Thirumozhi 3-7

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

ஏழாம் திருமொழி

கள்வன்கொல்? யான் அறியேன் கறியான் ஒருகாளை வந்து *

வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப், போதவென்று *

வெள்ளி வளைக் கை பற்றப், பெற்ற தாயரை விட்டகன்று *

அள்ளலம் பூங்கழனி, அணியாலி புகுவர் கொலோ ?  3.7.1      திருவாலி

பண்டிவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து * என் மகள் தன்,

தொண்டையஞ் செங்கனிவாய், நுகர்ந்தானை யுகந்து * அவன்பின்

கெண்டை யொண்கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து *

வண்டமர் கானல் மல்கும், வயலாலி புகுவர் கொலோ ?      3.7.2      திருவாலி

அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய்! அரக்கர் குலப்பாவை தன்னை*

வெஞ்சின மூக்கரிந்த விறலோன், திறம் கேட்கில் * மெய்யே

பஞ்சிய மெல்லடி, எம் பணைத் தோளி பரக்கழிந்து *

வஞ்சியந் தண்பணை சூழ், வயலாலி புகுவர் கொலோ ?      3.7.3      திருவாலி

ஏது அவன் தொல்பிறப்பு ? இளையவன் வளையூதி * மன்னர்

தூதுவனா யவனூர் சொல்லுவீர்கள் ! சொல்லீர் அறியேன் *

மாதவன்தன் துணையா நடந்தாள், தடம்சூழ் புறவில் *

போது வண்டாடு செம்மல், புனலாலி புகுவர் கொலோ?          3.7.4      திருவாலி

தாய் எனை யென்றிரங்காள், தடந்தோளி தனக்கமைந்த *

மாயனை மாதவனை மதித்து, என்னை அகன்ற இவள் *

வேயன தோள் விசிறிப், பெடை யன்னமென நடந்து *

போயின பூங்கொடியாள், புனலாலி புகுவர் கொலோ ?       3.7.5      திருவாலி

என்துணை யென்றெடுத்தேற்கு இறையேனு மிரங்கிற்றிலள் *

தன் துணையாய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் *

வன்துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் *

இன்துணைவன் னொடும் போய் எழிலாலி புகுவர் கொலோ ?     3.7.6      திருவரங்கம்,

திருவாலி

அன்னையும் அத்தனுமென்று, அடியோமுக் கிரங்கிற்றிலள் *

பின்னைதன் காதலன்தன் பெருந்தோள் நலம் பேணினளால் *

மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து *

புன்னையும் அன்னமும் சூழ், புனலாலி புகுவர் கொலோ ?       3.7.7      திருவாலி

முற்றிலும் பைங்கிளியும், பந்தும் ஊசலும் பேசுகின்ற *

சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற செழுங்கோதை தன்னைப்

பெற்றிலேன் * முற்றிழையைப், பிறப்பிலி பின்னே நடந்து *

மற்றெல்லாம் கைதொழப் போய், வயலாலி புகுவர் கொலோ ?    3.7.8      திருவாலி

காவியங்கண்ணி எண்ணில் கடிமாமலர்ப் பாவை யொப்பாள் *

பாவியேன் பெற்றமையால், பணைத்தோளி பரக்கழிந்து *

தூவிசேர் அன்னமன்ன நடையாள் நெடுமாலொடும் போய் *

வாவியந் தண்பணைசூழ், வயலாலி புகுவர் கொலோ?         3.7.9      திருவாலி

தாய் மனம் நின்றிரங்கத் தனியே நெடுமால் துணையா *

போயின பூங்கொடியாள், புனலாலி புகுவரென்று *

காய்சின வேல் கலியன் ஒலிசெய், தமிழ் மாலை பத்தும் *

மேவிய நெஞ்சுடையார், தஞ்சமாவது விண்ணுலகே.        3.7.10    திருவாலி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.