ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானம் Part 3

த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

 

ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ணஷாட்குண்யவிக்ரஹ |

பராநந்த பரப்ரம்ஹந்நமஸ்தே பரமாத்மநே ||           1

 

பூர்ணஷாட்குண்ய விக்ரஹ = ஜ்ஞாந ஶக்தி பலைஶ்வர்ய தேஜஸ்ஸுக் கள் என்கிற ஆறு குணங்களும் அமைந்த திருமேனியையுடையவரே , புண்டரீகாக்ஷ = செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய வரே , பராநந்த = இதுக்கவ்வருகில்லை யென்னும்படி மேம்பாடுடைய ஆனந்தமுடையவரே , இங்ஙனே பஹுவ்ரீஹி ஸமாஸமன்றிக்கே ,  பரஶ் சாஸௌ ஆனந்தஶ்ச யென்று கர்மதாரயமாய் உத்தமமாந் ஆனந் தமே யென்றதாகவுமாம் ; “ ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் “ என்னக் கடவதிறே | தத்குண ஸாரஸ்வத்வாத் தத்வ்யபதேஶம் பண்ணுகிறபடி இங்ஙனமன்றிக்கே , பராநாநந்த யதீதி பராநந்தக யென்றாய் , “ யேஷ ஹ்யேவாநந்தயாதி “ என்கிறபடியே பிறரையும் தன்னோடொக்க ஆனந்திப்புக்குமவரே யென்னவுமாம் | பரப்ரம்ஹந்  = ப்ரம்ஹலக்நமா கிறது – ஜகஜ்ஜந்மாதிகாரநத்வ மென்றிறே “ஜந்மாத்யஸ்யயத:“ இத்யாதி ஸூத்ரங்களாலே நிஷ்கரிக்கப்பட்டது ; மூவுலகும் படைத்தித்தளித்துக் கேதுமவநே யென்கை | தே ஜிதம் = இப்படிப்பட்ட உனக்கு பல்லாண்டு; பரமாத்மநே தே நம: = உலகனைத்துக்கெல்லா மோருயிரான தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன் | ‘ஜிதம்‘ என்று வாய் படைத்த ப்ரயோஜ நம் பெறுமாறு சொல்லி ‘ நம: ‘ என்று உடம்பு படைத்த ப்ரயோஜநம் பெறும்படி சொல்லுகிறது |

 

நமஸ்தே பீதவஸந நம: கடகதாரிணே |

நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தரவிக்ரஹ ||      2

 

 

பீதவஸந = பீதகவாதைப்பிரானே , கடகதாரிணே தே நம: = தோள்வளை பூண்டிரா நின்றுள்ள தேவரீருக்கு நமஸ்காரம் ; நீலாலகா பத்த வேணீ ஸுந்தரவிக்ரஹ = மை வண்ண நறுங்குஞ்சிக் குழல்களாலே ஸமைந்த வேணீ பந்தத்தாலே அழகு பெற்ற திருமேனி யுடையவனே , தே நம: = ஆதராதிஶயாதாம்ரேதிதம் .

 

ஸ்புரத்வலயகேயூர நூபுராங்கத பூஷணை: |

ஷோபநைர்பூஷிதாகார கல்யாணகுணவாரிதே ||         3

 

கருணா பூர்ண ஹ்ருதய ஶங்கசக்ர கதாதர: |

அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோகய ||  4

 

 

ஷோபநை: = அழகிய வாய் , ஸ்புரத்வலய கேயூர நூபுராங்கத பூஷணை: = விளங்காநின்றுள்ள வளைகள் பாதகம் புஜபந்தம் முதலிய திவ்யாபரண ங்களாலே , ( அங்கதமென்றும் கேயூரமென்றும் தோள்வளைக்கு பேரா யினும் இங்கு ஸஹபார பலத்தாலே அர்த்தபேதம் கொள்ளவேணும் , ஓன்று தோள்வளையையும் ஒன்று புஜவளையையும் சொல்லிற்றாகி றது ) , பூஷிதகார = இவ்வோபூஷணங்களாலே அலங்க்ருதமான் திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையாய் , கல்யாணகுணவாரிதே = வாத்ஸல் யாதி மங்களகுணங்களுக்குக் கடல் போன்றவனே , கருணாபூர்ண ஹ்ருதய = ஆஶ்ரிதர் திறத்திலே இரக்கம் மிக்கிரா நின்றுள்ள திருவுள்ள முடையவனே , ஶங்க சக்ர கதா தர = ஆஶ்ரிதர் நோவுபடக் கண்டால் உடனே பரிஹரித்தருள்வதற்காக திவ்யாயுதங்களை என்றுமொக்கக் கையிலே ஏந்தியுள்ளவனே , அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோகய = அம்ருதமும் ஆனந்தமும் நிறைந்த திருக்கண்களாலே குளிர கடாக்ஷஇத்தருள வேணும் . பகவத்விஷயமென்றால் செவி புதைக்கும்படியான இவ்விருள் தருமா ஜ்ஞாலத்திலே இங்ஙனே ஓரடியவை லபிக்கப்பெற்றோமே ! என்று திருக்கண்களாலே அம்ருதமும் ஆனந்தமும் புற வெள்ளமிடக்காண விரும்புகிறபடி .

 

க்ருஷம் க்ருதக்நம் துஷ்கர்மகாரிணம் பாபபாஜநம் |

அபராதஸஹஸ்ராணாமாகரம் கருணாகர ||              5

 

 

 

க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

விஷயார்ணவமக்நம் மாமுத்தர்தும் த்வமிஹார்ஹஸி ||  6

 

கருணாகரா = அருளுக்கு ஆகரமானவனே , மதுராதிப = “ நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராபுரீம் “ என்று இங்குள்ளாரை வாரிப் பிடியாகப் பிடித்துக்கொண்டு போவதற்கு திருமதுரையிலே வந்து திரு வவதரித்தவனே , க்ருஷம் = பலவகைப்பட்ட சிந்தைகளாலே உடல் மெலிந்து , க்ருதக்நம் = நீ எத்தனை நன்மை செய்தருளினாலும் அவற்றை ஒரு பொருளாக்கவும் மதிக்க மாட்டாவதனை , துஷ்கர காரிநம் = தீய செயல்களென்று ஶாஸ்த்ரங்களிலே எவை சில கர்மங் கள் க்ரஹிக்கப்பட்டிருக்கும் , அவற்றின் ஸ்வரூபம் என்னடியாகவா யிற்று நிறம் பெறுவது , அவற்றை செய்துபோருகையே தொழிலாக உடையானே , பாபபாஜநம் = இப்போது செய்துபோருகிற வளவேயோ , எந்நின்ற யோநியுமாய் கூடுபூரித்துக் கிடக்கும் பாபங்களுக்கும் களஞ் சியமாயிறே அடியேனிருப்பது . அபராதஸஹஸ்ராணாமாகரம் = தேவர் “ குணாநாமாகரோ மஹாந் “ என்று நாடெங்கும் புகழ் பெற்றபோலே , அடியேனும் அபராதஸஹஸ்ராணாமாகர: “ என்று விருது பிடித்துத்திரி கிறபடி பாரீர் , மாம் = இப்படி தேவரீருடைய நிக்ரஹஹேதுக்களில் அல்பமும் குறைவில்லாத அடியேனை , கேவலயா க்ருபயா க்ருஹாண = நிர்ஹேதுகமான க்ருபையாலே ‘ இவன் நம்மடியான் ‘ என்று திருவுள்ளம் பற்றியருள வேணும் . ( கேவலயா ) மடிமாங்கா யிடும்படிக்கீடாக இத்தலையில் சிறிதேனும் தொங்கிற்றுண்டோ என்று தேடப்புக்கலும் கிடைப்பதொன்றில்லை காண் , உன்னுடைய க்ருபை யொன்றுமே ஜீவிக்கவேண்டும்கிதாய் , விஷயார்ணவமக்நம் மாம் = ஶப்தாதிவிஷயங்களாகிற கடலினுள்ளே அழுந்திக்கிடக்கிற அடியேனை த்வமுத்தர்துமர்ஹஸி = தேவரீர் தாமே கரையேற்றக் கடவீர் .

 

பிதா மாதா ஸுஹ்ருத்பந்து: ப்ராதா புத்ரஸ்த்வமேவ ஹி |

வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத்கிஞ்சித் த்வயா விநா ||    7

 

பிதா = உத்பாதகநாய் ஹிதகாமநாயிருக்கிற பிதாவும் , மாதா = கர்ப தாரணம் பண்ணி ப்ரஶவக்லேஶத்தை அநுபவித்து அஷுசி ப்ரஸவங்க ளுக்கும் இரையாதே ரக்ஷஇத்து உள்ளதனையும் ப்ரியமே நடத்திப் போரும் தாயும் , ஸுஹ்ருத் = எப்போதும் நன்மையே சிந்திக்கும் ஸகாவும் , பந்து: = ஓராபத்து வந்தவாறே கண்ணை துடைக்க வரும் பாந்தவ ஜ்ஞாநமும் , ப்ராதா = நன்மை தீமைகளுக்குத் துணை நிற்கு மவனான உடன் பிறந்தானும் , புத்ர: = நிரய நிஷ்டாரகனான பிள்ளையு மாகிற யெல்லாம் , த்வமே ஹி = “ சேலேய் கண்ணியரும் பெறும் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே யெல்லா உறவுமுறையும் எனக்கு நீயே காண் , வித்யா = இங்கு ஜீவநத்தையும் அங்கு உஜ்ஜீவநத்தையும் , தனம் ச = ஆபத் துக்கு உதவும் பொருளும் , காம்யம் ச = மற்றுமுள்ள க்ருஹ க்ஷஏத்ர பஶ்வந் நாதி காம்யவர்கமும் , த்வயா விநா அந்யத் கிஞ்சித் ந = எல்லாம் நீயேயன்றி வேறொன்றில்லை காணேநக்கு |

 

யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

தவ தாஸ்யைகபோகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: ||    8

 

மே = உன்னையே தஞ்சமாக பற்றினவெனக்கு , யத்ர குத்ர குலே வாஸா அஸ்து = பாதாள ப்ருத்வீ நரக ஸ்வர்காதிகளுள் எவ்விதத்திலா கவுமாம் வாஸம் , யேஷு கேஷு பவஹ அஸ்து = ‘ யோநிஷு ’ என்றித்தனை அத்யாஹார்யம் = ஸுர நர திர்யக் யோநிகளில் பேர் சொல்லவும் பொராததொரு யோநிகமாவும் பிறப்பிடம் ; இதிலே ஒரு நிர்பந்தமில்லை காண் . பின்னை அதுள்ளது யெவ்விஷயத்திலேயென் னில் ; ( தவேத்யாதி ) தேவரீருடைய ‘அடிமை என்னுமக்கோ யிந்மை’ என்கிற தாஸ்ய ஸாம்ராஜ்ய மென்பது யாதொன்றுண்டு , அது தன்னிலே யெனக்கு யெப்போதும் யெவ்விதத்தும் அபிருசி வேண்டு மத்தனை காண் தேட்டம் | ‘ திவி வா புவி வா மமாஸ்து வாஸ: ‘ யென்பதை ஸ்மரிப்பது |

 

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

த்வாம் விநா நாந்யமுத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப்யஹம் || 9

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா = நினைவுக்கு உறுப்பான நெஞ்சி னாலாவது , செய்கைக்குறுப்பான கரங்களினாலாவது , சொல்லுக்குறுப் பான வாக்கினாலாவது, உத்துங்கன் விஷயத்திலே அதமன் செய்யக் கடவ செயலுக்கு உறுப்பான ஶிரஸிநாலாவது , “ கர்மணா “ என்று இந்த்ரிய ஜந்ம வ்யாபாரத்தை சொல்லக்கடவதாகிலும் இவ்விதத்திலே லக்ஷணயா கர்ம ஸாதநமான காரணந்தன்னை சொல்லிற்றாகிறது .

“ அர்தாத் ப்ரகரணா லிங்க தோசித்யா தர்த நிஶ்சய: “ யிறே . ஆக , மநோ வாக்காய ஶிரஸ்ஸுக்களிலொன்றுலாவது , கதஞ் ச ந = எவ்வகையிலும் , த்வாம் விநா அந்ய முத்திஶ்ய = தேவரீரை யொழிய மற்றொருவரை யுத்தேசித்து , அஹம் கிஞ்சிதபி ந கரிஷ்யே = அடியேன் ஒன்றும் செய்யக்கடவனல்லேன் , தேவரீரை யொழிய மற்றொருவனையும் நெஞ்சாலும் நினையேன் , வாய் கொண்டும் பேசேன் , கையாலும் தொடேன் , தலையாலும் வணங்கேனென்கை . கதஞ்ச ந = எப்படிப்பட்ட ஆபத்து நேர்ந்தபோதிலு மென்றபடி .

 

பாஹி பாஹி ஜகந்நாத க்ருபயா பக்தவத்ஸல |

அநாதோஹமதந்யோஹமக்ருதார்த: கதஞ்சந ||.     10

 

ஜகந்நாத = உலகங்கட்கு அரசே , பக்தவத்ஸல = ஆஶ்ரிதர்களின் குற்றங்களையே பச்சையாகக்கொள்ளுமவநே , க்ருபயா பாஹி பாஹி = கேவல க்ருபையினாலே ரக்ஷஇத்தருளவேணும் ரக்ஷஇத்தருளவேணும்.

