Thiruvoymozhi 5-10

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

பத்தாம் திருவாய்மொழி

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கைசெய்து *ஐவர்க்குத்

திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும் *

நிறந்தனுாடு புக்கு எனதாவியை நின்றுநின்று உருக்கி யுண்கின்ற * இச்

சிறந்த வான் சுடரே !, உன்னை என்று கொல் சேர்வதுவே ?           5.10.1

வதுவைவார்த்தையுள் ஏறுபாய்ந்ததும் மாயமாவினை வாய்பிளந்ததும் *

மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் *

அதுவிதுவுதுவென்னலாவனவல்ல என்னை உன்செய்கை நைவிக்கும் *

முதுவைய முதல்வா! உன்னை என்று தலைப் பெய்வனே?          5.10.2

பெய்யும் பூங்குழல் பேய் முலையுண்ட

பிள்ளைத் தேற்றமும் * பேர்ந்தோர் சாடிறச்

செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் *

நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள

நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்கப் *

பையவே நிலையும் வந்து என்னெஞ்சை உருக்குங்களே.   5.10.3

கள்ளவேடத்தைக் கொண்டு, போய்ப்புரம் புக்கவாறும் * கலந்தசுரரை

உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும் *

வெள்ளநீர்ச் சடையானும், நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் *

உள்ளமுள் குடைந்து என்னுயிரை உருக்கி உண்ணுமே.    5.10.4

உண்ண வானவர் கோனுக்கு ஆயர்ஒருப்படுத்த அடிசில் உண்டதும் *

வண்ண மால்வரையை யெடுத்து மழை காத்ததும் *

மண்ணை முன்படைத்துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள் *

எண்ணுந் தோறும் என்னெஞ்சு எரிவாய் மெழுகொக்கும் நின்றே.          5.10.5

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன *

ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் *

நின்று நின்று நினைகின்றேன்

உன்னை எங்ஙனம் நினைகிற்பன் ? * பாவியேற்கு

ஒன்று நன்குரையாய் உலகமுண்ட வொண் சுடரே !           5.10.6

ஒண் சுடரோடிருளுமாய் நின்றவாறும்

உண்மையோடின்மையாய் வந்து * என்

கண் கொளா வகை நீ கரந்து என்னைச் செய்கின்றன *

எண்கொள் சிந்தையுள் நைகின்றேன் என்கரிய மாணிக்கமே ! * என்

கண்கட்குத் திண்கொள்ள, ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.           5.10.7

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் * திசைமுகன்

கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் *

பொருவிலுன் தனி நாயகமவை

கேட்குந் தோறும் என்னெஞ்சம் நின்று நெக்கு *

அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே ?        5.10.8

அடியை மூன்றை இரந்தவாறும்

அங்கே நின்றாழ் கடலும் மண்ணும் விண்ணும்

முடிய * ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும் *

நொடியுமாறவை கேட்குந் தோறும்

என்னெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும் *

கொடிய வல்வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே?      5.10.9

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவருண்ண * அசுரரை

வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் *

ஊடு புக்கு எனதாவியை உருக்கி யுண்டிடுகின்ற * நின் தன்னை

நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே !          5.10.10

நாகணை மிசை நம்பிரான் சரணே,

சரண் நமக்கென்று * நாள் தொறும்

ஏகசிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன் *

ஆக நூற்ற வந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் *

மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே.       5.10.11

*************

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.