திருவடியை தி3வ்ய வாஹநமாகவுடையவனே! த்வத்ஸம்ஸ்லேஷ விரோதி4யான என்னுடைய வினைகடிகக்காக எப்போதும் கைகழலா நேமியாய்! பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும் கூவியும் காணப்பெறுகிறி – லேன் உன்னழகை என்கிறார்.

எட்டாம் பாட்டு

கோலமே! தாமரைக்கண்ணது ஓரஞ்சன

நீலமே!* நின்றுஎனதாவியை ஈர்கின்ற

சீலமே!* சென்றுசெல்லாதன முன்னிலாம்

காலமே!* உன்னை எந்நாள்கண்டுகொள்வனே?

வ்யா:- (கோலமே) “கோலமே! தமரைக்கண்களையுடைய -தொரு அஞ்சன நீலமே! இப்படியிருந்துவைத்து என்னுடைய நிகர்ஷம் பாராதே (3-8-2) என் நெஞ்சமே நீள் நகராக இருந்த நிரவதி4க ஸௌஶீலயத்தாலே என்னை மயக்குகிறவனே! உன்னை என்று நான் காண்பது?” என்று சொல்ல, எம்பெருமானும் ‘காணக்கடவிய காலம் வந்தாலன்றோ காணலாவது’ என்று அருளிச்செய்ய, “அக்காலந்தான் நீ இட்ட வழக்கன்றோ? ஆனபின்பு, ‘இக்காலந் தன்னையே அந்தக் காணக்கடவிய காலமாக்குவோம்’  என்றால் உன்னால் ஆக்கமுடியாதோ?” என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

கொள்வன்நான்மாவலி! மூவடிதாவென்ற

கள்வனே!* கஞ்சனைவஞ்சித்து வாணனை

உள்வன்மைதீர* ஓராயிரம்தோள்துணித்த

புள்வல்லாய்!* உன்னைஎஞ்ஞான்றுபொருந்துவனே?

வ்யா:- (கொள்வன் நான்) கோலினவை முடிக்க விரகறிவா னொருவனாய், ஆஶ்ரித விரோதி4 நிரஸந ள்வபா4வனாய்,  விரோதி4 நிரஸந ஸமர்த்த2நாயிருந்த உன்னை எஞ்ஞான்று பொருந்துவன்? என்கிறார்.

பத்தாம் பாட்டு

பொருந்தியமாமருதினிடைபோய எம்

பெருந்தகாய்!* உன்கழல்காணியபேதுற்று*

வருந்திநான் வாசகமாலைகொண்டு* உன்னையே

இருந்திருந்து எத்தனைகாலம்புலம்புவனே?

வ்யா:- (பொருந்திய) பொருந்தின மாமருதினிடை அகப்படாதே போய் உன்னை ரக்ஷித்தருளின பரமகாருணிகனே! உன் திருவடிகளைக் காண ஆசைப்பட்டுப் பெறாதொழிந்து இப்படி முடியவும் பெறாதேயிருந்து பெரிய வருத்தத்தோடே உன் கு3ணங்களைச் சொல்லிக்கொண்டு நான் இன்னம் எத்தனை காலம் கிடந்து அலற்றக் கடவேன்? என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

புலம்புசீர்ப் பூமியளந்தபெருமானை*

நலங்கொள்சீர் நன்குருகூர்ச்சடகோபன்சொல்*

வலங்கொண்டவாயிரத்துள் இவையுமோர்பத்து*

இலங்குவான் யாவரும்ஏறுவர்சொன்னாலே.

வ்யா:- (புலம்புசீர்) எல்லாராலும் ஏத்தப்படும் கு3ணங்களை யுடையணான பூ4மியளந்த எம்பெருமானை, கு3ணைக தா4ரகத்வ மாகிற கல்யாண கு3ணத்தையுடையனாயிருந்த  சடகோபன் சொன்ன இத்திருவாய்மொழியைச் சொன்னா  ரெல்லாரும் திருநாட்டிலே புகப்பெறுவர் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

3-9

முதல்பாட்டு

சொன்னால்விரோதமிது ஆகிலும் சொல்லுவன்கேண்மினோ*

என்னாவிலின்கவி யானொருவர்க்குங்கொடுக்கிலேன்*

தென்னாதெனாவென்று வண்டுமுரல்திருவேங்கடத்து*

என்னானைஎன்னப்பன் எம்பெருமான்உளனாகவே.

