Thirumozhi 11-5

பெரிய திருமொழி

பதினோராம் பத்து

ஐந்தாம் திருமொழி

மானமரு மென்னோக்கி, வைதேவி இன் துணையாக் *

கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான், காணேடீ ! *

கானமரும் கல்லதர் போய்க், காடுறைந்த பொன்னடிக்கள் *

வானவர் தம் சென்னி மலர் கண்டாய், சாழலே !      11.5.1

தந்தை தளை கழலத் தோன்றிப், போய் * ஆய்ப்பாடி

நந்தன் குலமதலையாய் வளர்ந்தான், காணேடீ ! *

நந்தன் குலமதலையாய் வளர்ந்தான், நான்முகற்குத்

தந்தை காண் * எந்தை பெருமான் காண், சாழலே !   11.5.2

ஆழ்கடல் சூழ் வையகத்தார் ஏசப், போய் * ஆய்ப்பாடித்

தாழ்குழலார் வைத்த தயிருண்டான், காணேடீ ! *

தாழ்குழலார் வைத்த தயிருண்ட, பொன்வயிறு * இவ்

வேழுலகு முண்டும் இடமுடைத்தால், சாழலே !         11.5.3

அறியாதார்க்கு ஆனாயனாகிப், போய் * ஆய்ப்பாடி

உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்தான், காணேடீ ! *

உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்த, பொன் வயிற்றுக்கு *

எறி நீருலகனைத்தும் எய்தாதால், சாழலே !     11.5.4

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால், மொத்துண்டு *

கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான், காணேடீ ! *

கண்ணிக் குறுங்கயிற்றால், கட்டுண்டானாகிலும் *

எண்ணற் கரியன் இமையோர்க்கும், சாழலே !  11.5.5

கன்றப் பறை கறங்கக், கண்டவர் தம் கண் களிப்ப *

மன்றில் மரக்கால் கூத்து ஆடினான், காணேடீ ! *

மன்றில் மரக்கால் கூத்து, ஆடினா னாகிலும் *

என்றும் அரியன் இமையோர்க்கும், சாழலே !   11.5.6

கோதை வேல் ஐவர்க்காய், மண்ணகலம் கூறிடுவான் *

தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான், காணேடீ ! *

தூதனாய் மன்னவனால், சொல்லுண்டா னாகிலும் *

ஓதநீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான், சாழலே !           11.5.7

பார் மன்னர் மங்கப் படை தொட்டு, வெஞ்சமத்துத் *

தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான், காணேடீ ! *

தேர் மன்னர்க்காய் அன்று, தேரூர்ந்தா னாகிலும் *

தார் மன்னர் தங்கள் தலைமேலான், சாழலே !              11.5.8

கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய் *

வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான், காணேடீ ! *

வண்தாரான் வேள்வியில், மண்ணிரந் தானாகிலும் *

விண்டேழுலகுக்கும் மிக்கான் காண், சாழலே !            11.5.9

கள்ளத்தால் மாவலியை, மூவடி மண் கொண்டளந்தான் *

வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால், காணேடீ ! *

வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் * கலிகன்றி

உள்ளத்தினுள்ளே உளன் கண்டாய், சாழலே !       11.5.10  திருவேங்கடம் திருப்பதி,

திருப்பாற்கடல்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.