ரக்ஷண த்வராதிஶய த்யோதநாய த்விருக்திஹி , அஹமநாத: = அடியேன் தேவரீரையன்றி வேறொரு புகலற்றிரா நின்றேன் . அதந்ய: = அகிஞ்சநன் , கதாஞ்சந அக்ருதார்த: = செய்ய வேண்டிய செயல்களில் ஏதாகிலுமொன்றையாவது சிறிது குறையவாகிலும் அநுஷ்டிக்கப் பெற் றிலேன் | ஆன பின்பு , க்ருபயா பாஹி = இத்தலையிலொன்றையும் ப்ரதீக்ஷஇயாத க்ருபையைக்கொண்டு கார்யம் செய்யப்பாராய் .

 

ந்ருஶம்ஸ: பாபக்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ்ஸதா |

பவார்ணவநிமக்நம் மாமநந்ய கருணோததே ||           11

 

 

கருணாபூர்ணத்ருஷ்டிப்யாம் தீநம் மாமவலோகய |

த்வதக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் நார்ஹஸி ப்ரபோ ||  12

 

 

ந்ருஶம்ஸ: = காதுகந் ; ஆத்துவாநியன் காணடியேன் , பாப க்ருத் = ஹிம்ஸை ஒன்று தானோ செய்து போனது ? “ நானே நாநாவித நரகம் புகு பாவம் செய்தேன் “ . க்ரூர: = இத்தனை பாவம் செய்தும் நெஞ்சில் தான் சிறிது ஈரமுண்டோ ? வஞ்சக: = பெரிய திருவிழிகளாலே நால்வர் நின்ற விதத்தே கையும் கர்தரியுமாய்த் திரியுமவன் காண் . ஸதா நிஷ்டுர: = மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் ‘அம்மே’ யென்ன ப்ராப்தியுண்டு , அதுவுமில்லை காணேனக்கு . பவார்ணவ நிர்மக்நம் = பிறவிக் கடலுள் துலங்கா நிற்கிற , அநந்யம் = வேறு புகலற்றிருக்கிற , தீநம் = போர க்லேஶப்பற்றிருக்கிற , மாம் = அடியேனை , கருணோததே = கருணைக்கடலே , கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் அவலோகய = திருவருள் விஞ்சின திருக்கண்களாலே நோக்கியருளவேணும் . ப்ரபோ = எம்பெருமானே , த்வதக்ரே = தேவரீர் திருமுன்பே , பதிதம் = வேறற்ற மரம் போலே வீழ்ந்தவனாய் , தா அவகம் = ‘அஹம் மம’ என்றிருந்த நிலை குலைந்து உன்னுடையவனென்று பேர் சுமந்திரா நின்ற , மாம் = அடியேனை , த்யக்தும் நார்ஹஸி = கைவிடவில்லை யல்லை காண் . ( த்வதக்ரே பதிதம் ) * எத்திசையு முழன்றோடி யிளைத்து வீழ்ந்த காகா ஸுரனிலும் கெட்டேனோ ? ( த்யக்தும் நார்ஹஸி ப்ரபோ ) நிரங்குஸ ஸ்வாதந்த்ரனான வுனக்குச் செய்யக்கூடாததொன்றில்லையேலும் என்னை கைவிடுகை உன்னுடைய செங்கோண்மைக்குச் சதிரான்றுகிதாய்.

 

மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

த்வத்பாதபங்கஜம் ப்ராப்தும் நாந்யத்த்வத்கருணாம் விநா ||    13

 

த்ரிவித பாபாநி = வாசிக காயிக மாநஸிக பேதத்தாலே மூன்று வகைப் பட்ட பாபங்களும் , புந: புந: மயா க்ருதாநி = ‘யத்ப்ரம்ஹ நியதாநு பவேப்யநாஶ்யம் த்த் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்து ரிஹ க்ஷணார்தே’ என்றபடியே ஒன்றும் குறைவில்லாதபடி அடுத்தடுத்து அடியேனால் செய்து தலைக் கட்டப் பற்றான, த்வத் பாதபங்கஜம் ப்ராப்தும் = தேவரீருடைய திருவடித்தாமரை அடைய அணுகுவதற்கு , த்வத்கருணாம் விநா அந்யத் நா = நின்னருளன்றிப் புகலொன்றுமில்லை .

 

ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீந்யப்ஜ லோசன |.

த்வதாஜ்ஞயா ப்ரயுக்தாநி த்வாமுத்திஷ்ய க்ருதாநி வை ||     14

 

அப்ஜ லோசந = தாமரைக்கண்ணனே , த்வதாஜ்ஞயா ப்ரயுக்தாநி =

“ ஶ்ருதி ஸ்ம்ருதிர்மமைவாஜ்ஞா “ என்கிறபடியே தேவரீருடைய திவ்யாஜ்ஞையான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளாலே சோதிதமான , யாகாதீநி ப்ரஸித்தாநி ஸாதநாநி = யாகம் முதலான ப்ரஸித்தங்களான ஸாதநங்களத்தனையும் , த்வாமுத்திஷ்ய க்ருதாநி = தேவரீரை யுத்தே ஸித்து செய்துமுடிக்கப்பட்டன . கீழ் ஶ்லோகத்திலே , ‘ த்ரிவிதமான பாபங்களையும் அடியேன் செய்து தலைக்கட்டினேன் , இனி தேவரீர் அருள்கொண்டு கார்யம் செய்யுமத்தனை ‘ என்று சொல்லிவைத்து , இதில் ‘தேவரீருடைய ஆஜ்ஞாசோதிதங்களான யாகாதிஸாதநங்களைச் செய்து தலைக்கட்டினே’ னென்றால் இரண்டும் தன்னில் சேருமோ வென்னில் , கீழ் ஶ்லோகத்துக்கு பொருந்துமாறு பொருள் கொள்ள வேண்டுகையாலே – அடியேன் செய்து தலைக்கட்டிய யாகாதிஸாதநா நுஷ்டானம் இந்த த்ரிவித பாபங்களே யாமத்தனை காண் யென்று ஏக வாக்யார்த்தமாகக் கொள்ளக்கடவது . யாகமாவது – பகவதாராதநம் ;

“ யஜ — தேவ பூஜாயம் “ இரே ( க்ருதாநி வை ) “ நன்றாக நானிலத்தை யாழ்வித்தேன் “ என்றாப்போலே க்ஷஏபோக்தி இருக்கிறபடி .

 

பக்த்யைகலப்ய: புருஷோத்தமோஸௌ

ஜகத்ப்ரஸூதிஸ்திதிநாஶஹேது:         |

அகிஞ்சநோ அநந்யகதிஶ்ஶரண்ய

க்ருஹாண மாம் க்லேஶிநமம்புஜாக்ஷ     ||     15

 

ஜகத்ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: = “ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே “ இத்யாதிப்படியே உலகங்களைப் படைத்தளித்துத் துடைக்க வல்ல , அஸௌ புருஷோத்தம: = புருஷோத்தமனாகிய இந்த தேவரீர், பக்த்யைக லப்ய: = “ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே “ என்கிறபடியே பக்தி ஒன்றினாலேயே பெறத்தக்கர் , அகிஞ்சந: = இத்தலையில பேற்றுக்குறுப்பான கைம்முதலொன்றுமில்லை . அநந்ய கதி: = உபாயாந்தர ஶூந்யத்தை மாத்ரமல்ல , ரக்ஷகாந்தர ஶூந்யநாயு மிரா நின்றேன் , ஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் அநிஷ்டநிவ்ருத்தி யையும் இஷ்டப்ரபத்தியையும் பண்ணிக்கொடுக்குமவனே , அம்புஜா- = ஸ்வாமித்வ ஸூசகமான செந்தாமரை போன்ற திருக்கண்கை யுடைய வனே , க்லேஶிநம் = அவித்யாஸ்மிதராக த்வேஷாபிநிவேஸங்களாகிற க்லேஶங்களாலே பரிதநாந , மாம் = அடியேனை , க்ருஹாந = பவதீய நாக அங்கீகரித்தருள வேணும் .

 

தர்மார்த்தகாமமோக்ஷஏஷு நேச்சா மம கதாசந |

த்வத்பாதபங்கஜாஸ்வாதஜீவிதம் தீயதாம் மம  ||       16

 

தர்மார்த்த காம மோக்ஷஏஷு = இஷ்டபூர்த்தாதிகளாலுண்டாகும் புண் யத்திலும் , புருஷார்த்தஸாதநமான வைஶ்வர்யத்திலும் , ஸ்வப்ரயோ ஜநமான ஐஹிக போகத்திலும் , ஸ்வாநுபவரூப கைவல்யத்திலும் ஸ்வப்ரீதிக்குறுப்பான மோக்ஷத்திலும் , மம = தேவரீருக்கு அத்யந்த பரதந்த்ரரான யெனக்கு எது வேண்டுவதென்னில் , த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் = தேவரீருடைய திருவடித் தாமரைகளை யநுபவிக்கையாகிற ஜீவநமானது , மம = அடியேனுக்கு , தீயதாம் = க்ருபையினால் , ப்ரஸாதித்தருள வேண்டும் .

 

காமயே தாவகத்வேந பரிசர்யாநுவர்த்தநம் |

நித்யம் கிங்கரபாவேந பரிக்ருஹ்ணீஷ்வ மாம் விபோ ||    17

 

தாவகத்வேந = தேவரீருக்கு பரதந்த்ரநாய் , பரிசர்யாநுவர்த்தநம் = கைங்கர்யம் செய்வதில் நிரதனா யிருக்கையாய் , காமயே = ஆசைப் படா நின்றேன், ஹே விபோ = ஸர்வஸ்வாமியே , மாம் = அடியேனை, நித்யம் = மேலுள்ள காலமெல்லாம் , கிங்கர பாவேந = உரியவடிய னாக , பரிக்ருஹ்ணீஷ்வ = அங்கீகரித்தருள வேணும் .

 

 

லோகம் வைகுண்டநாமாநம் திவ்யம் ஷாட்குண்யஸம்யுதம் |

அவைஷ்ணவாநாம்ப்ராப்யம் குணத்ரயவிவர்ஜிதம் ||       18

 

நித்யஸித்தைஸ்ஸமாகீர்ணம் த்வந்மயை: பாஞ்சகாலிகை: |

ஸபாப்ராஸாதஸம்யுக்தம் வநைஶ்சோபவநைர்யுதம்  ||   19

 

வாபீகூபதடாகைஶ்ச வ்ருக்ஷஷண்டைஸ்ஸுமண்டிதம் |

அப்ராக்ருதம் ஸுரைர்வந்த்யம் அயுதார்கஸமப்ரபம் |

ப்ரக்ருஷ்டஸத்த்வஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சக்ஷஉஷா || 20

 

திவ்யம் = ஸ்வயம்ப்ரகாஶமாய் , ஷாட்குண்ய ஸம்யுதம் = ஜ்ஞாதி ஷாட்குண்ய விஶிஷ்டநான ஸர்வேஶ்வரனோடு கூடியதாய் , அல்லது, பகவத் ஸ்வரூபாதி திரோதயகமாந லீலாவிபூதி போலன்றிக்கே ஸர்வே ஶ்வரனுடைய ஷாட்குண்ய ப்ரகாஶகமாய் , அவைஷ்ணவாநாம்ப்ராப் யம் = விஷ்ணுபக்தி யில்லாதவர்களை அடைவதற்கு அஶக்யமாய் , குணத்ரய விவர்ஜிதம் = ஸத்வ ரஜோ தமோ ரூப குணத்ரய ஶூந்ய மாய் , த்வந்மயை: = ஸர்வேஶ்வரனான உன்னோடு பரம ஸாம்யாபந் நர்களாய் , பாஞ்சகாலிகை: = அகாலகால்யமாந விதத்திலே அபிகமநோ பாதானே ஜ்யாஸ்வாதாய யோகங்களாகிற ஐந்து காலங்களால் விபஜி த்து  பகவதாராதநம் செய்யுமவர்களான , நித்யஸித்தை: = நித்யமுக்தர் களாலே , ஸமாகீர்ணம் = சூழப்பட்டதாய் , ஸபா ப்ரஸாத ஸம்யுக்தம் = கொலு மண்டபம் உப்பரிகை முதலியவைகளோடு கூடியதாய் , வநை: = திவ்யகாந்தாரம் முதலிய தூரஸ்தவனங்களோடும் , உபவநை ஶ்ச = ஸமீபஸ்தமான உத்யான வனங்களோடும் , யுதம் = கூடியிருப்  பதே, வாபீ கூப தடாகைஶ்ச = நடை வாவிகள், சிறு கிணறுகள், பெரிய குளங்கள் ஆகிய இவைகளாலும் , வ்ருக்ஷஷண்டை: = பலவகையான வ்ருக்ஷங்களாலும் , ஸுமண்டிதம் = அலங்கரிப்பதிருப்பதாய் , அப்ரா க்ருதம் = ப்ரக்ருதியின் விகாரங்களாக உண்டானதன்றிக்கே பஞ்சோப நிஷ்ணமாய் , ஸுரைர்வந்த்யம் = அயர்வரும்மரர்களாலே ஸேவிக்கப் படுமதாய் , அயுதார்க ஸம்ப்ரபம் = அநேகமாயிரம் ஸூர்யர்களோ டொத்த காந்தியையுடையதாயும் , ப்ரக்ருஷ்ட ஸத்த்வஸம்பந்நம் = ஶுத்தஸத்வமயமான , வைகுண்ட நாமாநம் லோகம் = ஸ்ரீவைகுந்த மென்கிற பரம்பதத்தை , கதா = எப்போது , சக்ஷஉஷா = கண்களால் ,

த்ரக்ஷ்யாமி = கண்டு களிப்பேன் |

 

க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலாபூமிஷு கேஶவம் |

மேகஶ்யாமம் விஶாலா-ம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷஉஷா || 21

 

லீலாபூமிஷு = விஹாரார்த்தமான ஸ்தலங்களில் , ரமயா ஸார்தம் = போக வர்தகையான பெரிய பிராட்டியாருடன் , க்ரீடந்தம் = விஹரியா நிர்பானாய் , மேகஶ்யாமம் = குளிர்ந்த மேகம் போலே ஶ்யாமளமான விக்ரஹத்தை யுடையனாய் , விஶாலாக்ஷம் = விஶாலமான திருக்கண் களை யுடையனாய் , கேஶவம் = ஆபத்காலத்தில் ப்ரஹ்மருத்ராதிகளை

தன் மேனியிலிடம் கொடுத்து ரக்ஷஇக்கும் ஸர்வாதிகனான வெம்பெரு மானை , சக்ஷஉஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்ணாரக்கண்டு ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ .

 

உந்நஸம் சாருவதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

விஶாலவக்ஷஸம் ஸ்ரீஶம் கம்புக்ரீவம் ஜகத்குரும் || 22

 

ஆஜாநுபாஹுபரிகமுந்நதாம்ஸம் மதுத்விஷம் |

விஶாலநிம்நநாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷஉஷா || 23

 

உந்நஸம் = உயர்ந்து அழகியதான நாசிகையை யுடையவனாய் , சாரு வதநம் = அழகிய திருவாயை யுடையவனாய், பிம்போஷ்டம் =கோவை பழத்தோடொத்த திருவதரத்தை யுடையவனாய் , ஶோபிதாநநம் = ஸமுதாய ஶோபாயுக்தமான திருமுகமண்டலத்தை யுடையவனாய் , விஶால நிம்நநாபிம் = விசாலமாய் ஆழ்ந்திருப்பதான திருவுந்தியை யுடையனாய், ஆபீநஜகநம் = பருத்த நிதம்ப ப்ரதேசத்தை யுடையனாய், விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் = பெரிய பிராட்டியாருக்குக் கோயிற்கட்டட மான திருமார்பை யுடையவனாய் , கம்புக்ரீவம் = ஶங்கம் போன்ற திருமிடற்றை யுடையனாய் , ஜகத்குரும் = ஸர்வலோகத்துக்கும் ஶாஸ்த்ரப்ரதாநாதிகளால் அஜ்ஞாந்ததைப் போக்குமவனாய் , ஆஜாநு பாஹுபரிகம் = முழங்காலளவும் நீண்ட பரிகம்போல் வர்த்துலமான திருக்கைகளை யுடையனாய் , உந்நதாம்ஸம் = உயர வேதுத்த திருத் தோள்களை யுடையனாய் , மதுத்விஷம் = ஆஶ்ரித விரோதியான மது வென்கிற அஶுரனை நிரஸித்த , கரபோரும் = கையில் மணிக்கட்டு முதல் கடைசிவிரல் நடுவிலுள்ள ஸ்தலம் போல் அடிபருத்து நுனிசிறு த்து ம்ருதுவாயிருக்கும் திருத்துடைகளை யுடையனாய் , ஸ்ரிய: காந்தம் = பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் , ஹரிம் = ஆஶ்ரித ஆபத்நிவாரகனான ஸர்வேஶ்வரனை , கதா த்ரக்ஷ்யாமி சக்ஷஉஸா = கண்களால் ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ |

 

ஶங்கசக்ரகதாபத்மைரங்கிதம் பாதபங்கஜம் |

ஶரச்சந்த்ரஶதாக்ராந்தநகராஜிவிராஜிதம் ||         24

 

ஸுராஸுரைர்வந்த்யமாநம்ருஷிபிர்வந்திதம் ஸதா |

கதா வா தேவ மூர்காநம் மாமகம் மண்டயிஷ்யதி ||   25

 

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் = ஶங்கரேகை சக்ரரேகை கதாரேகை பத்மரேகை இவைகளாலலங்க்ருதமாய் , ஶரச்சந்த்ர ஶதாக்ராந்த நகராஜ விராஜிதம் = அநேக ஶரத்களால் சந்த்ரர்களின் காந்தியை அதிக்ரமித்த காந்தி பொருந்திய நகபங்க்திகளால் விளங்கா நிற்பதாய் , ஸுராஸுரைர்வந்த்யமாநம் = தேவாஶுர விபாகமற யெல்லோருக்கும் ஆஶ்ரயநீயமாய் , ருஷிபி: ஸதா வந்திதம் = மனனஶீலரான ருஷிக ளாலே யெப்போதும் ஸேவிக்கப்படுவதான , பாதபங்கஜம் = திருவடித் தாமரைகளை , ஹே தேவ = வாரீர் ஸர்வஸ்வாமியே , மாமகம் மூர்தாநம் = யென்னுடைய ஶிரஸ்ஸை , கதா வா = யெப்போதுதான் , மண்டயிஷ்யதி = அலங்கரிப்பிக்கப் போகிறீர் |

 

கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

சாமரவ்யக்ரஹஸ்தம் மாமேவம் குர்விதி வக்ஷ்யதி ||    26

 

ஸ்ரியா யுக்த: = கைங்கர்ய வரதகையான பெரிய பிராட்டியாரோடு கூடிய , ஜகத்பதி: = ஸர்வேஶ்வரன் , கம்பீரயா வாசா = மேன்மை தோற்றும்படி கம்பீரமான வார்த்தையினால் , சாமர வ்யக்ர ஹஸ்தம் மாம் = திருவெண்சாமரம் பரிமாறுவதில் ஆசை பொருந்திய கைகளை யுடைய யென்னை , யேவம் குரு இதி = அப்படியே வெண்சாமரம் பரிமாறக் கடவாயென்று , கதா = யெப்போது , வக்ஷ்யதி = நியமிக்கப் போகிறான் |

 

கதாஹம் ராஜராஜேந கணநாதேந சோதித: |

சரேயம் பகவத்பாதபரிசர்யாநுவ்ருத்திஷு ||.       28

 

ராஜராஜேந = ராஜாதிராஜனாய், கணநாதேந = பாரிஷட கணநாயகனான ஸர்வேஶ்வரனாலே , அஹம் = நான், பகவத்பாத பரிசர்யாநுவ்ருத்திஷு = யெம்பெருமானுடைய திருவடிகளில் கைங்கர்யங்களை அநுந்யூதமா கச் செய்வதில் , சோதித: = நியமிக்கப்பட்டவனாய் , கதா = யெப்போது, சரேயம் = கைங்கர்யங்களைச் செய்யக்கடவேன் |

 

ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |

நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவாமிதத்யுதே ||  29

 

ஹே விஷ்ணோ = ஸர்வ வ்யாபகனே, அமிதத்யுதே = நிரவதிக ஶோபா யுக்தனே , வாஸுதேவ = வாஸுதேவ ஶப்த வாச்யனான ஸர்வேஶ்வ ரனே , ஶாந்தாய = அஶநாயாபி பாபஜந்ம ம்ருத்யுஶோக மோஹங்களா கிற ஊர்மிஷட்க ரஹிதநாய் , விஶுத்தாய = க்லேஶ கர்மாதி தோஷ ரஹிதநாய் , தேஜஸே = ஸர்வலோக ப்ரகாஶகநாய், பகவதே = ஜ்ஞாந ஶக்த்யாதி ஷாட்குண்ய பரிபூர்ணனாய் , பரமாத்மநே = ஸகலாத்மாக்க ளுக்கும் அந்தராத்மதயா நின்று நியமிக்குமவனான உனக்கு , நம: = நிர்மமநாய் நமஸ்ஸைப் பண்ணுகிறேன் |

 

நமஸ்ஸர்வகுணாதீத ஷட்குணாயாதிவேதஸே |

ஸத்யஜ்ஞாநாநந்தகுண ப்ரம்ஹணே பரமாத்மநே ||   30

 

ஸர்வகுணாதீத = ஹேயங்களான ப்ராக்ருத குணங்களைக் கடந்திருக் கும் ஸர்வேஶ்வரனே , ஷட்குணாயாதி = எல்லா குணங்களுக்கு மூற்று வாயான ஜ்ஞாநாதி ஷட்குணங்களை யுடையவனாய் , அதி வேதஸே = ஸகல ஜகத் ஶ்ருஷ்டாவாய், ஸத்யஜ்ஞாநாநந்தகுண ப்ரஹ்மணே = ஸத்யத்வஜ்ஞா ஸத்வ அநந்தத்வ ரூப குணங்களை யுடைய பரம் ப்ரம்ஹ ஶப்தவாச்யநாய் , பரமாத்மநே நம: = உலகங்கட்கெல்லாமோரு யிரான உன்னை ஶரணமடைகிறேன் |

 

சது:பஞ்சவநவ்யூஹ தஶத்வாதஶமூர்தயே |

நமோநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே ||    31

 

சது: பஞ்சநவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே = ஸ்ருஷ்ட்யாதிகளுக்கா ஸங்கர்ஷண ப்ரத்யும்நாநிருத்த வாஸுதேவாதிரூபேண நிற்கும் நிலை களென்ன , ஸத்யாச்யுதாதி பஞ்சவ்யூஹங்களென்ன , நவ வ்யூஹங்க ளென்ன , ராம க்ருஷ்ணாத்யவதாரங்களென்ன , கேஶவாதி த்வாதஶ மூர்த்திகளென்ன , ஏவம் விதமான திவ்யமங்களவிக்ரஹங்களை யுடை யனாய் , அநந்தாய = தேஶ கால வஸ்து பரிச்சேத ரஹிதனாய் , விஶ்வாய = ஸ்வரூப ரூப குண விபவாதிகளால் பூர்ணனாய் , விஶ்வா தீதாய = சேதநாசேதந விலக்ஷணனாய், சக்ரிநே = ஸ்வாஶ்ரித விரோதி பரிஹார்தமாக யெப்போதும் கைகழலா நேமியுடைய வுனக்கு , நம: = நமஸ்ஸை பண்ணுகிறேன் |

 

நமஸ்தே பஞ்சகாலஜ்ஞ பஞ்சகாலபராயண |

பஞ்சகாலைகமநஸாம் த்வமேவ கதிரவ்யய: ||       32

 

பஞ்சகாலைஜ்ஞ = அபிகமநாதி காலங்களை யறிந்தவனே , பஞ்சகால பராயண = பஞ்ச காலங்களிலும் ஆராதிப்பவர்களுக்கு பரமப்ராப்யனான வனே , தே நம: = உன்னை ஶரணமடைகிறேன் , பஞ்சகாலைக மநஸாம் = பஞ்சகாலாரதநம் செய்வதில் அபிநிவேஶ முய்யவர்களுக்கு, த்வமேவ = தேவரீரே , அவ்ய்ய: = நிரபாயமான , கதி: = உபாயமாக வாகிறீர் |

 

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |

அப்ரமேயமஜம் விஷ்ணுமப்ஜநாபம் ஸுரேஶ்வரம் |.

வாகதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் ||  33

 

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் = பரமாகாஶ ஶப்த வாச்யமாந பரம பதத்தில் தன் மேன்மை தோன்ற வீற்றிருக்குமவனாய் , நிரவத்யம் = ஆஶ்ரித வாத்யரஹிதனாய் , நிரஞ்ஜநம் = ப்ரக்ருதி ப்ராக்ருதரோடு ஸம்பந்தித்திருக்கச் செய்தேயும் அவைகளின் தோஷங்கள் தட்டாதவ னாய் , அப்ரமேயம் = அபரிச்சேத்யனாய் , அஜம் = உத்பத்தி ரஹித னாய் , விஷ்ணும் = ஸர்வ வ்யாபகனாய் , அப்ஜநாபம் = ஸகல ஜகதுத்பத்தி ஹேதுவான நாபீகமலத்தை யுடையனாய் , ஸுரேஶ்வரம் = நித்யஸூரி நிர்வாஹகனாய் , வாகதீதம் = வாயால் புகழுகைக்கு அஶக்யமானவனாய் , பரம் = ஸர்வாதிகனாய் , ஶாந்தம் = ஜந்ம ஜரா மரணாதி தோஷ ரஹிதனான , த்வாம் = தேவரீரை , அஹம் = அகிஞ் சந்யாதி பரிதனான நான் , ஶரணம் கதோஸ்மி = ஶரணமடைகிறேன் |

 

வர்யம் த்வந்த்வாதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸிவக்ஷஸம் |

விஸ்வரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷஉஷா ||   34

 

வர்யம் = ஸர்வ ஶ்ரேஷ்டனாய் , த்வந்த்வாதிரிக்தம் = ப்ராக்ருத ஸுகது:கங்களை கடந்திருக்குமவனாய் , அல்லது சேதநாசேதந விலக்ஷணனாய் , கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் = கௌஸ்துபத்தால் விளங்கா நிற்கிற திருமார்பை யுடையவனாய் , விஸ்வரூபம் = ஜகச்சரீரகனாய் , விஸாலாக்ஷம் = விஶாலங்களான திருக்கண்களை யுடையனான , த்வாம் = உன்னை , சக்ஷஉஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்களால் யெப்போது கண்டு களிக்கப்போகிறேன் |

 

மோக்ஷம் ஸாலோக்யஸாரூப்யம் ப்ரார்த்தயே ந கதாசந |

இச்சாம்யஹம் மஹாபாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத ||  35

 

ஸாலோக்ய ஸாரூப்யம் மோக்ஷம் = பரம்பத ப்ராப்தியாகிற மோக்ஷ த்தையும் , அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக ப்ராதுர்பாவாதி ரூப மோக்ஷத்தையும் , கதாசந = ஒரு காலும் , ந ப்ரார்த்தயே = விரும்ப மாட்டேன், மஹாபாஹோ = ஸமஸ்தலோகங்களும் ஒதுங்கும்படியான திருத் தோள்களையுடையவனே , ஸுவ்ரத = ஆஶ்ரித லக்ஷணமே வ்ரதமாக வுடைய ஸர்வேஶ்வரனே , தவ = தேவரீருடைய , ஸாயுஜ்யம் = கைங்கர்யமாகிற மோக்ஷத்தையே இச்சாமி = விரும்பு கின்றேன் | ஸாயுஜ்யமென்று கூட்டரவாய் கூடினானல்லது கைங்கர் யம் ஸித்தியாதாகையால் , கைங்கர்யத்தால் பிறக்கும் போக்யதையில் ஸாம்யத்தைச் சொல்லுகிறதாகவுமாம் |

