Siriya Thirumadal

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

சிறிய திருமடல்..

தனியன்

(பிள்ளைதிருநறையூர் அரையர் அருளிச்செய்தது)

முள்ளிச்செழு மலரோதாரான்முளைமதியம் *

கொள்ளிக்கென்னுள்ளங்கொதியாமே* – வள்ளல்

திருவாளன்சீர்க்கலியன்கார்க்கலியைவெட்டி*

மருவாளன்தந்தான்மடல்.

காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை *

சீரார் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேராற்று *

பேரார மார்பின் பெரு மாமழைக் கூந்தல் *

நீரார வேலி நிலமங்கை யென்னும் * இப்

பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே. 1

அம்மூன்றும் ஆராயில் தானே அறம் பொருளின்ப மென்று *

ஆரார் இவற்றினிடை யதனை எய்துவார் *

சீரார் இருகலையும் எய்துவர். 2

சிக்கென மற்று ஆரானும் உண்டென்பார் என்பது தானதுவும் *

ஓராமை யன்றே? உலகத்தார் சொல்லும் சொல் *

ஓராமை யாமாறு அது உரைக்கேன் கேள் ஆமே. 3

காரார் புரவியேழ் பூண்ட தனியாழித்

தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு *

ஆராவமுத மங்கெய்தி * அதினின்றும்

வாரா தொழிவ தொன்றுண்டே? 4

அது நிற்க ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே ?  5

ஏராரிள முலையீர்! என் தனக்கு உற்றது தான் *

காரார் குழலெடுத்துக் கட்டி * கதிர்முலையை

வாரார வீக்கி மணிமேகலை திருத்தி *

ஆராரயில் வேற்கண் அஞ்சனத்தின் நீறணிந்து *

சீரார் செழும் பந்து கொண்டடியா நின்றேன் நான். 6

நீரார் கமலம் போல் செங்கண்மா லென்றொருவன் *

பாரோர்க ளெல்லாம் மகிழப் பறை கறங்கச் *

சீரார் குடமிரண் டேந்திச் செழுந் தெருவே

ஆராரெனச் சொல்லி ஆடுமது கண்டு *

ஏராரிள முலையார் என்னையரும் எல்லாரும் *

வாராயோ என்றார்க்குச் * சென்றேன் என்வல் வினையால். 7

காரார் மணி நிறமும் கைவளையும் காணேன் நான் *

ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன். 8

அறிவழிந்து தீரா வுடம்பொடு பேதுறுவேன் கண்டிரங்கி *

ஏரார் கிளிக்கிளவி எம்மனை தான் வந்து என்னைச் *

சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு. 9

செங்குறிஞ்சித் தாரார் நறுமாலை சாத்தற்குத் * தான் பின்னும்

நேராதன வொன்று நேர்ந்தாள். 10

அதனாலும் தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு *

வாராது மாமை * அது கண்டு மற்றாங்கே *

ஆரானும் மூதறியும் அம்மனை மார் சொல்லுவார் *

பாரோர் சொலப்படும் கட்டுப் படுத்திரேல் *

ஆரானும் மெய்ப்படுவ னென்றார். 11

அது கேட்டுக்

காரார் குழற் கொண்டை கட்டுவிச்சி கட்டேறிச் *

சீரார் சுளகில் சில நெல் பிடித்தெறியா *

வேரா விதிர் விதிரா மெய் சிலிராக் கை மோவா *

பேராயிர முடையான் என்றாள். 12

பேர்த்தேயும்

காரார் திருமேனி காட்டினாள். 13

கையதுவும்

சீரார் வலம்புரியே என்றாள். 14

திருத்துழாய்த்

தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் * கட்டுரையா

நீரேதும் அஞ்சேன்மின் * நும்மகளை நோய் செய்தான்

ஆரானுமல்லன் அறிந்தேன் அவனை நான் *

கூரார் வேற்கண்ணீர் ! உமக்கு அறியக் கூறுகேனோ? 15

ஆரால் இவ்வையம் அடியளப் புண்டது தான் ? *

ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது ? * மற்று

ஆராலே கன் மாரி காத்தது தான் * ஆழி நீர்

ஆரால் கடைந்திடப் பட்டது? 16

அவன் காண்மின்

ஊராநிரை மேய்த்து உலகெல்லாம் உண்டுமிழ்ந்தும் *

ஆராத தன்மையனாய் ஆங்கொரு நாள் ஆய்ப்பாடிச் *

சீரார் கலையல்குல் சீரடிச் செந்துவர் வாய் *

வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு

ஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாய் *

சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை *

வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு *

நாராருறி யேற்றி நன்கமைய வைத்ததனைப் *

போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் * பொய்யுறக்கம்

ஓராதவன் போல் உறங்கி யறிவுற்று *

தாரார் தடந் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி *

ஆராத வெண்ணெய் விழுங்கி. 17

அருகிருந்த

மோரார் குடமுருட்டி * முன் கிடந்த தானத்தே

ஓராதவன் போல் கிடந்தானைக் * கண்டவளும்

வாராத் தான் வைத்தது காணாள். 18

வயிறடித்து இங்கு

ஆரார் புகுதுவார் ? ஐயரிவ ரல்லால் *

நீராம் இது செய்தீர்? என்று ஓர் நெடுங் கயிற்றால் *

ஊரார்க ளெல்லாரும் காண உரலோடே *

தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப *

ஆரா வயிற்றினோடு ஆற்றாதான். 19

அன்றியும்

நீரார் நெடுங் கயத்தைச் சென்றலைக்க நின்று உரப்பி *

ஓராயிரம் பணவெங் கோவியல் நாகத்தை *

வாரா யெனக்கென்று * மற்றதன் மத்தகத்துச்

சீரார் திருவடியால் பாய்ந்தான். 20

தன் சீதைக்கு

நேராவ னென்று ஓர் நிசாசரி தான் வந்தாளைக் *

கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காதிரண்டும்

ஈரா விடுத்து * அவட்கு மூத்தோனை வெந்நரகம்

சேரா வகையே சிலை குனித்தான் * செந்துவர் வாய்

வாரார் வனமுலையாள் வைதேவி காரணமா *

ஏரார் தடந்தோளி ராவணனை * ஈரைந்து

சீரார் சிரமறுத்துச் செற்று உகந்த செங்கண் மால். 21

போரார் நெடுவேலோன் பொன் பெயரோ னாகத்தைக்

கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு * குடல் மாலை

சீரார் திருமார்பின் மேல் கட்டிச் * செங்குருதி

சோராக் கிடந்தானைக் குங்குமத்தோள் கொட்டி *

ஆரா வெழுந்தான் அரி யுருவாய். 22

அன்றியும்

பேர் வாமனனாகிய காலத்து * மூவடி மண்

தாராய் எனக்கென்று வேண்டிச் * சலத்தினால்

நீரேற்று உலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை. 23

ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்க் *

காரார் வரை நட்டு நாகம் கயிறாகப் *

பேராமல் தாங்கிக் கடைந்தான். 24

திருத்துழாய்த்

தாரார்ந்த மார்வன் * தடமால் வரை போலும்

போரானை பொய்கை வாய்க் கோட்பட்டு நின்றலறி *

நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால் *

நாராயணா ஓ ! மணிவண்ணா! நாகணையாய் ! *

வாராய் என் னாரிடரை நீக்காய் என * வெகுண்டு

தீராத சீற்றத்தால் சென்று * இரண்டு கூறாக

ஈரா அதனை யிடர் கடிந்தான் எம்பெருமான். 25

பேராயிர முடையான் பேய்ப் பெண்டீர் ! நும் மகளைத் *

தீரா நோய் செய்தான் என உரைத்தாள். 26

சிக்கென மற்று

ஆரானு மல்லாமை கேட்டு எங்க ளம்மனையும் *