வ்யா:- (சொன்னால்) இப்படி தம்முடைய ஸர்வகரணங்களும் தனித்தனியே ஸ்வேதரகரணங்களினுடைய வ்ருத்திகளை எம்பெருமான் திறத்திலே ஆசைப்பட்ட படியே பெறாமையாலே அத்யந்தம் அவஸந்நரான ஆழ்வார், இத்த3சையில் தமக்குத் துணையாகைக்காக, ‘இந்த லோகத்திலே ஸ்ரீவைஷ்ணவர்கள் உளரோ?’ என்று பார்த்தவிடத்தில், இந்த லோகமெல்லாம் ப43வத் வ்யதிரிக்த விஷயப்ரவணமாய் ப43வத் ப்ராங்முக2மாய், மநுஷ்யாதி3களைக் கவிபாடிக்கொண்டு திரிகிறபடியைக் கண்டார்; கண்டு, தம்முடைய இழவெல்லாம் மறந்து ‘எம்பெருமானுக்கு அர்ஹமானவரும் அந்தக் கரணங்களை அவஸ்துபூ4த மநுஷ்யாதி3கள் பக்கலிலே விநியோகி3க்கிறபடி என்ன காண்!’ என்று இன்னாதாய், அவர்களைக் குறித்து, கல்யாண -மாய், ப43வத3நுரூபமான கவிகளை க்ஷுத்3ர மநுஷ்யாதி3கள் பக்கலிலே விநியோகி3க்கலாகாதென்று பார்த்து, ‘நிஷேத்4யத -யாவும் சொல்லுகை ஈடன்று; ஆகிலும், எம்பெருமானுக்கு ஈடான அழகிய கவிகளை இழக்கமாட்டாமையாலே சொல்லுகிறேன் கேளுங்கள்’ என்று வைத்து, ‘இப்படி ப43வத்பராங்முக2மான லோகத்திலே நான் எம்பெருமானையல்லது மற்றொருவரைக் கவிபாடுகைக்கு ஈடல்லாத ப்ரக்ருதியாகப் பெற்றேனே’ என்று கொண்டு ஸ்வலாப4த்தைப் பேசுகிறார்.

இரண்டாம் பாட்டு

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத்தன்செல்வத்தை*

வளனாமதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடியென்?*

குளனார்கழனிசூழ் கண்ணன்குறுங்குடிமெய்ம்மையே*

உளனாய எந்தையை எந்தைபெம்மானையொழியவே.

வ்யா:- (உளனாகவே) நிரவதி4க ஸம்பத்தையுடயனாய், நித்யநிர்தோ3ஷ நிஸ்ஸீம கல்யாணகு3ண மஹோத3தி4யாயிருந்த எம்பெருமானையொழிய, தன்னையும் ஒரு வஸ்துவாகப் பார்த்துத் தன் ஸம்பத்தையும் ஒரு ஸம்பத்தாக மதி3த்திருக்கிற இம்மநுஷ்யரைக் கவிபாடி என்ன ப்ரயோஜனமுண்டு? என்றுகொண்டு பூர்வ ப்ரக்ருதத்தை அருளிச்செய்கிறார்.

மூன்றாம் பாட்டு

ஒழிவொன்றில்லாத பல்லூழிதோறுழிநிலாவ* போம்

வழியைத்தரும் நங்கள்வானவரீசனைநிற்கப்போய்*

கழியமிகநல்ல வான்கவிகொண்டுபுலவீர்காள்!*

இழியக்கருதி ஓர்மானிடம் பாடல் என்னாவதே.

வ்யா:- (ஒழிவொன்றில்லாத) இப்படி ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகனான எம்பெருமானை உங்களுடைய கழிய மிக நல்ல வான்கவிகொண்டு பாடப்பெறலாவது; பாடினால் பின்னையும் பெறும்பேறு, அநாக்4ராத து3:க்க23ந்த4மாய், நிரதிசய ஸுக2ரூபமாய், நித்யஸித்34மான ப43வத் கைங்கர்ய லக்ஷண மோக்ஷமாவது; அவஸ்து பூ4தராய் நிஶ்ஶ்ரீகரான மநுஷ்யரை யாவது கவிகளைக் கொண்டு பாடுவது; பாடினால் பின்னைப் போய் அதோ43தியிலே விழுவது; ஆனபின்பு, அவனையொழிய இம்மநுஷ்யரை எதுக்காகப் பாடுகிறீர்க்ள்? என்கிறார்.

