Mudal Thiruvandadi

முதலாழ்வார்கள் முதலானோர் அருளிச்செய்

இயற்பா

 

பொய்கையாழ்வார் அருளிச்செய்த

முதல் திருவந்தாதி

தனியன்

(முதலியாண்டான் அருளிச்செய்தது)

கைதைசேர்பூம்பொழில்சூழ்கச்சிநகர்வந்துதித்த*

பொய்கைப்பிரான்கவிஞர்போரேறு* – வையத்து

அடியவர்கள்வாழ அருந்தமிழ்நூற்றந்தாதி

படிவிளங்கச்செய்தான்பரிந்து.

வையம் தகளியா வார் கடலே நெய்யாக*

வெய்ய கதிரோன் விளக்காகச் *- செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை *

இடராழி நீங்குகவே யென்று. 1

என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது ? *

ஒன்றும் அதனை உணரேன் நான் *- அன்று அது

அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி * இது நீ

படைத்திடந்து உண்டு உமிழ்ந்த பார். 2

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த *

நீரளவும் செல்ல நிமிர்ந்ததே *- சூருருவின்

பேயளவு கண்ட பெருமான் ! அறிகிலேன் *

நீயளவு கண்ட நெறி. 3

நெறி வாசல் தானேயாய் நின்றானை * ஐந்து

பொறி வாசல் போர்க் கதவம் சார்த்தி – அறிவானாம் *

ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த *

ஆலமமர் கண்டத்து அரன்.             4

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ஊர்தி *

உரை நூல் மறை உறையும் கோயில் *- வரைநீர்

கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி *

உருவம் எரி கார் மேனி யொன்று.         5

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான் *

இன்று மறப்பனோ? ஏழைகாள் ! *- அன்று

கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் * கண்டேன்

திருவரங்க மேயான் திசை. 6           திருவரங்கம்

திசையும் திசையுறு தெய்வமும் * தெய்வத்

திசையும் கருமங்க ளெல்லாம் *- அசைவில் சீர்க்

கண்ணன் நெடுமால் கடல் கடைந்த * காரோத

வண்ணன் படைத்த மயக்கு. 7

மயங்க வலம்புரி வாய் வைத்து * வானத்து

இயங்கும் எறி கதிரோன் தன்னை *- முயங்கு அமருள்

தேராழியால் மறைத்தது என்? நீ திருமாலே ! *

போராழிக் கையால் பொருது. 8

பொருகோட் டோரேனமாய்ப் புக்கிடந்தாய்க்கு * அன்றுன்

ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே *- விரிதோட்ட

சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க *

மாவடிவில் நீ அளந்த மண். 9

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும் *

விண்ணும் விழுங்கியது மெய்யென்பர் *- எண்ணில்

அலகளவு கண்ட சீராழியாய்க்கு * அன்று

இவ்வுலகளவும் உண்டோ ? உன் வாய். 10

வாய் அவனை யல்லது வாழ்த்தாது * கை உலகம்

தாயவனை யல்லது தாம் தொழா *- பேய் முலை நஞ்சு

ஊணாக வுண்டான் உருவொடு பேரல்லால் *

காணா கண் கேளா செவி. 11

செவி வாய் கண் மூக்கு உடல் என்றைம் புலனும் * செந்தீ

புவி கால் நீர் விண் பூத மைந்தும் *- அவியாத

ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே *

ஏனமாய் நின்றாற்கு இயல்வு. 12

இயல்வாக ஈன் துழாயா னடிக்கே செல்ல *

முயல்வார் இயலமரர் முன்னம் *- இயல்வாக

நீதியாலோதி நியமங்களால் பரவ *

ஆதியாய் நின்றா ரவர். 13

அவரவர் தாம் தாம் அறிந்த வாறேத்தி *

இவரிவ ரெம்பெருமா னென்று *- சுவர் மிசைச்

சார்த்தியும் வைத்தும் தொழுவர் * உலகளந்த

மூர்த்தி உருவே முதல். 14

முதலாவார் மூவரே * அம் மூவருள்ளும்

முதலாவான் மூரிநீர் வண்ணன் *- முதலாய

நல்லா னருளல்லால் நாம நீர் வையகத்துப் *

பல்லாரருளும் பழுது. 15

பழுதே பல பகலும் போயின வென்று * அஞ்சி

அழுதேன், அரவணை மேல் கண்டு – தொழுதேன் *

கடலோதம் காலலைப்பக் கண் வளரும் * செங்கண்

அடலோத வண்ணரடி. 16.

