Thirumozhi 3-10
பெரிய திருமொழி மூன்றாம் பத்து பத்தாம் திருமொழி திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போயகல * அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து இவ்வேழுலகத்தவர் பணிய, வானோர் அமர்ந்தேத்த இருந்த இடம் * பெரும்புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ * அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! […]
Thirumozhi 3-9
பெரிய திருமொழி மூன்றாம் பத்து ஒன்பதாம் திருமொழி சலங்கொண்ட இரணியனது அகல்மார்பம் கீண்டு தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை * நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் * சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகை ஒண்செருந்தி செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலினூடே * வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! 3.9.1 வைகுந்தவிண்ணகரம் திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் தேவரொடு தானவர்கள் திசைப்ப * […]
Thirumozhi 3-8
பெரிய திருமொழி மூன்றாம் பத்து எட்டாம் திருமொழி நந்தாவிளக்கே ! அளத்தற்கு அரியாய் ! * நரநாரணனே ! கருமா முகில் போல் எந்தாய் ! * எமக்கே அருளாயென நின்று இமையோர் பரவுமிடம் * எத்திசையும் கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களிவண்டு மிழற்ற நிழல் துதைந்து * மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே ! 3.8.1 மணிமாடக் கோயில் முதலைத் தனி மா முரண் தீர, அன்று […]
Thirumozhi 3-7
பெரிய திருமொழி மூன்றாம் பத்து ஏழாம் திருமொழி கள்வன்கொல்? யான் அறியேன் கறியான் ஒருகாளை வந்து * வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப், போதவென்று * வெள்ளி வளைக் கை பற்றப், பெற்ற தாயரை விட்டகன்று * அள்ளலம் பூங்கழனி, அணியாலி புகுவர் கொலோ ? 3.7.1 திருவாலி பண்டிவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து * என் மகள் தன், தொண்டையஞ் செங்கனிவாய், நுகர்ந்தானை யுகந்து * அவன்பின் கெண்டை யொண்கண் மிளிரக் கிளி […]
Thirumozhi 3-6
பெரிய திருமொழி மூன்றாம் பத்து ஆறாம் திருமொழி தூவிரிய மலருழக்கித், துணையோடும் பிரியாதே * பூவிரிய மது நுகரும், பொறிவரிய சிறுவண்டே ! * தீவிரிய மறை வளர்க்கும், புகழாளர் திருவாலி * ஏவரி வெஞ்சிலையானுக்கு, என் நிலைமை உரையாயே. 3.6.1 திருவாலி பிணியவிழும், நறுநீலமலர் கிழியப் * பெடையோடும் அணிமலர் மேல் மதுநுகரும், அறுகால சிறுவண்டே * மணிகெழுநீர் மருங்கலரும், வயலாலி மணவாளன் * பணியறியேன் நீ சென்று, என் பயலை நோய் உரையாயே. […]
Thirumozhi 3-5
பெரிய திருமொழி மூன்றாம் பத்து ஐந்தாம் திருமொழி வந்து உனதடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும் * என் சிந்தனைக்கு இனியாய் ! திருவே ! என்னாருயிரே ! * அந்தளிர் அணியார் அசோகின் இளந்தளிர்கள் கலந்து * அவை எங்கும் செந்தழல் புரையும் திருவாலியம்மானே. 3.5.1 திருவாலி நீலத்தடவரை மாமணி நிகழக் கிடந்தது போல் * அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் ! அடியேன் மனத்திருந்தாய் * சோலைத் தலைக் கணமாமயில் நடமாட […]
Thirumozhi 3-4
பெரிய திருமொழி மூன்றாம் பத்து நான்காம் திருமொழி ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி உலகனைத்தும் ஈரடியாலொடுக்கி * ஒன்றும் தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாளணைவீர் ! * தக்ககீர்த்தி அருமறையின் திரள் நான்கும் வேள்வி யைந்தும் அங்கங்களவை யாறும் இசைகளேழும் * தெருவில் மலிவிழா வளமும் சிறக்கும், காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. 3.4.1 காழிச்சீராம விண்ணகரம் நான்முகன் நாள்மிகைத் தருக்கை, இருக்கு வாய்மை நலமிகுசீர் உரோமசனால் நவிற்று * நக்கன் […]
Thirumozhi 3-3
பெரிய திருமொழி மூன்றாம் பத்து மூன்றாம் திருமொழி வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு * ஆடல் நன்மா உடைத்து ஆயரா நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் * கூடிய மாமழை காத்த கூத்தனென வருகின்றான் * சேடுயர் பூம்பொழில் தில்லைச் சித்திரகூடத்துள்ளானே. 3.3.1 சித்திரகூடம் பேய்மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இதுவென்றால் * மாநில மாமகள் மாதர் கேள்வன் இவனென்றும் * வண்டுண் பூமகள் நாயகனென்றும் புலங்கெழு கோவியர் பாடித் * […]
Thirumozhi 3-2
பெரிய திருமொழி மூன்றாம் பத்து இரண்டாம் திருமொழி ஊன்வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலனைந்தும் நொந்து * தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோ ருலகாள கிற்பீர் ! * கானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்த் * தேனாட மாடக் கொடியாடு, தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. 3.2.1 சித்திரகூடம் காயோடு நீடு கனியுண்டு, வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் * ஐந்து தீயொடு […]
Thirumozhi 3-1
பெரிய திருமொழி மூன்றாம் பத்து முதல் திருமொழி இருந்தண்மா நிலம் ஏனமதாய் வளைமருப்பினில் அகத்தொடுக்கிக் * கருந்தண்மா கடல் கண் துயின்றவனிடம் கமல நன் மலர்த்தேறல் அருந்தி * இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளி அம்பொழிலூடே * செருந்தி நாண்மலர் சென்றணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே. 3.1.1 திருவயிந்திரபுரம் மின்னும் ஆழியங்கையவன் செய்யவளுறைதரு திருமார்பன் * பன்னு நால்மறைப் பல் பொருளாகிய பரனிடம் * வரைச்சாரல் பின்னும் மாதவிப் பந்தலில் பெடைவரப் பிணியவிழ் கமலத்துத் […]