நான்காம் பாட்டு

என்னாவது?எத்தனைநாளைக்குப்போதும்? புலவீர்காள்!*

மன்னாமனிசரைப்பாடிப் படைக்கும்பெரும்பொருள்*

மின்னார்மணிமுடி விண்ணவர்தாதையைப்பாடினால்*

தன்னாகவேகொண்டு சன்மஞ்செய்யாமையுங்கொள்ளுமே.

வ்யா:- (என்னாவது) மநுஷ்யரைப்பாடிலும் சில ப்ரயோஜநங்கள் ஸித்3தி4க்கக்காணாநின்றோமிறே என்னில், – அஸ்தி2ரரான மநுஷ்யரைப்பாடி என்ன ப்ரயோஜநம் பெறுவது? பெற்றால்தான் எத்தனை நாளைக்குப் போதும்? புலவீர்காள்! ஆன -பின்பு மின்னார் மணிமுடி விண்ணவர்தாதையைப் பாடுங்கள்; பாடினால் வேறொரு ப்ரயோஜநமும் வேணுமோ? ஸ்வசேஷதைகரதிகளாக்கி ஸ்வவிஷய கைங்கர்ய விரோதி4யான ஸம்ஸாரத்தையும் போக்கும் என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

கொள்ளும்பயனில்லை குப்பைகிளர்த்தன்னசெல்வத்தை*

வள்ளல்புகழ்ந்து நும்வாய்மையிழக்கும்புலவீர்காள்!*

கொள்ளக்குறைவிலன் வேண்டிற்றெல்லாந்தரும்கோதில்* என்

வள்ளல்மணிவண்ணன்தன்னைக் கவிசொல்லவம்மினோ.

வ்யா:- (கொள்ளும்) ப்ரயோஜன ஸூந்யமாய் ஹேயவிஷயங்களைக் கவிபாடி உங்களுடைய அழகிய கவிகளை இழவாதே, தன்னுடைய நிரவதி4க நித்ய நிர்த்தோ3ஷ கல்யாண கு3ணங்களாலே உங்களுடைய கவிகளை க்ருதார்த்த2மாக்க வல்லனாய், உங்களுக்கு வேண்டிற்றெல்லாம் தரும் பரமோதா3ரனாய், தந்தாலும் ஒன்றும் செய்யாதானாய் ‘இவர்களுக்கு என் செய்வோம்?’ என்றிருக்கும் ஸ்வபா4வனாய், ஆஸ்ரித ஸுலப4னாயிருந்த என்பெருமானைக் கவிசொல்ல வல்லீர்களோ? என்கிறார்.

ஆறாம் பாட்டு

வம்மின்புலவீர்! நும்மெய்வருத்திக்கைசெய்து உய்ம்மினோ*

இம்மன்னுலகினில் செல்வர் இப்போதில்லைநோக்கினோம்*

நும் இன்கவிகொண்டு நும்நும் இட்டாதெய்வமேத்தினால்*

செம்மின்சுடர்முடி என்திருமாலுக்குச்சேருமே.

வ்யா:- (வம்மின்) மநுஷ்யரைக் கவிபாடியேயாகிலும் தே3ஹ யாத்ரையை நிர்வஹிக்க வேண்டாவோ? என்னில், – அதுக்கு உபாயம் சொல்வேன், வாருங்கள்.  எங்ஙனேயென்னில், – க்ருஷ்யாதி3களைப் பண்ணி ஜீவியுங்கள். க்ருஷ்யாதி3கள் ஆயாஸாத்மகமாகையாலே அவை து3ஷ்கரமல்லவோ? அவற்றிற் காட்டில் ஸ்ரீமான்களான மநுஷ்யர்களை ஜீவநார்த்த2மாகக் கவி பாடுகையே நன்றன்றோ? என்னில்,- உங்கள் அபேக்ஷித ப2லப்ரத3ரான ஸ்ரீமான்கள் எந்த லோகத்தில் உளரோ? என்று பார்த்தோம்; பார்த்தவிடத்தில் ஒருவருமின்றியேயிருந்தது.  ஸ்ரீமான்களான மநுஷ்யர்கள் இல்லையாகில் இந்த்3ராதி3களை ஏத்தினாலோ? என்னில்; – உங்களுடைய அழகிய கவிகளைக் கொண்டு உங்களபீ4ஷ்ட தே3வதைகளை நீங்கள் ஏத்தினாலும், பின்னையும் அதெல்லாம் அந்த இந்த்3ராதி3 தே3வதைகளுக்கு அந்தராத்ம பூ4தனாய் ஸ்ரிய:பதியாயிருந்த எம்பெருமான் திருவடிகளிலே சேரும்; ஆனபின்பு, எம்பெருமான் தன்னையே ஏத்துங்கள் என்கிறார்.