போரார் வேற் கண்ணீர் ! அவனாகில் பூந்துழாய்

தாரா தொழியுமே ? * தன்னடிச்சி யல்லளே ? * மற்று

ஆரானு மல்லனே யென்றொழிந்தாள். 27

நான் அவனைக்

காரார் திருமேனி கண்டதுவே காரணமா *

பேராப் பிதற்றாத் திரிதருவன். 28

பின்னையும்

ஈராப் புகுதலும் இவ்வுடலைத் தண்வாடை

சோரா மறுக்கும் வகை யறியேன். 29

சூழ்குழலார்

ஆரானு மேசுவரென்னு மதன் பழியை *

வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன். 30

வாராய் மடநெஞ்சே! * வந்து மணிவண்ணன்

சீரார் திருத்துழாய் மாலை நமக்கருளித் *

தாரான் தருமென்று இரண்டத்தில் ஒன்றதனை *

ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால் *

ஆராயு மேலும் பணி கேட்டு அதன்றெனிலும் *

போரா தொழியாதே போந்திடு நீ யென்றேற்குக் *

காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும் *

வாராதே என்னை மறந்தது தான். 31

வல்வினையேன்

ஊரா ருகப்பதே யாயினேன். 32

மற்றெனக் கிங்கு

ஆராய்வா ரில்லை அழல் வாய் மெழுகு போல் *

நீராய் உருகும் என்னாவி. 33

நெடுங்கண்கள்

ஊராருறங்கிலும் தானுறங்கா * உத்தமன் தன்

பேராயினவே பிதற்றுவன். 34

பின்னையும்

காரார் கடல் போலும் காமத்த ராயினார் *

ஆரே பொல்லாமை யறிவார்? 35

அதுநிற்க

ஆரானும் ஆதானும் அல்லளவள் காணீர் *

வாரார் வனமுலை வாசவதத்தை யென்று *

ஆரானும் சொல்லப் படுவாள் 36

அவளும் தன்

பேராய மெல்லாம் ஒழியப் பெருந் தெருவே *

தாரார் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள் *

ஊரா ரிகழ்ந்திடப் பட்டாளே? 37

மற்றெனக்கிங்கு

ஆரானும் கற்பிப்பார் நாயகரே? 38

நான் அவனைக்

காரார் திருமேனி காணுமளவும் போய்ச் *

* சீரார் திருவேங்கடமே திருக்கோவ

லூரே * மதிட்கச்சி யூரகமே பேரகமே *

பேரா மருதிறுத்தான் வெள்ளறையே வெஃகாவே *

பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர் *

* ஆராமம் சூழ்ந்த அரங்கம் * கணமங்கை

காரார் மணிநிறக் கண்ணனூர் விண்ணகரம் *

சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர் *

காரார் குடந்தை கடிகை கடல்மல்லை *

ஏரார் பொழில்சூழ் இடவெந்தை நீர்மலை *

சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர் *

பாரோர் புகழும் வதரி வடமதுரை *

ஊராய வெல்லாம் ஒழியாமே நான் அவனை *

ஓரானை கொம்பொசித்து ஓரானை கோள் விடுத்த

சீரானைச் * செங்கணெடியானைத் தேன் துழாய்த்

தாரானைத் * தாமரை போல் கண்ணானை * எண்ணருஞ்சீர்ப்

பேராயிரமும் பிதற்றி. 39           திருவரங்கம்,

திருவெள்ளறை,

திருப்பேர்நகர்,

திருவழுந்தூர்,

திருச்சேறை,

திருக்குடந்தை (கும்பகோணம்),

திருவிண்ணகர்,

திருக்கண்ணபுரம்,

திருவாலி,

திருநறையூர்,

திருக்கண்ணமங்கை,

திருமாலிருஞ்சோலை,

திருத்தண்கால்,

திருமோகூர்,

திருப்புலியூர் குட்டநாடு,

திருக்கோவலூர்,

ஊரகம்,

திருவெ:கா,

திருநீர்மலை,

திருவிடைவெந்தை,

திருக்கடல்மல்லை,

திருக்கடிகை (சோளசிங்கபுரம்),

திருவேங்கடம் திருப்பதி,

வதரியாச்சிராமம்,

வடமதுரை

பெருந் தெருவே

ஊராரிகழிலும் ஊரா தொழியேன் நான் *

வாரார் பூம் பெண்ணை மடல். 40

சிறிய திருமடல் முற்றும்

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.