Thirumozhi 3-6

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

ஆறாம் திருமொழி

தூவிரிய மலருழக்கித், துணையோடும் பிரியாதே *

பூவிரிய மது நுகரும், பொறிவரிய சிறுவண்டே ! *

தீவிரிய மறை வளர்க்கும், புகழாளர் திருவாலி *

ஏவரி வெஞ்சிலையானுக்கு, என் நிலைமை உரையாயே.    3.6.1      திருவாலி

பிணியவிழும், நறுநீலமலர் கிழியப் * பெடையோடும்

அணிமலர் மேல் மதுநுகரும், அறுகால சிறுவண்டே *

மணிகெழுநீர் மருங்கலரும், வயலாலி மணவாளன் *

பணியறியேன் நீ சென்று, என் பயலை நோய் உரையாயே.        3.6.2      திருவாலி

நீர் வானம் மண் எரி காலாய், நின்ற நெடுமால் * தன்

தாராய நறுந்துளவம், பெறுந்தகையேற்கு அருளானே ! *

சீராரும் வளர் பொழில் சூழ், திருவாலி வயல் வாழும்

கூர்வாய சிறுகுருகே ! குறிப்பறிந்து கூறாயே.        3.6.3      திருவாலி

தானாக நினையானேல், தன்நினைந்து நைவேற்கு * ஓர்

மீனாய கொடி நெடுவேள், வலிசெய்ய மெலிவேனோ ? *

தேன்வாய வரிவண்டே திருவாலி நகராளும் *

ஆனாயற்கு என்னுறு நோய், அறியச் சென்று உரையாயே.          3.6.4      திருவாலி

வாளாய கண்பனிப்ப, மென்முலைகள் பொன்னரும்ப *

நாள் நாளும், நின் நினைந்து நைவேற்கு * ஓ! மண்ணளந்த

தாளாளா ! தண்குடந்தை நகராளா ! * வரையெடுத்த

தோளாளா ! என்தனக்கு ஓர் துணையாள னாகாயே !       3.6.5      திருக்குடந்தை (கும்பகோணம்),

திருவாலி

தாராய தண்துளவ, வண்டு உழுத வரை மார்பன் *

போரானைக் கொம்பொசித்த, புட்பாகன் என்னம்மான் *

தேராரும் நெடுவீதித், திருவாலி நகராளும்

காராயன் * என்னுடைய, கனவளையும் கவர்வானோ?          3.6.6      திருவாலி

கொண்டு அரவத்திரையுலவு, குரைகடல்மேல் குலவரை போல் *

பண்டு அரவினணைக் கிடந்து, பாரளந்த பண்பாளா ! *

வண்டு அமரும் வளர் பொழில் சூழ், வயலாலி மைந்தா ! * என்

கண்துயில் நீ கொண்டாய்க்கு என் கனவளையும் கடவேனோ ?              3.6.7      திருவாலி

குயிலாலும் வளர் பொழில் சூழ், தண்குடந்தைக் குடமாடீ ! *

துயிலாத கண்ணிணையேன், நின்நினைந்து துயர்வேனோ ? *

முயலாலும் இளமதிக்கே, வளையிழந்தேற்கு * இது நடுவே

வயலாலி மணவாளா ! கொள்வாயோ மணிநிறமே ?          3.6.8      திருக்குடந்தை (கும்பகோணம்),

திருவாலி

நிலையாளா ! நின்வணங்க வேண்டாயே யாகிலும் * என்

முலையாள ஒருநாள், உன் அகலத்தால் ஆளாயே *

சிலையாளா ! மரமெய்த திறலாளா ! திருமெய்ய

மலையாளா ! * நீ ஆள, வளையாள மாட்டோமே.    3.6.9      திருவாலி,

திருமெய்யம்

மையிலங்கு கருங்குவளை, மருங்கலரும் வயலாலி *

நெய்யிலங்கு சுடராழிப் படையானை, நெடுமாலைக் *

கையிலங்கு வேல்கலியன், கண்டுரைத்த தமிழ்மாலை *

ஐயிரண்டும் இவை வல்லார்க்கு, அருவினைகள் அடையாவே.  3.6.10    திருவாலி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.