ஏழாம் பாட்டு

சேருங்கொடைபுகழ் எல்லையிலானை* ஓராயிரம்

பேருமுடையபிரானையல்லால் மற்றுயான்கிலேன்*

மாரியனையகை மால்வரையொக்கும்திண்தோளென்று*

பாரிலோர்பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள்பேசவே.

வ்யா:- (சேரும்) ‘ஸ்ரிய:பதியான தனக்கு ஸத்3ருசமான நிரவதி4கௌதா3ர்யாத்3யஸங்க்2யேய கல்யாண கு3ணங்களை யுடையனாயிருந்த எம்பெருமானையல்லால், மற்று இந்த லோகத்தில் த்ருண கல்பரான மநுஷ்யாதி3களை, மாரியனையகை மால்வரையொக்கும் திண்தோளென்று பச்சைப் பசும்பொய்கள் பேசேன்’ என்றுகொண்டு ஸ்வலாப4த்தைப் பேசுகிறார்.

எட்டாம் பாட்டு

வேயின்மலிபுரைதோளி பின்னைக்கும௰ளனை*

ஆயபெரும்புகழ் எல்லையிலாதனபாடிப்போய்*

காயம் கழித்து அவன்தாளிணைக்கீழ்ப்புகும்காதலன்*

மாயமனிசரை என்சொல்லவல்லேன்என்வாய்கொண்டே?

வ்யா:- (வேயின்) நிரஸ்த ஸமஸ்த ப்ரதிப3ந்த4கனாய்க் கொண்டு வேயின் மலிபுரைதோளி பின்னைக்கு மணாளனைக் கல்யாண நிஸ்ஸீம நிரவதி4க கு3ணங்களைப்பாடி அவன் தாளிணைக்கீழ்ப்புகும் காதலை யுடையவனான நான் அவனை யொழிய ‘இந்த ப்ரக்ருதி வஶ்யரான மநுஷ்யரைக் கவிபாடுவேன்’ என்றால்தான் என்வாய் எனக்கு விதே4யமோ? என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

வாய்கொண்டுமானிடம்பாடவந்த கவியேனல்லேன்*

ஆய்கொண்டசீர்வள்ளல் ஆழிப்பிரான்எனக்கேயுளன்*

சாய்கொண்டஇம்மையும்சாதித்து வானவர்நாட்டையும்*

நீகண்டுகொள்ளென்று வீடுந்தரும்நின்றுநின்றே.

வ்யா:- (வாய்கொண்டு) மநுஷ்யரைக் கவிபாடுகைக்கு ஈடல்லாத ப்ரக்ருதியாய்ப் பிறக்கப் பெற்றேன்; ஸமஸ்த கல்யாண கு3ணோத3தி4யாய் சங்க2சக்ரத4ரனாயிருந்த எம்பெருமான், தன்னுடைய பரமௌதா3ர்யத்தாலே என்னுடைய கவிகளுக்குத் தன்னை விஷயமாகத் தந்தருளப்பெற்றேன்; இன்னமும் இப்படி இஹலோகத்திலே தன்னை எனக்கு அநுப4விக்கத் தந்தருளி, பின்னை ‘ஸர்வகாலமும் திருநாட்டையும் கைக்கொள்’ என்று அத்திருநாட்டையும் எனக்குத் தந்தருளும் என்கிறார்.

பத்தாம் பாட்டு

நின்றுநின்றுபலநாளுய்க்கும் இத்வுடல்நீங்கிப்போய்*

சென்றுசென்றாகிலுங்கண்டு சன்மங்கழிப்பானெண்ணி*

ஒன்றியொன்றிஉலகம்படைத்தான் கவியாயினேற்கு*

என்றுமென்றும்இனி மற்றொருவர்கவியேற்குமே?

