Thirumozhi 8-10
பெரிய திருமொழி எட்டாம் பத்து பத்தாம் திருமொழி வண்டார் பூமாமலர் மங்கை, மணநோக்க முண்டானே ! * உன்னை உகந்துகந்து, உன்தனக்கே தொண்டானேற்கு * என்செய்கின்றாய் ? சொல்லு, நால்வேதம் கண்டானே ! * கண்ணபுரத்துறை யம்மானே ! 8.10.1 திருக்கண்ணபுரம் பெருநீரும் விண்ணும், மலையும் உலகேழும் * ஒரு தாரா நின்னுளொடுக்கிய, நின்னை யல்லால் * வருதேவர் மற்றுளரென்று, என் மனத்து இறையும் கருதேன் நான் * கண்ணபுரத்துறை யம்மானே ! […]
Thirumozhi 8-9
பெரிய திருமொழி எட்டாம் பத்து ஒன்பதாம் திருமொழி கைம்மான மதயானை இடர் தீர்த்த, கருமுகிலை * மைம்மான மணியை, அணிகொள் மரதகத்தை * எம்மானை எம்பிரானை ஈசனை, என் மனத்துள் அம்மானை * அடியேன் அடைந்துய்ந்து போனேனே. 8.9.1 திருவரங்கம், திருக்கண்ணபுரம் தருமான மழைமுகிலைப், பிரியாது தன்னடைந்தார் * வருமானம் தவிர்க்கும் மணியை, அணியுருவில் திருமாலை * அம்மானை அமுதத்தைக், கடல் கிடந்த பெருமானை * அடியேன் அடைந்துய்ந்து பிழைத்தேனே. 8.9.2 திருவரங்கம், […]
Thirumozhi 8-8
பெரிய திருமொழி எட்டாம் பத்து எட்டாம் திருமொழி வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம் * வலியுருவில் மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்தாமரைக் கண்ணன் * ஆனாவுருவி லானாயன் அவனை, அம் மா விளை வயலுள் * கானார் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.1 திருக்கண்ணபுரம் மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு * இலங்கு சோதி யாரமுதம் எய்துமளவு, ஓராமையாய் […]
Thirumozhi 8-7
பெரிய திருமொழி எட்டாம் பத்து ஏழாம் திருமொழி வியமுடை விடையினம், உடைதர மடமகள் * குயமிடை, தடவரை அகலம துடையவர் * நயமுடை நடை அனம், இளையவர் நடை பயில் * கயமிடை கணபுரம், அடிகள் தம் இடமே. 8.7.1 திருக்கண்ணபுரம் இணைமலி மருதினொடு, எருதிற இகல் செய்து * துணைமலி முலையவள், மணமிகு கலவியுள் * மணமலி விழவினொடு, அடியவ ரளவிய * கணமலி கணபுரம், அடிகள் தம் இடமே. […]
Thirumozhi 8-6
பெரிய திருமொழி எட்டாம் பத்து ஆறாம் திருமொழி தொண்டீர் ! உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க, முன் * திண்தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திருமார்பன் * வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மான் நோக்கம் கண்டான் * கண்டு கொண்டுகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.1 திருக்கண்ணபுரம் பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து * பெருந்தோள் மாலி தலை புரளப் பேர்ந்த அரக்கர் […]
Thirumozhi 8-5
பெரிய திருமொழி எட்டாம் பத்து ஐந்தாம் திருமொழி தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் * தமியேன் தன் சிந்தை போயிற்றுத் திருவரு ளவனிடைப் பெறுமள விருந்தேனை * அந்தி காவலன் அமுதுறு பசுங் கதிரவை சுட * அதனோடும் மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வதொழியாதே. 8.5.1 திருக்கண்ணபுரம் மாரிமாக்கடல் வளைவணற்கிளையவன் வரைபுரை திருமார்பில்* தாரினாசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர்துணை காணேன் * ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் […]
Thirumozhi 8-4
பெரிய திருமொழி எட்டாம் பத்து நான்காம் திருமொழி விண்ணவர் தங்கள் பெருமான், திருமார்வன் * மண்ணவ ரெல்லாம் வணங்கும், மலிபுகழ் சேர் * கண்ணபுரத்தெம்பெருமான், கதிர்முடி மேல் * வண்ண நறுந்துழாய், வந்தூதாய் கோல்தும்பீ ! 8.4.1 திருக்கண்ணபுரம் வேத முதல்வன், விளங்கு புரிநூலன் * பாதம் பரவிப், பலரும் பணிந்தேத்திக் * காதன்மை செய்யும், கண்ணபுரத்தெம்பெருமான் * தாது நறுந்துழாய், தாழ்ந்தூதாய் கோல்தும்பீ ! 8.4.2 திருக்கண்ணபுரம் விண்ட மலரெல்லாம் […]
Thirumozhi 8-3
பெரிய திருமொழி எட்டாம் பத்து மூன்றாம் திருமொழி கரை யெடுத்த சுரி சங்கும் கன பவளத் தெழு கொடியும் * திரை யெடுத்து வருபுனல் சூழ் திருக்கண்ணபுரத்துறையும் * விரை யெடுத்த துழாயலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர * வரை யெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரிவளையே. 8.3.1 திருக்கண்ணபுரம் அரிவிரவு முகிற் கணத்தால் அகிற் புகையால் வரையோடும் * தெரிவரிய மணி மாடத் திருக்கண்ணபுரத்துறையும் * வரியரவி னணைத் துயின்று […]
Thirumozhi 8-2
பெரிய திருமொழி எட்டாம் பத்து இரண்டாம் திருமொழி தெள்ளியீர்! தேவர்க்கும் தேவர், திருத்தக்கீர் * வெள்ளியீர் ! வெய்ய விழுநிதி வண்ணர் * ஓ ! துள்ளுநீர்க் கண்ணபுரம், தொழுதாளிவள் கள்வியோ ! * கைவளை கொள்வது, தக்கதே ! 8.2.1 திருக்கண்ணபுரம் நீணிலா முற்றத்து நின்று, இவள் நோக்கினாள் * காணுமோ ! கண்ணபுர மென்று காட்டினாள் * பாணனார் திண்ண மிருக்க, இனி இவள் நாணுமோ […]
Thirumozhi 8-1
பெரிய திருமொழி எட்டாம் பத்து முதல் திருமொழி சிலை யிலங்கு பொன்னாழி திண் படை தண்டு ஒண்சங்க மென்கின்றாளால் * மலை யிலங்கு தோள் நான்கே மற்றவனுக் கெற்றே காணென்கின்றாளால் * முலையிலங்கு பூம்பயலை முன்போட, அன்போடி யிருக்கின்றாளால் * கலை யிலங்கு மொழியாளர் கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ? 8.1.1 திருக்கண்ணபுரம் செருவரை முன் ஆசறுத்த சிலையன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால் * பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி, மற்றொரு கை என்கின்றாளால் * […]