Thirumozhi 8-8

பெரிய திருமொழி

எட்டாம் பத்து

எட்டாம் திருமொழி

வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம் * வலியுருவில்

மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்தாமரைக் கண்ணன் *

ஆனாவுருவி லானாயன் அவனை, அம் மா விளை வயலுள் *

கானார் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.            8.8.1                திருக்கண்ணபுரம்

மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு *

இலங்கு சோதி யாரமுதம் எய்துமளவு, ஓராமையாய் *

விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனைக் *

கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.          8.8.2                திருக்கண்ணபுரம்

பாராரளவும் முதுமுந்நீர் பரந்த காலம் * வளைமருப்பில்

ஏராருருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றலம்மானைக் *

கூரார் ஆரலிரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும் *

காரார் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.   8.8.3                திருக்கண்ணபுரம்

உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து*

விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோ னகலம் வெஞ்சமத்துப் *

பிளந்து வளைந்த உகிரானைப் பெருந்தண் செந்நெற் குலை தடிந்து *

களஞ்செய் புறவிற் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.        8.8.4                திருக்கண்ணபுரம்

தொழுநீர் வடிவின் குறளுருவாய் வந்து தோன்றி மாவலி பால் *

முழுநீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை *

உழுநீர் வயலுள் பொன் கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்

கழுநீர் மலரும் * கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.              8.8.5                திருக்கண்ணபுரம்

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி * மூவெழு கால்

படியாரரசு களை கட்ட பாழியானை அம்மானைக் *

குடியா வண்டு கொண்டுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் *

கடியார் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.               8.8.6                திருக்கண்ணபுரம்

வையமெல்லாம் உடன்வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி*

வெய்ய சீற்றக் கடியிலங்கை குடிகொண்டோட * வெஞ்சமத்து

செய்த வெம்போர் நம்பரனைச் செழுந்தண் கானல் மணநாறும் *

கைதை வேலிக் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.             8.8.7                திருக்கண்ணபுரம்

ஒற்றைக்குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்றத்தான், தோன்றி*

வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் விண்பால் செல்ல, வெஞ்சமத்துச்

செற்ற * கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்பக் *

கற்ற மறையோர் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.            8.8.8                திருக்கண்ணபுரம்

துவரிக் கனிவாய், நிலமங்கை துயர் தீர்ந்துய்யப் * பாரதத்துள்

இவரித்தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை *

உவரியோதம் முத்துந்த ஒருபால் ஒருபாலொண் செந்நெல்

கவரி வீசும் * கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.       8.8.9                திருக்கண்ணபுரம்

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்

தானாய்ப் * பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க், கற்கியும்

ஆனான் தன்னைக் * கண்ணபுரத்து அடியன் கலியனொலி செய்த *

தேனாரின் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே.      8.8.10                திருக்கண்ணபுரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.