வ்யா:- (நின்று) என்றேனுமாக ஒருகாலம் நம்மையறிந்து, நின்றுநின்று பலநாள் இஸ்ஸம்ஸாரத்திலே இவ்வாத்மாக்களை ப்ரவேஶிப்பிக்கும் இவ்வுடலத்தை நீங்கிப்போய் இவ்வாத்மாக்களை ஸம்ஸாரத்தைக் கழிக்கவேணுமென்று பார்த்தருளி, தத3ர்த்த2மாக அவஹிதனாய்க்கொண்டு ஜக3த் ஸ்ருஷ்டி பண்ணியருளின பரமகாருணிகருடைய கவியான எனக்கு மற்றொருவரைக் கவிபாடப் போருமோ? என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

ஏற்கும்பெரும்புகழ் வானவரீசன்கண்ணன்தனக்கு*

ஏற்கும்பெரும்புகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல்*

ஏற்கும்பெரும்புகழ் ஆயிரத்துள்ளிவையுமோர்பத்து*

ஏற்கும்பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லைசன்மமே.

வ்யா:- (ஏற்கும்) ஸ்வோசிதமான கல்யாண கு3ணங்களை யுடையனான வானவரீசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும்புகழான வண்குருகூர்ச்சடகோபன் சொல்லான தன்மைக்கு ஸத்3ருசமான அர்த்த2வத்த்வ மது4ரத்வாதி3 கு3ணங்களையுடைய – வான ஆயிரத்துள் ஏற்கும் பெரும் புகழையுடைய இப்பத்தைச் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மம் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

ப்ரவேம்    3-10

சன்மம்பலபலப்ரவேம்

(சன்மம் பலபல) எம்பெருமானையொழிய மற்றொருவரைக் கவிபாடுகைக்கு ஈடல்லாத ப்ரக்ருதியாகப்பெற்ற பேற்றை அநுஸந்தி4த்துச் சென்ற ப்ரீதிகீழ்; இனிமேல் எம்பெருமானைக் கவிபாடப்பெற்ற பேற்றை அநுஸந்தி4த்துச் செல்லுகிற ப்ரீதி.

முதற்பாட்டு

சன்மம்பலபலசெய்துவெளிப்பட்டுச் சங்கொடுசக்கரம்வில்*

ஒண்மையுடையஉலக்கைஒள்வாள்தண்டுகொண்டுபுள்ளூர்ந்து*உலகில்

வன்மையுடைய அரக்கர் அசுரரை மாளப்படைபொருத*

நன்மை உடையவன்சீர்பரவப்பெற்ற நான்ஓர்குறைவிலனே.

வ்யா:- அஸங்க்2யேய தி3வ்யாவதாரங்களைப் பண்ணி ஸகலமநுஜநயந விஷயதாங்க3தனாய் சங்க2சக்ர சார்ங்க3 முஸல க2ட்3கா3தி3 தி3வ்யாயுத4 4ரனாய்க்கொண்டு இந்த லோகத்தில் அதிப2லபராக்ரமரான அஸுர ராக்ஷஸரை ஸஸைந்யமாக நிரஸித்த மஹாகு3ணத்தை யுடையவனான வனுடைய அந்த கு3ணங்களை இப்படி வாழ்த்தப்பெற்ற எனக்கு இனி என்ன குறையுண்டு? என்கிறார்.

இரண்டாம் பாட்டு

குறைவில்தடங்கடல்கோளரவேறித் தன்கோலச்செந்தாமரைக்கண்*

உறைபவன்போல ஓர்யோகுபுணர்ந்த ஒளிமணிவண்ணன்கண்ணன்*

கறையணிமூக்குடைப்புள்ளைக்கடாவி அசுரரைக்காய்ந்த அம்மான்*

நிறைபுகழேத்தியும்பாடியும் ஆடியும் யான் ஒருமுட்டிலனே.

அவ:-  (குறைவில்.) இப்படி எம்பெருமானுடைய தி3வ்யாவதார தி3வ்ய சேஷ்டிதங்களைத் திரள அநுப4வித்து, பின்னை அவற்றைத் தனித்தனியே அநுப4விக்கிறார்.

