Thiruvoymozhi 4-1

திருவாய்மொழி

நான்காம் பத்து

முதல் திருவாய்மொழி

ஒரு நாயகமாய், ஓட வுலகுட னாண்டவர் *

கருநாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர் *

பெரு நாடு காண, இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் *

திருநாரணன் தாள், காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.       4.1.1

உய்ம்மின் திறை கொணர்ந்து என்று, உலகாண்டவர் *

இம்மையே தம்மின் சுவை மடவாரைப், பிறர்கொள்ளத் தாம் விட்டு *

வெம்மினொளி வெய்யில் கானகம் போய்க், குமை தின்பர்கள் *

செம்மின் முடித் திருமாலை, விரைந்து அடி சேர்மினோ.     4.1.2

அடி சேர் முடியினராகி, அரசர்கள் தாம் தொழ *

இடி சேர் முரசங்கள் முற்றத் தியம்ப, இருந்தவர் *

பொடி சேர் துகளாய்ப் போவர்கள், ஆதலில் நொக்கெனக் *

கடிசேர் துழாய் முடிக் கண்ணன், கழல்கள் நினைமினோ.      4.1.3

நினைப்பான் புகில், கடலெக்கலின் நுண்மணலின் பலர் *

எனைத் தோருகங்களும், இவ்வுலகாண்டு கழிந்தவர் *

மனைப்பால் மருங்கற, மாய்தலல்லால் மற்றுக் கண்டிலம் *

பனைத் தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.    4.1.4

பணிமின் திருவருளென்னும், அம்சீதப் பைம்பூம் பள்ளி *

அணிமென் குழலார், இன்பக் கலவி யமுதுண்டார் *

துணி முன்பு நாலப், பல்லேழையர் தாம் இழிப்பச் செல்வர்*

மணி மின்னு மேனி, நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.     4.1.5

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது, மாமழைமொக்குளின் மாய்ந்துமாய்ந்து*

ஆழ்ந்தா ரென்றல்லால், அன்று முதலின்றறுதியா *

வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை, நிற்குறில் *

ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல், அடியவ ராமினோ.          4.1.6

ஆமின் சுவையவை, ஆறோடடிசி லுண்டார்ந்த பின் *

தூமென் மொழி மடவா ரிரக்கப், பின்னும் துற்றுவார் *

ஈமினெமக் கொரு துற்றென்று, இடறுவராதலின் *

கோமின், துழாய் முடி ஆதியஞ் சோதி குணங்களே.            4.1.7

குணங்கொள் நிறைபுகழ் மன்னர் கொடைக் கடன் பூண்டிருந்து *

இணங்கி யுலகுடனாக்கிலும், ஆங்கவனை யில்லார் *

மணங் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள், மீள்வில்லை *

பணங்கொள ரவணையான், திருநாமம் படிமினோ.     4.1.8

படி மன்னு பல்கலன் பற்றோடறுத்து, ஐம்புலன் வென்று *

செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கவனை யில்லார் *

குடி மன்னு மின் சுவர்க்க மெய்தியும் மீள்வர்கள், மீள்வில்லை *

கொடி மன்னு புள்ளுடை, அண்ணல் கழல்கள் குறுகுமினோ.        4.1.9

குறுக மிக வுணர்வத்தொடு, நோக்கி எல்லாம் விட்ட *

இறுகலிறப் பென்னும் ஞானிக்கும், அப் பயனில்லையேல் *

சிறுக நினைவதோர் பாசமுண்டாம், பின்னும் வீடில்லை *

மறுகலி லீசனைப் பற்றி, விடா விடில் வீடஃதே.       4.1.10

அஃதே உய்யப் புகுமாறென்று, கண்ணன் கழல்கள் மேல் *

கொய்பூம் பொழில்சூழ், குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் *

செய் கோலத் தாயிரம், சீர்த்தொடைப் பாடலிவை பத்தும் *

அஃகாமல் கற்பவர், ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.      4.1.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.