Thirumozhi 8-1

பெரிய திருமொழி

எட்டாம் பத்து

முதல் திருமொழி

சிலை யிலங்கு பொன்னாழி

திண் படை தண்டு ஒண்சங்க மென்கின்றாளால் *

மலை யிலங்கு தோள் நான்கே

மற்றவனுக் கெற்றே காணென்கின்றாளால் *

முலையிலங்கு பூம்பயலை

முன்போட, அன்போடி யிருக்கின்றாளால் *

கலை யிலங்கு மொழியாளர்

கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ?      8.1.1      திருக்கண்ணபுரம்

செருவரை முன் ஆசறுத்த சிலையன்றோ?

கைத்தலத்தது என்கின்றாளால் *

பொருவரை முன் போர் தொலைத்த

பொன்னாழி, மற்றொரு கை என்கின்றாளால் *

ஒருவரையும் நின்னொப்பார்

ஒப்பிலா என்னப்பா ! என்கின்றாளால் *

கருவரை போல் நின்றானைக்

கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ?      8.1.2      திருக்கண்ணபுரம்

துன்னு மாமணி முடிமேல், துழாயலங்கல்

தோன்று மாலென்கின்றாளால் *

மின்னு மாமணி மகர குண்டலங்கள்

வில்வீசு மென்கின்றாளால் *

பொன்னின் மாமணியாரம்

அணியாகத்திலங்கு மாலென்கின்றாளால் *

கன்னி மாமதிள் புடைசூழ்

கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ?      8.1.3      திருக்கண்ணபுரம்

தாராய தண்துளப

வண்டுழுத வரை மார்ப னென்கின்றாளால் *

போரானைக் கொம்பொசித்த

புட்பாகன் என்னம்மா னென்கின்றாளால் *

ஆரானும் காண்மின்கள்

அம்பவளம் வாயவனுக் கென்கின்றாளால் *

கார்வானம் நின்றதிரும்

கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ?     8.1.4      திருக்கண்ணபுரம்

அடித்தலமும் தாமரையே

அங்கைகளும் பங்கயமே யென்கின்றாளால் *

முடித்தலமும் பொற்பூணும்

என்நெஞ்சத்துள் அகலா தென்கின்றாளால் *

வடித்தடங்கண் மலரவளோ

வரையாகத் துள்ளிருப்பா ளென்கின்றாளால் *

கடிக் கமலம் கள்ளுகுக்கும் *

கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ ?  8.1.5      திருக்கண்ணபுரம்

பேராயிரமுடைய பேராளன் பேராள னென்கின்றாளால் *

ஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளனென்கின்றாளால் *

நீரார் மழை முகிலே நீள்வரையே ஒக்குமா லென்கின்றாளால் *

காரார் வயலமரும் கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ?                 8.1.6                திருக்கண்ணபுரம்

செவ்வரத்த வுடையாடை

அதன் மேலோர் சிவளிகைக் கச்சு என்கின்றாளால் *

அவ்வரத்த வடியிணையும்

அங்கைகளும் பங்கயமே யென்கின்றாளால் *

மைவளர்க்கும் மணியுருவம்

மரதகமோ ! மழைமுகிலோ ! என்கின்றாளால் *

கைவளர்க்கும் அழலாளர்

கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ ?   8.1.7      திருக்கண்ணபுரம்

கொற்றப் புள்ளொன்றேறி

மன்றூடே வருகின்றா னென்கின்றாளால் *

வெற்றிப் போர் இந்திரற்கும்

இந்திரனே யொக்குமா லென்கின்றாளால் *

பெற்றக்கால் அவனாகம்

பெண் பிறந்தோ முய்யோமோ ! என்கின்றாளால் *

கற்ற நூல் மறையாளர்

கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ?      8.1.8      திருக்கண்ணபுரம்,

திருப்பாற்கடல்

வண்டமரும் வனமாலை

மணிமுடி மேல் மணநாறு மென்கின்றாளால் *

உண்டிவர் பால் அன்பெனக் கென்று ஒருகாலும்

பிரிகிலே னென்கின்றாளால் *

பண்டிவரைக் கண்டறிவது எவ்வூரில் ?

யாமென்றே பயில்கின்றாளால் *

கண்டவர் தம் மனம் வழங்கும்

கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ?      8.1.9      திருக்கண்ணபுரம்

மாவளரு மென்னோக்கி

மாதராள், மாயவனைக் கண்டாளென்று *

காவளரும் கடிபொழில் சூழ்

கண்ணபுரத்தம்மானைக் கலியன் சொன்ன *

பாவளரும் தமிழ் மாலை

பன்னிய நூல் இவை யைந்து மைந்தும் வல்லார் *

பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில்

மன்னவராய்ப் புகழ்தக்கோரே.         8.1.10    திருக்கண்ணபுரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.