Thiruvoymozhi 2-1

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

முதல் திருமொழி

வாயும் திரையுகளும் கானல், மடநாராய் ! *

ஆயும் அமருலகும் துஞ்சிலும், நீ துஞ்சாயால் *

நோயும் பயலைமையும், மீதூர எம்மே போல் *

நீயும் திருமாலால், நெஞ்சம் கோட்பட்டாயே.    2.1.1

கோட்பட்ட சிந்தையையாய்க், கூர்வாய அன்றிலே !

சேட்பட்ட யாமங்கள் சேராது, இரங்குதியால் *

ஆட்பட்ட எம்மே போல் நீயும், அரவணையான்

தாட்பட்ட * தண்துழாய்த் தாமம், காமுற்றாயே?               2.1.2

காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்

நீ முற்றக் * கண்துயிலாய், நெஞ்சுருகி ஏங்குதியால் *

தீ முற்றத் தென்னிலங்கை, ஊட்டினான் தாள் * நயந்த

யாமுற்றது உற்றாயோ? வாழி கனைகடலே !                2.1.3

கடலும் மலையும் விசும்பும் துழாய், எம்போல் *

சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால், தண்வாடாய் ! *

அடல் கொள் படையாழி அம்மானைக் காண்பான் நீ *

உடலம் நோயுற்றாயோ ? ஊழிதோறூழியே.       2.1.4

ஊழிதோறூழி, உலகுக்கு நீர் கொண்டு *

தோழியரும் யாமும் போல், நீராய் நெகிழ்கின்ற *

வாழிய வானமே ! நீயும் மதுசூதன் *

பாழிமையில் பட்டு, அவன் கண் பாசத்தால் நைவாயே?        2.1.5

நைவாய எம்மே போல், நாள்மதியே ! * நீ இந்நாள்

மைவானிருளகற்றாய், மாழாந்து தேம்புதியால் *

ஐவாயரவணைமேல், ஆழிப்பெருமானார்

மெய்வாசகம் கேட்டு * உன் மெய் நீர்மை தோற்றாயே?        2.1.6

தோற்றோம் மடநெஞ்சம், எம்பெருமான் நாரணற்கு * எம்

ஆற்றாமை சொல்லி அழுவோமை, நீ நடுவே *

வேற்றோர் வகையில் கொடிதாய், எனையூழி *

மாற்றாண்மை நிற்றியோ ? வாழி கனையிருளே !      2.1.7

இருளின் திணிவண்ணம், மாநீர்க்கழியே ! * போய்

மருளுற்று இராப்பகல் துஞ்சிலும், நீ துஞ்சாயால் *

உருளும் சகடமுதைத்த, பெருமானார்

அருளின் பெரு நசையால் * ஆழாந்து, நொந்தாயே ?     2.1.8

நொந்தாராக் காதல்நோய், மெல்லாவி உள்ளுலர்த்த *

நந்தா விளக்கமே ! நீயும் அளியத்தாய் *

செந்தாமரைத் தடங்கண், செங்கனிவாய் எம்பெருமான் *

அந்தாமத் தண்துழாய் ஆசையால், வேவாயே.                 2.1.9

வேவாரா வேட்கை நோய், மெல்லாவி யுள்ளுலர்த்த *

ஓவாது இராப்பகல், உன் பாலே வீழ்த்தொழிந்தாய் *

மாவாய் பிளந்து, மருதிடை போய் * மண்ணளந்த

மூவா முதல்வா ! இனி, எம்மைச் சோரேலே.          2.1.10

சோராத எப்பொருட்கும், ஆதியாம் சோதிக்கே *

ஆராத காதல், குருகூர்ச் சடகோபன் *

ஓராயிரம் சொன்ன, அவற்றுள் இவை பத்தும் *

சோரார் விடார் கண்டீர் வைகுந்தம், திண்ணனவே.     2.1.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.