 

ஸகலாவரணாதீத கிங்கரோஸ்மி தவாநக |

புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம ||   36

 

ஸகலாவரணாதீத = தஶோத்தரமான ஸப்தாவரநத்துக்கு மவ்வருகான வனே ( பரமபதத்தி லெழுந்தருளி யிருக்குமவனே ), அநக = ஆஶ்ரிதர் தோஷங்களைக் காங்கையாக்கிற குற்றமொன்று மில்லாதவனே , தவ கிங்கரோஸ்மி = தேவரீருக்கு யாவதாத்மபாவி கைங்கர்யம் செய்யப் பெறுவேனாக வேணும் . ஹே புருஷோத்தமா = ஆஶ்ரிதரிடம் பச்சை யை அபேக்ஷஇயாமல் நிரவதிகைஶ்வர்ய ப்ரதாநனான ஸர்வேஶ்வரனே , தவ புந: புந: கிங்கரோஸ்மி = தேவரீருக்கு நித்யகிங்கரராக வேணும் , கைங்கர்யத்தில் ஆதராதிஶயத்தலே அடுத்தடுத்துச் சொல்லுகிறபடி |

 

ஆஸநாத்யநுயாகாந்தமர்சநம் யந்மயா க்ருதம் |

போகஹீநம் க்ரியாஹீநம் மந்த்ரஹீநமபக்திகம்  |

தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ தீநம் மாமாத்மஸாத்குரு || 37

 

ஆஸநாதி அநுயாகாந்தம் = மந்த்ராஸநம் முதலாக போஜ்யாஸன பர்ய ங்காஸநம் முடிவாக நடுவிலுண்டான , அர்சநம் யத: = ( தேவரீர் விஷ யமாக ) யாதொரு ஆராதநமாநது , மயா க்ருதம் = என்னால் செய்யப் பட்டதோ , தத் ஸர்வம் = அவை யெல்லாம் , போக ஹீநம் = உபசார ங்களால் குறைந்திருந்தாலும் , க்ரியா ஹீநம் = செய்யவேண்டும் வ்யா பாரங்களால் குறைந்திருந்தாலும் , மந்த்ரஹீநம் = மந்த்ரங்களால் குறைவு நேர்ந்திருந்தாலும் , அபக்திகம் = பக்தி இல்லாமல் செய்திரு ந்தாலும் , க்ஷம்யதாம் = பொறுத்தருள வேணும் , தேவ = ஸர்வாதி கநே , தீநம் மாம் = ஏழையான என்னை , ஆத்மஸாத்குரு = ( கேவல க்ருபையாலே ) தேவரீருக்கு கிங்கரனாக்கி யருளவேணும் |

 

இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மதுநிகாதிநம் |

யாகாவஸாநஸமயே தேவதேவஸ்ய சக்ரிண: |

நித்யம் கிங்கரபாவேந ஸ்வாத்மாநம் விநிவேதயேத் ||   37

 

சக்ரிண: = ஆஶ்ரித விரோதி நிவர்தகமான திருவாழியை யுடைய , தேவதேவஸ்ய = ஸர்வேஶ்வரனுடைய , ஆகாவஸாந ஸமயே = திரு வாராதந பூர்த்தி காலத்தில் , இதி ஸ்தோத்ரேண = யேவம் ரூபமான ஸ்தோத்ரத்தாலே , மதுநிகாதிநம் = மதுவென்கிற அஶுரனை நிரஸித்த ஸர்வேஶ்வரனை , ஸ்துத்வா = ஸ்தோத்ரம் பண்ணி , ஸ்வாத்மாநம் = தன்னை , நித்யம் கிங்கரபாவேந = நித்ய கிங்கரனாக , விநிவேதயேத் = ஸமர்ப்பிக்கக் கடவன் |

த்விதீய ஜிதந்தே ஸம்பூர்ணம் |

த்ருதீய  ஜிதந்தா ப்ராரம்ப:

 

ஜிதந்தே  புண்டரீகாக்ஷ  நமஸ்தே  விஶ்வபாவந   |

நமஸ்தேஸ்து  ஹ்ருஷீகேஶ  மஹாபுருஷ  பூர்வஜ  ||      1

 

ஹே புண்டரீகாக்ஷ = செவ்விதழ் தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய வனே , ஜிதம் = உனக்கு ஜயம் உண்டாகக்கடவது , ஹே விஶ்வபாவந = ஸகல ஜகத்தையும் படைத்த ஸர்வேஶ்வரனே , தே நமஹ = உன்னை ஶரணமடைகி றேன் , பூர்வஜ = சேதந ரக்ஷணத்துக்காக ஸ்ருஷ்ட்யாவதாராதிகளைப் பண்ணி முற்பாதநாய் நிற்குமவனே , ஹ்ருஷீகேஶ = தன்னுடைய ஸௌந்தர்யாதிகளைக் காட்டி விஷயாந்தர ப்ரவணங்களான இந்த்ரியங்களைத் தன் வஸமாக்குவனே , மஹாபுருஷ = ஆஶ்ரிதர் விஷயத்தில் தன் ஸ்வரூபத்தை யழியாமல் இக்கார்யம் செய்யுமவனான ஸர்வேஶ்வரனே , நம: தே அஸ்து = உம்முடைய ஸௌந்தர்யாதி குணங்களுக்கு தோற்று ஶரணமடைகிறேன் |

விஜ்ஞாபநமிதம்  தேவர ஶ்ருணு  த்வம்  புருஷோத்தம  |

நரநாராயணாப்யாம்  ச  ஶ்வேதத்வீபநிவாஸிபி :  ||        2

நாரதாத்யைர்முநிகணை ஸநகாத்யைஶ்ச  யோகிபி : |

ப்ரஹ்மேஶாத்யைஸ்ஸுரகணை :  பஞ்சகாலபராயணை| 

பூஜ்யஸே  புண்டரீகாக்ஷ  திவ்யமந்த்ரைர்மஹர்ஷிபி :  ||   3

புருஷோத்தம = உத்தமனான , தேவ = ஸர்வேஶ்வரனே , த்வம் = தேவரீர் , இதம் விஜ்ஞாபநம் = இந்த விண்ணப்பத்தை , ஶ்ருணு = திருச்செவி ஸாத்தியருள வேணும் , ஹே புண்டரீகாக்ஷ = பரத்வ ப்ரகாஶமான செந்தாமரை போன்ற திருக் கண்களையுடையவனே , நரநாராயணாப்யாஞ்ச = ஸ்வாம்ஶபூதரான நரநாராயண னார்களாலும் , ஶ்வேதத்வீபநிவாஸிபி: = ஶ்வேதத்வீபவாஸிகளாலும் , நாரதாத்யைர்முநிகணை: = ஸதா பகவத்குணாநுபவஶீலரான நாரத மஹரிஷிக ளாலும் , ஸநகாத்யைஶ்ச யோகிபி: = அஸப்ருஷ்ட ஸம்ஸாரகந்தரான ஸநகாதி யோகிகளாலும் , ப்ரஹ்மேஶாத்யை: ஸுரகணை: = ப்ரஹ்ம ருத்ராதி தேவதைக ளாலும் , பஞ்சகாலபராணை: = பகவதாராதநோபயோகியான அபிகமநோபாதாநேஜ் யாஸ்வாத்யாய யோகிகளாகிற பஞ்சகாலங்களை பரமப்ராப்யமாகவுடைய முமுக்ஷுக்களாலும் , மஹர்ஷிபி: = ஜிதேந்த்ரியரான ரிஷிகளாலும் , திவ்ய மந்த்ரை: = ஆராதநோபயோகிகளான விலக்ஷண மந்த்ரங்களாலே , பூஜ்யஸே = ஆராதிக்கப் போதுகிறீர் |

பாஷண்டதர்மஸங்கீர்ணே  பகவத்பக்திவர்ஜிதே  |

கலௌ  ஜாதோsஸ்மி  தேவேஶ  ஸர்வதர்மபஹிஷ்க்ருதே  |   4

ஹே தேவேஶ = அயர்வரு மமரர்களதிபதியே , பாஷண்ட தர்ம ஸங்கீர்ணே = வேதபாஹ்யர்களின் கர்மாநுஷ்டானங்களால் கலுசிதமாய் , பகவத்பக்திர்ஜிதே = ஜ்ஞாநாநாதிகுண பரிபூர்ணரான தேவரீர் விஷயத்தில் ப்ரீதி ரூபாந்நமான பக்தி யினால் ஶூந்யமாய் , ஸர்வதர்மபஹிஷ்க்ருதே = அலௌகிக ஶ்ரேயஸ் ஸாத கங்களான தர்மங்களின் கந்தமிருக்கிற , கலௌ = இந்த கலியுகத்திலே , ஜாதோsஸ்மி = பிறவா நின்றேன் |

கதம் த்வாமஸமாசார:  பாபப்ரஸவபூரஹம்  |

அர்ச்சயாமி  தயாஸிந்தோ  பாஹி  மாம்  ஶரணாகதம்   ||     5

அஸமாசார: = துஷ்கர்மங்களையே செய்து திரியுமவனாய் , பாபப்ரஸவபூ: = அகதி யாக வரும் பாபங்களுக்கு உத்பத்தி ஸ்தாநமான , அஹம் = நான் , த்வாம் = நித்யஸூரிகளால் ஆராதிக்கப்படுகிற தேவரீரை , கதம் = எப்படி , அர்ச்சயாமி = ஆராதிப்பேன் , ஹே தயா ஸிந்தோ = க்ருபா நிதியே , ஶரணாகதம் மாம் = தேவ ரீரையே உபாயமாகப் பற்றியிருக்கிற என்னை , பாஹி = ரக்ஷித்தருள வேணும் |

தாபத்ரயதவாக்நௌ  மாம்  தஹ்யமாநம்  ஸதா  விபவோ  |

த்ராஹி  மாம்  புண்டரீகாக்ஷ  கேவலம்  க்ருபயா  தவ   ||   6

ஹே விபோ = ஸர்வஸ்வாமியானவனே , ஹே புண்டரீகாக்ஷ = செந்தாமரைக் கண்ணனே , தாபத்ரயதவாக்நௌ = ஆத்யாத்மிகாதி தெய்வீகாதிதி பௌதிகங்க ளான தாபத்ரயத்ரயங்களாகிற காட்டுத் தீயிலே , ஸதா = காலவிச்சேதமின்றியே , தஹ்யமாநம் = தஹிக்கப்பட்டுக் கிடக்கிற , மாம் = என்னை , தவ = தேவரீ ருடைய , க்ருபயா கேவலம் = பரது:க து:கித்வரூப குணமொன்றினாலேயே  இரங்கி , பாஹி = ரக்ஷித்தருள வேணும் |

ஜந்மம்ருத்யுஜராவ்யாதிது:கஸந்தப்ததேஹிநம்  |

பாலயாஶு  த்ருஶா  தேவ  தவ  காருண்யகர்பயா  ||         7

ஹே தேவ = ஹிதபரனான ஸர்வஸ்வாமியே , ஜந்ம ம்ருத்யு ஜராவ்யாதி து:க ஸந்தப்த தேஹிநம் = பிறப்பிறப்புப் பிணி மூப்பால் வரும் துக்கங்களால் பீடித மான ஶரீரத்தை யுடைய யென்னை , காருண்யகர்பயா = க்ருபாவர்ஷிணியான தவ = தேவரீருடைய , த்ருஶா = திருக்கண்களாலே , ஆஶு = ஶீக்ரமாக , பாலய = குளிரக் கடாக்ஷித்து ரக்ஷித்தருள வேணும் |

இந்த்ரியாணி  மயா  ஜேதுமஶக்யம்  புருஷோத்தம |

ஶரீரம்  மம  தேவேஶ  வ்யாதிபி:  பரிபீடிதம் ||           8

ஹே புருஷோத்தம = ஆஶ்ரிதர் திரத்தில் தன் பேராக உபகரித்தருளும் புருஷோத் தமனே , இந்த்ரியாணி = சக்ஷுராதியான ஜ்ஞாநங்களும் வாகாதிகளான கர்மேந்த்ரி யங்களும் , மயா = அஶக்தனான என்னாலே , ஜேதுமஶக்யம் = அடக்குவதற்கு அஸாத்யமாயிரா நின்றன , தேவேஶ = நித்யஸூரி நிர்வாஹகனே , மம = என்னு டைய , ஶரீரம் = தேஹமானது , வ்யாதிபி: பரிபீடிதம் = நோயினால் மிகவும் மெலிந்து கிடக்கிறது |

மநோ  மே  புண்டரீகாக்ஷ  விஷயாநேவ  தாவதி |

வாணீ  மம  ஹ்ருஷீகேஶ  மித்யாபாருஷ்யதூஷிதா ||      9

ஹே புண்டரீகாக்ஷ = உன்னுடைய கண்ணழகைக்காட்டி விஷயாந்தரபரரையும் ஜிதமென்று சொலுவிக்குமவனே , மே மந: = என்னுடைய மநஸ்ஸாவது , விஷயாநேவ தாவதி = அப்ராப்தங்களான ஶப்தாதி விஷயங்களையே தேடித்திரியா நின்றது , ஹே ஹ்ருஷீகேஶ = ஸர்வேந்த்ரியங்களையும் தன்பக்கலில் மக்னமாம் படி பண்ணுமவனே , மம வாக் = என்னுடைய வாக்கானது , மித்யாபாருஷ்ய தூஷிதா = நரகாவஹமான பொய்யென்ன ஸர்வலோகபயாவஹமான கொடுமை யென்ன இவைகளாகிற தோஷங்களினால் பூர்ணமாயிரா நின்றது |

