Thiruvoymozhi 7-5

திருவாய்மொழி

ஏழாம் பத்து

ஐந்தாம் திருவாய்மொழி

கற்பார் இராமபிரானை யல்லால், மற்றும் கற்பரோ *

புற்பா முதலாப், புல்லெறும்பாதி ஒன்றின்றியே *

நற்பால் அயோத்தியில் வாழும், சராசரம் முற்றவும் *

நற்பாலுக்கு உய்த்தனன், நான்முகனார் பெற்ற நாட்டுளே.  7.5.1

நாட்டில் பிறந்தவர், நாரணற் காளன்றி யாவரோ ? *

நாட்டில் பிறந்து படாதன பட்டு, மனிசர்க்கா *

நாட்டை நலியும் அரக்கரை, நாடித் தடிந்திட்டு *

நாட்டை யளித்துய்யச் செய்து, நடந்தமை கேட்டுமே.        7.5.2

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பரோ ? *

கேட்பார் செவி சுடு, கீழ்மை வசவுகளே வையும் *

சேட்பால் பழம் பகைவன், சிசுபாலன் * திருவடி

தாட்பாலடைந்த தன்மை அறிவாரை, அறிந்துமே.     7.5.3

தன்மை யறிபவர் தாம், அவற்காளன்றி யாவரோ ? *

பன்மைப் படர் பொருள், ஆதுமில் பாழ் நெடுங் காலத்து *

நன்மைப் புனல் பண்ணி, நான்முகனைப் பண்ணி * தன்னுள்ளே

தொன்மை மயக்கிய, தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.         7.5.4

சூழல்கள் சிந்திக்கில், மாயன் கழலன்றிச் சூழ்வரோ ? *

ஆழப் பெரும் புனல் தன்னுள், அழுந்திய ஞாலத்தைத் *

தாழப் படாமல் தன்பால், ஒரு கோட்டிடைத் தான் கொண்ட *

கேழல் திருவுரு வாயிற்றுக், கேட்டும் உணர்ந்துமே.          7.5.5

கேட்டு முணர்ந்தவர், கேசவற் காளன்றி யாவரோ ? *

வாட்டமிலா வண்கை, மாவலி வாதிக்க வாதிப்புண்டு *

ஈட்டங்கொள் தேவர்கள், சென்றிரந்தாற் கிடர் நீக்கிய *

கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துக்கள் கண்டுமே.       7.5.6

கண்டும் தெளிந்தும் கற்றார், கண்ணற் காளன்றி யாவரோ? *

வண்டுண் மலர்த் தொங்கல், மார்க்கண்டேயனுக்கு வாழு நாள் *

இண்டைச் சடைமுடி, ஈசன் உடன் கொண்டு உசாச் செல்லக்

கொண்டங்குத் தன்னொடும் கொண்டு, உடன்சென்றது உணர்ந்துமே.      7.5.7

செல்ல வுணர்ந்தவர், செல்வன் தன் சீரன்றிக் கற்பரோ ? *

எல்லையிலாத பெருந்தவத்தால், பல செய்ம்மிறை *

அல்லலமரரைச் செய்யும், இரணியனாகத்தை *

மல்லலரி யுருவாய்ச் செய்த, மாயம் அறிந்துமே.     7.5.8

மாய மறிபவர், மாயவற் காளன்றி யாவரோ ? *

தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க, ஓரைவர்க்காய்த் *

தேசமறிய ஓர் சாரதியாய்ச் சென்று, சேனையை

நாசம் செய்திட்டு * நடந்த நல் வார்த்தை யறிந்துமே.      7.5.9

வார்த்தை யறிபவர், மாயவற் காளன்றி யாவரோ ? *

போர்த்த பிறப்பொடு, நோயொடு மூப்பொடு இறப்பிவை

பேர்த்துப் * பெருந் துன்பம் வேரற நீக்கித், தன் தாளிணைக் கீழ்

சேர்த்து * அவன் செய்யும் சேமத்தை, எண்ணித் தெளிவுற்றே.   7.5.10

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் *

தெளிவுற்ற கண்ணனைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் *

தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர் *

தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுலகத்துள்ளே.    7.5.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.