வ்யா:- தன்னுள்ளே எம்பெருமான் கண்வளர்ந்தருளுகையாலே குறைவற்று அவாப்தகாமமான தடங்கடலிலே ப2ணாமணி வ்ராத மயூக2 மண்ட3ல ப்ரகாசமாநேத3ர தி3வ்யதா4மனாயிருந்த திருவநந்தாழ்வான் மேலே ஏறியருளித் தத்ஸம்ஸ்பர்ஸஜநித நிரதிசய ஸுகா2நுப4வ நிரதனாயிருந்து, ஆஶ்ரித பரித்ராணார்த்த2மாக வஸுதே3வ க்3ருஹே அவதீர்ணனாய், ஹேயப்ரத்யநீகனாய், கறையணி மூக்குடைப்புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான் நிறைபுகழ்களை நிரஸ்த ஸமஸ்த ப்ரதிப3ந்த4கனாய்க்கொண்டு ஏத்தியும் பாடியும் ஆடியும் அநுப4விக்கப்பெற்றேனென்கிறார்.

மூன்றாம் பாட்டு

முட்டில்பல்போகத்தொருதனிநாயகன் மூவுலகுக்குரிய*

கட்டியைத்தேனையமுதை நன்பாலைக்கனியைக்கரும்புதன்னை*

மட்டவிழ்தண்ணந்துழாய்முடியானைவணங்கி அவன்திறத்துப்

பட்டபின்னை* இறையாகிலும் யான் என்மனத்துப்பரிவிலனே.

வ்யா:- (முட்டில்) நித்யஸித்3தா4ஸங்க்2யேயபோ43னாய், நிரஸ்தஸமாப்4யதி4கனாய், ஸர்வேஶ்வரனாயிருந்துவைத்து, மநுஷ்யலோகத்திலே மநுஷ்யஸஜாதீயதயா வஸுதே3வக்3ருஹே அவதீர்ணனாய், ஸர்வலோகத்துக்கும் பொதுவாய், பரமபோ4க்3ய பூ4தனான எம்பெருமானை வணங்கி அவன் திறத்துப் பட்டபின்னை என் மநஸ்ஸில் து3:க்க2மெல்லாம் போயிற்று.

நான்காம் பாட்டு

பரிவின்றிவாணனைக்காத்துமென்று அன்றுபடையொடும்வந்தெதிர்ந்த*

திரிபுரஞ்செற்றவனும்மகனும் பின்னும்அங்கியும்போர்தொலைய*

பொருசிறைப்புள்ளைக்கடாவியமாயனை ஆயனைப்பொற்சக்கரத்து

அரியினை* அச்சுதனைப்பற்றி யான்இறையேனும்இடரிலனே.

வ்யா:- (பரிவின்றி)  ஓர் அநிஷ்டக3ந்த4ம் வாராதபடி வாணனை ரக்ஷிக்கவென்று ப்ரதிஜ்ஞை பண்ணிக்கொண்டு ஸஸைந்யனாய் வந்து ப்ரத்யவஸ்தி2கனான த்ரிபுர த3ஹநஜநித நிரவதி4க ஶௌர்ய க3ர்வாதி4ரூட4னான ருத்3ரனும், அவனிலும் அதிசூரனாயிருந்த அவன் மகனும், பின்னையும் அதிப3லபராக்ரமனான அக்3நியும் யுத்34த்திலே நிரஸ்தராம்படி அஸுரரக்ஷோ விநாஶகமான திருச்சிறகையுடைய னான பெரிய திருவடியைக் கடாவிய ஆஸ்சர்யபூ4தனை, வாணனுடைய தோள்களைத் துணித்தருளுகைக்காகத் திருவாழியைச் சுழற்றியருளின போதைத் திருவாழியும் கையும் இருந்த அழகாலே ஸகலஜநமநோநயநஹாரியாய், ஆஸ்ரித ஜநங்களோடு நித்ய ஸம்ஸ்லேஷஸ்வபா4வனாய், நிரதிசய ஸௌசீல்ய விசிஷ்டனா யிருந்தவனைப் பற்றியான் எறையேனும் இடரிலேன் என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

இடரின்றியேஒருநாளொருபோழ்தில் எல்லாவுலகுங்கழிய*

படர்புகழ்ப்பார்த்தனும்வைதிகனும் உடனேறத்திண்தேர்கடவி*

சுடரொளியாய்நின்றதன்னுடைச்சோதியில் வைதிகன்பிள்ளைகளை*

உடலொடுங்கொண்டுகொடுத்தவனைப்பற்றி ஒன்றும் துயரிலனே.