ஏவம்  ஸாதநஹீநோSஹம் கிம்  கரிஷ்யாமி  கேஶவ |

ரக்ஷ  மாம்  க்ருபயா  க்ருஷ்ண  பவாப்தௌ  பதிதம்  ஸதா ||   10

ஹே கேஶவ = கேஶி வதம் செய்து தன்னை நோக்கி யெல்லாருக்கு முபகரித்தரு ளினவனே , ஏவம் ஸாதநஹீநோSஹம் = இப்படி விஷயாந்தர ப்ரவணங்களான மனோ வாக்காயங்களால் உன்னைப் பெறுகைக்குத்தக்க கர்ம ஜ்ஞான பக்திகளாகிற ஸாதநங்களொன்றும் செய்ய அஸக்தனான நான் , கிம் கரிஷ்யாமி = பேற்றுக் குறுப்பான எந்த வுபாயங்களை செய்யப்போகிறேன் , ஹே க்ருஷ்ணா = ஐஹிகா முஶ்மிகலப்ரதநான க்ருஷ்ணனே , ஸதா பவாப்தௌ பதிதம் மாம் = அநாதியாக துஸ்தரமான ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து அலமருகின்ற என்னை , க்ருபயா = தேவரீருடைய நிர்ஹேதுக க்ருபையினாலே , ரக்ஷ = ரக்ஷித்தருள வேணும் |

அபராதஶதம்  சைவ ஸஹஸ்ரமயுதம்  ததா |

அர்புதம்  சாப்யஸங்க்யேயம்  கருணாப்தே  க்ஷமஸ்வ  மே ||     11

ஹே கருணாப்தே = என்னுடைய அஸங்க்யாதமான அபராதங்களைப் பொறுத்தரு ளுகைக்கீடான க்ருபாகுணத்துக்கு கடல் போன்றவனே , மே அபராதஶதம் சைவ = அஜ்ஞாநாதி பூர்ணனான என்னாலே செய்யப்பட்டு தேவரீருடைய நிக்ரஹஹேது வான அபராதங்கள் நூறையும் , ததா ஸஹஸ்ர மயுத மர்புத மஸங்க்யேயம் = அப்படியே ஆயிரமாயும் பதினாயிரமாயும் அற்புதமாயும் எண்ணிறந்ததாயும் தேவரீர் திரத்தில் செய்த அபசாரங்களை , க்ஷமஸ்வ = பொறுத்தருள வேணும் |

யச்சாபராதம்  க்ருதவாநஜ்ஞாநாத்புருஷோத்தம |

மத்பக்த  இதி  தேவேஶ  தத்ஸர்வம்  க்ஷந்துமர்ஹஸி ||      12

ஹே புருஷோத்தம = வாரீர் புருஷோத்தமனே , அஜ்ஞாநாத் = க்ருத்யாக்ருத்யங் களில் அறிவில்லாமையினாலே , யத் அபராதம் க்ருதவாந் = தேவரீர் திறத்தில் யாதொரு அபராதங்களைச் செய்தேனோ , தத் ஸர்வம் = அந்த ஸர்வாபதாரங் களையும் , ஹே தேவேஶ = வாரீர் தேவாதிதேவனே , மத்பக்த இதி = நம்மடியா னிவனென்று , க்ஷந்துமர்ஹஸி = பொறுத்தருள வேணும் |

அஜ்ஞத்வாதப்யஶக்தத்வாத்  ஆலஸ்யாத்  துஷ்டபாவநாத் |

க்ருதாபராதம்  க்ருபணம்  க்ஷந்துமர்ஹஸி  மாம்  விபோ ||     13

ஹே விபோ = ஸர்வ வ்யாபகனே , அஜ்ஞாதவாத் = ஸத்கர்மாதிகளை அறியத் தக்க ஜ்ஞாநமில்லாமையாலும் , அஶக்தவாதபி = அறிந்தாலும் அநுஷ்டிக்கவல்ல ஶக்தி இல்லாமையாலும் , ஆலஸ்யாத் = ஶக்தி இருந்தாலும் அநவாதநத்தை யாலும் , துஷ்டபாவநாத் = காம க்ரோதாதி தோஷ யுக்தமான மனோபாவத்தாலும், க்ருதாபராதம் = அபராதங்களையே மேன்மேலும் செய்து போர நின்றுள்ள , க்ருபணம் மாம் = குஷ்டிதமான செயல்களையுடைய யென்னை , க்ஷந்துமர்ஹஸி = பொறுத்தருள வேணும் |

அபராதஸஹஸ்ராணி  க்ரியந்தேSஹர்நிஶம்  மயா |

தாநி  ஸர்வாணி  மே  தேவ  க்ஷமஸ்வ  மதுஸூதந ||     14

மயா = என்னாலே , அஹர்நிஶம் = இரவு பகலென்னாமல் எப்போதும் , அபராத ஸஹஸ்ராணி = தேவரீர் திருவுள்ளம் கலங்கும்படியான அநேகமாயிர அபராதங்க ளானவை , க்ரியந்தே = செய்யப்படுகிறன , ஹே மதுஸூதந = மதுவை நிரஸித்த வனே , ஹே தேவ = வாரீர் ஸர்வேஶ்வரனே , தாநி ஸர்வாணி = அந்த ஸர்வாப தாரங்களையும் , க்ஷமஸ்வ = பொறுத்தருள வேணும் |

யஜ்ஜந்மந:  ப்ரப்ருதி  மோஹவஶங்கதேந

நாநாபராதஶதமாசரிதம்  மயா  தே |

அந்தர்பஹிஶ்ச  ஸகலம்  தவ  பஶ்யதோ  மே

க்ஷந்தும்  த்வமர்ஹஸி  ஹரே  கருணாவஶேந ||      15

ஜந்மந: ப்ரப்ருதி = பிறந்தது முதல் , மோஹவஶங்கதேந = தமோபிபூதனாய் மதி மயங்கிக் கிடக்கிற , மயா = என்னாலே , மே அந்தர்பஹிஶ்ச ஸகலம் தவ பஶ்யத: = என்னுடைய உள்ளும் புறமும் எல்லாவற்றையும் தேவரீர் கடாக்ஷியா நிற்கச்செய்தே , தே = தேவரீர் திறத்தில் , யத் நாநாபராத ஶதமாசரிதம் = எண்ணிறந்த எந்த அபராதங்கள் செய்யப்பட்டதோ , ஹே ஹரே = ஆஶ்ரித துரிதங் களைப் போக்குமவனே , த்வம் = தேவரீர் , கருணாவஶேந = க்ருபைக்கு பரதந்த்ர ராய் , க்ஷந்துமர்ஹஸி = அவை யெல்லாவற்றையும் பொறுத்தருள வேணும் |

கர்மணா  மநஸா  வாசா  யா  சேஷ்டா  மம  நித்யஶ: |

கேஶவாராதநே  ஸா  ஸ்யாத்  ஜந்மஜந்மாந்தரேஷ்வபி ||     16

நித்யஶ: = நாள்தோறும் , கர்மணா = கர்ம ஸாதநமான ஶரீரத்தினாலும் , மநஸா = நினைக்கைக்கு யோக்யமான மநஸ்ஸினாலும் , வாசா = சொல்லுக்குறுப்பான வாக்கினாலும் , மம யா சேஷ்டா = நான் செய்கிற வ்யாபாரமானது யாதொன் றுண்டோ ? ஸா = அந்த வ்யாபாரமானது , ஜந்நஜந்மாந்தரேஷ்வபி = நான் பிறக் கும் ஜன்மம்தோறும் , கேஶவாராதநே ஶ்யாத் = ஸர்வாதிகரான தேவரீருடைய ஆராதநத்திலே விநியோகிக்கும்படி க்ருபை செய்தருள வேணும் | மனோ வாக்காயங்கள் மூன்றும் தேவரீரையே அன்றி வேறொன்றில் செல்லாதபடி அநுக்ரஹிக்க வேண்டுமென்றபடி |

த்ருதீய  ஜிதந்தா ஸம்பூர்ண:

சதுர்த ஜிதந்தா ப்ராரம்ப:

 

ஜிதந்தே  புண்டரீகாக்ஷ  நமஸ்தே  விஶ்வபாவந |

நமஸ்தே  வாஸுதேவாய  ஶாந்தாநந்தசிதாத்மநே ||        1

ஹே புண்டரீகாக்ஷ ஜிதம் தே = உன்னுடைய செவ்விய தாமரை மலர் போன்ற திருக்கண்கள் ஸௌந்தர்யத்தி லீடுபட்டு உனக்குத் தோற்றேன் என்றபடி , நமஸ்தே விஶ்வபாவந = ஸகல ஜகத்துக்கும் காரணபூதநே , உன்னை ஶரண மடைகிறேன் , ஶாந்தாநந்தசிதாத்மநே = அஶாநாயாபி ஶ்யாத்யூர்மிஷட்க ரஹித நாய் , நித்யனாய் ஸர்வ வஸ்துக்களிலும் வ்யாபித்து நிற்கையாலே ஸர்வ வஸ்து பரிச்சேதநார்ஹநாய் ஜ்ஞாநஸ்வரூபனா யிருக்கிற தேவரீரை ஶரணமடைகிறேன் |

அத்யக்ஷாய  ஸ்வதந்த்ராய  நிரபேக்ஷாய  ஶாஸதே |

அச்யுதாயாவிகாராய  தேஜஸாம்  நிதயே  நம: ||            2

அத்யக்ஷாய = சேதநருடைய ரக்ஷாபேக்ஷையை ப்ரதீக்ஷித்திருக்குமவனாய் , ஸ்வதந்த்ராய = ஸ்வேச்சாக்ருத கார்யத்தில் தனக்கொரு நிவாரகரில்லாதவனாய் , நிரபேக்ஷாய = சேதந ரக்ஷணத்தில் ஒரு கைம்முதலையும் அபேக்ஷியாதவனாய் , ஶாஸதே = உபய விபூதியும் தன் ஆஜ்ஞைக்கு பரதந்ந்ரமாம்படி நியமிக்குமவனாய், அச்யுதாய = தேவ மனுஷ்யாதி ரூபேண திருவவதாரத்திலும் தன்னுடைய பரமைஶ்வர்யத்தை நழுவ விடாதவனாய் , அவிகாராய = ப்ரக்ருதி கதமான ஸ்வரூபாந்யதா பாவமாகிற விகாரஶூந்யநாய் , தேஜஸாம் நிதயே = லோக ப்ரகாஶகரங்களான ஸூர்யாதி தேஜஸ்ஸுகளுக்கும் ப்ரகாஶமான நிரவதிக தேஜஸ்ஸை வுடைய வுன்னை , நம: = ஶரணமடைகிறேன் |

ப்ரதாநபுருஷேஶாய  நமஸ்தே  புருஷோத்தம |

க்லேஶகர்மாத்யஸம்ஸ்ப்ருஷ்ட  பூர்ணஷாட்குண்யமூர்தயே ||         3

ஹே புருஷோத்தம = உத்தம புருஷனானவனே , க்லேஶகர்மாத்யஸம்ஸ்ப்ருஷ்ட = அவித்யாஸ்மிதா ராகத்வேஷாபிநிவேஶங்களாகிற பஞ்சக்லேஶங்களென்ன , இவற்றுக்குக் காரணமான கர்மங்களென்ன , இவற்றின் ஸ்பர்ஶமில்லாதவனே , ப்ரதாந புருஷேஶாய = ப்ரக்ருதி புருஷர்களை அநுப்ரவேஶித்து பந்த மோக்ஷாதி களைப் பண்ணுமவனாய் , பூர்ணஷாட்குண்யமூர்தயே = ஜ்ஞாந ஶக்த்யாதிகளான ஆறு குணங்களால் பூர்ணமான திவ்யாத்ம ஸ்வரூப ப்ரகாஶகமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடைய , தே நம: = தேவரீரை நமஸ்கரிக்கிறேன் |

த்ரிபிர்ஜ்ஞாநபலைஶ்வர்யவீர்யஶக்த்யந்தராத்மநே |

த்ரியுகாய  நமஸ்தேSஸ்து  நமஸ்தே  சதுராத்மநே ||             4

த்ரிபிஹி = ஶங்கர்ஷண ப்ரத்யும்நாநிருத்தர்க ளென்கிற மூன்று மூர்த்திகளாலே , ஜ்ஞாநபலைஶ்வர்ய வீர்ய ஶக்த்யந்தராத்மநே = ஜ்ஞாந பலைஶ்வர்ய வீர்ய ஶக்தி தேஜஸ்ஸுகளை ஸ்வாபாவிக குணங்களாகவுடையனா யிருக்கச் செய்தேயும் , த்ரியுகாய = ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார ரூபமான ஒவ்வொரு கார்யங்களுக்கனு குணமாக இரண்டிரண்டு குணங்களையே ப்ரதாநமாக வுடையனாய் , சதுராத்மநே = வ்யூஹ சதுஷ்டயத்திலும் ப்ரத்யேகமுண்டான ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தி துரீய ஸம்ஜ்ஞாகமாந நாலு வடிவை யுடையனான , தே நம: = உன்னை ஶரணமடைகிறேன் |

சது:பஞ்சநவவ்யூஹ  தஶத்வாதஶமூர்தயே |

அநேகமூர்தயே  துப்யமமூர்தாயைகமூர்தயே ||              5

சது: பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே = உபாஸகாநுக்ரஹார்த்தமாக ஶங்கர்ஷணாதி நாலு வ்யூஹங்களாயும் , விஷ்ணு புருஷ ஸ்த்யாச்யுதாநிருத்தர் களென்கிற ஐந்து வ்யூஹங்களாயும் , ஒன்பது வ்யூஹங்களாயும் , ராம க்ருஷ்ணாதி தஶாவதாரங்களாயும் கேஶவாதி த்வாதஶ மூர்த்திகளாயு மவதரித்த திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையனாய் ,அநேகமூர்தயே = கார்யாவஸ்தையில் ஸ்தூல சிதசித் விஶிஷ்டனாய் , ஏக மூர்தயே = என்று மொருபடித்த திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையனாய் நித்யவிபூதியிலெழுந்தருளியிருக்கும் , துப்யம் நம: = தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன் |