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல *

முடியும் விசும்பளந்த தென்பர் *- வடியுகிரால்

ஈர்ந்தான் இரணியன தாகம் * இருஞ்சிறைப் புள்

ஊர்ந்தான் உலகளந்த நான்று.      17

நான்ற முலைத் தலை நஞ்சுண்டு * உறி வெண்ணெய்

தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை – ஊன்றிப் *

பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும் *

மருதிடை போய் மண்ணளந்த மால். 18

மாலும் கருங்கடலே என் நோற்றாய் ? * வையகமுண்டு

ஆலினிலைத் துயின்ற ஆழியான் *- கோலக்

கருமேனிச் செங்கண்மால் கண்படையுள் * என்றும்

திருமேனி நீ தீண்டப் பெற்று. 19

பெற்றார் தளை கழலப் பேர்ந்து ஓர் குறளுருவாய்ச் *

செற்றார் படி கடந்த செங்கண் மால் *- நற்றா-

மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி *

நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று.   20

நின்று நிலம் அங்கை நீரேற்று மூவடியால் *

சென்று திசையளந்த செங்கண் மாற்கு *- என்றும்

படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம் *

அடையாழி நெஞ்சே! அறி. 21

அறியும் உலகெல்லாம் யானேயு மல்லேன் *

பொறி கொள் சிறையுவண மூர்ந்தாய் *- வெறி கமழும்

காம்பேய் மென் தோளி கடை வெண்ணெ யுண்டாயைத் *

தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு. 22

தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை *

தழும்பிருந்த தாள் சகடம் சாடித் *- தழும்பிருந்த

பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த *

வீங்கோத வண்ணர் விரல். 23

விரலொடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு * ஆய்ச்சி

உரலோடு உறப் பிணித்த நான்று *- குரலோவாது

ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே?