வ்யா:- (இடரின்றியே) ஸ்வசரணாரவிந்த3 ஶேஷதைகரதித்வ மாகிற ப்ரதி2தமான தேஜஸ்ஸையுடையனான பார்த்த2னும் வைதி3கனும் உடன் ஏற, ஒருநாள் ஒருபோதில், எல்லாவுலகும் கழிய அநாயாஸேந திண்தேர்கடவி, நிரவதி4க தேஜோவிஶிஷ்டமான தன்னுடைய ஸ்ரீவைகுண்ட2த்திலேயிருந்த வைதிகன் பிள்ளைகளை அவ்வுடலோடுங் கொண்டு கொடுத்தவனைப்பற்றி ஒன்றுந் துயரிலேன் என்கிறார்.

ஆறாம் பாட்டு

துயரில்சுடரொளிதன்னுடைச்சோதி நின்றவண்ணம்நிற்கவே*

துயரில்மலியும்மனிசர்பிறவியில் தோன்றிக்கண்காணவந்து*

துயரங்கள்செய்துதன்தெய்வநிலை உலகில் புகவுய்க்கும் அம்மான்*

துயரமில்சீர்க்கண்ணன்மாயன்புகழ்துற்ற யான்ஓர்துன்பமிலனே.

வ்யா:- (துயரில்) ஸமஸ்தஹேய ப்ரத்யநீக நிரதிசய தேஜோவிசிஷ்ட ஸ்வாஸாதா4ரண தி3வ்யரூபத்தோடேகூட, ஸமஸ்த ஹேயாஸ்பத3 மநுஷ்ய ஸஜாதீயதயா அவதீர்ணனாய் ஸகலமநுஜ நயந விஷயதாங்க3தனாய், அஶேஷஜந மநோநயநபநஹாரி தி3வ்யசேஷ்டிதாநி குர்வாணனாய்க்கொண்டு தன்னுடைய ஐஸ்வரமான ஸ்வபா4வத்தை இந்த லோகத்திலே ஆவிஷ்கரித்தருளும் ஸ்வபா4வனாய், ஆஸ்சர்யபூ4தனாய், ஹேயப்ரத்யநீக கல்யாணகு3ண விசிஷ்டனான கண்ணன் புகழ்துற்றயான் ஓர் துன்பமிலேன் என்கிறார்.

ஏழாம் பாட்டு

துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய்உலகங்களுமாய்*

இன்பமில்வெந்நரகாகி இனியநல்வான்சுவர்க்கங்களுமாய்*

மன்பல்லுயிர்களுமாகிப் பலபலமாயமயக்குக்களால்*

இன்புறும் இவ்விளையாட்டுடையானைப்பெற்று ஏதும் அல்லல் இலனே.

வ்யா:- (துன்பமும்) புண்யபாபரூப கர்மங்களுக்கும் ப2லபோ43 பூ4மியான லோகங்களுக்கும் கர்மப2லபூ4தமான ஸ்வர்க்க3 நரகங்களுகும் ஸ்வர்க்க3நரகாதி32லபோ4க்தாக்களான ஆத்மாக்க ளுக்கும் அந்தராத்மபூ4தனாய், நிகி2லஜக3து33ய விப4வலயாதி3 லீல -னாயிருந்தவனைப் பெற்று ஏதும் அல்லலிலேன் என்கிறார்.

எட்டாம் பாட்டு

அல்லலில் இன்பம் அளவிறந்து எங்கும் அழகமர் சூழொளியன்*

அல்லிமலர்மகள்போகமயக்குக்களாகியும் நிற்குமம்மான்*

எல்லையில்ஞானத்தன் ஞானமஃதேகொண்டுஎல்லாக்கருமங்களுஞ்செய்*

எல்லையில்மாயனைக்கண்ணனைத்தாள்பற்றி யான் ஓர்துக்கமிலனே.

வ்யா:- (அல்லலில்) து3:க்கா2ஸம்பி4ந்ந நிரவதி3காந்நத3 விசிஷ்டனாய், கல்யாணதம நிரதிசயௌஜ்ஜ்வல்ய விசிஷ்டனாய், நிரதிசய ஸௌகுமார்ய ஸௌந்த3ர்யாதி3 கல்யாணகு3ண பரிபூர்ணையாயிருந்த பெரியபிராட்டியாரோடு உள்ள அநவரத ஸம்ஸ்லேஷாநுகு3ண நிரதிசய தி3வ்யஜ்ஞாநனாய், அந்த ஜ்ஞாநத்தையே கொண்டு பிராட்டியுடைய ப்ரீத்ய்ர்த்த2மாக ஜக3த்ஸ்ருஷ்ட்யாதி3 லீலைகளைப் பண்ணியருளுகிற ஆஸ்சர்ய பூ4தனான வண்துவரைப் பெருமாளுடைய திருவடிகளைப்பற்றி நான் நிரஸ்த ஸமஸ்த து3:க்க2னானேன் என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