நாராயண  நமஸ்தேSஸ்து  புண்டரீகாயதேக்ஷணே |

ஸுப்ரூலலாட  ஸுநஸ  ஸுஸ்மிதாதரபல்லவ ||               6

புண்டரீகாயதேக்ஷணே =  ஆதிராஜ்ய ஸூசகமான செவ்வித்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவனே , ஸுப்ரூலலாட = அழகிய திருப்புருவங் களையும் திருநெற்றியையு முடையவனே , ஸுநஸ = கோல நீள் கொடி மூக்கை யுடையவனே , ஸுஸ்மிதாதர பல்லவ = அழகிய மந்தஹாஸத்தோடு கூடிய தளிர் போன்ற திருவதரங்களை யுடையவனே , நாராயண = ஸமஸ்த சேதநா சேதந ஶரீரியாய் , ஸமஸ்த கல்யாணகுண விஶிஷ்டநாநவனே , தே நம: = உமக்கு நமஸ்காரம் |

பீநவ்ருத்தாயதபுஜ  ஶ்ரீவத்ஸக்ருதலக்ஷண |

தநுமத்ய  விஶாலாக்ஷ  பத்மநாப  நமோஸ்து  தே ||            7

பீந வ்ருத்தாயத புஜ = ஸகல லோகங்களும் தன் நிழலி லொதுங்கும்படி பருத்து வர்துலமாய் நீண்டிருக்கிற திருத்தோள்களுடையவனே , ஶ்ரீவத்ஸக்ருதலக்ஷண = ஸ்வஸாதாரணமான ஶ்ரீவத்ஸ மென்கிற திருமருவாலே அலங்க்ருதநாநவனே , தநுமத்ய = ஸூக்ஷ்மமான கடி பரதேஶத்தை யுடையவனே , விஶாலாக்ஷ = ஸகல லோகங்களும் ஒரு மூலை பரப்புக்கு பொரும்படி விஶாலமான திருக்கண் களை யுடையவனே , பத்மநாப = ஸகல ஜகதுத்பத்திக்கு நிதாநமான திருநாபீ கமலத்தை யுடையவனே , தே நம: = உமக்கு நமஸ்காரம் |

விலாஸவிக்ரமாக்ராந்தத்ரைலோக்யசரணாம்புஜ |

நமஸ்தே  பீதவஸந  ஸ்புரந்மகரகுண்டல ||               8

விலாஸ விக்ரமாக்ராந்த த்ரைலோக்ய சரணாம்புஜ = வருத்தமர ஸவிலாஸமாக மூன்றடிகளால் மூன்று லோகங்களையும் அளந்தருளின திருவடிகளையுடைய வனே , பீத வஸந = திருவரை பூத்தாற்போலே திருமேனிக்குப் பரபாகமான பீதாம்பரத்தை யுடையவனே , ஸ்புரந் மகரகுண்டல = திருச்செவியில் விளங்கா நின்றுள்ள திருமகரகுழைகளை யுடையவனே , தே நம: = உமக்கு நமஸ்காரம் |

ஸ்புரத்கிரீடகேயூர  ஹாரகௌஸ்துபபூஷண |

பஞ்சாயுத  நமஸ்தேSஸ்து  நமஸ்தே  பாஞ்சகாலிக ||          9

ஸ்புரத் கிரீட கேயூர ஹார கௌஸ்துப பூஷண = திருமேனிக்குப் பரபாக்யமாய் விளங்கா நின்றுள்ள திருவபிஷேகமென்ன , திருத்தோள்வளைகளென்ன , கௌஸ்துபமென்கிற மாணிக்கப்பதக்கமென்ன , இவை முதலான திவ்யாபரணங் களை யுடையவனே , பஞ்சாயுத = ஆஶ்ரித விரோதி நிரஸநத்துக்காக எப்போதும் தரியா நின்றுள்ள திவ்யாயுதங்களை யுடையவனே , பாஞ்சகாலிக = பஞ்சகால பரர்களாலே யெப்போதும் ஆராதிக்கப்படுமவனே , தே நம: = உமக்கு நமஸ்காரம் |

பஞ்சகாலபரைகாந்தியோகக்ஷேமமஹாப்ரபோ |

நித்யஜ்ஞாநபலைஶ்வர்யபோகோபகரணாச்யுத |

நமஸ்தே  ப்ரஹ்மருத்ராதிலோகயாத்ராபரிச்சத ||                 10

பஞ்சகால பரைகாந்த யோகக்ஷேம மஹா = பஞ்சகாலங்களிலும் குறைவற பகவ தாராதநம் செய்யுமவர்களுக்கு முக்யமான ஐஹிகாமுஷ்மிக போகங்களைக் கொடுக்குமவனே , ப்ரபோ = ஸர்வநியந்தாவானவனே , நித்ய ஜ்ஞாந பலைஶ்வர்ய போகோபகரணாச்யுத = நித்யமான ஜ்ஞாநபலைஶ்வர்யாதிகளையும் திவ்ய மால் யாம்பர சத்ர சாமராதிகளான போகோபகரணங்களை யுடையவனே , அச்யுத = ஆஶ்ரிதர்களை ஒரு காலும் நழுவ விடாதவனே , ப்ரஹ்ம ருத்ராதி லோக யாத்ரா பரிச்சத = ஸ்ருஷ்ட்யாதி லோக வ்யாபாரத்துக்கு ப்ரஹ்மருத்ராதிகளைப் பரிகரமாக வுடையவனே , தே நம: = உமக்கு நமஸ்காரம் |

ஜந்மப்ரப்ருதி  தாஸோSஸ்மி  ஶிஷ்யோSஸ்மி  தநயோSஸ்மி  தே |

த்வம்  ச ஸ்வாமீ  குருர்மாதா  பிதா  ச  மம  மாதவ ||              11

ஜந்ம ப்ரப்ருதி = அடியேன் பிறந்தது முதல் , தே தாஸோஸ்மி = தேவரீருக்கு க்ரய விக்ரயார்ஹநா யிரா நின்றேன் , ஶிஷ்யோஸ்மி = தேவரீரிடத்தில் ஸகல ரஹஸ்யார்த்தமும் கேட்ட ஶிஷ்யனா யிரா நின்றேன் , தநயோஸ்மி = தேவரீருக்கு கிஞ்சித்கரித்து நிறம் பெரும் புத்ரனாகா நின்றிரேன் , ஹே மாதவ = ஶ்ரீய:பதியே , த்வம் ச = தேவரீர் , மம = அடியேனுக்கு , ஸ்வாமீ = நான் விமுகநாநவென்றும் என் ஸத்தை நோக்கி ரக்ஷிக்கும் வகுத்த ஸ்வாமியாயும் , குரு: = அஜ்ஞாத ஜ்ஞாபநம் பண்ணுகிற ஆசார்யனாகவும் , மாதா = தாரக போஷகையான மாதா வாகவும் , பிதா ச = உத்ப்பதகநாய் ஹிதப்ரவர்தகநாந பிதாவாகவும் ஆகிறீர் |

அபி  த்வாம் பகவந்  ப்ரஹ்மா  ஶர்வஶ்ஶக்ரோ  மஹர்ஷய: |

த்ரஷ்டும்  யஷ்டுமபி  ஸ்தோதும்  ந  ஹி  ஸ்மர்துமபீஶதே ||        12

ஹே பகவந் = ஷாத்குண்ய பரிபூர்ணநாந ஸர்வேஶ்வரனே , த்வாம் = தேவரீரை , ப்ரஹ்மா = சதுர்முகனும் , ஶர்வ: = ருத்ரனும் , ஶக்ர: = இந்திரனும் , மஹர்ஷயோபி = மஹர்ஷிகளும் , த்ரஷ்டும் = ஸ்வயத்நத்தால் காண்கைக்கும் , யஷ்டும் = ஆராதிக்கைக்கும் , ஸ்தோதும் = அபரிச்சிந்ந ஸ்வரூபாதிகளை யுடைய நாகையாலே ஸ்தோத்ரம் பண்ணுகைக்கும் , ஸ்மர்துமபி = மநஸ்ஸால் , அநீஶதே = ஸமர்த்தராக மாட்டார்கள் |

தாபத்ரயமஹாக்ராஹபீஷணே  பவஸாகரே |

மஜ்ஜதாம்  நாத  நௌரேஷா ப்ரணதிஸ்த்வத்பதார்பிதா ||                 13

நாத = வாரீர் ஸர்வஸ்வாமியே , தாபத்ரய மஹாக்ராஹ பீஷணே = ஆத்யாத்மி காதி தைவிகாதி பௌதிக தாபத்ரயங்களாகிற பெரிய முதலைகளாலே பயாவஹ மாந , பவஸாகரே = ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே , மஜ்ஜதாம் = அழுந்த நின்றுள்ள எங்களுக்கு , த்வத்பதார்பிதா = வகுத்த ஶேஷியான தேவரீர் திருவடி களில் செய்யப்பட்ட , யேஷா ப்ரணதி: = இந்த ஶரண வரணமானது , நௌ = அக்கறையை பிறப்பிக்குமதான ஓடமாக நின்றது |

அநாதாய  ஜகந்நாத  ஶரண்ய  ஶரணார்த்திநே |

ப்ரஸீத  ஸீததே  மஹ்யம்  நமஸ்தே  பக்தவத்ஸல ||            14

ஹே ஜகந்நாத = லோகங்களுக்கெல்லாம் ஸ்வாமியானவனே , அநாதாய = வேறொரு ஸ்வாமி யில்லாதவெனக்கு , ப்ரஸீத = க்ருபை பண்ணி யருளவேணும், ஹே லோகஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் இஷ்ட ப்ராப்தியாயும் அநிஷ்ட நிவ்ருத்தியாயும் பண்ணிக் கொடுக்குமவனே , ஶரணார்த்திநே = தேவரீரையே ரக்ஷகராகப்பற்றின வென்னை க்ருபை பண்ணவேணும் , ஸீததே மஹ்யம் = மிகவும் ஶேஷ பக்தனான வெனக்கு , ப்ரஸீத = என்னுடைய துக்கங்கண்டு ஐயோ வென்றிரங்கி யருளவேணும் , ஹே பக்தவத்ஸல = ஆஶ்ரிதருடைய தோஷத் தையே பாக்யமாகக் கொள்ளுமவனே , தே நம: = தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக் கிறேன் |

மந்த்ரஹீநம்  க்ரியாஹீநம்  பக்திஹீநம்  யதர்சநம் |

தத்க்ஷந்தவ்யம்  ப்ரபந்நாநாமபராதஸஹோ  ஹ்யஸி ||              15

மந்த்ரஹீநம் = மந்த்ரஶூந்யமாயும் , க்ரியாஹீநம் = தந்த்ராதிகளால் ஶூந்யமா யும் , பக்திஹீநம் = ப்ரீதி ரூபாபந்நமான பக்திஶூந்யமாயும் , யத் அர்சநம் = தேவரீர் திறத்தில் யாதொரு ஆராதநமாநது என்னால் செய்யப்பட்டதோ ? தத் = அந்த உபசார ரூப அபசாரமாநது , க்ஷந்தவ்யம் = தேவரீரால் பொறுத்தருளத் தக்கது , ப்ரபந்நாநாம் அபராத ஸஹோஹ்யஸி = தேவரீர் திருவடிகளில் ப்ரபத்தி பண்ணினவர்களி நபசாரங்களைப் பொறுத்தருளும் ஸ்வபாவமுடையவரென்று வைதிக ப்ரஸித்தி வுடையவரென்றன்றோ ?