ஓங்கோத வண்ணா உரை. 24

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது * எப்போதும்

வரை மேல் மரதகமே போலத் *- திரை மேல்

கிடந்தானைக் கீண்டானைக் * கேழலாய்ப் பூமி

இடந்தானை ஏத்தியெழும். 25                      திருப்பாற்கடல்

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை *

வழுவா வகை நினைந்து வைகல் – தொழுவார் *

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே * வானோர்

மனச் சுடரைத் தூண்டும் மலை. 26         திருவேங்கடம் திருப்பதி

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து *

சிலையால் மராமரமேழ் செற்றுக் *- கொலையானைப்

போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும் *

கார்க்கோடு பற்றியான் கை.          27

கைய வலம்புரியும் நேமியும் * கார் வண்ணத்து

ஐய ! மலர் மகள் நின் ஆகத்தாள் *- செய்ய

மறையான் நின் உந்தியான் * மாமதிள் மூன்றெய்த

இறையான் நின் ஆகத்திறை.        28

இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் *

அறைபுனலும் செந்தீயு மாவான் *- பிறை மருப்பின்

பைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த *

செங்கண் மால் கண்டாய் தெளி. 29

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ * ஞானத்

தெளிதாக நன்குணர்வார் சிந்தை – எளிதாகத் *

தாய் நாடு கன்றே போல் தண்துழாயா னடிக்கே *

போய் நாடிக் கொள்ளும் புரிந்து. 30

புரியொரு கை பற்றி ஓர் பொன்னாழி யேந்தி *

அரியுருவும் ஆளுருவுமாகி *- எரியுருவ

வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் * மற்று

எண்ணத்தா னாமோ ? இமை.        31

இமையாத கண்ணால் இருளகல நோக்கி *

அமையாப் பொறிப் புலன்க ளைந்தும் – நமையாமல் *

ஆகத்தணைப்பார் அணைவரே * ஆயிர வாய்

நாகத்தனையான் நகர். 32

நகரமருள் புரிந்து நான்முகற்குப் * பூ மேல்

பகர மறை பயந்த பண்பன் *- பெயரினையே

புந்தியால் சிந்தியாது ஓதியுரு வெண்ணும் *

அந்தியாலாம் பயனங்கென் ?          33

என் ஒருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு * ஆலிலையில்

முன்னொருவனாய முகில் வண்ணா ! *- நின்னுருகிப்

பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் * பேரமர்க்கண்

ஆய்த் தாய் முலை தந்தவாறு. 34

ஆறிய வன்பில் அடியார் தமார்வத்தால் *

கூறிய குற்றமாக் கொள்ளல் நீ – தேறி *

நெடியோய் ! அடி அடைதற்கன்றே * ஈரைந்து

முடியான் படைத்த முரண்.            35

முரணவலி தொலைதற்கு ஆமென்றே * முன்னம்

தரணி தனதாகத்தானே *- இரணியனைப்

புண் நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் * நீ

மண்ணிரந்து கொண்ட வகை. 36

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் * நாளும்

புகை விளக்கும் பூம்புனலுமேந்தித் *- திசைதிசையின்

வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே * வெண்சங்கம்

ஊதியவாய் மாலுகந்த ஊர்.            37        திருவேங்கடம் திருப்பதி

ஊரும் வரி யரவம் ஒண் குறவர் மால் யானை *

பேர வெறிந்த பெருமணியைக் *- காருடைய

மின்னென்று புற்றடையும் வேங்கடமே * மேலசுரர்

எம்மென்னும் மாலதிடம்.     38        திருவேங்கடம் திருப்பதி

இடந்தது பூமி எடுத்தது குன்றம் *

கடந்தது கஞ்சனை முன்னஞ்சக் * – கிடந்ததுவும்

நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே *

பேரோத வண்ணர் பெரிது. 39         திருவேங்கடம் திருப்பதி

பெருவில் பகழிக் குறவர் கைச்செந்தீ *

வெருவிப் புனம் துறந்த வேழம் *- இருவிசும்பில்

மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே * மேலசுரர்

கோன் வீழக் கண்டுகந்தான் குன்று. 40 திருவேங்கடம் திருப்பதி

குன்றனைய குற்றம் செயினும் குணங் கொள்ளும் *

இன்று முதலாக என் நெஞ்சே! *- என்றும்

புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான் *

திறனுரையே சிந்தித்திரு. 41

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் *

திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல் ? *- திருமகள் மேல்

பாலோதம் சிந்தப் படநாகணைக் கிடந்த *

மாலோத வண்ணர் மனம். 42

மனமாசு தீரும் அருவினையும் சாரா *

தனமாய தானே கை கூடும் *- புனமேய

பூந்துழாயா னடிக்கே போதொடு நீரேந்தித் *

தாம் தொழா நிற்பார் தமர். 43

தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே *

தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் *- தமருகந்தது

எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே *

அவ்வண்ணம் ஆழியானாம். 44

ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க *

நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே! *- பூமேய

மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியைப் *

பாதம் அத்தால் எண்ணினான் பண்பு. 45

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற *

வெண் புரி நூல் மார்பன் வினை தீரப் *- புண் புரிந்த

ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் * அமரர் தம்

போகத்தால் பூமி யாள்வார். 46

வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும் *

சேரி திரியாமல் செந்நிறீஇ *- கூரிய

மெய்ஞ் ஞானத்தால் உணர்வார் காண்பரே * மேலொரு நாள்

கைந்நாகம் காத்தான் கழல்.           47

கழலொன் றெடுத்து ஒரு கை சுற்றி ஓர் கைமேல் *

சுழலும் சுராசுரர்கள் அஞ்ச *- அழலும்

செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல *

மருவாழி நெஞ்சே மகிழ்.    48

மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை *

நெகிழ முயல்கிற்பார்க் கல்லால் *- முகிழ் விரிந்த

சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடுமுடி * எம்

ஆதி காண்பு ஆர்க்கும் அரிது. 49

அரிய புலனைந் தடக்கி ஆய் மலர் கொண்டு * ஆர்வம்

புரியப் பரிசினால் புல்கில் *- பெரியனாய்

மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் * வண்கை நீர்

ஏற்றானைக் காண்ப தெளிது.        50

எளிதில் இரண்டடியும் காண்பதற்கு * என்னுள்ளம்

தெளியத் தெளிந்தொழியும் செவ்வே *- களியில்

பொருந்தாதவனைப் பொரலுற்று * அரியாய்

இருந்தான் திருநாமம் எண்.            51

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர் *

வண்ண மலரேந்தி வைகலும் *- நண்ணி

ஒரு மாலையால் பரவி யோவாது * எப்போதும்

திருமாலைக் கை தொழுவர் சென்று. 52

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் *

நின்றால் மரவடியாம் * நீள்கடலுள் – என்றும்

புணையாம் மணி விளக்காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம் * திருமாற்கு அரவு. 53

அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் *

குரவை குடம் மலை மல் குன்றம் *- கரவின்றி

விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி * உண்டு

அட்டு எடுத்த செங்கணவன். 54

அவன் தமர் எவ்வினைய ராகிலும் * எங்கோன்

அவன் தமரே என்றொழிவதல்லால் *- நமன் தமரால்

ஆராயப் பட்டு அறியார் கண்டீர் * அரவணை மேல்

பேராயற்கு ஆட் பட்டார் பேர். 55

பேரே வரப் பிதற்றலல்லால் * என் பெம்மானை

ஆரே யறிவார்? அது நிற்க *- நேரே

கடிக் கமலத்துள் ளிருந்தும் காண்கிலான் * கண்ணன்

அடிக் கமலந் தன்னை அயன். 56

அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி *

உய நின் திருவடியே சேர்வான் *- நயம் நின்ற

நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் *

சொன் மாலை கற்றேன் தொழுது.         57

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி

எழுதும் * எழு வாழி நெஞ்சே !*- பழுதின்றி

மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான் *

அந்தர மொன்றில்லை அடை. 58

அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம்*

மிடைந்தவை மீண்டொழிய வேண்டில் *- நுடங்கிடையை

முன் இலங்கை வைத்தான் முரணழிய * முன்னொரு நாள்

தன்வில் அங்கை வைத்தான் சரண்.      59

சரணா மறை பயந்த தாமரையானோடு *

மரணாய மன்னுயிர்கட் கெல்லாம் *- அரணாய

பேராழி கொண்ட பிரானன்றி * மற்றறியாது

ஓராழி சூழ்ந்த உலகு. 60

உலகும் உலகிறந்த வூழியும் * ஒண்கேழ்

விலகு கருங்கடலும் வெற்பும் *- உலகினில்

செந்தீயும் மாருதமும் வானும் * திருமால் தன்

புந்தியில் ஆய புணர்ப்பு. 61

புணர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து*

மணமருவ மால் விடை யேழ் செற்றுக் *- கணம் வெருவ

ஏழுலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் *

சூழரவப் பொங்கணையான் தோள்.        62

தோள் அவனை யல்லால் தொழா * என் செவி யிரண்டும்

கேளவனது இன்மொழியே கேட்டிருக்கும் *- நா நாளும்

கோணாகணையான் குரை கழலே கூறுவதே *

நாணாமை நள்ளேன் நயம். 63

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு *

உயவேன் உயர்ந்தவரோ டல்லால் *- வியவேன்

திருமாலை யல்லது தெய்வ மென்றேத்தேன் *

வருமாறு என் நம் மேல் வினை ?          64

வினையால் அடர்ப் படார் வெந் நரகில் சேரார் *

தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் *- நினைதற்கு

அரியானைச் சேயானை * ஆயிரம் பேர்ச் செங்கண்

கரியானைக் கை தொழுதக் கால்.          65

காலை யெழுந்து உலகம் கற்பனவும் * கற்றுணர்ந்த

மேலைத் தலை மறையோர் வேட்பனவும் *- வேலைக்கண்

ஓராழியா னடியே ஓதுவதும் ஓர்ப்பனவும் *

பேராழி கொண்டான் பெயர். 66

பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு * ஒண் பூ

உயரும் கதிரவனே நோக்கும் *- உயிரும்

தருமனையே நோக்கும் * ஒண் தாமரையாள் கேள்வன்

ஒருவனையே நோக்கும் உணர்வு. 67

உணர்வாரார் உன் பெருமை ? ஊழிதோறூழி *

உணர்வாரார் உன்னுருவந் தன்னை ? *- உணர்வாரார்?