துக்கமில்ஞானச்சுடரொளிமூர்த்தி துழாயலங்கல்பெருமான்*

மிக்கபன்மாயங்களால்விகிருதஞ்செய்து வேண்டுமுருவுகொண்டு*

நக்கபிரா னோடு அயன்முதலாக எல்லாரும் எவையும்* தன்னுள்

ஒக்கவொடுங்கவிழுங்கவல்லானைப்பெற்று ஒன்றும் தளர்விலனே.

வ்யா:- (துக்கமில்) ஸமஸ்தஹேயரஹிதனாய், ஸர்வஜ்ஞனாய், நிரதிசயதேஜோமய தி3வ்யரூபனாய், திருத்துழாயாலே அலங்க்ருதனாய், தன்னுடைய விசித்ர சக்திகளாலே ஸ்வாபி4மத தி3வ்யரூபங்களைக்கொண்டு ஆஶ்சர்ய தி3வ்யசேஷ்டிதங்களைச் செய்து, ப்3ரஹ்மாதி3 ஸர்வாத்மாக்களையும் ஒருகாலே த்ருவயிற்றிலே ஒடுங்கவிழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்விலேன் என்கிறார்.

பத்தாம் பாட்டு

தளர்வின்றியே  என்றும் எங்கும்பரந்த தனிமுதல்ஞானமொன்றாய்*

அளவுடை ஐம்புலன்களறியாவகையால் அருவாகிநிற்கும்*

வளரொளியீசனைமூர்த்தியைப் பூதங்களைந்தை இருசுடரை*

கிளரொளிமாயனைக்கண்ணனைத்தாள்பற்றி யான் என்றுங்கேடிலனே.

வ்யா:- (தளர்வின்றியே) அநாயாஸேந ஸர்வதா3 ஸர்வத்ர நியந்த்ருதயா வ்யாப்த்னாய், ஜக3த்காரண பூ4தனாய், ஜ்ஞாந ரூபனாய், ஸ்வேதர ஸமஸ்த விஸஜாதீயனாய் வ்யாப்ய் பூ4தரான ஆத்மாக்களுடைய பரிச்சி2ந்நவஸ்து க்3ராஹகமான இந்த்3ரியங் -களுக்கு அபூ4மியாய், வ்யாப்யவஸ்துக3ததோ3ஷை: அஸம் -ஸ்ப்ருஷ்டனாய், ஸ்வாஸாதா4ரண தி3வ்ய ரூப விசிஷ்டனாய், ப்ருதி2வ்யாதி3 பூ4த சந்த்3ர ஸூர்யாதி3 ஜக3ச்ச2ரீரனாய், தன்னுடைய நிரவதி4க தேஜோவிஶிஷ்ட ரூபத்தோடே கூட வந்து வஸுதே3வ க்3ருஹே அவதீர்ணனான எம்பெருமானுடைய திருவடி களைப் பற்றி இனி ஒருநாளும் கேடிலேன் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

கேடில்விழுப்புகழ்க்கேசவனைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன*

பாடலோராயிரத்துள் இவையுமொருபத்தும் பயிற்றவல்லார்கட்கு* அவன்

நாடும்நகரமும்நன்குடன்காண நலனிடையூர்திபண்ணி*

வீடும்பெறுத்தித்தன்மூவுலகுக்குந்தரும் ஒருநாயகமே.

வ்யா:-_(கேடில்) நித்யஸித்34 கல்யாணகு3ணவிசிஷ்டனான கேசவனைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன பாடல் ஓராயிரத்துள் இவையும் ஓர் பத்தும் பயிற்ற வல்லார்கட்கு அவன் நாடும் நகரமும் நன்கு உடன்காண நல்ல ஸம்பத்துக்களை இந்த லோகத்திலே அநுப4விப்பித்து, அவர்களை நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிக து3:க்க2ராக்கி, அவர்களுக்குத் தன்னுடைய ஸர்வேச்வரத்வத்தையும் தருமென்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.