அஜ்ஞாநாத்யதி  வா  ஜ்ஞாநாதஶுபம்  யத்க்ருதம்  மயா |

க்ஷந்தவ்யம்  ததஶேஷேண  தாஸ்யேந  ச  க்ருஹாண  மாம்      16

அஜ்ஞாநாத் = அபுத்தி பூர்வகமாகவாதல் , ஜ்ஞாநாத் = புத்தி பூர்வகமாகவாதல் , யத் அஶுபம் = யாதொரு அபசாரமானது , மயா = என்னாலே , க்ருதம் = செய்யப் பட்டதோ ? தத் அஶேஷேண க்ஷந்தவ்யம் = அவை ஒன்றே*****யாமல் பொறுத் தருளத்தக்கது , மாம் = அடியேனை , தாஸ்யே ச க்ருஹாண = நித்யகைங்கர்யம் செய்யும்படி அங்கீகரித்தருள வேணும் |

 

ஸர்வேஷு  தேஶகாலேஷு  ஸர்வாவஸ்தாஸு  சாச்யுத |

கிங்கரோSஸ்மி  ஹ்ருஷீகேஶ  பூயோ  பூயோSஸ்மி  கிங்கர: ||        17

அச்யுத = ஆஶ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாதவனே , ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸு கிங்கரோஸ்மி = கைங்கர்யத்தில் அபிநிவேஶாதிஸ் ஸயத்தாலே ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் , தேவரீருக்கு அடிமை செய்யபெறுவேனாக வேணும் , ஹ்ருஷீகேஶ = கைங்கர்யத்தில் ஸர்வ போகத்தைத் தருவிப்பிக்குமவனே , பூயோ பூயோஸ்மி கிங்கர: = ஆதராதிஶாலே த்விராவ்ருத்தி ப்ரார்த்திக்கிறபடி இனிமேலுள்ள காலமெல்லாம் பர வ்யூஹாதி தேஶங்களிலும் ஜாக்ரத் ஸ்வப்நாத்யவஸ்த்யைகளிலும் தத்தத் தேஶகாலாவஸ் தோசித ஸகலவித கைங்கர்யங்களையும் செய்யப்பெறுவேனாக வேணுமென் கிறது |

சதுர்த  ஜிதந்தா  வ்யாக்யாநம்  ஸமாப்தம் |

பஞ்சம  ஜிதந்தா  வ்நாக்யாநம் | 

ஜிதந்தே  புண்டரீகாக்ஷ  நமஸ்தே  விஶ்வபாவந |

நமஸ்தேSஸ்து  ஹ்ருஷீகேஶ  மஹாபுருஷ  பூர்வஜ ||            1

ஹே புண்டரீகாக்ஷ = செவ்விய தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடைய வனே , தே ஜிதம் = உனக்கு ஜயமுண்டாகக் கடவது , ஹே விஶ்வபாவந = ஸகல ஜகத்தையும் படைத்த ஸர்வேஶ்வரனே , தே நம: = உன்னை ஶரணமடை கிறேன் , பூர்வஜ = சேதந ரக்ஷணத்துக்காக ஶ்ருஷ்ட்யவதாராதிகளைப் பண்ணி நிற்குமவனே , ஹ்ருஷீகேஶ = தன்னுடைய ஸௌந்தர்யாதிகளைக் காட்டி விஷயாந்தர ப்ரவணங்களான விந்த்ரியங்களை தன் வசமாக்குவனே , மஹாபுருஷ = ஆஶ்ரிதர் விஷயத்தில் தன் ஸ்வரூபத்தையழியமாறிக் கார்யம் செய்யுமவனான ஸர்வேஶ்வரனே , நம: தே அஸ்து = உன்னுடைய ஸௌந்தர்யாதி குணங்களுக் குத் தோற்று ஶரணமடைகிறேன் |

நமஸ்தே  வாஸுதேவாய  ஶாந்தாநந்தசிதாத்மநே |

அஜிதாய  நமஸ்துப்யம்  ஷாட்குண்யநிதயே  நம: |             2

ஶாந்தாநந்த சிதாத்மநே = ஊர்மி ஷட்கர்ம ரஹிதநாய் , தேஶ கால வஸ்து பரிச்சேதநார்ஹமாய் , ஜ்ஞாநமயமாந திவ்யாத்ம ஸ்வரூபத்தை யுடையநாய் , வாஸுதேவாய = ஸர்வ பூதங்களிலும் அந்தராத்மதயா நின்று விளங்கா நின்றுள்ள தே நம: = தேவரீரை ஶரணமடைகிறேன் , அஜிதாய = ப்ராக்ருதமான ஜன்ம மரணாதிகளால் ஜயிக்கப்படாதவனாய் , அல்லது அஜிதை யென்கிற பரமபதத்தை யுடையவனாய் , ஷாட்குண்ய நிதயே = ஜ்ஞாந ஶக்த்யாதி கல்யாணகுணங்களுக்கு ஆகரமான , துப்யம் நம: = தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன் |

மஹாவிபூதிஸம்ஸ்தாய  நமஸ்தே  புருஷோத்தம |

ஸஹஸ்ரஶிரஸே  துப்யம்  ஸஹஸ்ரசரணாய  தே ||               3

ஹே புருஷோத்தம = வாங்க்மநஸா அபரிச்சேத்யமான குணவிபூதி விக்ரஹாத் யநுபவத்தை ஆஶ்ரிதர்க்குத் தக்கபடி அளிக்குமவனே , மஹாவிபூதி ஸம்ஸ்தாய = பாக்ய போகோபகரணங்களால் குறைவற்ற த்ரிபாத்விபூதியில் எழுந்தருளி யிருக்கு மவனாய் , ஸஹஸ்ரஶிரஸே = ஸஹஸ்ர ஶப்தம் ஆநந்தவாசியாய் , ஶிரஸ் துப்யம் = ஸர்வேந்த்ரிய வாசியாய் , தத் காயமாந ஜ்ஞாநத்தை ரக்ஷிக்கிறதாகை யாலே ,அபரிச்சிந்ந ஜ்ஞாநத்தை யுடையவனாய் , ஸஹஸ்ரசரணாய = சரண ஶப்தம் கர்மேந்த்ரிய காய ஶக்த்யுபலக்ஷகமாய் அபரிச்சிந்ந ஶக்தியுடையனான , தே நம: = உன்னை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன் , அநேகமாயிரம் கை கால்களால் செய்யத்தக்க கார்யத்தை இந்த்ரிய நிரபேக்ஷகனாகவே செய்யவல்ல அபரிமித ஜ்ஞாநஶக்தி யுடையவனென்று ஸஹஸ்ரஶீர்ஶாதி ஶப்தங்களுக்கு தாத்பர்யம் |

ஸஹஸ்ரபாஹவே  துப்யம்  ஸஹஸ்ரநயநாய  தே |

அமூர்தாய  நமஸ்துப்யமேகமூர்தாய  தே  நம: ||                   4

ஸஹஸ்ர பாஹவே = பாஹு ஶப்தத்தால் கர்மேந்த்ரிய கார்ய ஶக்த்யுபலக்ஷக மாய் , அநந்த ஶக்தி யுக்தனாய் , ஸஹஸ்ர நயநாய = நயந ஶப்தத்தாலே ஜ்ஞாநேந்த்ரிய கார்யமான ஜ்ஞாநத்தை ரக்ஷிக்கிறதாய் , அநந்தஜ்ஞாநத்தை யுடையனாய் , அமூர்தாய = ஸூக்ஷ்மமாந அவ்யக்த புருஷாதிகளை ஶரீரமாக யுடையனாய் , அல்லது ஸ்தூலபௌதிகமாந மூர்த பதார்த்தங்களில் வேறுபற்ற வனாய் , ஏக மூர்தாய = தனக்கு ஸத்ருஶமாந வஸ்த்வந்தரமில்லாமையாலும் , ப்ரளயத்தில் அவிபக்ததமஶ்ஶரீரகநா யிருக்கையாலும் , ஒன்றென்று சொல்லும் படியான திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையனாய் , தே நம: = உன்னை சேவிக்கிறேன் |

 

அநேகமூர்தயே  துப்யமக்ஷராய  ச  தே  நம: |

வ்யாபிநே  வேதவேத்யாய  நமஸ்தே  பரமாத்மநே  ||                5

அநேக மூர்தயே = ராமக்ருஷ்ணாவதாரம் செய்யுமவனாய் , அல்லது ஸ்தூல ஸூக்ஷ்மமாந எல்லா பதார்த்தங்களையும் ஶரீரமாக வுடையனாய் , அக்ஷராய = ஒருகாலும் நாஶமில்லாதவனாய் , அல்லது ( முக்தர்களால் ஸதா அநுபவிக்கப் பார்த்தாலும் அவர்களை கல்யாண குணாதிகளில் அமிழ்ந்து கிடக்கும்படி செய்து மேன்மேலும் போக்யத்தையே மிக்கிருக்கும்படி வ்ருத்தி அடைகையாலே ) க்ஷரமில்லாதவனாய் , வ்யாபிநே = ஸகல சேதநாசேதநர்களில் ஸங்கோசமற வ்யாபித்து நிற்குமவனாய் , வேத வேத்யாய = இவன் வ்யாபித்து நிற்கும் நிலை முதலியவை ப்ரத்யக்ஷாதி ப்ரமாணங்களாலறிய அஶக்யமாகையாலே , கேவலம் வேதங்களால் அறியத்தக்கவனாய் , பரமாத்மநே = எல்லா வஸ்துகளுக்கும் தான் நியாமகநாய் , தனக்கு நியாமகாந்தர மில்லாதவநான , தே நம: = தேவரீருக்கு நமஸ்காரம் |

சிந்மாத்ரரூபிணே  துப்யம்  நமஸ்த்ரய்யந்தமூர்தயே |

அணிஷ்டாய  ஸ்தவிஷ்டாய  மஹிஷ்டாய  ச  தே  நம: ||          6

சிந்மாத்ர ரூபிநே = கேவலம் ஜ்ஞாந மயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை யுடைய வனாய் , த்ரய்யந்த மூர்தயே = வேதாந்தங்களை ஶரீரமாக வுடையனான , துப்யம் நம: ; வேதாந்தங்கள் ஶரீரமாகையாவது = ஈஶ்வரனுக்கு அபிவ்யஜ்ஞமா யிருக்கை யிநாலாவது , ஈஶ்வரனுடைய ஆஜ்ஞாரூபமா யிருக்கையிநா லாவதென்றறியவும், அணிஷ்டாய = அதி ஸூக்ஷ்மங்களான தஹராகாஶாவ்யக்த ஜீவாதிகளில் ப்ரவே ஶிக்கத்தக்க அதி ஸூக்ஷ்ம ஸ்வரூபனாய் , ஸ்தவிஷ்டாய =ஓரிடத்திலிருந்தே எல்லா வஸ்துக்களையும் ஸ்பர்ஶிக்க வல்ல ஸௌக்ய விஶிஷ்டநாய் , அல்லது பஹுஸாமர்த்யமென்கிற ஸங்கல்பத்தாலே ப்ரஹ்மாண்டாதி ஸ்தூல ஸூக்ஷ்ம கார்யவர்க்கத்தை ஶ்ருஷ்டிக்கவல்ல ஸ்தௌல்யத்தை யுடையனாய் , மஹிஷ்டாய = மஹத் பரிமாணங்களான பரமாகாஶாதிகளிலும் வ்யாபித்து அவை ஷிராங்கை யென்னும்படி பண்ணவல்ல பரம மஹத் பரிமாணனான , தே நம: = உனக்கு நமஸ்காரம் |

நேதிஷ்டாய  யவிஷ்டாய  ஸர்வாந்தர்யாமிணே |

வர்ஷிஷ்டாய  ஜபிஷ்டாய  கநிஷ்டாய  ச  தே  நம: ||                7

நேதிஷ்டாய = புரம்புண்டாந பற்றுக்களை விட்டு உன்னிடத்தில் மநஸ்ஸை வைத்து த்வந்மயாலான முமுக்ஷுக்களுக்கு அத்யந்த ஸமீபத்திலிருக்குமவனே , யவிஷ்டாய = என்றுமொக்க பஞ்சமி ஶதி வர்ஷிகமான அகுமார யுவாகாரநாய் , ஸர்வாந்தர்யாமிணே = எல்லா வஸ்துக்களிலும் அநுப்ரவேஶித்து கர்மாநுகுணமாக நியமிக்குமவனான , தே நம: ; வர்ஷிஷ்டாய = எல்லாருக்கும் முன்னே உண்டாயி ருக்கையாலே மிகவும் முதிர்ந்த வயஸ்ஸை யுடையவனாய் , ஜபிஷ்டாய = வாமந கபிலாதி ரூபேண அவதரித்து மஹாமந்த்ராதி ஜபஶீலநாய் , கநிஷ்டாய = ப்ராதா பாவ யவீயாநென்று காஶ்யபர் ப்ரார்த்தித்தபடி தேவகார்யார்த்தமாக தேவர்களுக்கு கநிஷ்டநா யவதரித்த , தே நம: = உன்னை நமஸ்கரிக்கிறேன் |

பஞ்சாத்மநே  நமஸ்துப்யம்  ஸர்வாந்தர்யாமிணே  நம: |

கல்பநாSபோடரூபாய  ஸ்ருஷ்டிஸ்தித்யந்தஹேதவே  ||            8

பஞ்சாத்மநே == ஆகாஶாதி பூத பஞ்சகணங்களைந்துக்கும் நிர்வாஹகநாய் , ஸர்வாந்தர்யாமிணே = ஸ்தூல ஸூக்ஷ்மங்களான எல்லா பதார்த்தங்களிலும் ஸதா நிர்வாஹார்தமாக அந்தஹஹ ப்ரவேஶித்து நியமிக்குமவனாய் , கல்பநாSபோடரூபாய = கால்பநிக மன்றியே நித்யமான திவ்யமங்கள விக்ர ஹத்தை யுடையனாய் , ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த ஹேதவே = ப்ரஹ்மரூபாதி ரூபேண நின்று ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணா நின்றுள்ள , துப்யம் நம: = தேவரீரை தெண்டன ஸமர்ப்பிக்கிறேன் |

நமஸ்தே  குணரூபாய  குணரூபாதிவர்திநே |

வ்யஸ்தாய  ச  ஸமஸ்தாய  ஸமஸ்தவ்யஸ்தரூபிணே  ||          9

குணரூபாய = கந்தாதி குணங்களுக்கு ப்ருதிவ்யாதி த்வாரா நிர்வாஹகநாய் அன்றிக்கே , ஸத்வாதி குணமயமான ப்ரக்ருதி ஶரீரகனாய் , குணரூபாதிவர்திநே = ப்ராக்ருதரூப குணங்களைக் கலந்திருக்குமவனாய் , ஸமஸ்தாய = ஸகல சேதநா சேதந ஶரீரகனாயிருக்கச் செய்தேயும் , வ்யஸ்தாய = அவைகளிற்காட்டில் வேறு பட்டவனாய் , ஸமஸ்தவ்யஸ்தரூபிணே = ஸமஸ்த ஸ்ருஷ்டிக்கும் வ்யஸ்தி ஸ்ருஷ்டிக்கும் விஷயமான ஸகல பதார்த்தங்களுக்கு நிர்வாஹகநான , தே நம: = உன்னை நமஸ்கரிக்கிறேன் |

