Thirumozhi 3-8

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

எட்டாம் திருமொழி

நந்தாவிளக்கே ! அளத்தற்கு அரியாய் ! *

நரநாரணனே ! கருமா முகில் போல்

எந்தாய் ! * எமக்கே அருளாயென நின்று

இமையோர் பரவுமிடம் * எத்திசையும்

கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே

களிவண்டு மிழற்ற நிழல் துதைந்து *

மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்

மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே !      3.8.1      மணிமாடக் கோயில்

முதலைத் தனி மா முரண் தீர, அன்று

முதுநீர்த் தடத்துச் செங்கண் வேழமுய்ய *

விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி

வினைதீர்த்த அம்மானிடம் * விண்ணணவும்

பதலைக் கபோதத்தொளி மாட நெற்றிப்

பவளக் கொழுங்கால பைங்கால் புறவம் *

மதலைத் தலைமென் பெடை கூடு நாங்கூர்

மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே !      3.8.2      மணிமாடக் கோயில்

கொலைப்புண் தலைக்குன்ற மொன்று உய்ய, அன்று

கொடுமா முதலைக்கு இடர் செய்து * கொங்கார்

இலைப் புண்டரீகத் தவளின்பம், அன்போடு

அணைந்திட்ட அம்மானிடம் * ஆளரியால்

அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்

அணிமுத்தும் வெண்சாமரையோடு * பொன்னி

மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர்

மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே !      3.8.3      மணிமாடக் கோயில்

சிறையார் உவணப் புள்ளொன்று ஏறி, அன்று

திசை நான்கும் நான்கும் இரியச் * செருவில்

கறையார் நெடுவேலரக்கர் மடியக்

கடல் சூழிலங்கை கடந்தான் இடந்தான் *

முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்

ஐவேள்வி யாறங்கர் ஏழினிசையோர் *

மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர்

மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே !     3.8.4      மணிமாடக் கோயில்

இழையாடு கொங்கைத்தலை நஞ்சமுண்டிட்டு

இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து *

தழைவாட வன்தாள் குருந்தம் ஒசித்துத்

தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான் *

குழையாட வல்லிக் குலமாட மாடே

குயில் கூவ நீடு கொடிமாடம் மல்கு *

மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்

மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே !   3.8.5      மணிமாடக் கோயில்

பண்ணேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச, வஞ்சப்

பகுவாய்க் கழுதுக் கிரங்காது * அவள்தன்

உண்ணாமுலை மற்றவளாவியோடும்

உடனே சுவைத்தானிடம் * ஓங்கு பைந்தாள்

கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக்

கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து *

மண்ணேந்து இளமேதிகள் வைகு நாங்கூர்

மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே !   3.8.6      மணிமாடக் கோயில்

தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத்

தடம்புக்கு, அடங்கா விடங்கால் அரவம் *

இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன்மேல்

அடிவைத்த அம்மானிடம் * மாமதியம்

திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்

செழுமுத்து வெண்ணெற்கெனச் சென்று * முன்றில்

வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர்

மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே !     3.8.7      மணிமாடக் கோயில்

துளையார் கருமென்குழல் ஆய்ச்சியர்தம்

துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் * முற்றா

இளையா விளையாட்டொடு, காதல் வெள்ளம்

விளைவித்த அம்மானிடம் * வேல் நெடுங்கண்

முளை வாளெயிற்று மடவார் பயிற்று

மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல் *

வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர்

மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே !   3.8.8      மணிமாடக் கோயில்

விடையோடவென்று ஆய்ச்சி மென்தோள் நயந்த

விகிர்தா ! விளங்கு சுடராழியென்னும் *

படையோடு சங்கொன்று உடையாய் ! என நின்று

இமையோர் பரவுமிடம் * பைந்தடத்துப்

பெடையோடு செங்கால அன்னம் துகைப்பத்

தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர் *

மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்

மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே !   3.8.9      மணிமாடக் கோயில்

வண்டார் பொழில் சூழ்ந்தழகாய நாங்கூர்

மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு * என்றும்

தொண்டாய தொல்சீர் வயல் மங்கையர் கோன்

கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் *

கண்டார் வணங்கக் களியானை மீதே

கடல் சூழுலகுக்கு ஒரு காவலராய் *

விண்தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ்

விரிநீருலகாண்டு விரும்புவரே.    3.8.10    மணிமாடக் கோயில்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.