Thiruvoymozhi 4-5

திருவாய்மொழி

நான்காம் பத்து

ஐந்தாம் திருவாய்மொழி

வீற்றிருந்து, ஏழுலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் *

ஆற்றல் மிக்காளும் அம்மானை, வெம்மா பிளந்தான் தன்னைப் *

போற்றி யென்றே கைகளாரத் தொழுது, சொல் மாலைகள் *

ஏற்ற நோற்றேற்கு இனியென்ன குறை, எழுமையுமே?        4.5.1

மைய கண்ணாள் மலர் மேலுறைவாள், உறை மார்பினன் *

செய்ய கோலத் தடங்கண்ணன், விண்ணோர் பெருமான் தன்னை *

மொய்ய சொல்லால் இசை மாலைகளேத்தி, உள்ளப் பெற்றேன் *

வெய்ய நோய்கள் முழுதும், வியன் ஞாலத்து வீயவே.       4.5.2

வீவிலின்பம் மிக எல்லை நிகழ்ந்த, நம் அச்சுதன் *

வீவில் சீரன் மலர்க் கண்ணன், விண்ணோர் பெருமான் தன்னை *

வீவில் காலம் இசை மாலைகளேத்தி, மேவப் பெற்றேன் *

வீவிலின்பம் மிக, எல்லை நிகழ்ந்தனன் மேவியே.    4.5.3

மேவி நின்று தொழுவார் வினை போக, மேவும் பிரான் *

தூவியம் புள்ளுடையான், அடலாழி யம்மான் தன்னை *

நாவியலால் இசை மாலைகளேத்தி, நண்ணப் பெற்றேன் *

ஆவி என்னாவியை, யானறியேன் செய்த வாற்றையே.       4.5.4

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை, அமரர் தம்

ஏற்றை * எல்லாப் பொருளும் விரித்தானை, எம்மான் தன்னை *

மாற்ற மாலை புனைந்தேத்தி, நாளும் மகிழ்வெய்தினேன் *

காற்றின் முன்னம் கடுகி, வினை நோய்கள் கரியவே.       4.5.5

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே யிடும் *

பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை *

உரிய சொல்லால் இசை மாலைகளேத்தி உள்ளப் பெற்றேற்கு *

அரியதுண்டோ எனக்கு? இன்று தொட்டும் இனியென்றுமே.              4.5.6

என்று மொன்றாகி, ஒத்தாரும் மிக்கார்களும் * தன் தனக்கு

இன்றி நின்றானை, எல்லாவுலகு முடையான் தன்னைக் *

குன்ற மொன்றால் மழை காத்த பிரானைச் சொல் மாலைகள் *

நன்று சூட்டும் விதி யெய்தினம், என்ன குறை நமக்கே?      4.5.7

நமக்கும், பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை * ஞாலத்தார்

தமக்கும் வானத்தவர்க்கும், பெருமானைத் * தண் தாமரை

சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு

அமைக்க வல்லேற்கு * இனி யாவர் நிகர், அகல் வானத்தே ?      4.5.8

வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்

தானத்தும் * எண் திசையும் தவிராது நின்றான் தன்னைக் *

கூனற் சங்கத் தடக்கை யவனைக் குடமாடியை

வானக் கோனைக் * கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே ?          4.5.9

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் *

கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும், மணங் கூடியும் *

கண்ட வாற்றால், தனதே யுலகென நின்றான் தன்னை *

வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.        4.5.10

மாரி மாறாத தண்அம், மலை வேங்கடத் தண்ணலை *

வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ், குருகூர் நகர்க் *

காரி மாறன் சடகோபன், சொல்லாயிரத்து இப்பத்தால் *

வேரி மாறாத பூமேலிருப்பாள், வினை தீர்க்குமே.     4.5.11    திருவேங்கடம் திருப்பதி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.