Thiruvoymozhi 4-9

திருவாய்மொழி

நான்காம் பத்து

ஒன்பதாம் திருமொழி

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்தேங்க *

எண்ணாராத் துயர் விளைக்கும், இவை யென்ன உலகியற்கை ? *

கண்ணாளா ! கடல் கடைந்தாய் ! உனகழற்கே வரும் பரிசு *

தண்ணாவா தடியேனைப் பணி கண்டாய், சாமாறே.     4.9.1

சாமாறும் கெடுமாறும், தமருற்றார் தலைத்தலைப் பெய்து *

ஏமாறிக் கிடந்தலற்றும், இவை யென்ன உலகியற்கை ?

ஆமாறொன்றறியேன் நான், அரவணையாய் ! அம்மானே ! *

கூமாறே விரை கண்டாய், அடியேனைக் குறிக்கொண்டே.    4.9.2

கொண்டாட்டும் குலம் புனைவும், தமருற்றார் விழுநிதியும் *

வண்டார் பூங்குழலாளும், மனை யொழிய உயிர் மாய்தல் *

கண்டாற்றேன் உலகியற்கை, கடல்வண்ணா ! * அடியேனைப் *

பண்டே போல் கருதாது, உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே.      4.9.3

கொள்ளென்று கிளர்ந்தெழுந்த, பெருஞ் செல்வம் நெருப்பாகக் *

கொள்ளென்று தமம் மூடும், இவை யென்ன உலகியற்கை ? *

வள்ளலே ! மணிவண்ணா !, உன கழற்கே வரும் பரிசு *

வள்ளல் செய்து அடியேனை, உனதருளால் வாங்காயே.    4.9.4

வாங்கு நீர் மலருலகில், நிற்பனவும் திரிவனவும் *

ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப், பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் *

ஈங்கு இதன் மேல் வெந்நரகம், இவை யென்ன உலகியற்கை ? *

வாங்கு எனை நீ மணி வண்ணா !, அடியேனை மறுக்கேலே.         4.9.5

மறுக்கி வல்வலைப் படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர் *

அறப் பொருளை யறிந்தோரார் இவை யென்ன உலகியற்கை ? *

வெறித் துளவ முடியானே ! வினையேனை உனக்கடிமை

அறக் கொண்டாய் * இனி என்னாரமுதே ! கூயருளாயே.     4.9.6

ஆயே இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும்

நீயே * மற்றொரு பொருளும் இன்றி, நீ நின்றமையால் *

நோயே மூப்பிறப்பிறப்புப், பிணியே யென்றிவை யொழிய *

கூயே கொள் அடியேனைக், கொடு வுலகம் காட்டேலே.    4.9.7

காட்டி நீ கரந்துமிழும், நிலம் நீர் தீ விசும்பு கால் *

ஈட்டி நீ வைத்தமைத்த, இமையோர் வாழ் தனி முட்டைக் *

கோட்டையினில் கழித்து, என்னை உன் கொழுஞ் சோதி யுயரத்துக் *

கூட்டரிய திருவடிக்கள், எஞ்ஞான்று கூட்டுதியே ?    4.9.8

கூட்டுதிநின் குரைகழல்கள், இமையோரும் தொழாவகைசெய்து *

ஆட்டுதி நீ அரவணையாய்! அடியேனும் அஃதறிவன் *

வேட்கை யெல்லாம் விடுத்து, என்னை உன் திருவடியே சுமந்துழல *

கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை, நான் கண்டேனே.        4.9.9

கண்டு கேட் டுற்று மோந் துண் டுழலும், ஐங்கருவி

கண்ட இன்பம் * தெரிவரிய, அளவில்லாச் சிற்றின்பம் *

ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே, நிலா நிற்பக் *

கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன், அடைந்தேன் உன் திருவடியே.          4.9.10

திருவடியை நாரணனைக், கேசவனைப் பரஞ்சுடரை *

திருவடி சேர்வது கருதிச், செழுங் குருகூர்ச் சடகோபன் *

திருவடி மேலுரைத்த தமிழ், ஆயிரத்துள் இப்பத்தும் *

திருவடியே அடைவிக்கும், திருவடி சேர்ந்தொன்றுமினே.    4.9.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.