விண்ணகத்தாய் ! மண்ணகத்தாய் ! வேங்கடத்தாய் ! * நால்வேதப்

பண்ணகத்தாய்! நீ கிடந்த பால். 68          திருவேங்கடம் திருப்பதி,

பரமபதம்

பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு * ஆலிலையின்

மேலன்று நீ வளர்ந்த மெய்யென்பர் *- ஆலன்று

வேலை நீருள்ளதோ ? விண்ணதோ ? மண்ணதோ ? *

சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு. 69

சொல்லுந் தனையும் தொழுமின் * விழுமுடம்பு

செல்லுந் தனையும் திருமாலை *- நல்லிதழ்த்

தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் *

நாமத்தால் ஏத்துதிரேல் நன்று. 70

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான்கு ஊழி

நின்று * நிலமுழுதும் ஆண்டாலும் *- என்றும்

விடல் ஆழி நெஞ்சமே ! வேண்டினேன் கண்டாய் *

அடலாழி கொண்டான் மாட்டு அன்பு. 71

அன்பு ஆழியானை அணுகென்னும் * நா அவன்தன்

பண்பாழித் தோள் பரவி யேத்தென்னும் *- முன்பூழி

காணானைக் காண் என்னும் கண் செவி கேளென்னும் *

பூணாரம் பூண்டான் புகழ். 72

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழாயானை *

இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே ! * – திகழ்நீர்க்

கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும் *

உடலும் உயிரும் ஏற்றான். 73

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயிலெரித்தான் மார்விடந்தான் *

நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் * கூற்றொருபால்

மங்கையான் பூமகளான் * வார்சடையான் நீள்முடியான்

கங்கையான் நீள்கழலான் காப்பு. 74

காப்பு உன்னை யுன்னக் கழியும் * அருவினைகள்

ஆப்பு உன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் *- மூப்பு உன்னைச்

சிந்திப்பார்க் கில்லை திருமாலே ! * நின்னடியை

வந்திப்பார் காண்பர் வழி. 75

வழிநின்று நின்னைத் தொழுவார் * வழுவா

மொழி நின்ற மூர்த்தியரே யாவர் *- பழுதொன்றும்

வாராத வண்ணமே விண் கொடுக்கும் * மண்ணளந்த

சீரான் திருவேங்கடம். 76      திருவேங்கடம் திருப்பதி

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் * அஃகாத

பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் *- நான்கு இடத்தும்

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே *

என்றால் கெடுமாம் இடர். 77          திருக்கோவலூர்,

திருவெ:கா,

திருவேங்கடம் திருப்பதி,

பரமபதம்

இடர் ஆர் படுவார்? எழு நெஞ்சே ! * வேழம்

தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த *- படமுடைய

பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும் *

கொய்ந்நாகப் பூம்போது கொண்டு. 78

கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார் ? *

மண் தாவென இரந்து மாவலியை *- ஒண்தாரை

நீரங்கை தோய நிமிர்ந்திலையே? நீள் விசும்பில்

ஆரங்கை தோய அடுத்து. 79

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றே னென்றோடிப் *

படுத்த பெரும் பாழி சூழ்ந்த *- விடத்தரவை

வல்லாளன் கைக் கொடுத்த மாமேனி மாயவனுக்கு

அல்லாதும் * ஆவரோ ஆள் ?   80

ஆளமர் வென்றி அடுகளத்துள் அஞ்ஞான்று *

வாளமர் வேண்டி வரை நட்டு *- நீளரவைச்

சுற்றிக் கடைந்தான் பெயரன்றே? * தொல் நரகைப்

பற்றிக் கடத்தும் படை. 81

படையாரும் வாட் கண்ணார் பாரசி நாள் * பைம்பூந்

தொடையலோடு ஏந்திய தூபம் *- இடையிடையில்

மீன் மாய மாசூணும் வேங்கடமே * மேலொரு நாள்

மான் மாய வெய்தான் வரை. 82   திருவேங்கடம் திருப்பதி

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து *

ஆயர் நிரை விடை யேழ் செற்றவா றென்னே! *– உரவுடைய

நீராழியுள் கிடந்து நேரா நிசாசரர் மேல் *

பேராழி கொண்ட பிரான்!. 83

பிரான் ! உன் பெருமை பிறர் ஆர் அறிவார்? *

உராய் உலகளந்த ஞான்று *- வராகத்

தெயிற்றளவு போதாவாறு என் கொலோ ? * எந்தை

அடிக்களவு போந்த படி. 84

படி கண்டறிதியே ? பாம்பணையினான் * புள்

கொடி கண்டறிதியே ? கூறாய் *- வடிவிற்

பொறி யைந்தும் உள்ளடக்கிப் போதொடு நீரேந்தி *

நெறி நின்ற நெஞ்சமே! நீ. 85

நீயும் திருமகளும் நின்றாயால் * குன்றெடுத்துப்

பாயும் பனிமறைத்த பண்பாளா ! *- வாசல்

கடைகழியா உள்புகாக் காமர் பூங்கோவல் *

இடைகழியே பற்றியினி. 86 திருக்கோவலூர்

இனி யார் புகுவார் * எழுநரக வாசல் ? *

முனியாது மூரித்தாள் கோமின் *- கனிசாயக்

கன்றெறிந்த தோளான் * கனைகழலே காண்பதற்கு *

நன்கறிந்த நாவலஞ் சூழ் நாடு. 87

நாடிலும் நின்னடியே நாடுவன் * நாள் தோறும்

பாடிலும் நின் புகழே பாடுவன் *- சூடிலும்

பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு *

என்னாகில் என்னே எனக்கு?           88

எனக்காவார் ஆரொருவரே! * எம்பெருமான்

தனக்காவான் தானே மற்றல்லால் *- புனக்காயாம்

பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ *

மாமேனி காட்டும் வரம்.     89

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் *

சிரத்தால் வணங்கானா மென்றே ? * உரத்தினால்

ஈரரியாய் நேர் வலியோனாய இரணியனை *

ஓரரியாய் நீ யிடந்தது ஊன். 90

ஊனக் குரம்பையின் உள்புக்கு இருள் நீக்கி *

ஞானச் சுடர் கொளீஇ நாள் தோறும் *- ஏனத்

துருவா யுலகிடந்த ஊழியான் பாதம் *

மருவாதார்க்கு உண்டாமோ வான் ?    91

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்த் *

தேனாகிப் பாலாம் திருமாலே ! * ஆனாய்ச்சி

வெண்ணெய் விழுங்க நிறையுமே ?* முன்னொரு நாள்

மண்ணை யுமிழ்ந்த வயிறு. 92

வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச *

எயிறிலக வாய் மடித்த தென் நீ ? *- பொறியுகிரால்

பூவடிவை யீடழித்த பொன்னாழிக் கையா ! நின்

சேவடி மேலீடழியச் செற்று.         93

செற்று எழுந்து தீவிழித்துச் சென்ற இந்த வேழுலகும்

மற்றிவை * ஆவென்று வாயங்காந்து *- முற்றும்

மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால் *

இறையேனும் ஏத்தாது என் நா. 94

நாவாயி லுண்டே நமோ நாரணா வென்று *

ஓவாதுரைக்கும் உரை யுண்டே * – மூவாத

மாக்கதிக்கண் செல்லும் வகை யுண்டே * என்னொருவர்

தீக்கதிக்கண் செல்லும் திறம் ?      95

திறம்பாது என்னெஞ்சமே ! செங்கண் மால் கண்டாய் *

அறம் பாவ மென்றிரண்டு மாவான் *– புறந்தான் இம்

மண் தான் மறிகடல் தான் மாருதந் தான் * வான் தானே

கண்டாய் கடைக் கட்பிடி. 96

பிடி சேர் களிறளித்த பேராளா ! * உன்தன்

அடி சேர்ந்தருள் பெற்றாளன்றே *- பொடி சேர்

அனற் கங்கை யேற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த *

புனற் கங்கை யென்னும் பேர்ப் பொன். 97

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும் *

நின்றுலகம் தாய நெடுமாலும் *- என்றும்

இருவரங்கத்தால் திரிவரேலும் * ஒருவன்

ஒருவனங்கத்து என்றுமுளன். 98

உளன் கண்டாய் நன்னெஞ்சே ! உத்தம னென்றும்

உளன் கண்டாய் * உள்ளுவா ருள்ளத்து – உளன் கண்டாய்

வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும் *

உள்ளத்தி னுள்ளானென்று ஓர். 99           திருவேங்கடம் திருப்பதி

ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்*

ஈரடியும் காணலாம் என்னெஞ்சே! *- ஓரடியின்

தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் *

மாயவனையே மனத்து வை.         100

முதல் திருவந்தாதி முற்றும்

பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.