ஆதிமத்யாந்தஶூந்யாய  தத்த்வஸ்தாய  நமோ  நம: |

ப்ரணவப்ரதிபாத்யாய  நம:  ப்ரணவரூபிணே ||                      10

ஆதிமத்யாந்தஶூந்யாய = முதல் , நடுவு , கடைசியென்கிற காலக்ருத பரிச்சேத மில்லாதவனாய் , அன்றிக்கே , கர்ம க்ருத ஜந்மநாஶாதி தோஷஶூந்யமான திவ்ய மங்கள விக்ரஹ விஶிஷ்டநாய் , தத்த்வஸ்தாய = பஞ்சவிம்ஶதி தத்வங்களிலும் வ்யாபித்து நிற்குமவனாய் , அன்றிக்கே , பரமார்த்த பூதநாய் நிற்குமவனாய் , ப்ரணவப்ரதிபாத்யாய = அஸம்ஹிதாகாரத்தில் ப்ரணவத்தால் சேதநர்களெல்லாம் எம்பெருமானுக்கே ஶேஷமென்று சொல்லுகையால் , ஸர்வஶேஷியாக ப்ரதிபாதிக் காப்படுமவநாய் , ப்ரணவரூபிணே = ஸம்ஹிதாகாரத்தில் ஓமிதி ப்ரஹ்மவென்று த்யாந ஸாதந ப்ரணவ ஸ்வரூபியான , தே நம: = உன்னை நமஸ்கரிக்கிறேன் |

லோகயாத்ராப்ரஸித்யர்த்தம்  ஸ்ருஷ்டப்ரஹ்மாதிரூபிணே |

நமஸ்துப்யம்  ந்ருஸிம்ஹாதிமூர்த்திபேதாய  விஷ்ணவே ||            11

லோகயாத்ராப்ரஸித்யர்த்தம் = ஶ்ருஷ்ட்யாதி லோகவ்யாபாரங்களுக்காக , ஸ்ருஷ்ட ப்ரஹ்மாதி ரூபிணே = தன்னாலே உண்டாக்கப்பட்ட ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர்யாமியாய் நிற்குமவனாய் , விஷ்ணவே = ஸகல சேதநங்களிலும் வ்யாபித் திருக்குமவனாய் , ந்ருஸிம்ஹாதி மூர்த்தி பேதாய = வ்யாபிதி பலமான ரக்ஷணத் துக்காக ந்ருஸிம்ஹாத்யவதாரங்கள் செய்தருளின , துப்யம் நம: = தேவரீரை நமஸ் கரிக்கிறேன் |

விபாகை:  கர்மபி:  க்ஷோபைரஸ்ப்ருஷ்டவபுஷே  நம: |

நமோ  ப்ரஹ்மண்யதேவாய  தேஜஸாம்  நிதயே  நம: ||              12

விபாகை: = ஜாத்யாதி விபாகமாகிற விபாகங்களினாலும் , கர்மபி: = அதுக்கடியான புண்ய பாப ரூப கர்மங்களினாலும் , அஸ்ப்ருஷ்ட வபுஷே = “ க்லேஶ கர்ம விபாகாஶயைரபராம்ருஷ்ட: புருஷ ஈஶ்வர: ” என்கிறபடியே ஸ்பர்ஶிக்கப்படாத திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையனாய் , ப்ரஹ்மண்ய தேவாய = வேதப்ரதி பாத்யநா யிருக்கையாகிற ஔஜ்வல்யத்தை யுடையனாய் , தேஜஸாம் நிதயே = நிரவதிகதேஜோ ரூபனான , தே நம: = உன்னை நமஸ்கரிக்கிறேன் |

நித்யஸாதாரணாநேகலோகரக்ஷாபரிச்சிதே |

ஸச்சிதாநந்தரூபாய  வரேண்யாய  நமோ  நம: ||                      13

நித்ய ஸாதாரணாநேக லோகரக்ஷா பரிச்சிதே = ஜகத்ரக்ஷகமாக நித்யமாந அநேக பரிகாரங்களை யுடையனாய் , ஸச்சிதாநந்தரூபாய = நிருபாதிக ஸத்பாவத்தை யுடையனாயும் ஸத்குண விஶிஷ்டனாயு மிருக்கையாலே ஸச்சந்தவாச்யனாய் , நிருபாதிகமாய் நித்யமாய் துகாஹ ஸம்பிந்நமாய் என்றுமொக்க அநுகூலமே ஸ்வபாவமான ஜ்ஞாநஸ்வரூப ஜ்ஞாநகுணகநாய் , வரேண்யாய = ஆஶ்ரிதரால் தன்னையே தரும்படி ப்ரார்த்திக்கத் தக்கவனான , தே நம: = தேவரீரை நமஸ்கரிக்கிறேன் |

 

யஜமாநாய  யஜ்ஞாய  யஷ்டவ்யாய  நமோ  நம: |

இஜ்யாபலாத்மநே  துப்யம்  நம  இஜ்யாதிஶீலிநே ||                    14

யஜமாநாய = அஸக்தர்க்குத் தானே கர்மாநுஷ்டானம் பண்ணுமவனாய் , அன்றிக்கே , ஸர்வமும் பகவச்சரீரமாகையாலே யஜ்ஞம் செய்யுமவனுக்கு நியாமகநாய் , யஜ்ஞாய = ஸ்வாராதனரூப யாகோபகரண ஶூந்யர்க்குத் தானே அந்த யஜ்ஞரூபியாய் , யஷ்டவ்யாய = அந்த யாகோபகரணமும் தானேயாய் , இஜ்யா பலாத்மநே = அந்த யாகம் செய்வதினா லுண்டாகும் பலத்துக்கும் தானே நிர்வாஹகனாய் , இஜ்யாதி ஶீலிநே = பஞ்சமஹாயஜ்ஞங்களால் பல ஸகந    கர்த்ருத்வ த்யாகபூர்வமாக ஆராதிக்கத்தக்கவனான , தே நம: = தேவருக்கு நமஸ்காரம் |

நம:  பரமஹம்ஸாய  நமஸ்ஸத்த்வகுணாய  ச |

ஸ்திதாய  பரமவ்யோம்நி  பூயோ  பூயோ  நமோ  நம: ||             15

பரமஹம்ஸாய = புர்மபுந்தான பற்றுக்களை ஸவாஸநமாக அறுத்துப் போடுமவ னாய் , ஸத்த்வகுணாய = ஜ்ஞாநப்ரகாஶத்வேந மோக்ஷமூலமான ஸத்த்வகுண ப்ரவர்த்தகனாய் , பரமவ்யோம்நி ஸ்திதாய = இப்படி பாஹ்யஸங்கமற்ற ஸத்த்வ நிஷ்டர்களுக்கு ப்ராப்யமான பரமபதத்திலே பெருமதிப்போடு வீற்றிருக்குமவனான , தே பூயோ பூயோ நமோ நம: = தேவரீரைக் கடா கடாவென்று அநுபவிப்பதில் ஆதராதிஶயத்தாலே , த்விராவ்ருத்தி ஶரணவரணம் பண்ணுகிறேன் |

ஸம்ஸாரே  விஷயாவர்தஸங்குலே  ச  மஹாபயே |

அபாரதுஸ்தரேSகாதே  பதிதம்  கர்மபிஸ்ஸ்வகை: ||                   16

அநாதமகதிம்  பீரும்  தயயா  பரயா  ஹரே |

மாமுத்தர  தயாஸிந்தோ  ஸிந்தோரஸ்மாத்ஸுதுஸ்தராத் ||           17

விஷயாவர்த ஸங்குலே = அநர்த ஹேதுக்களான ஶப்தாதி விஷயங்களாகிற சுழல்களால் வ்யாகுலமாயும் , மஹாபயே = ஶேஷத்வாதிகளை யழிக்கையாலும் ஶப்தாதிகளிலே மூட்டுகையாலும் ஆதி வ்யாதிகளால் பதே பதே மிக்க பய ஜநக மாய் , அபாரதுஸ்தரே = கடல் போல் அக்கரை காணவொண்ணாததாயும் , புக்கால் தந்தாமல் கரையேற அஶக்யமாயும் , அகாதே ஸம்ஸாரே = தரை காணவொண் ணாதபடி ஆழமாயிருப்பதான அவித்யாகர்மவாஸநாருசிப்ரக்ருதி ஸம்பந்தங்களா கிற ஸம்ஸாரத்திலே , ஸ்வகை: கர்மபி: = அஸல் பிளந்தேரிதுகையன்றிக்கே தானே மநோவாக்யங்களால் செய்கிற பாபகர்மங்களாலே , பதிதம் = வீழ்ந்து துளங்கா நின்றுள்ள , அநாதம் = ரக்ஷகாந்தர ஶூந்யநாய் , அகதிம் = உபயாந்தர ஶூந்யநாய் , பீரும் = தேஶ கால ஶரீரங்களிலும் இவற்றா லநுஷ்டிக்கும் கர்ம யோகாதிகளிலும் மிகவும் பயந்தவனான , மாம் = தேவரீரை ஶரணமாக அடைந்த அடியேனை , தயா ஸிந்தோ = க்ருபாநிதியே , ஹரே = ஆஶ்ரித தாபந்நிவர்தகனே, தயயா பரயா = தேவரீருடைய பரமக்ருபையாலே ( ஐயோ வென்றிறங்கி ) , ஸுதுஸ்தராத் = ஸ்வயத்நத்தால் கடப்பதற்கு அஶக்யமான , அஸ்மாத் ஸிந்தோ: = இந்த ஸம்ஸாரமாகிற பெருங்கடலினின்றும் , மாம் உத்தர = ப்ரளயங்கொண்ட பூமியை எடுத்தாப்போலே அடியேனை எடுத்தருள வேணும் |

மந்த்ரஹீநம்  க்ரியாஹீநம்  பக்திஹீநம்  யதர்சநம் |

தத்ஸர்வம்  க்ஷம்யதாம்  தேவ  தீநம்  மாமாத்மஸாத்குரு ||          18

யத் அர்சநம் = யாதொரு தேவரீர் திறத்தில் செய்த ஆராதநமானது , மந்த்ரஹீநம் = மந்த்ரலோபமுள்ளதா யிருந்தாலும் , க்ரியாஹீநம் = தந்த்ரலோபமுள்ளதா யிருந் தாலும் , பக்திஹீநம் = ப்ரீதிரூபபந்நமான பக்திஶூந்யமா யிருந்தாலும் , தத் ஸர்வம் = உபசாரமென்று நாமமாத்ரமான அந்த எல்லா அபசாரங்களும் , க்ஷம்யதாம் = தேவரீரால் பொறுத்தருளத் தக்கது , தேவ = ஸர்வரும் தேவரீர் திருவடிகளை ஆஶ்ரயிக்கவேண்டும்படிக்கீடான மேன்மை யுடையவரே , தீநம் மாம் = பேற்றுக்கு ஒரு கைம்முதலில்லாமல் கேவலம் தேவரீருடைய தயைக்கே பாத்ரமான வென்னை , ஆத்ம ஸாத் குரு = தனக்கே யாக்கும்படி அநுக்ரஹிக்க வேண்டும் |

அஹம்  ஹிதம்  ந  ஜாநாமி  த்வாம்  வ்ரஜாம்யேவ  கேவலம் |

புத்வைவம்  நய  கோவிந்த  முக்த்யுபாயேந  வர்த்மநா ||            19

அஹம் = அஜ்ஞாநாதிகளால் பூர்ணனான நான் , ஹிதம் = ஸ்வரக்ஷணோபா யத்தை , ந ஜாநாமி = அறியமாட்டுகிறிலேன் , த்வாம் ஏவ கேவலம் = ஸர்வ ஜ்ஞாநத்வ ஸர்வஶக்தித்வாதி விஶிஷ்டராய் நிரபேக்ஷஸித்தோபாயபூதரான தேவரீரை , வ்ரஜாமி = என்னுடைய அநிஷ்டநிவ்ருத்திக்கும் இஷ்டப்ராப்த்திக்கும் கட்வராக அத்யவஸிக்கிறேன் , ஹே கோவிந்த = ஸ்வரக்ஷணத்தில் ஜ்ஞாநமில் லாத பசுக்களை ரக்ஷித்தவனே , ஏவம் புத்வா = ஸ்வரக்ஷணோபாய ஶூந்யனென் பதை திருவுள்ளத்திலுகந்து , முக்த்யுபாயேந வர்த்மநா = ஸம்ஸார ஸம்பந்தமற்று தேவரீரை ப்ராபிக்கைக்கீடான நல்வழியோடே , நய = என்னை சேர்த்தருள வேண்டும் |

 

 

த்வமேவ  வேத்ஸி  ஸ்ரேயோ  மே  நேதமேததிதீதி  ச |

புத்தியோகம்  ச  மே  தேஹி  யேந  த்வாமுபயாம்யஹம் ||           20

மே = தேவரீரைப் பற்றிநின்ற எனக்கு , இதம் ஸ்ரேய: இதி = இது உத்தம புருஷார்த்த ஸாதநமென்பதையும் , ஏதத் நேதி ச = இது புருஷார்த்தஸாதநமாக மாட்டாதென்பதையும் , த்வமேவ = ஸர்வஜ்ஞாநரான தேவரீரே , வேத்ஸி = அறிய வல்லவர் , அஹம் = அஜ்ஞாநஶக்தி பூர்ணனான நான் , யேந = எந்த உபாயத்தாலே , த்வாம் = பரமப்ராப்யரான தேவரீரை , உபயாமி = அடைவனோ ? புத்தியோகம் ச = அந்த பக்திரூபோபாயத்தை , மே = அடியேனுக்கு , தேஹி = ப்ரஸாதித்தருள வேண்டும் |

 

பஞ்சம  ஜிதந்தார்த்த  ஸம்பூர்ண:

பெரியவாச்சான்  பிள்ளை  திருவடிகளே  ஶரணம்

ஜீயர்  திருவடிகளே  ஶரணம்    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.